Showing posts with label சென்னை சூப்பர் கிங்க்ஸ். Show all posts
Showing posts with label சென்னை சூப்பர் கிங்க்ஸ். Show all posts

May 28, 2012

ஐபிஎல் ஃபைனல்ஸ்

கண்ணன், பூவேந்தன், சித்தார்த், நான்

நேற்று சென்னை - கொல்கத்தா மோதிய ஐபிஎல்-5 இறுதிப்போட்டியைக் காண சேப்பாக்கம் சென்றிருந்தேன்.

மைதானத்திலிருந்து சில துளிகள்:

போட்டி துவங்குமுன் முன்னாள் இந்திய டெஸ்ட் / ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் / வீரர்களை இழந்த குடும்பங்களுக்கு சுமார் எழுபது கோடி மதிப்பிற்கு பணமுடிப்புகள்  பிசிசிஐ’யால் வழங்கப்பட்டது. கபில்தேவ், கீர்த்தி ஆசாத் மற்றும் அஸாருதீன் ஆகியோர் லிஸ்டில் இல்லை; அரசியல் ;)

“டேய்! டாஸ்’லயே ஃபிக்ஸிங்’காம்டா. ரெண்டு பக்கமும் ஹெட்ஸ் இருக்கற காய்ன் குடுத்து தோனி டாஸ் ஜெயிக்கறாப்போல பண்ணிட்டாங்களாம்”, என்று குரல் கேட்டது.

மேட்ச் தொடங்குகையில் புதிதாகத் திறக்கப்பட்ட மூன்று கேலரிகள் தவிர்த்து மற்றனைத்து காலரிகளும் பிதுங்கி வழிந்தன. அந்த மூன்று கேலரிகளிலும் கூட மிகமிகச் சில நாற்காலிகள் மட்டுமே காலியாக இருந்தன.

ஆட்டம் தொடங்குமுன் இசைக்கப்பட்ட தேசியகீதத்திற்கு “தயவு செய்து எழுந்து நிற்கவும்”, என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. #இந்தியாடா

சென்னை ரசிகர்களுக்குச் சவால் விடும் வண்ணம் பரவலாக கல்கத்தா குரல்களைக் கேட்க முடிந்தது, குறிப்பாக ஆட்டத்தின் இரண்டாம் பாதியில்.

முதல் இன்னிங்க்ஸில் சென்னை 191 ஸ்கோர் செய்தவுடன் மீண்டும் சென்னை’க்கே கோப்பை என்ற குரல்கள் பரவலாக ஒலித்தன. வந்த வேகத்தில் கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் காம்பிர் அவுட் ஆக கிட்டத்தட்ட சென்னையின் வெற்றி உறுதி என நம்பப்பட்டது. ஆனால் எங்கிருந்தோ வந்த பிஸ்லா கெய்ல்’தனமாக அடித்த 48 பந்துகளின் 89 ரன்கள் ஆட்டத்தை கொல்கத்தா வசம் கொண்டு ஒப்படைத்தது.

மைதானத்தில் ஒரு கப் தண்ணீர் பத்து ரூபாய்க்கு விற்கப்பட்டது. 14 ரூபாய் மதிப்புள்ள Aquafina பாட்டில் நீர் மூன்று கோப்பைகளில் பகிரப்பட்டு 30 ரூபாய்  ஆனது. இத்தனைக்கும் மைதான நிர்வாகம் நிறைய நிறைய இடங்களில் குழாய்களை அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும் மக்களுக்கு Aquafina’தான் ஆறுதல் அளித்தது.

‘காஃபிடே” கவுண்டரில் “கேப்புசினோ” சிறிய கப் ரூ.30/- என்று பட்டியலில் இருந்தது. ”முப்பதா?” என்று வாயிலடித்துக் கொண்டு, சரி என்ன செய்ய வந்தது வந்துட்டோம் குடித்துத் தொலைப்போம் என்று கடையிலிருந்த அன்பரிடம் ”ஒரு காப்பி அண்ணே”, என்றதற்கு ”அம்பது ரூபா” என்றார். பட்டியலைச் சுட்டிக் காட்டியவுடன், தலையிலடித்துக் கொண்டு, ”குடுங்க குடுங்க” என்று முப்பதை வாங்கிக் கொண்டு காபி தந்தார்.

பிஸ்லா, சுக்லா, பதான், காலிஸ் என எல்லோரும் அவுட் ஆக, சென்னையின் போக்கில் மேட்ச் திரும்பினாற்போல் சற்றே தோன்றியது. மும்பையுடனான லீக் மேட்சின் கடைசி மூன்று பந்துகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றிய பென் ஹில்ஃபினாஸ் இந்த ஆட்டத்தின் 19’ஆம் ஓவரை வீசி அதன் கடைசி பந்தில் ஆட்டத்தை கொல்கத்தா பக்கம் திருப்பித் தந்தார். வாழ்க நீர் எம்மான்!

