சங்க சித்திரங்கள்: 10 வருடங்களுக்கு முன் ஜெயமோகன் ஆனந்த விகடனில் எழுதிய தொடர். அந்தத் தொடர் மூலமாகத்தான் ஜெமோ’வின் வாசகன் ஆனவன் நான்
வாசகன் என்பதை விட, ஒரு தீவிர ரசிகன் ஆனவன். வாரம் ஒரு சங்கப்பாடலைத் தன் வாழ்வின் தீவிர அனுபவம் ஒன்றுடன் ஒப்பீடு செய்து ஜெமோ எழுதினார்.
மூன்று நிலைகளில் இருக்கும் ஒவ்வொரு அத்தியாயத்தின் உள்ளடக்கமும். அனுபவம், சங்கப்பாடல், அதன் எளிய மொழிபெயர்ப்பு.
வாராவாரம் காத்திருந்து என்றால் காத்திருந்து அந்தத் தொடரை வாசித்தவன். கவிதா பதிப்பகம் சங்க சித்திரங்களை புத்தகமாக பதிப்பித்திருக்கிறது
சங்க சித்திரங்கள் பற்றிய பார்வையை நம் நண்பர் விமர்சனமாகப் பகிர்ந்துள்ளார். நாளை http://sasariri.com’ல் வெளியாகும் பதிவுக்கே இம்முன்னோட்டம்
அந்தப் பதிவுடன் தொடர்புடைய ஒரு அருமையான பாடல் இணைப்பையும் நண்பர் அனுப்பியிருக்கிறார் - You Take My Breath Away - http://www.youtube.com/watch?v=4vlDQUk1VIs
