tag:blogger.com,1999:blog-7998914262880712092.post6513955442561170594..comments2023-10-12T14:04:11.837+05:30Comments on பேசுகிறேன்: கோவை சம்பவ எதிரொலிகள்Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7998914262880712092.post-30264688791596725472010-11-14T08:34:28.148+05:302010-11-14T08:34:28.148+05:30@ நட்பாஸ்
நன்றி. தாமத ரெஸ்பான்சிற்கு மன்னிக்கவும்...@ நட்பாஸ்<br /><br />நன்றி. தாமத ரெஸ்பான்சிற்கு மன்னிக்கவும். என் பதில் என்று ஏதும் இங்கில்லை.Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-67462801076068454712010-11-11T19:54:56.398+05:302010-11-11T19:54:56.398+05:30மறுபடியும் சொல்கிறேன். தவறாக புரிந்து கொள்ள வேண்டா...மறுபடியும் சொல்கிறேன். தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.<br /><br />மாவோயிஸ்ட்கள், தீவிரவாதிகள் விஷயத்தில் என்ன சொல்கிறோம்? அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும், சரியா? அவர்கள் அப்பாவிகளைக் கொன்றாலும் மனித உரிமை பேசுகிறவர்கள் இப்படிதான் சொல்கிறார்கள்.<br /><br />இந்தக் கொலைக்கு சந்தோஷப்படுகிறவர்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்புறம் தீர்வு சொல்லுங்கள்.<br /><br />போலீஸ் செய்தது தப்பு அதில் சந்தேகமே இல்லை. ஆனால், இந்தக் கொலையால் இனி ஒரு குழந்தையை கடத்த நினைப்பவன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பான், என்று மக்கள் நினைத்தால் அதைத் தவறு என்று சொல்ல முடியுமா?<br /><br />இது உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயம். போலீசைத் திட்டுங்கள், சட்டத்தைத் திட்டுங்கள், அரசியல்வாதிகளைத் திட்டுங்கள். பத்திரிக்கைகளைத் திட்டுங்கள்.<br /><br />தங்கள் குழந்தைகள் உயிரை நினைத்து பயப்படும் பொது மக்களைத் திட்டாதீர்கள். நிச்சயமாக அவர்கள் சந்தோஷப்படுவது சுட்டுக் கொல்லப்பட்டான் என்று அல்ல. இந்த மாதிரி செய்பவனுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்றுதான்.<br /><br />இந்த நிலைக்கு யார் காரணம் என்று யோசிப்போம்.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-16360674596729950282010-11-11T19:48:41.212+05:302010-11-11T19:48:41.212+05:30கோயமுத்தூரில் சகலரும் சொல்வது இது - "வெட்டி ந...கோயமுத்தூரில் சகலரும் சொல்வது இது - "வெட்டி நாயம்!!' தேவைக்கதிகமாக மிகையாக நியாயம் பேசிக் கொண்டிருந்தால், கேலியாக இப்படி சொல்லி விட்டு எழுந்து போய் விடுவார்கள்.<br /><br />ரொம்ப பிராக்டிகலான மக்கள். பேசுமளவுக்கு இயற்கை வளம் எதுவும் கிடையாது. ஆனாலும் உழைப்பு மற்றும் முனைப்பு இதைக் கொண்டே ஒரு பெரிய அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியவர்கள்.<br /><br />கோவையில் குண்டு வெடித்த போது நான் அங்கிருந்தேன். இன்றும் அவர்கள் சொல்வது, நாம அப்படி பதிலடி குடுத்தமில்ல, இனி எவனுக்காவது குண்டு வெக்கிற தைரியம் வருமா? என்பதுதான்.<br /><br />குற்றவாளிகளை சிறையில் அடைப்பது மக்களின் பாதுகாப்புக்காக மட்டுமல்ல. அவர்களின் பழி வாங்கும் உணர்வை நிறைவேற்றித் தருவதற்காகவும்தான். இந்த விஷயத்தில் இப்படி நடந்திருக்கிறது.<br /><br />உண்மைத்தமிழன் பதிவில் ஒருவர் கேட்டிருந்தார், நாவரசு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் வெளியே வந்து விட்டாரே என்று. அதே போல் பூவரசியோ யாரோ இப்படி தப்பித்து வந்து விடுவாரே என்றும் கேட்டார்கள். இன்றைக்குக் கூட பாருங்கள் ரதோர் பெயிலில் வந்து விட்டார்.<br /><br />சட்டம் இப்படி இருக்கையில், மக்கள் சந்தோஷப்படாமல் என்ன செய்வார்கள், சொல்லுங்கள்?<br /><br />நான் நியாயப்படுத்தவில்லை. உள்ள நிலைமையை சொல்கிறேன். கடவுள் நம்பிக்கை போய் விட்டது. சட்டத்திலும் நம்பிக்கை போய் விட்டது. என்ன செய்யச் சொல்கிறீர்கள்?<br /><br />மாவோயிஸ்டுகள் போலீசைக் கொல்லும்போது அருந்ததி ராய் யாரைத் திட்டுகிறார்? அந்த மனித உரிமைதான் இங்கும் வேலை செய்கிறது.<br /><br />தார்மீக நியாய உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாமல் சட்டப்புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தால், மெட்ராஸ் பாஷையில் சொல்வதானால், "வேலைக்காவாது! போய்க்கினே இரு!"<br /><br />--------<br /><br />நாமெல்லாம் ரொம்ப உணர்ச்சி வசப்படுகிறவர்கள். நான் படிக்கும் காலத்தில் இதே மாதிரி டெல்லியில் இரு குழந்தைகள் பலியானார்கள். ஒரே பரபரப்பு, அப்புறம் கொலையாளிகள் கைதாகி தூக்கிலிடப்பட்டதும் எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள்.<br /><br />இறந்த குழந்தைகளின் பேரை மறந்து போயிருப்போம். ஆனால் அன்று கொடூரமானவர்களாக பொதுமக்களால் ஏசப்பட்ட இருவர் யார் தெரியுமா?<br /><br />பில்லா, ரங்கா!natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-55139551943109004672010-11-11T10:21:25.480+05:302010-11-11T10:21:25.480+05:30தயை செய்து எனது பதிவினைப் பாருங்கள். உங்களது கருத்...தயை செய்து எனது பதிவினைப் பாருங்கள். உங்களது கருத்து வேண்டி.<br /><br />பதிவின் தலைப்பு: 'கொண்டு வரச்சொன்னால் கொன்று வரலாமா?'<br />http://vettipaechchu.blogspot.com/2010/11/blog-post_10.html<br /><br />மக்களின் உணர்ச்சிகளை மட்டுமே இந்த செய்தியில் பார்க்க முடிகிறது. அத்தனை யும் மதிக்கத் தக்கதே. இருப்பினும் தெளிவான சிந்தனையை இழக்கலாகாது என்பது எனது எண்ணம்.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.com