Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Feb 8, 2015

2015 உலகக்கோப்பையும் இந்தியாவும்


2015 உலகக்கோப்பையின் warm-up ஆட்டங்கள் இன்று துவங்கின. முதல் ஆட்டம் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவின் மோதல். இந்திய அணியின் தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த ஒவ்வொரு ரசிகனுக்கும் இந்த ஆட்டத்தில் இந்தியா அசத்தும்; அது பூஸ்ட் குடித்தாற்போல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு. 

இன்று காலை எட்டேமுக்காலுக்கு மேட்ச் துவங்கியது. ஆட்டத்தின் முடிவில் ஸ்கோர்போர்டு இப்படி இருந்தது:

ஆஸ்திரேலியா - 371/10        < === > இந்தியா - 265/10

இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தியா தோற்றால் என்ன. இருக்கவே இருக்கின்றன மற்றைய பதிமூன்று அணிகள். அவற்றைப் பற்றிப் பேசலாம். நம் கிரிக்கெட் ப்ளாகில் < http://batballstump.blogspot.in/ > . சென்ற உலகக்கோப்பையின் போது துவங்கிய ப்ளாக்.. இந்த உலகக்கோப்பைக்கு தூசிதட்டி எடுத்திருக்கிறேன்.

 

இன்று பாட்டியாலாவில் நடந்த தில்லிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டி இடைவேளையில் நம் அணியின் முன்னாள் சிங்கங்கள் என்னத்தைப் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று நாம் உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறோம்

May 9, 2012

ஐந்தில் மூன்றா நான்கா நாம்?


நடந்து வரும் ஐபிஎல்-5’ல் டெல்லி அணியும் கொல்கத்தா அணியும் ப்ளே-ஆஃப் (அல்லது அரையிறுதி) சுற்றுகளுக்கான இருக்கைக்கு கிட்டத்தட்ட தயாராகிவிட்டன.

புனே அணியும் ஹைதராபாத் அணியும் வெளியேறின அணிகள் பட்டியலில் சேர்ந்தாயிற்று.

இந்த அட்டவணையைப் பாருங்கள்! 

மும்பை அணியும் மிச்சமிருக்கும் ஐந்து ஆட்டங்களில் தன் பெர்த்தை இன்னும் ஓரிரு வெற்றிகள் மூலம் கிட்டத்தட்ட உறுதி செய்து விடலாம்.

ப்ளே-ஆஃப் சுற்றுகளில் இன்னும் ஒருவர் உள்ளே நுழையலாம். அதற்கான போட்டியில்தான் நான்கு அணிகள் இருக்கின்றன. மேலே இருக்கும் டேபிளில் பச்சை வண்ணம் தீட்டிக் கொண்டு நிற்கும் அணிகளைப் பாருங்கள்.

சென்னைக்கு மிச்சம் இருக்கும் ஆட்டங்களின் விபரம் இதோ! இவை அனைத்திலும் நல்ல ரன்ரேட்டுடன் சென்னை வெற்றி பெறவேண்டிய நிலையில் இப்போது இருக்கிறது.



2008 தொடங்கி இதுவரை நடந்துள்ள நான்கு ஐபிஎல் ஆட்டங்களில் சென்னை  மூன்று முறை இறுதிப் போட்டிக்கும், ஹைதராபாத் கோப்பையை வென்ற 2009’ஆம் ஆண்டு அரையிறுதி வரையும் சென்றுள்ளது. ஆக, இதுவரை அரையிறுதிச் சுற்றை எட்டா நிலை ஏற்பட்டதில்லை. இந்த முறையும் அதே நிலை தொடர வேண்டும் என்பதே சென்னைக்காரனான என் விருப்பம்.

ஆனால், அது நிறைவேறுவது அத்தனை எளிதில்லை! மேலே படத்தில் தலைவர் தோனி கையசைப்பதன் அர்த்தம் என்னவென்று இன்னமும் ஓரிரு ஆட்டங்களில் தெரிந்துவிடும். 

பார்ப்போம்!

