Showing posts with label ரஹ்மான். Show all posts
Showing posts with label ரஹ்மான். Show all posts

Apr 15, 2015

தந்தனை.... கேட்டேன்....

சுஜாதா ரஹ்மானுக்கு எத்தனை பாடியிருந்தாலும் அவர் ராஜாவுக்குப் பாடிய ‘ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே’ எனக்கு ரொம்பவும் மனசுக்கு நெருக்கமான பாடல்.

அப்படித்தான்.... சித்ரா ராஜாவுக்கு எத்தனை பாடியிருந்தாலும் அவர் ரஹ்மானுக்குப் பாடிய ‘தொடத் தொட மலர்ந்ததென்ன’வில் அவர் குரல் அவர் பாடிய அத்தனை பாடல்களினும் ஓர் உச்சத்தைத் தொட்டிருப்பதாக எனக்குப் படும். குறிப்பாக முதல் சரணம் நிறைந்ததும் அவர் தொடங்கும் பல்லவியில்.

சற்றே ஓர் இடைவெளிக்குப் பிறகு சித்ரா ரஹ்மானுக்காய் ஓகே கண்மணியில் இப்போது “மலர்கள் கேட்டேன்” என்று பாடியிருக்கிறார்.

ரஹ்மான், வைரமுத்து, ஸோலோ, மெலடி, சித்ரா - வேறென்ன வேணும்?



முதல்முறை கிள்ளிப் பார்த்தேனில் ரஹ்மானிடம் கேட்டு முடியாத கஞ்சிராவின் மிச்சப் போதையை இரண்டாம் சரணத்திற்கு முந்தைய இண்டர்லூடில் கேட்கலாம். 

பழைய ரஹ்மான காணோம் சார் என்ற கம்ப்ளைனர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் இந்தப் பாடல். பாட்டைப் பத்தி நிறைய பேசலாம்; இப்போ பாட்டைக் கேளுங்க. நேரமிருந்தா நேர்ல வாங்க... அந்த நிறையவையெல்லாம் பேசலாம்.

May 7, 2013

வேறென்ன வேணும்; நீ போதுமே!

அறுபத்து நான்கு வார்த்தை அற்புதம்

தமிழ்த் திரைப்பாடல்களில், துக்கடாப் பாடலாக இல்லாமல் ஒரு பல்லவி, இரண்டு சரணங்கள் கொண்டு வரும் முழுப்பாடல்களில், மிகவும் குறைந்தபட்ச வார்த்தைகளைக் கொண்டு படைக்கப்பட்ட பாடல் எதுவாயிருக்கும்? 

பழைய திரைப்படப் பாடல்களில் இப்படி நிறைய இருக்கக்கூடும். என்னைவிடப் பழையவர்கள் யாரேனும் அந்த உதாரணங்களை பின்னூட்டத்தில் கூறலாம், ப்ளீஸ்!

நான் அறிந்தவரையில் ஹிந்தியில் சல்மான் நடித்த தேரே நாம் திரைப்படத்தில் (தமிழ் “சேது”வின் ஹிந்திப் பதிப்பு) வரும் “தும் ஸே மில்னா” பாடல் மிகக்குறைவான வார்த்தைகளில் உருவான ஒன்று. ஐம்பது வார்த்தைகளுக்கு சற்றே குறைவாக, அல்லது சற்றே அதிகமான வார்த்தைகள் கொண்ட பாடல். ஹிந்தியில் எனக்கு பந்த்ரா (பதினைந்து) வரைதான் எண்ணத் தெரியும் என்பதால் சரியான எண்ணிக்கையைக் கூறமுடியவில்லை. முஜே மாஃப் கீ ஜியே!

கடல் படத்தின் “மூங்கில் தோட்டம்” நானறிந்த மிகச் சிறிய தமிழ்த் திரைப்ப்பாடல். அறுபத்து நான்கே வார்த்தைகள்,  மிகவும் எளிமையான கற்பனை. சிக்கலில்லாத நேரடிக் கவிதை... ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் “அற்புதம்”.






"வேறென்ன வேணும்; நீ போதுமே!” என்பதுதான் பாட்டின் “தீம்”. இதைச் சுற்றித்தான் பாட்டு பின்னப்பட்டிருக்கிறது.

