Showing posts with label ச்சின்னப்பையன். Show all posts
Showing posts with label ச்சின்னப்பையன். Show all posts

Mar 6, 2013

ரிடர்ன் ஆஃப் தி தாசர் பாடல்கள்


ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது!

சத்யாவை எனக்கு அவரது தாசர் பாடல்கள் தளம் மூலமாகத்தான் அறிமுகம். நட்பாஸ் ஒருமுறை தாசர் பாடல்கள் தளத்திலிருந்து ஒரு பதிவை (ட்விட்டரில் (அ) ரீடரில்) பகிர்ந்திருந்தார். அன்று முதல் தாசர் பாடல்கள் தளத்தின் தொடர் வாசகனானேன்.

தாசர் பாடல்களுக்கான சத்யாவின் விளக்கவுரை வாசித்ததும் ஏற்படும் மனநிறைவை வார்த்தைகளால் விளக்க முடியாது. பக்தியும் பரவசமும் அற்ப வார்த்தைகளுள் அடங்கிவிடுவதில்லை.

”சத்யா இங்க ட்விட்டர்ல இருக்காரா?”, என்று கேட்டு அவரை அங்கும் தொடர்ந்தேன். சத்யாவின் தாசர் பாடல்களுக்கு அடுத்து அவரது கிசும்பு நகைச்சுவை ட்வீட்களில் ரெகுலராக திளைப்பதும் இன்னொரு ஆனந்தம். சத்யாவின் எள்ளல் ட்வீட்கள் ஸ்பெஷல் என்றால், சுய எள்ளல் ட்வீட்கள் செம்ம ஸ்பெஷல்.

திடீரென்று, ”அடுத்த ஆறு மாசத்துக்கு தாசர் பாடல்கள் தளம் இயங்காது”, என்று போர்டு போட்டார் சத்யா, சென்ற ஜனவரி பதினான்கு அன்று மறு தொடக்கம் செய்திருக்க வேண்டிய தாசர் பாடல்கள் தளம் ரீ-ஸ்டார்ட், மக்கர் என்ற ரீதியிலேயே ஓடிக்கொண்டிருந்தது.

இடையில் 365process பதிவுகளை ஆரம்பித்தார் சத்யா. தினம் ஒரு ப்ராஸஸ் தகவல். ப்ராஸஸ் பதிவுகளுக்கான சத்யா வெளியிட்ட தினசரி விளம்பர ட்வீட்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் உருவானது என்றால் அது மிகையில்லை. 

ஆம்னிபஸ் தளம் தொடங்குகிறேன் என்றதும், “என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோப்பா”, என்று இங்கும் குதித்தார் சத்யா. எங்களில் மற்ற எல்லோருக்கும் அவரவர் பதிவு என்றோ, அன்று காலையில் உட்கார்ந்து கடைசி நேரத்தில் எழுதுவதே வழக்கம். ஆனால் சத்யா தன் ஸ்லாட் புதன்கிழமை என்றால் அதற்கு முந்தைய சனி, ஞாயிறுகளிலேயே பதிவை மின்னஞ்சலில் எங்கள் பார்வைக்கு அனுப்பி எங்களை வெறுப்பேற்றுவார்.

கார்பரேட் கம்பேனிகளில் வொர்க்-லைஃப் பாலன்ஸ் என்று ஒரு விஷயத்தைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டேயிருப்பார்கள். அதுபோல பர்சனல் லைஃப் - சோஷியல் லைஃப் பாலன்ஸ் பற்றி சத்யாவை ஒரு பதிவு எழுதச் சொல்ல வேண்டும்.

சென்ற வாரம் 365process தளத்தின் 365 பதிவுகளையும் நிறைவு செய்துவிட்டு இதோ இப்போது தாசர் பாடல்கள் தளத்தை மறுதிறப்பு செய்திருக்கிறார் சத்யா. இனி தொடர்ச்சியாக அங்கே எழுதுவார்.

ராம நாமம் என்னும் பாயசம் என்ற இந்தப் பதிவைப் படித்ததும் அதே பழைய பரவசம் என்னுள், மறுபடியும்.

ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்:

Aug 25, 2012

ஓ அப்படியா?


வடபழனி க்ரீன்பார்க் ஹோட்டல். ஆறுவருஷம் மின்ன இப்போ வேலை பாக்கற கம்பேனில சேர்ந்த புதுசுல மூணுநாள் இண்டக்‌ஷன் நடந்தது.  அதாகப்பட்டது கம்பேனி உள்ள எப்படி நடந்துக்கணும், செய்வன, செய்யத்தகாதன, ரூல்ஸ், ரெகுலேஷன்ஸ் கத்துக்குடுக்கற நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

ரெண்டாவது நாள் காலைல உள்ள அடைச்சி வெச்சு ஏதேதோ மந்திரங்கள் ஓதினாங்க. அவனவன் வந்தவேலையைக் கவனிக்கறேன்னு தலையைத் தொங்கப் போட்டுட்டு ஊசலாடிட்டு இருக்கான். 