Mar 9, 2012

பை பை டிராவிட்

நன்றி:http://crickethighlights.com 

ராகுல் டிராவிட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இந்த 16 வருடங்களில் அவர் கடந்த சாதனைகளைப் பட்டியலிடுவதோ, அவர் ஆடிய ஏதோ ஒரு ஆட்டத்தை மேற்கோள் காட்டியோ இங்கே எளிமையாகப் பேசிவிட முடியாது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் 10000’ஆவது ரன்னை அவர் சென்னை சேப்பாக்கத்தில் கடந்த போது அந்த பெருமைக்குரிய தருணத்தை நேரில் தரிசித்ததை மாத்திரம் இங்கே பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்! 

இந்த நெடிய 16 வருடங்களில் அயராத ஆட்டத்தை வெளிப்படுத்தியவரும், இந்தியாவை பலப்பல தருணங்களில் சர்வதேச கிரிக்கெட் உலகில் தலைநிமிரச் செய்தவருமான ஒருத்தரின் விலகல் நிச்சயம் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஓர் பெரிய இழப்பே! 


இனி அவர் ஆடும் ஆட்டங்களை ஹைலைட்ஸ்’களிலும் யூட்யூபிலும் மாத்திரமே காண முடியும் என்பதை எண்ணும்போது ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனைப் போலவும் எனக்கும் கண்கள் பனிக்கின்றன.


நன்றி டிராவிட்! வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை எனக்கு!

Dec 8, 2011

சேவாக் 200

வாழ்த்துகள் சேவாக்!

Aug 22, 2011

நாலும் போச்சு!

England win by an innings and 8 runs and win series 4-0 ..... that doesn't come easily. England are officially the best team in Test cricket and India, after this loss, slip down to third. There was some fight this morning as Amit Mishra and Sachin Tendulkar flourished but when Mishra fell to offer a crack in the line up, England burst through violently. Seven wickets fell for 21 runs to seal the clean-sweep. Incredibly India have not made more than 300 in all eight innings.


Courtesy : cricinfo.com

Apr 3, 2011

ஜெயிச்சிட்டோம் ஜெயிச்சிட்டோம் ஜெயிச்சிட்டோம் நாம ஜெயிச்சிட்டோம்


தொண்ணூற்றியாறு மற்றும் இரண்டாயிரத்து மூன்று - இந்த இரண்டு ஆண்டுகளிலும் நேர்ந்த அவமானத்திற்கு உணர்ச்சிமயப் பழி வாங்கல்!

விமர்சனம் என்ற பெயரால் "போகிற போக்கில்" பேசிச் சென்ற வெட்டி ஜாம்பவான்கள் முகத்தில் கரி!

இருபத்தியிரண்டு ஆண்டுகள் உழன்று சுழன்றவனுக்கு என ஒரு அர்ப்பணம்!

இருபத்தியெட்டு  வருடத்துத் தவம்! நூறுகோடி மக்களின் கனவு! பதினைந்து பேர் இந்த நாற்பத்தி மூன்று நாட்கள் போராடி விளையாடி முடித்து பரிசைத் தந்திருக்கின்றனர் பாரத தேசத்திற்கு!

லங்கைக்கு நேர்ந்தது போல் எளிமையாக அமைந்து விடவில்லை இந்தியாவின் ஃபைனல்ஸ் நோக்கிய பயணம். நியூசிலாந்து தவிர்த்து மற்ற அனைத்து முக்கிய நாடுகளையும் மிச்சம் வைக்காமல் லீக் போட்டிகளிலும், காலிறுதி, அரையிறுதி, இறுதிப் பந்தயங்களிலும் சந்தித்து விட்டது இந்தியா.  ஆகவே நாம் ட்ரூ சாம்பியன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தென் ஆப்பிரிக்க சறுக்கலை திருஷ்டி எனக் கொள்வோம்.

இந்த உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்னரும் சரி, நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும் சரி, தோனி சந்தித்த விமர்சனங்களைத் தொகுத்தால் ஒரு டஜன் தொகுதிகள் கொண்ட புத்தகங்கள் தயாரிக்கலாம். அத்தனை பேருக்கும் நேற்று தன "கேப்டன் இன்னிங்க்ஸ்" மூலம் பதில் சொன்னார் தோனி. டிவிட்டரில் அவரைப் "பாடியவர்கள்" கூட கண்ணில் சிறுதுளி நீருடன் அவருக்கு "ஓ......" போட்டனர். ஒரு சிறு உதாரணம் கீழே <நன்றி: <http://twitter.com/#!/anbudan_BALA>)


Dear Dhoni, I take back everything I said about you for this one remarkable innings under pressure & apparently out of form :) #WC11Sat Apr 02 17:34:37 via Echofon