எனக்கு ரொம்பவும் பிடித்தது அசத்தலான அந்த இரண்டாம் சரணம்...
மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க,
ரத்தம் உறையும் குளிரும் இருக்க,
உஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க,
ஒத்த போர்வையில இருவரும் இருக்க..
இது போதும் எனக்கு.. இது போதுமே...
வேறென்ன வேணும்?.. நீ போதுமே..
பாடலின் ஒட்டுமொத்த மென்மையை பாடலின் பியானோ ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார் ரஹ்மான். அவர் நெய்த பொருளின் வண்ணத்தை வைரமுத்து பார்த்துக் கொள்கிறார் என்றால், வடிவமைப்பை அபய் & ஹரிணி கவனிக்கிறார்கள்.

அபய் ஜோத்பூர்கர், ஹரிணி’யின் பொருத்தமான அழகான குரல்கள், வைரமுத்துவின் மயக்கும் வரிகள், ரஹ்மானின் சொக்க வைக்கும் ட்யூன்....

“இதுபோதும் எனக்கு இதுபோதுமே! வேறென்ன வேணும்?”

Jan 1, 2012

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும்

அனைவருக்கும் நம் புத்தாண்டு 2012 வாழ்த்துகள்!



இந்தப் பாடல் நம் பாடல் தளத்தில் வெளியாகவேண்டியது. தவறுதலாக இங்கே பதிந்துவிட்டேன். இருந்தால் என்ன... இருந்துவிட்டுப் போகட்டுமே :)

Dec 7, 2011

இசை மொழியறியாது - 2

இந்த விடியோவிற்கு விளக்கம் ஏதும் எழுதத் தேவையா என்ன?

Jul 31, 2010

காதல் அணுக்கள்....


முடியலை சாமி முடியலை....

இந்தப்பாடல் என்னைப் பாடாய்ப்படுத்துகிறது.

ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து, விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல் எல்லோரையும் தேடிப்பிடித்து வாரியணைக்கும் ஆவல் மேலிடுகிறது. இந்த நால்வரில் யார் பெஸ்டாகச் செய்துள்ளார்கள் என என்னால் சொல்ல ஏலவில்லை.

மிக இளைமையாக ரஜினிக்கு இந்தப்பாட்டை வடித்துத் தந்துள்ளார் ரஹ்மான். வி.தா.வ.'வில் சிம்புவிற்குப் போட்டு வைத்த டியூனை ரஜினி திருடிவிட்டாரோ எனத் தோன்றுகிறது. அத்தனை இனிமை, இளமை, குதூகலம் கொப்புளிக்கிறது பாடலில்.

இளமைத்துள்ளலில் ரஹ்மானுடன் போட்டி போடும் வைரமுத்து...

பட்டாம்பூச்சி  பட்டாம்பூச்சி 
கால்களை கொண்டு  தான்  ருசி  அறியும் ..
காதல்  கொள்ளும்  மனிதப்  பூச்சி 
கண்களை  கொண்டு  தான்  ருசி  அறியும் ...

...என்று அவர் சொல்கையில் அறிவியலில் குழைந்து காதலில் கரைகிறது பாடல்.

ரஹ்மானின் சமீப காலத்து செல்லப் பாடகர் விஜய் பிரகாஷ்...அவருடன்  ஷ்ரேயா கோஷல். சொல்லவேண்டுமா இருவர்க்கும். இவர்கள் இருவர் குரலிலும் மகுடியிசைக்கு மயங்கும் சர்ப்பம் ஆகிறோம் நாம். மூளையின் ஒரு ஓரத்தில் செரோட்டனினும், என்டோர்பினும் சுரப்பதை என்னால் நன்கு உணர முடிகிறது.




மீண்டும் சொல்கிறேன், முடியலை சாமி....முடியலை.

அது சரி, என்னப்பா எந்திரன் படப் பாடல்களுக்கு விமரிசனம் எழுதுன்னா ஒரே பாட்டைப் பத்தி பேசிட்டு இருக்கன்னு சொல்றீங்களா? அட, இந்தப் பாட்டிலிருந்து நான் வெளியே வர இன்னும் நாலு நாள் ஆகுமுங்க. அதுக்கு பெறகு மத்த பாடல்களை பாக்கலாம்.

சரி சரி படிச்சது போதும், பாட்டைக் கேளுங்க....

.
.
.
image courtesy: onlysuperstar.com
Related Posts Plugin for WordPress, Blogger...