ராகம், தாளம், பல்லவி இவற்றில் நீங்கள் விற்பன்னரா? அப்படியென்றால் இந்தப் பதிவு ஒரு கத்துக் குட்டியின் கிறுக்கல்கள்.
ஏதோ அரைகுறையாய்ப் பாடுவேனே தவிர்த்து, எனக்கு ராகங்களை கண்டறியும் இசை ஞானம் ரொம்பவும குறைவே. கல்யாணி வகையறா ராகங்களை கொஞ்சம் கண்டறிவது சுலபம். காரணம், நான் இசையை நன்றாய் ரசிக்கத் துவங்கிய என் பதின்பருவத்தில் ராஜா அவற்றை தன் இசையில் அதிகம் பயன்படுத்தியதால். உ.ம். அம்மா என்றழைக்கத, கலைவாணியே, யமுனை ஆற்றிலே, ஜனனி ஜனனி, சிறு கூட்டுல, சுந்தரி கண்ணால் ஒரு சேதி. (சரிதானா?),
எனினும் நான் முதன்முதலில் ராகம் என்னும் விஷயம் பற்றித் தெரிந்து கொண்டது "சஹானா" ராகம் கேட்டபோதுதான்.
சஹானா அதிகம் பயன்படுத்தப்படாத ராகம் என்றாலும், இசை ஆர்வலர்கள் பலருக்கு இது மிகப் பிடித்த ராகம்.
ரஹ்மான் அவர்கள் கூட சஹானா அல்லது சஹானாவைத் தழுவிய ராகங்களை அடிக்கடி அவர் இசையில் பயன்படுத்தி இருக்கிறார். ஒரு சிறப்பான உதாரணம் "அன்பே சுகமா (பார்த்தாலே பரவசம்).
பிரபலமாக சஹானாவில் அமைந்த திரைப்பாடல்கள் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்....
பார்த்தேன் சிரித்தேன் (வீர அபிமன்யு)
ருக்கு ருக்கு ருக்கு (அவ்வை ஷண்முகி)
சஹானா (சிவாஜி) - இது சஹானாதானா?
இந்தப் பழைய "ரயில் சிநேகப்" பாடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? சஹானா ராகத்திற்கு என் நெஞ்சில் நீங்கா இடம் தந்த பெருமை இந்தப் பாடலுக்கு உண்டு. இந்தப் பாடல் பற்றி பேச நிறைய உண்டு, எனினும், இப்போது இந்தப் பாடல் உங்களுடன் பேசட்டும்.
சஹானா ராகம் குறித்த யுடியூப் தேடல்களில் கிடைத்த இன்னொரு முத்து இங்கே.....