இணையத்தில் நண்பர் அன்பர்களின் பதிவுகள் மற்றும் நாளிதழ்களின் கவரேஜ்:


தமிழ் ஓவியம் (இலவச கொத்தனார்)


தினமலர்


தினகரன்

தினத்தந்தி

தினமணி

டைம்ஸ் ஆப் இந்தியா

ஹிந்து 

டெக்கன் க்ரானிகிள்

இந்தியன் எக்ஸ்பிரஸ்



க்ரிக் இன்போ' உதவியுடன் சில க்ளிக்குகள்:














கடைசியாக.... நம்ம பூனம் பாண்டே தன் வாக்கைக் காப்பாற்றியபோது எடுத்த படம்....

  

Mar 30, 2011

தோனி பாய்ஸ்'க்கு வாழ்த்துக்கள்!


இன்று அலுவலகத்தில் ஒரு கான்பரன்ஸ் கால். கடந்த மூன்று மாதங்களில் செயல்பாடுகளில் சிறந்த அணி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த அணியை "சாம்பியன்" என அறிவித்து மலர்க்கிரீடம் சூட்டுவார்கள். யார் சாம்பியன் என்பதை நாங்கள் பேசி அடுக்கடுக்காய் அடுக்கும் பாயிண்டுகள் தீர்மானிக்கும்.

"நான் இப்படி" என ஒருவர்  சொன்னால் "நான் அப்படி" என இன்னொருவர் சொல்லுவார். பேசிக்கொண்டிருக்கும்போதே "அது எப்படி" என குறுக்குக் கேள்விகள் வந்துவிழும். அத்தனையையும் சமாளித்து பேசிமுடித்துக் கவிழ்த்தால் பின்னொருநாளில் யார் சாம்பியன் என அறிவிப்பைத்தாங்கி மின்னஞ்சல் ஒன்று வரும். சாம்பியன்ஷிப்  வாங்கின அணி எழுந்து நின்று ஆர்ப்பரிக்கும்.

இன்றைக்கு அந்த கான்காலுக்கு முன்னதாக நாங்கள் செய்து கொண்டிருந்த ஆயத்தங்களும், கான்காலின் போது எங்களைச் சூழ்ந்திருந்த அந்த சூழலின் அழுத்தமும் சொல்லி மாளாது.

இது இப்படி இருக்கையில், நம் இந்திய பாகிஸ்தான் அணிகளிடையேயான இன்றைய ஆட்டத்திற்கு இந்த பாரதமே ஆடுகிறது பாருங்கள் ஒரு ஆட்டம். அதிலும் குறிப்பாக நம் மீடியா செய்து கொண்டிருக்கும் நர்த்தனங்கள் பற்றி என்னத்த சொல்ல?


இத்தனை பிரஷர்'களுக்கு இடையே ஆடத் தயாராக இருக்கும் தோனி பாய்ஸ்'க்கு வாழ்த்துக்கள்!




படங்கள் - நன்றி: ஜெய் ஹிந்த்  

Mar 3, 2011

உலகக்கோப்பை - அதிர்ச்சி வைத்தியம் ஆரம்பம்!

நாம் எல்லோரும் ஆவலாக எதிர்நோக்கியிருந்த அப்செட் ரவுண்ட் ஆரம்பமாகியிருக்கிறது!

ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் இது போன்ற சின்ன அணிகள் ஜாம்பவான் அணிகளை வீழ்த்துவது சகஜம் மற்றும் இது காலம்காலமாக நிகழ்ந்துவரும் சம்பிரதாயம் (!) எனலாம். சென்ற உலகக்கோப்பையில் இந்திய, பாகிஸ்தான் அணிகளை முதல் ரவுண்டிலேயே வெளியேற்றிய புண்ணியம் இதுபோன்ற அதிர்ச்சி வைத்தியங்கள் தந்த குட்டி அணிகளைச் சேரும்.

