Showing posts with label சாலை விதிகள். Show all posts
Showing posts with label சாலை விதிகள். Show all posts

Aug 26, 2010

நடிகர் சூர்யாவின்...."வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசம்"

சாலைவிதிகள், விபத்துக்கள், தலைக்கவசத்தின் அவசியம் பற்றி நான் ஏற்கெனவே பல பதிவுகள் எழுதியிருக்கிறேன். (இணைப்பு இங்கே)

இங்கே சூர்யா அவர்கள் "நச்"சென்று பொட்டிலடித்தாற்போல்  சொல்வதைக் கேளுங்கள். இதற்கு மேலும் நீங்கள் மாட்டேன் மாட்டேன் என்று முரண்டு பிடித்தால்....... கடவுளாலும் உங்களைக் காக்க முடியாது.

வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசம்...... ஒரே நொடிதான்! கொஞ்சம் யோசிங்க!

Jun 5, 2010

மொபைல் பேசிக்கொண்டே.....


அவர் வண்டியோட்டும்போது அவர் கிட்ட போன்ல பேசாதீங்க....

பேசினா?????


.
.
.

May 9, 2010

ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம்

இன்று தினமலர் நாளிதழில் வந்த செய்தி ஒன்றை அப்படியே இங்கு தந்திருக்கிறேன். தயவு செய்து படியுங்கள். படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், "நிற்க அதற்குத் தக".......

நன்றி: தினமலர்



ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம்: பஸ்சில் மோதி உயிர் பிழைத்த வாலிபர் சொல்வதை கேளுங்கள்!
மே 08,2010,23:54  IST
Human Intrest detail news 
சென்னை : ''ஹெல்மெட் அணிவது எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது தான் உணர்ந்தேன். ஹெல்மெட் அணிந்திருந்ததால் தான் இவ்வளவு பெரிய விபத்து நடந்தும், சிறு காயத்துடன் உயிர் பிழைத்தேன்,'' என ஆவடி அருகே நின்றிருந்த பஸ்சின் பின் பகுதியில், பைக்கில் மோதி விபத்துக்குள்ளான வாலிபர் மெய்சிலிர்த்தபடி கூறினார்.

சென்னை நகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கேற்ப, விபத் துக்களும் அதிகமாக நடக்கிறது. 'விபத்துக் களை தவிர்க்க போக்குவரத்து விதிமுறைகளை கடைப் பிடியுங்கள்; காரில் செல்லும் போது 'சீட் பெல்ட்' அணியுங் கள். பைக்கில் செல்பவர்கள் கட் டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்' என போக்குவரத்து போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். நாளொன்றுக்கு குறைந்தது 10 விபத்துக்களாவது நடக்கின்றன. வாரத்தில் நான்கைந்து பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்.

கடந்த 5ம் தேதி, சென்னையில் இருந்து ஆவடி நோக்கிச் சென்ற பைக் ஒன்று, தனியார் பாலிடெக்னிக் எதிரே, நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சின் பின்பகுதியில் மோதி விபத்துக் குள்ளானது. இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் அனைவரும், பைக்கில் சென்றவர் கட்டாயம் உயிரிழந்திருப்பார் என்றே நினைத்தனர். ஆனால், விபத்தில் சிக்கிய பைக் ஓட்டி, அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இக்காட்சியை பார்த்தவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். நடந்த சம்பவத்தை, விபத்தில் சிக்கிய வாலிபரே விளக்கி கூறுகிறார்.

எனது பெயர் கதிர்வேல் (21). எனது அப்பா பெயர் பழனிசாமி. நான், ஆவடி, காந்திநகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வருகிறேன். தவணை முறையில் துணி விற்பனை செய்து வருகிறேன். பைக்கில் எங்கு சென்றாலும் தலையில் ஹெல்மெட் அணிந்து தான் செல்வேன். கடந்த 5ம் தேதியும் ஹெல்மெட் அணிந்து, பைக்கில் சென்னை, சேத்துப் பட்டுக்கு ஒரு வேலையாக சென்றேன். வேலையை முடித்து விட்டு, வீட்டிற்கு திரும்பினேன். மதியம் 11.30 மணியளவில் ஆவடி, தனியார் பாலிடெக்னிக் எதிரே வந்தபோது, கடும் வெயில் காரணமாக, கண்கள் இருட்டி, மயக்கம் வருவது போல் இருந்தது. அப்புறம், என்ன நடந்தது என்பதே எனக்குத் தெரியவில்லை. எனது பைக், சாலையோரம் நின்றிருந்த ஒரு பஸ்சின் பின்பகுதியில் மோதியிருந்தது. நான் பைக் அருகே சாலையோரம் விழுந்து கிடந்தேன். அவ்வழியாக சென்றவர்கள் என்னை அருகில் இருந்த மரத்தடியில் அமர்த்தி, தண்ணீர் கொடுத்தனர். ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் காயம் எதுவும் இல்லை. மூக்கில் இருந்து சிறிது ரத்தம் வந்தது. உடலில் சிறு வலி ஏற்பட்டது. உடலில் வேறெங் கும் காயம் இல்லை.

