Showing posts with label என்னத்த சொல்ல. Show all posts
Showing posts with label என்னத்த சொல்ல. Show all posts

Nov 3, 2013

என்னத்த சொல்ல...

சில தினங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரிடம் உணவு இடைவெளியில் பேசிக் கொண்டிருந்தேன். நெருங்கிப் பழகியவரல்ல. அதுவரை சந்திக்கும் தருணங்களில் ஒரு ஹலோ சொல்லிக் கொண்டதோடு சரி. அன்றுதான் நான்கு வார்த்தைகள் பேசத் தோதாக மேஜை நாற்காலி கிடைத்தது இருவருக்கும்.

குசல விசாரிப்புகளுக்குப் பின்...

“கல்யாணம் ஆகிடுச்சா சார் உங்களுக்கு?”, கேட்டேன்.

“நல்லா ஆகிடுச்சி சார். ஹேப்பிலி மேரீட்”

“ஹேப்பிலி மேரீட்? அப்போ நீங்க ரொம்ப சமீபத்துல கல்யாணம் ஆனவரு, கரெக்ட்தானே?”

”ஆறு வருஷம் ஆச்சு சார்”

“அது சரி. ரெண்டு தகவலும் காண்ட்ரடிக்ட் ஆவுதே”

“அதெல்லாம் இல்லை சார். நீங்க? கல்யாணம் ஆனவரா?”

“அதே ஆறுவருஷம்தான் சார் நமக்கும்”

“அப்போ அங்கயும் ஹேப்பிலி மேரீட்’னு சொல்லுங்க”

“ஆங்! சொல்லிக்கலாம்”, சிரித்தேன்.

“பசங்க?”, கேட்டார்.

“மூணரை வயசு. பையன் இருக்கான்”

ஸ்கூல் போறானா, எந்த ஸ்கூல், இங்க்லீஷ் பேசறானா என்று ஒரு டஜன் கேள்விகள் தொடர்ந்தன. 

“உங்களுக்கு சார்?” என்று வினவினேன். 

”குழந்தையா?”,

”ஆ... ஆமா சார்”,  இந்த சென்சிடிவான கேள்வியை நான் பொதுவாக யாரிடமும் ரொம்ப யோசித்தே கேட்பது. இருந்தாலும் அன்று அவரது ஒரு டஜன் கேள்விகள் ஒண்ணரை டஜனாக நீட்டித்திடும் முன் அவரை நிறுத்திவிடவே அப்படிக் கேட்டே விட்டேன்.

“ஆங் ஆங்... இருக்காங்க சார். மூணு குழந்தைங்க”

“மூணு பேரா”, மில்லேனியத்தின் ஆச்சர்யம் இது என்பதால் கொஞ்சம் வாய் பிளந்தேன்.

“ஆமா சார். ரெண்டு பொண்ணு, ஒரு பையன்”

“ஹ்ம்ம்ம்.... பையன் கண்டிப்பா பொறந்திடணும்னு தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்ய முயற்சியா?”

“அதெல்லாம் இல்லை சார். முதல்ல பொண்ணு, ரெண்டாவது பையன், மூணாவது மறுபடி பொண்ணு”

இது அடுத்த விநோதம்.

“ஆபரேஷன் பண்ண மறந்துட்டு பெறகு அவசரப் பட்டுட்டீங்களோ?, கேட்டுவிட்டு நாவைக் கடித்துக் கொண்டேன்.

”ஹிஹ்ஹிஹ்ஹீ! அதெல்லாம் இல்லை சார்”, சாப்பிடுவதைத் தொடர்ந்தார்.

கொஞ்ச நேர மௌனத்திற்குப் பிறகு...

“சொந்தத்துலதான் சொன்னாங்க, ஒரு பையன்’தானே இருக்கான். எதுக்கும் ரெண்டு பையனுங்களா இருந்துட்டா எல்லாத்துக்கும் சரியா இருக்கும்ன்னு. அதான் மூணாவது குழந்தையும் பையனாப் பொறக்குமுன்னு ரெண்டு பொறந்த அப்புறம் ஆபரேஷனுக்கெல்லாம் போகாம முயற்சி பண்ணினோம். விதி வலியது; விளையாடிடுச்சி”, என்றார்.

