Showing posts with label கின்னஸ் சாதனை. Show all posts
Showing posts with label கின்னஸ் சாதனை. Show all posts

May 29, 2012

பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்


ஒரு கவிதைக்கு பதினெட்டு வினாடி வீதம், மொத்தம் பன்னிரண்டு கவிதைகளை மூன்றே முக்கால் நிமிடங்களில் எழுதிவிட்டேன்.

இது ஒரு புதிய உலக சாதனையாம்! எதற்கும் படித்து வையுங்கள். படித்தவர்கள் கணக்கில் உங்களுக்கும் கின்னஸ்காரர்கள் கினியா நாட்டிற்கு அழைப்பு தரக்கூடும்.


நன்றி: யாரோ ஒரு இணையப் புண்ணியவான்


சுப்பம்மா சுருக்குப்பையில்
மிளகாய்ப் பொடி
வைத்திருக்கிறாள்


பக்கத்து வீட்டிற்கு
நகிஷிமோ
வந்திருக்கிறான்


டிஷ் ஆண்டனா
மொட்டை மாடியில்
இருக்கிறது


வெண்ணிலா
வேறுவழியின்றி
காய்கிறது


நள்ளிரவில் யாரோ
காகிதம் கிழிக்கும்
சத்தம் கேட்கிறது


நீட்சேவை அறிந்தவன்
நித்திரையில்
இருக்கிறான்


வேகமெடுத்து வந்த
வாகனம் வழியிலே
நின்றது


ரோட்டோரக் கடையில்
நாயர் ஒருத்தர்
இளநீர் விற்கிறார்


என்னையே பார்க்கிறது
நான் வெட்டிச் சாய்த்த
மரம்


சில்லரையை எண்ணித்
தந்து சிரித்தும் வைக்கிறான்
சேட்டு


ரோஜா என்பது
நிறமல்ல, மலர்
என்கிறான் ரோஜர்


அமர்ந்தும் அமராமல்
அமர்ந்திருக்கிறது
அன்னாசிப் பழமொன்று
Related Posts Plugin for WordPress, Blogger...