பின்னர், அங்கு வரவழைக்கப் பட்ட 108 ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி, அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் எனக்கு ஸ்கேனிங் உட்பட முழு உடல் பரிசோதனை செய்தனர். இதில், இடது கையில் எலும்பு முறிவும், இடது நடுவிரலில் சிறு காயம், வலது காலில் 'சைலன்சர்' சுட்டதால் ஏற்பட்ட தீக்காயம், வலது தோள்பட்டையில் வலி ஆகியவை இருந்தது. உடலில் பெரிய காயமோ, தலையில் பலத்த அடியோ இல்லை என டாக்டர்கள் கூறினர். நான் அணிந்திருந்த ஹெல் மெட் தான், தலையில் காயமில் லாமலும், உடலில் சிறு காயத்துடனும் தப்பியதற்கு காரணம். ஹெல்மெட் அணிவது எவ் வளவு முக்கியம் என்பதை அன்று தான் உணர்ந்தேன். இனிமேலும், நான் ஹெல் மெட் அணிந்து தான் பைக்கில் செல்வேன். இவ்வாறு கதிர்வேல் கூறினார்.

Sep 9, 2009

சாலை விபத்துகள் - follow up

இது "குடி குடியை கெடுக்கும்" என்று நான் சமீபத்தில் எழுதிய சாலை விபத்துகள் குறித்த blog-இன் follow up. இந்த சம்பவம் குடியின் பலனால் வந்ததல்ல. The so called இந்திய அசட்டையால் நிகழ்ந்தது.

சமீபத்தில் எங்கள் அலுவலகத்தின் மேனேஜர் ஒருவர் தன் 15 மாத குழந்தையை சாலை விபத்தில் இழந்தார். காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தையை feed செய்வதற்காக முன்னே எடுத்து, தான் அணிந்திருந்த seat-belt-ஐ அவர் release செய்த வேளையில் விபத்து நடந்திருக்கிறது. அவருக்கு எலும்பு முறிவு. குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டு ஏக ரத்த இழப்பு நேர்ந்து , நேரத்திற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் ரத்த இழப்பிலேயே குழந்தை இறந்து விட்டது.



Seat-belt உங்களை எல்லா நேரத்திலும் காப்பாற்றி விடும் என உறுதி சொல்ல முடியாது. ஆனால் இது போன்ற minor accident-களில் குறைந்தபட்சம் தலைக் காயங்களையாவது அது காப்பாற்றும். கார்களில் குழந்தைகளை free-யாக முன்னே உட்கார வைக்கும் இந்திய வாடிக்கையை இனியாவது நிறுத்துவோம். ஒரு உயிர் என்பது விலை மதிப்பில்லாதது. யாராலும் திருப்பித் தர இயலாதது....!!

எனவே நண்பர்களே..... Please wear seat-belts.....!! Please....Please......!

Aug 9, 2009

குடி குடியை கெடுக்கும்

தினமலரில் இன்றைய செய்தி: சாலை விபத்துகளில் இறந்தவர் எண்ணிக்கை இந்த ஆண்டு மட்டும் 90000. (இது உலக அளவிலான செய்தி என நம்புகிறேன்). சிறிய காயங்களுடன் தப்பிப்பவர்கள் பல லட்சம் பேர். நிரந்தர ஊனத்திற்கு தள்ளப்படுபவர்கள் சில லட்சம் பேர் என்கிறது அறிக்கை. நிஜத்திலும் நிஜக் கொடுமையான செய்தி.

இந்த சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக போக்குவரத்து இயக்குனர் தெரிவித்து இருப்பது Drink & Drive. அதிலும் குறிப்பாக 35 வயதுக்கு உட்பட்டவர்களின் drink drive. சிறு வயதில் கன்னா பின்னா என சம்பாதிப்பது அதிகரித்ததே இதன் காரணம் என நினைக்கிறேன்.

My friends; நல்லா சம்பாதிங்க, நல்ல்ல்ல்ல்லா குடிங்க, ஆனா மத்தவங்க குடிய கெடுக்காதீங்க, please. Never drive while you are on drink's control.

விபத்துகளுக்கான இன்னொரு காரணம் அதிவேகமாக வண்டி ஓட்டுவது. இவர்களை என்ன சொல்லி திருத்த. ஒன்றே ஒன்றுதான் நான் செய்வது. அது லேனா தமிழ்வாணன் அருளிய ஒரு அறிவுரை. எப்போதும் உங்களைச் சுற்றி 20 முட்டாள்கள் வண்டி ஓட்டுவதாய் நினைத்து உங்கள் வண்டியை ஓட்டுங்கள். இந்த வகையில் ஓட்டும் போது தன்னாலே நீங்கள் முடிந்தவரை உங்களைக் காத்துக் கொள்கிறீர்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...