என்னத்தச் சொல்வேன் நான்.....

Sep 22, 2013

என்னத்த சொல்ல....


நண்பர் ஒருவர் வழக்கமாகத் தன் நெற்றியில் இட்டு வரும் திருமண் நிறம் அன்று கொஞ்சம் மாறிப்போயிருந்தது.

“என்ன சார்? கலர் வேறயா இருக்கே?”

“என்னது?”

“உங்க நெத்தியில? ஏதோ நெறம் மாறிப்னாப்ல இருக்கே?”

“அது கொஞ்சம் அவசரத்துல இட்டுண்டு வந்துட்டேன் சார். கையில எடுத்த... இந்த....அது.... அது எதோ பழையசு போல., கொஞ்சம் நெறம் தப்பிடுத்து. ரொம்ப எல்லோயிஷ் ஆயிடுத்தா?”

“________ நெறமாட்டம் இருக்கே?”, என்றேன்.

“அப்படியா?”

“இப்ப அசப்புல பாத்தா உங்களை ___கலை’ன்னு சொல்லலாம்”

“என்னது?”, அடுத்த க்ஷணம் இடது கையால் தன் நெற்றியிலிட்டதைப் பரபரவென்று அழித்துக் கொள்கிறார்.

“சார்! லலாட ஷூன்யம் ஸ்மசான துல்யம்பா”

“என்ன சார் அது?”

“பாழும் நெத்தி மயானத்துக்குச் சமமாம்”

“அது பரவால்லை சார். இதுதான் படாது”

பிகு: என்ன செண்ட்ரல் கவர்மெண்ட்; என்ன ஸ்டேட் கவர்மெண்ட். சப்செக்ட்லேயே இன்னும் இந்த அடிதடி இருக்குதே....!

Sep 4, 2013

முயற்சித்தேன்! முடியவில்லை!

மூன்றே வரியில்
ஒரு கவிதை எழுதச்
சொன்னார்கள்

முயற்சித்தேன்
முடியவில்லை!

Aug 16, 2013

என்னத்த சொல்ல!

இரண்டு தினங்களுக்கு முன்.....

ஹேய்! பதினொன்ற ஆச்சு, இன்னும் நீ வீட்டுக்கு கெளம்பலியா? என் டெஸ்குக்கு வாயேன், அந்த பெண்டிங் டாஸ்க் முடிச்சிடுவோம்.

பாஸ், பொறப்பட்டுட்டேன் பாஸ். மதியம் பன்னண்டு மணிக்கு உள்ள வந்தது. வீட்லருந்து ரெண்டு போன் கால் வந்தாச்சு. நாளைக்கு பாக்கலாமே?

எங்க வீட்லல்லாம் என்ன தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்கய்யா. நீயும் உங்க வீட்ல சொல்லிடு. இந்த மாதிரி இந்த ப்ராஜக்ட்ல சேந்துட்டேன். இனி எல்லாம் இப்டித்தான்னு சொல்லிடு.

<மனசுக்குள்: இருந்தாலும், டெய்லி பன்னண்டு அவர்’ன்னா ரொம்ப ஓவர் பாஸ்.>

இன்று காலை:

கொஞ்சம் இருங்க தம்பி. வழுக்கி விடப் போவுது. தண்ணிய வெளிய தள்ளி வுட்டுடறேன். 

சரிங்க.

மழைய வாங்கறதா, போங்கறதான்னே புரியலை. கொஞ்சம் செருப்பை வெளிய விட்டுடறீங்களா? ஒவ்வொருத்தரா கொண்டுவர்ற சேத்தைத் தொடைச்சி தொடைச்சி மாளல.

நோ ப்ராப்ளம்.

