Jan 1, 2012

மடிப்பாக்கத்தில் புதுவை அரவிந்தர் ஆசிரமம்


என் அம்மா ஒரு தீவிர அரவிந்தர் அன்னை பக்தை. முடிந்த மட்டிலும் வருட ஆரம்ப நாளில் புதுவையில் அன்னையை தரிசிக்க தன் தியான மைய அன்பர்கள் கூட்டத்துடன் சென்று விடுவார்.  இந்த வருடம் புதுவையில் புயல் மழை காரணமாக அந்தப் பயணத்தைத் தவிர்க்கும் நிலை.

மடிப்பாக்கம் பாலையா தோட்டத்தில் ஒரு அன்பர் அரவிந்தர் அன்னை தியான மையம் அமைத்துள்ளார். அங்கு அழைத்துச் செல்ல என்னைக் கேட்டார், சென்று வந்தோம்.

நம்பினால் நம்புங்கள்... புதுவையில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்று வந்த உணர்வு இருந்தது. என்ன, ஏன், எப்படி என்ற கேள்விகள் உங்களுக்கு இருக்குமானால் இங்கு ஒருமுறை வந்து சென்றால் உங்களுக்கே தெரியும். பொதுவாக தியான மையங்களில் நான் இதுவரையில் பார்த்தது அரவிந்தர் அன்னை படங்களும், பூக்களும், கூட்டுத் தியானங்களும்தான். இங்கே மடிப்பாக்கம் அன்பர் அமைத்திருப்பது கிட்டத்தட்ட புதுவை ஆசிரமத்தின் ரெப்ளிகா.

நீங்கள் சென்னையைச் சேர்ந்த அரவிந்த அன்னை பக்தர் எனில் அவசியம் இங்கே விஜயம் செய்யுங்கள். புதுவை சென்ற புத்துணர்வு நிச்சயம் இருக்கும்.

முகவரி: 1, சர்மா லே அவுட், பாலையா கார்டன் (ஹெரிடேஜ் சூப்பர் மார்க்கெட் எதிர் சந்து), மடிப்பாக்கம், சென்னை - 91.

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

4 comments:

BN said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

வாழ்க! வளர்க!

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

Giri Ramasubramanian said...

@ நட்பாஸ்
@ வெங்கட் நாகராஜ்

நன்றிகள்!

Rathnavel Natarajan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...