மீட்டிங் தொடங்கி ஒண்ணரை மணிநேரம் ஆகியிருந்தது. கைக்கு எட்டற தூரத்துல பாட்டில் பாட்டிலா மினரல் வாட்டரும், சாக்லேட்டுகளும் டேபிள்ல வெச்சிருந்தாங்க. ஆர்வக்கோளாருல இதைத் தின்னு அதைக் குடிச்சுன்னு நேரத்தை ஓட்டிட்டு இருந்ததால ‘அவசர’ வேலைக்கு அவசியம் ஏற்பட்டது. ப்ரேக் குடுப்பாங்க குடுப்பாங்க’ன்னு பாத்தா தர்ற வழியாக் காணோம்.

அந்தநேரம் பாத்து ‘நான் பாடுவேன்’னு தெரிஞ்ச ஒரு ப்ரம்மஹத்தி “சார், கிரியை ஒரு பாட்டு பாடி எண்டர்டெயின் பண்ண சொல்லுங்க’ன்னுச்சு.

”இஸ் இட்? கிரி ப்ளீஸ் ஸிங் ஃபார் அஸ்”, என்றார் அந்த ஸெஷன் நடத்திக் கொண்டிருந்தவர்.

“டேய்! இப்போ எனக்கு வேண்டியது ஒரு ப்ரேக்’டா. ஒரேஒரு நிமிஷம் அனுமதிங்கடா, அதை முடிச்சிட்டு வந்து எதை வேணா பண்றேன்’னு சொல்லணும் போல இருந்துச்சி. ஆனா, ”நான் என்ன ச்சீர் கேர்ளாடா”ன்னு கேக்க வந்த கோவத்தையும் மறைச்சிக்கிட்டு வேற வழியில்லாம என்னத்தையோ பாடினேன்.

அப்புறம் ஒருவழியா ஒரு ரெண்டுமணிநேரத்துக்குப் பெறகு ஒரு ப்ரேக் குடுத்தாங்க. மூணரை மணிநேர அடக்குமுறையை ரிலீஸ் செய்ய ‘தடதட’ன்னு ஷார்ட் ஸ்டெப் வெச்சு சினிமா ஃபாஸ்ட் மோஷன் மாதிரி ஓடறேன்.

ரெஸ்ட் ரூம் வாசல்ல முன்னாடியே ‘ரிலீஸ்’ வேலையை முடிச்ச இன்னொரு ப்ரம்மஹத்தி வழியை அடைச்சி நின்னுக்கிட்டு “அப்புறம், எங்க வந்தீங்க”ன்னுது.

“டேய் வழியை வுடுடா. ரிலீஸுக்கு முன்ன இங்கயே ப்ரீவ்யூ நடந்துடப் போவுது’ன்னு அவனை இடிச்சித் தள்ளிட்டு உள்ள போறேன்.

“ஹ்ஹ்ஹ்ஹ்ஹப்பாஆஆஆஆஆஆடாஆஆஆஆஆஆஆஆ”ன்னு நிம்மதியா கண்ணை மூடி லயிச்சி போன வேலையைப் பாத்துட்டு இருக்கேன், பக்கத்துல ஒரு கொரல்.

“சார்....”

ஒத்தைக் கண்ணை ஓபன் பண்ணிப் பக்கவாட்டுல பாக்கறேன். பனைமர ஒசரத்துக்கு ஒருத்தன் இருக்கான்.

அண்ணாந்து ஆகாசத்தைப் பாத்தா அவன் மூஞ்சி தெரியுது.

“ம்ம்ம்??”

“நீங்க நல்லாப் பாடினீங்க சார்”

”அவனவன் எந்த அவசரத்துல எந்த நிலைமை எல்லாம் கடந்து வந்து லயிச்சி ஒரு காரியத்தை பண்ணிட்டு இருக்கான். சக காரியவாதி காரியத்தை கவனிக்காம என்னாடா நல்லாப் பாடினீங்க, நொள்ளாப் பாடினீங்கன்னுட்டு”, அப்டின்னு கேட்டிருக்கணும். ஆனா நாம  கண்ணெல்லாம் சொருகின கோலத்துல இருந்ததால....

“ஓ அப்படியா?”, அப்டின்னு ஒரு மடத்தனமான எக்ஸ்ப்ரெஷன் தந்தேன்.

மூணுநாள் கழிச்சி வேலைக்கு ஆபீஸ் வந்தப்போதான் தெரியுது கேள்வி கேட்ட ப்ரம்மஹத்தி என் டீம் மெம்பர்’ன்னு.

இன்னைய வரைக்கும் அந்த, “ஓ அப்படியா?”ங்கற பதிலை அவன் மறக்கலை. “ஒண்ணா தேங்க்ஸ்’னு சொல்லணும். இல்லை அட்லீஸ்ட் ஜஸ்ட் ஒரு ஸ்மைல் செஞ்சிருக்கணும். அதென்னய்யா - ஓ அப்படியா’ன்னு ஒரு எக்ஸ்ப்ரெஷன்?”ன்னு இன்னைய வரைக்கும் சந்தர்ப்பம் கெடைக்கும்போதெல்லாம் என்னை ஓட்டறதுதான் அவன் வேலை.

நம்ம ச்சின்னப்பையன் எழுதின எப்படி இருக்கீங்க? எப்படி இருந்துச்சு உங்க நாளு? பதிவை வாசிச்சதும் அந்தப் பழைய நியாபகம் வந்துடுச்சு. அதான் சரசரன்னு இந்தப் பதிவு.
Related Posts Plugin for WordPress, Blogger...