ஐநூறு நோட்டுதான் வரும் தம்பி, பாத்துக்கங்க. இன்னைக்கு பப்ளிக் ஹாலிடே வேற. எப்போ பணம் கொண்டு வந்து ஃபில் பண்ணுவாங்களோ.

ஓ! சரி சரி. என்ன, காலை நாஸ்தாவா? வீட்லருந்தே கொண்டு வந்துடுவீங்களா?

பின்ன? நாம வாங்கற நாலணா சம்பளத்துக்கு ரெண்டு வேள வெளிய சாப்பிட முடியாதுங்களே.

ஓ... எத்தன அவரு ட்யூட்டி?

காலைல ஏழு மணிக்கு வந்தா, ராத்திரி ஏழு மணி வரைக்கும்.

பன்னண்டு மணி நேரமா?

ஆமாங்க தம்பி...

அட, நம்ம சாதி நீங்க..... என்னைக்கு வீக் ஆஃப்?

அப்டின்னா?

சனி, ஞாயிறு?

சனியுமில்ல, ஞாயிறுமில்ல. பொங்கலுமில்ல, தீவாளியுமில்ல. பதினஞ்சு நாளைக்கு ஒருதடவ டொண்டி ஃபோர் அவர் ப்ரேக் கெடைக்கும். அதான் நமக்கு லீவு.

புரியலியே?

புரியவேணாம் தம்பி. நம்ம கஷ்டக் கதை உங்களுக்கு எதுக்கு. இட்லி சாப்டறீங்களா? 

இல்லை இல்லை சாப்பிடுங்க. நான் வர்றேன்.

ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே தம்பி....

ஹ்ம்ம்ம்ம்..... ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே!

Feb 15, 2013

அரசியல்ல இதெல்லாம்....

தண்டையார்பேட்டை ரோடு நுழையுமிடத்தில் மூலக்கடை மாசமொருமுறை அல்லோலகல்லோலப்படும். ஏதேனும் கட்சிக்காரக் கூட்டம் ஒன்று அங்கே நடக்கும். பொதுசனங்கள் சனநாயகத்தை நொந்துகொண்டு மாற்றுப் பாதையில் செல்லவேணும்.

கழகங்களுக்குத்தான் மூலக்கடை. தோழர்கள் தபால்பெட்டி பஸ் ஸ்டாப் தாண்ட மாட்டார்கள். ஒருத்தர் மைக் பிடிக்க நாலு பேர் வினைல் நாற்காலியில் அமர்ந்திருந்தால் ரோட்டில் நடப்போரும், பஸ் ஸ்டாப் கடக்கும் பஸ்சிலிருந்து அந்த க்‌ஷணம் எட்டிப் பார்ப்போரும்தான் தோழர்தம் பேச்சைக் கேட்பவர்கள்.



மூலக்கடையில் ஆளுங்கட்சிக்காரரோ அல்லது எதிர்க்கட்சியோ,  அம்மையோ அப்பனோ யார் எந்த நாற்காலியில் இருக்கிறார் எனப் பார்த்து இதமாகவோ அல்லது வரட்-வரட் என்றோ சொறிந்து விடும் கூட்டமாய் இருக்கும் அது.

தோழர்களுக்குத் தெரியாதவொரு உத்தி கழகங்களுக்குத் தெரியும். பேச்சு எட்டுமணிக்குத் தொடங்கும் என்றால் ஆறரை மணிக்கு ரெகார்ட் டேன்ஸ் போட்டுவிடுவது. ”கட்டிப்புடி கட்டிப்புடிட்ட” ரக ரெகார்ட் டேன்ஸுக்கு ஒதுங்கும் நூற்று சொச்சத்தில் ஐம்பதாவது இறுதிவரை தேறுமில்லையா?

மூலக்கடையில் அன்று ஷேர்ஆட்டோ பிடிக்க கொடுங்கையூர் ரோடைப் பார்த்து நடந்து போய்க் கொண்டிருந்தபோது அந்த அம்மணியின் ஆக்ரோஷக் குரல் கேட்டது.

