Showing posts with label கரிகாலன் கால். Show all posts
Showing posts with label கரிகாலன் கால். Show all posts

Dec 13, 2009

கரிகாலன் கால் கருப்பா?

"கரிகாலன் காலப்போல கருத்திருக்குது குழலு...
குழலில்ல குழலில்ல தாஜ்மஹால் நிழலு..."


(முழுப்பாடலுக்கு) (பாடலைக் கேட்க)

சமீபத்தில் வந்த பாடல்களில் A, B, C என எல்லா சென்டர் ரசிகசிகாமணிகளையும் தலையசைக்க வைத்திருக்கும் பாடல் இது. Peppy-யான குத்துப்பாடல் என்றாலும் விஜய் ஆண்டனி வழக்கம் போல் பாடலில் ஒரு அழகான மெலடி சேர்த்திருக்கிறார். பாடலின் இசை ரோலர் கோஸ்டர் போல ஏற்ற இறக்கத்தோடு கிறங்கடிக்கிறது என்றால், பாடலின் வரிகள் கேள்வி பதில் வகையில் பாடலுக்கு அழகிய சுவை.

பாடல் (கவிஞர் கபிலன்), தமிழ் கூறும் நல்லுலகிற்கு "குழல்" என்ற வார்த்தைக்கு "கூந்தல்" என்பதுவும் ஒரு பொருள் என நினைவுப்படுத்துகிறது. மேலும், கரிகாலன் கால்நிறம் குறித்த விவாதத்தையும் நினைவுப்படுத்துகிறார் கபிலன்.

கரிகால் வளவன் என்று அழைக்கப் பட்ட கரிகால் சோழன் (இவர் பொன்னியின் செல்வனில் வரும் ஆதித்த கரிகாலன் அல்ல) காலின் நிறம் குறித்து இருவித கருத்துக்கள் உண்டு.

- கரிகாலன் போர் ஒன்றில் ஈடுபட்ட போது, எரிந்த அரண்மனையில் இருந்து வெளியேறும் முன் அவன் கால் எரிந்து கரியின் நிறமானது முதல் கருத்து.
- "கரி" என்றால் தமிழில் "யானை" என்று ஒரு பொருள். கரிகாலன் யானையின் கால்களைப் போல் பலமான கால்களைக் கொண்டவன் என்றும் ஒரு கருத்து உண்டு.

ஆக, முதல் கருத்தை வழிமொழியும் வகையில்தான் கபிலன் பாடல் இயற்றி இருக்கிறார். Okkay sir....!!!
Related Posts Plugin for WordPress, Blogger...