கெவின் ஓ'பிரெயின் ஆடிய ருத்ரதாண்டவ ஆட்டத்தைக் கண்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள். உலகக் கோப்பையின் அதிவேக சதம் அடித்த (50 பந்துகளில் சதம்) கெவினின் ஆட்டம் கிரிக்கெட் உள்ளவரை மறக்க இயலாதது. கெவினுக்கு அடுத்து குறிப்பிடத் தக்கவர் ஆல்ரவுண்ட் அசத்திய பண்ணிய மூனி. அவர் சாய்த்த நான்கு விக்கெட்டுகள் மற்றும் கடைசி கட்டத்தில் அவர் குவித்த முப்பத்து மூன்று ரன்கள் அயர்லாந்து ஆட்டத்தின் அதிமுக்கிய அம்சம். மூனிக்கு இணையாக பாராட்டப் படவேண்டியவர் ஆறாம் விக்கெட்டுக்கு கெவினுடன் சேர்ந்து நூற்று அறுபது ரன்கள் சேர்த்த க்யூசாக். ஆக மொத்தத்தில் ஒரு அற்புத விருந்து படைத்தனர் அயர்லாந்து அணியினர்.

இரண்டு அருமையான 300+ சேஸ்'களை விருந்துபடைத்து பெங்களூரு மைதானம் இந்த உலகக் கோப்பைக்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறது!    

மேலும் சுவைகள் பலவற்றை எதிர்நோக்குவோம்.









படங்கள் நன்றி: க்ரிக்இன்போ
.
.
.

Feb 28, 2011

உலகக் கோப்பை - வடை போச்சே!

என்னத்த கிரிக்கெட் விமர்சனம் எழுத! எதைன்னு எழுத? 

அட போங்க சார்!


Feb 8, 2011

ஞான் வந்நு - ஸ்ரீசாந்த் ஆக்ரோஷம்

மீண்டு வந்த.... மீண்டும் வந்த ஸ்ரீசாந்த் அவர்களே!
வருக வருக!
தங்கள் வரவு நல்வரவாகுக!


எப்பிடி இருந்த நான்!







இப்பிடி ஆயிட்டேனே....!






யெஸ்....யெஸ்.....யெஸ்...




யெஸ்....யெஸ்.....யெஸ்...

என் கோடான கோடி ரசிகர்களுக்கு...

Dec 25, 2010

ஒரு செஞ்சுரியனின் நிழலில்....


இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான இரண்டாம் டெஸ்ட் போட்டி நாளை பாக்சிங் டே மேட்ச் என அழைக்கப்பட்டு துவங்குகிறது. அதற்கு முன், முடிந்து போன முதல் போட்டியின் சில அம்சங்களைக் கவனிக்கும் அவசியம் நமக்கு ஏற்படுகிறது.


சரி....நான் சொல்ல வந்ததை நான் சொல்லத் தொடங்குமுன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டு உதரணங்களைப் பாருங்கள்....

உ.ம். 1 :

1999'ஆம் வருடம் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இயக்கத்தில் சங்கமம் திரைப்படம் வெளிவந்தது. வியாபார ரீதியாக படம் வெற்றி பெறாவிடினும் அந்தப்படத்தின் பாடல்கள் ஆண்டுகள் கடந்து இன்றும் பிரபலமானவை. அந்தப் படத்தின் பாடல்கள் எவை என நான்கு பேரிடம் கேட்டால் பதில் என்ன தெரியுமா?

"வராக நதிக்கரையோரம் - அதுதானே அருமையான பாட்டு அந்தப் படத்துலையே. ஷங்கர் மகாதேவன் அறிமுகப் பாட்டு இல்லையா அது? பட்டிதொட்டியெல்லாம் கலக்கி எடுத்துச்சி இல்லை அந்த பாட்டு."

"பிறகு?"

"அப்புறம் ரெண்டு மூணு பாட்டு சுமாரா இருக்கு.ஆனாலும் வராக நதிக்க்காயயோரம்தான் அருமை. தெரியுமில்ல?"

"கவிஞர் வைரமுத்து தேசிய விருது வாங்கின பாட்டு?"

"அது வராக நதிக்கரையோரம்"

"இல்லை! ஸ்ரீநிவாஸ், சுஜாதா பாடின முதல் முறை சொல்லிப்பார்த்தேன், கேட்டதில்லையா நீங்க?"

"அந்தப் படத்துல அப்படி ஒரு பாட்டு இருக்கா என்ன?"

ஒரு தேசிய விருது பெற்ற பாடல் பற்றின விபரத்தை எளிமையாக மறக்கடித்துவிட்டது அல்லது கவனிக்க அனுமதி மறுத்துவிட்டது அந்த "வராக நதிக்கரை".

Overshadowing!