“ஏ விருந்தாளிக்குப் பிறந்தவனே!”, எதிர்க்கட்சித் தலைவரின் வாரிசை விளிக்கிறார். 

”?????வளையில் தேங்காய்ப் பொறுக்கிக் கொண்டிருந்த ஏ... ???????யே! உனக்கு எங்கிருந்து வந்தது இத்தனை சொத்து?”

இத்தனை அநாகரிகமாகவா பேசுவர்?

“விருந்தாளிக்குப் பிறந்தவனே! விருந்தாளிக்குப் பிறந்தவனே! ”, என்று மூச்சுக்கு மூன்று முறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

என்னவொரு சுவாரசியம்! இன்னும் எவ்வளவு தூரம் போகிறார் பார்க்கலாம் அங்கேயே நின்றுவிட்டேன்.

“இந்த எதிர்க்கட்சித் தலைவர் இருக்காரே அவர் ஒரு நெடுமுடிக் கிள்ளிப் பரம்பரையைச் சேர்ந்தவர் தெரியுமா உங்களுக்கெல்லாம்?”

எதிரிலிருந்த மக்கள் நிசப்தத்தில் உறைந்தனர். என்னாடா சொல்லுது இந்தம்மா?

”நெடுமுடிக் கிள்ளீ’ன்னா புரியுதில்ல?”

நிசப்தம்

“நெடு’ன்னா என்ன?”

நிசப்தம்

“நெடு’ன்னா என்னா?”

நிசப்தம்

“நெடு’ன்னா பெரிய’ன்னு அர்த்தம்”

“கிள்ளி’ன்னா?”

நிசப்தம்

“கிள்ளி’ன்னா புடுங்கி’ன்னு அர்த்தம்”

கூட்டத்திற்கு ஏதோ புரிந்து சிரிப்பலை தொடங்கியது.

“முடி’ன்னா என்னான்னு நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்ல”

ஆரவாரக் கூச்சல்.

பேச்சு நாகரிகத்தை இப்படிப் பேசிப்பேசி வளர்த்து விட்டவர்களுக்கு எழுத்து நாகரிகத்தை இன்று அதன்பாணியில் கோடி காட்டியிருக்கிறது பாரம்பரியப் பத்திரிக்கை ஒன்று.

சனநாயகம்! வாள்க! 

Dec 17, 2012

உசுப்பேற்றலும் உபரி வெளிச்ச அடையாளமும்


உசுப்பேற்றுதல் என்பது ஒரு கலை. இதில் ஹீரோயிசம், தாதாயிசம் என எல்லாவற்றையும் சேர்த்து ஒருவன் உருவகப்படுத்தப்படுகிறான். புகழுக்கு மயங்காதார் உண்டோ! சுற்றி இருக்கும் நாலுபேர் நம்மைப் பற்றி ஜே போட்டுக் கொண்டே இருந்தால் கேட்பதற்கு எப்போதும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அந்த நாலு பேரின் எண்ணம் எல்லாம் பணம் அல்லது புகழாகத்தான் இருக்கும். பொழுதுபோக்காகவும் இருக்கலாம். எத்தனையோ காரணங்கள். அதாவது ஒருவனை மையப்படுத்தி, வெளிச்சத்தில் நிறுத்தி வரும் உபரி வெளிச்சத்தில் தன்னை அடையாளபடுத்திக்கொள்வது அல்லது சம்பாதிப்பது. இத்தகைய சம்பவங்களை நீங்கள் எங்கும் காணலாம். இப்படியான சம்பவத்தின் க்ளைமாக்ஸ் எப்போது ஆன்டி-ஹீரோயிசம் தான். உசுப்பேற்றியவர்கள் ஒதுங்கிக் கொள்ள ஹீரோ அகப்படுவான். இந்தக் கதையைப் பொறுத்தமட்டில் அது டேனி.

இல்லாதவர்கள் - ஜெயகாந்தன்



Related Posts Plugin for WordPress, Blogger...