Showing posts with label ஓகே கண்மணி. Show all posts
Showing posts with label ஓகே கண்மணி. Show all posts

Apr 15, 2015

தந்தனை.... கேட்டேன்....

சுஜாதா ரஹ்மானுக்கு எத்தனை பாடியிருந்தாலும் அவர் ராஜாவுக்குப் பாடிய ‘ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே’ எனக்கு ரொம்பவும் மனசுக்கு நெருக்கமான பாடல்.

அப்படித்தான்.... சித்ரா ராஜாவுக்கு எத்தனை பாடியிருந்தாலும் அவர் ரஹ்மானுக்குப் பாடிய ‘தொடத் தொட மலர்ந்ததென்ன’வில் அவர் குரல் அவர் பாடிய அத்தனை பாடல்களினும் ஓர் உச்சத்தைத் தொட்டிருப்பதாக எனக்குப் படும். குறிப்பாக முதல் சரணம் நிறைந்ததும் அவர் தொடங்கும் பல்லவியில்.

சற்றே ஓர் இடைவெளிக்குப் பிறகு சித்ரா ரஹ்மானுக்காய் ஓகே கண்மணியில் இப்போது “மலர்கள் கேட்டேன்” என்று பாடியிருக்கிறார்.

ரஹ்மான், வைரமுத்து, ஸோலோ, மெலடி, சித்ரா - வேறென்ன வேணும்?



முதல்முறை கிள்ளிப் பார்த்தேனில் ரஹ்மானிடம் கேட்டு முடியாத கஞ்சிராவின் மிச்சப் போதையை இரண்டாம் சரணத்திற்கு முந்தைய இண்டர்லூடில் கேட்கலாம். 

பழைய ரஹ்மான காணோம் சார் என்ற கம்ப்ளைனர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் இந்தப் பாடல். பாட்டைப் பத்தி நிறைய பேசலாம்; இப்போ பாட்டைக் கேளுங்க. நேரமிருந்தா நேர்ல வாங்க... அந்த நிறையவையெல்லாம் பேசலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...