ஆட்டம் முடிந்ததும் தோனி மைதானத்தை அணி வீரர்களுடன் வலம் வந்து எல்லோருக்கும் நன்றி சொல்லிக் கொண்டார் #Attitude அரங்கமே எழுந்து நின்று ஆரவாரம் செய்தது. #தலைவன்டா! ”We Will Meet in CLT20” என்று சென்னைக்கு விடை தந்தனர் மக்கள்.

ஷாருக் ரொம்பவும் உணர்ச்சி வெள்ளத்தில் இருந்தார். பாவம், வெரி லாங் வெய்ட்! மேலும் மும்பை மைதான நிர்வாகத்தை மனதினில் வைத்துக் கொண்டு ’சென்னை சிஎஸ்கே ஸ்டாஃப் மெம்பர்ஸ் வாழ்க”, என்று கோஷித்து அவர்களுக்காக இரண்டு குட்டிக்கரண நன்றிகளும் போட்டார்.

கொல்கத்தா வெற்றி பெற்ற தருணத்திலும், கோப்பையை கையில் வாங்கிய நிமிடத்திலும் நடைபெற்ற வாணவேடிக்கையைக் காண கோடி கண்கள் வேண்டும். “ஐநூறு ரூபா இதுக்கே சரியாப் போச்சு சார்”, என்றார் உடன் வந்த கண்ணன்.

நல்ல மேட்ச்! வொர்த் வாட்சிங் லைவ்! லாங் லிவ் ஐபிஎல்!

May 9, 2012

ஐந்தில் மூன்றா நான்கா நாம்?


நடந்து வரும் ஐபிஎல்-5’ல் டெல்லி அணியும் கொல்கத்தா அணியும் ப்ளே-ஆஃப் (அல்லது அரையிறுதி) சுற்றுகளுக்கான இருக்கைக்கு கிட்டத்தட்ட தயாராகிவிட்டன.

புனே அணியும் ஹைதராபாத் அணியும் வெளியேறின அணிகள் பட்டியலில் சேர்ந்தாயிற்று.

இந்த அட்டவணையைப் பாருங்கள்! 

மும்பை அணியும் மிச்சமிருக்கும் ஐந்து ஆட்டங்களில் தன் பெர்த்தை இன்னும் ஓரிரு வெற்றிகள் மூலம் கிட்டத்தட்ட உறுதி செய்து விடலாம்.

ப்ளே-ஆஃப் சுற்றுகளில் இன்னும் ஒருவர் உள்ளே நுழையலாம். அதற்கான போட்டியில்தான் நான்கு அணிகள் இருக்கின்றன. மேலே இருக்கும் டேபிளில் பச்சை வண்ணம் தீட்டிக் கொண்டு நிற்கும் அணிகளைப் பாருங்கள்.

சென்னைக்கு மிச்சம் இருக்கும் ஆட்டங்களின் விபரம் இதோ! இவை அனைத்திலும் நல்ல ரன்ரேட்டுடன் சென்னை வெற்றி பெறவேண்டிய நிலையில் இப்போது இருக்கிறது.



2008 தொடங்கி இதுவரை நடந்துள்ள நான்கு ஐபிஎல் ஆட்டங்களில் சென்னை  மூன்று முறை இறுதிப் போட்டிக்கும், ஹைதராபாத் கோப்பையை வென்ற 2009’ஆம் ஆண்டு அரையிறுதி வரையும் சென்றுள்ளது. ஆக, இதுவரை அரையிறுதிச் சுற்றை எட்டா நிலை ஏற்பட்டதில்லை. இந்த முறையும் அதே நிலை தொடர வேண்டும் என்பதே சென்னைக்காரனான என் விருப்பம்.

ஆனால், அது நிறைவேறுவது அத்தனை எளிதில்லை! மேலே படத்தில் தலைவர் தோனி கையசைப்பதன் அர்த்தம் என்னவென்று இன்னமும் ஓரிரு ஆட்டங்களில் தெரிந்துவிடும். 

பார்ப்போம்!

Apr 8, 2011

சென்னை சூப்பர் கிங்க்ஸ்

இந்தப் பதிவு எழுதிட தலைப்பு, புகைப்படம், வார்த்தைகள் தந்து உதவிய சாளரம் கார்க்கிக்கு நன்றிகள்.


ALL THE VERY BEST CSK


Related Posts Plugin for WordPress, Blogger...