உ.ம். 2:

2008'ஆம் வருடம் மும்பை தீவிரவாதத் தாக்குதல்களின் போது அத்தனை தொலைக்காட்சி சேனல்'களும் லைவ் அண்ட் எக்ஸ்க்ளூசிவ் என்று ஒரு மாத காலத்திற்கு அலறி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க, இடையில் இறந்து போன ஒரு முன்னாள் பிரதமரின் மரணம் ஒரு வரிச் செய்தியாக மட்டுமே மக்களுக்குக் கிடைத்தது. தினசரிகள் போனால் போகிறதென்று இருபதாம் பக்கத்தின் ஈசானி மூலையில் ஒரு பத்தி செய்தி வரைந்தன.

அவர் வி.பி.சிங்

விகடன் போன்ற சில பத்திரிக்கைகள் மாத்திரம் "ஆக்கிரமிப்பது அவமானம் பின்வாங்குவது பெருமை" என அவரின் அமைதிப்படை வாபஸ் நிகழ்வின் பெருமையினை  நினைவுறுத்தி கட்டுரை வரைந்து அவருக்குப் புகழஞ்சலி செலுத்தின.

ஒரு முன்னாள் பிரதமரின் மரணத்தை அத்தனை எளிமையாக மறைத்து வைத்துவிட்டது ஒரு தீவிரவாதத் தாக்குதல் குறித்த செய்தியின் தொடர் ஒளிபரப்புகள்.

வராக நதிக்கரையும் தீவிரவாதத் தாக்குதல் குறித்த நேரிடைச் செய்திகளும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவைதான், யாரும் மறுக்கவில்லை. எனினும் இதர முக்கியப் படைப்புகளை / செய்திகளை அவை விழுங்கும் வண்ணம் இருப்பின்....?

மற்றும் ஒரு Overshadowing!

சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம்....

சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் டெஸ்டின் சில புள்ளி விபரங்களைப் பார்ப்போம்.

இந்திய அணி இரண்டு இன்னிங்க்ஸ்'களிலும் சேர்த்து இந்தப் போட்டியில் இருபது விக்கெட்டுகளை இழந்து 595 ஓட்டங்களை எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா ஆடியது ஒரே இன்னிங்க்ஸ். இழந்தது மொத்தம் நான்கே விக்கெட்டுகள். ஆடியவர்கள் ஐந்தே பேர். ஆடிய ஐவரில் இருவர் அரை சதம், இரண்டு சதம் மற்றும் ஒரு இரட்டை சதம். ஒற்றை இலக்கத்திலோ அல்லது அரை சதத்திற்குக் குறைவாகவோ யாரும் ஆட்டமிழக்கவில்லை.

இத்தனை மோசமான தோல்வியிலும் இந்திய அணியின் சார்பில் மூன்று பேர் அரை சதம் கடந்தனர்.

இங்கே நான் சொன்னதெல்லாம் சாதாரண புள்ளி விவரங்கள். கொஞ்சம் முக்கியமான புள்ளி விவரங்களைப் பார்க்கலாமா?

மார்க்கேலும் ஸ்டெயினும் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து தலா ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். வெற்றிக்கு வித்திட்ட கனவான்கள்!


டெஸ்ட் கிரிக்கெட்டில் பதினோராயிரத்து அறுநூற்று ஐம்பது ரன்களை இதுவரை எடுத்திருக்கும் காலிஸ் அடித்த முதல் இரட்டை சதம் இது. முதல் இரட்டை சதத்திற்கு முன்னரே இத்தனை ரன்களைக் கடந்த ரன் மெஷின் காலிஸ் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

இரண்டாவது இன்னிங்க்சில் ஓரிருவரின் ஆட்டங்களும், சச்சின் - தோனியின் கூட்டணியில் வந்த நூற்று சொச்ச போராட்ட ரன்களும் கவனிக்கத்தக்கவை எனினும் இந்தியா அப்படியொன்றும் கண்ணியமான ஒரு தோல்வியை சந்திக்கவில்லை. ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் இருபத்தி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா இந்தியாவிற்கு அடித்தது சம்மட்டி அடி.

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் பிரயன் லாராவைக் கடந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறினார் ராகுல் டிராவிட். இவருக்கு முன்னால் ரிக்கி பாண்டிங், அவருக்கு முன்னால் சொல்லத் தேவை இல்லாமல் நம் லிட்டில் மாஸ்டர்.

அது மட்டுமல்ல பன்னிரண்டாயிரம் ரன்களை எட்டியவர் என்ற பெருமையையும் பெற்றார் டிராவிட். எழுந்து நின்று கைதட்ட வேண்டாமா நாம்?

இத்தனை புள்ளி விவரங்களையும், முக்கிய நிகழ்வுகளையும், ஓரிரு சாதனைத் தருணங்களையும் நம்மைக் காணவிடாமல் நம் கண்ணை மறைக்கின்ற ஒரே செய்தி அந்த "ஐம்பதாவது சதம்".

சச்சினின் ஐம்பதாவது சதம் ஒரு செய்திதான். சாதாரண செய்தி அல்ல முக்கியச் செய்தி. முக்கியம் மற்றுமல்ல ஒரு மாபெரும், சிறந்த, உலக கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாம் கொண்டாடத்தக்க ஒரு நிகழ்வு. யாரேனும் மறுக்க இயலுமா?

சர்.பிராட்மேன் அவர்களுக்குப் பின் உலக கிரிக்கெட் அரங்கிற்குக் கிடைத்த மாபெரும் கிரிக்கெட் ஆட்டக்காரன் சச்சின். இதை நாம் சொல்லிக் கொள்ளவில்லை. உலக கிரிக்கெட் ஜாம்பவான்களும், கிரிக்கெட் ரசிகர்களும் சொல்லி மகிழ்கிறார்கள்.


எனினும், நான் இங்கே மேலே குறிப்பிட்ட அத்தனைத் தகவல்களையும் சச்சினின் ஐம்பதாவது சதம் என்ற மாபெரும் செய்தியின் நிழலில் மறைத்துவைத்து இரண்டு நாட்கள் அனைத்து ஊடகங்களும் கத்திக் கதறிக் கொண்டிருந்தன.

சச்சினின் சதம் ஒரு மாபெரும் கொண்டாடத்தக்க செய்தி. ஆனால் அது ஒன்று மட்டுமே செய்தியல்ல ஊடகங்களே.
.
.
.

Dec 7, 2010

பன்டர் மூஞ்சில பஞ்ச் வுட்டாங்கபா...


Australia 245 & 304 (99.1 ov)
England 620/5d
England won by an innings and 71 runs



தெர்தா.... இததான் கே.பி. ஸ்டைலு....



டேய்... லெக் சைட்'லையே போடாதடா...அங்கதான் அவன் அடிக்கறானில்ல...


யோவ் அவன் எந்த சைட்'ல போட்டாலும் அடிக்கறான்யா..


இந்தப் படத்துக்கு நோ கமெண்ட்ஸ்....


வருண பகவான் சென்னை'ல ஓவர் டூட்டி பாக்கறாரு டி... இங்கல்லாம் மழைய எதிர்பாக்காத பாண்டிங்....இது சொம்மா மேகம் மட்டும்...



டேய்.... சொல்ட்டு போட்றா பேமானி....


ஆ.... ஆ.... புட்ச்சியா புட்சியா...
ஆ.... நீ கெளம்பிக்கினே  இரு...


இன்னாபா நன்ச்சி உப்போ?



Mr.கிரிக்கெட் அவங்க அவுட்டு கேக்கறாங்க...நீங்க ஏன் கைய ஒசத்தறீங்க? 


அஞ்சு பேர அவுட்டாக்க ஆயிரம் ரன்னா? பான்டிங்கு நீ ரொம்ப செலவு பண்ற நைனா..


வாடா வாடா வாடா.... மேச்சு ஜெயிச்சிட்டோம் வாடா....
அடுத்து கப்ப தூக்கலாம் வாடா வாடா வாடா.... 


நன்றி: cricinfo.com
.
.
.

Nov 9, 2010

சிங் இஸ் கிங்


பேட்டிங்கில் ஹர்பஜன் கொண்டுள்ள பலம் அவரே இன்னமும் சரிவர உணராத ஒன்று.

- ரிக்கி பாண்டிங்






நன்றி: Cricinfo 

Oct 5, 2010

லட்சுமணா...நீ எப்போ ரிடையர் ஆவ?




.
வி.வி.எஸ்.லட்சுமண், ரிக்கி பாண்டிங்

.
Related Posts Plugin for WordPress, Blogger...