Showing posts with label பூதம். Show all posts
Showing posts with label பூதம். Show all posts

Mar 23, 2012

அவன், அவள், பூதம்


எச்சரிக்கை 1:
எப்பவோ ஈமெயிலில் வந்திறங்கிய கதை இதுமுன்னமே நீங்க வாசித்திருக்கக் கூடும்இருந்தாலும் என்னவந்தது வந்தீர்கள் படித்து வையுங்கள்!

எச்சரிக்கை 2 : 
இது அடல்ட் கதைஅதனால் அடல்ட் ஆனவர்களை விடவும் அடல்ட் ஆகவிருப்பவர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்து படிக்கலாம்தனியறிவு கூடும்.

வர்கள் இளம் தம்பதியினர்கணவன் மனைவிக்கு கோல்ஃப் விளையாடக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறான்மனைவி எக்குத்தப்பாய் ஓங்கி விட்ட ஒரு அடியில் பந்து பத்து ஃபர்லாங் பறந்து காணாமற் போகிறதுபந்தைத் தேடி இருவரும் அந்த நீண்ட கோல்ப் மைதானத்தில் நெடும்பயணம் புறப்படுகிறார்கள்கடைசியில் பாசி படிந்து பயமுறுத்தும் பழைய பாழடைந்த பங்களா ஒன்றை அடைகிறார்கள் இருவரும். ('னாவுக்கு 'னாவுக்கு 'னாவுக்கு 'னாவுக்கு பா'னாதமிழ் வாத்தியார் பேரன் நான்). அந்த வீட்டின் முன்புற மண்டபத்தின் ஜன்னல் கண்ணாடியில் கோல்ப் பந்து உள்ளே சென்ற அடையாளம் தெரிகிறதுஒரு உடைசல்.

பயபக்தியோடு உள்ளே நுழைகிறார்கள்வீட்டில் யாரும் இருப்பதற்கான அடையாளம் தெரியவில்லைவீட்டின் மண்டப அறையில் பொருட்கள் ஏதும் இல்லைஅறை மூலையில் இருக்கும் ஒரு கண்ணாடி அலமாரியின் கதவும் உடைந்திருக்கிறதுதரையில் ஒரு சிறு மண்குடுவை உடைந்து சிதறிக்கிடக்கிறதுஒரு மூலையில் அவர்கள் தேடிவந்த அந்த கோல்ஃப் பந்து இன்னமும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது.

அந்த அறையில் இன்னொரு மூலையில் திடீரென்று ஒரு மனிதன் தோன்றுகிறான்ஏழு அடி உயரம்பார்க்கவே விசித்திரத் தோற்றம்இருவரையும் வெறித்த பார்வை பார்க்கிறான்.

"சார், மன்னிச்சிடுங்கஎன் மனைவி இப்போதான் கோல்ஃப் கத்துக்கறாதெரியாம பந்து உள்ளே வந்துடுச்சி!", அத்தனை ஆஜானுபாகுவான ஒரு விந்தைத் தோற்றம் கொண்ட மனிதனைக் கண்டவுடன் கணவனுக்கு நா குழறத் தொடங்குகிறது.

"சாரி சார்!", மனைவியும் கணவன் முடித்த இடத்தில் தொடங்கி தன் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறாள்.

இருவரையும் ஏற இறங்கப் பார்க்கிறான் அந்த மனிதன். "ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா", ஒரு நெடிய சிரிப்பு முதலில் பதிலாக வருகிறதுகணவனும் மனைவியும் ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர்எதற்குச் சிரிக்கிறான் என்று விளங்கவில்லையே!

"ஐயாநீங்கள் எனக்கு நல்லதுதான் செய்திருக்கிறீர்கள்!"

"என்ன சொல்லறீங்க?"

"நான் ஒரு பூதம்இல்லை பயப்படாதீங்கநான் நல்லது செய்யும் பூதம்ஒரு கெட்ட மந்திரவாதி ஐந்நூறு வருடங்களுக்கு முன்னால் என்னை இந்த மண் குடுவையில் அடிச்சி வெச்சிட்டுப்போயிட்டான்அந்த குடுவைக்குள்ளேயே எங்கெங்கயோ சுத்தி வந்த எனக்கு இன்றைக்கு உங்க மூலமாகத்தான் விடுதலை கிடைச்சிருக்கு", இப்போது கணவனும் மனைவியும் சந்தோஷமாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள்பூத மனிதன் தொடர்கிறான்...

"என்னை விடுதலை செய்த உங்களுக்கு நான் ஏதாவது செய்தாகணும்ஏதேனும் மூணு வரம் கேளுங்க"

இமேஜுக்கு தேங்க்ஸ்: http://www.mwctoys.com

"அட! அப்படியாரொம்ப சந்தோஷம் பூதம்நீங்க எங்களோடையே இருந்துடுங்க அதுதான் முதல் வரம்"

"இல்லைங்கஅது நடக்காதுநான் என் மக்களைத் தேடித்போயாகணும்வேற ஏதும் கேளுங்க!"

முதலில் கணவன் கேட்கிறான், "எங்களுக்கு உலகத்துலேயே மிகப் பெரிய வீடு வேணும்”, மனைவி எக்ஸ்டென்ஷன் சேர்க்கிறாள் ஃபுல்லி ஃபர்னிஷ்ட்".

"அப்படியே அப்படியேநீங்கள் வீடு திரும்பிச் சென்று பார்க்கும்போது உங்கள் வீட்டை உலகின் மிகப் பெரியவீடாகஅனைத்து வசதிகளும் பொருந்திய வீடாகப் பார்ப்பீர்கள்இரண்டாவது என்ன வேண்டும்?"

"அந்த வீடு முழுக்க போதும் போதும்ங்கற அளவுக்கு பணம் வேணும்"

"அப்படியே அப்படியேஎன்றும் தீராத செல்வம் உங்கள் வீட்டு அறைகள் முழுக்க நிரம்பியிருக்கும்மூன்றாவது வரமாக நீங்கள் ஏதும் கேளுங்கள் அம்மணி

"ஆ! இந்த ரெண்டையும் அனுபவிக்க எங்களுக்கு ஆரோக்யமான ஆயுள் வேணும்"

"அப்படியே அப்படியேஉங்கள் இருவருக்கும் நோயற்ற ஒரு வாழ்வை மூன்றாவது வரமாக வழங்கினோம்"

"ரொம்ப தேங்க்ஸ் பூதம்ஒரு பந்து அடிச்சி கண்ணாடியும்குடுவையும் உடைஞ்சதுக்கு இப்படி ஒரு பரிசா?"

"நீங்கள் என்னை விடுதலை செய்தவர்கள்அல்லவாஉங்களுக்கு இதைக் கூட செய்யாவிட்டால் எப்படி?"

"சரிநாங்க அப்போ போயிட்டு வர்றோம்ரொம்ப நன்றி பூதம்!"

"ஒரு நிமிடம் ஐயாஒரு நிமிடம் அம்மணி!"

"சொல்லுங்க பூதம்"

"உங்களுக்கு மூன்று வரங்கள் வழங்கிய எனக்கு நீங்கள் ஒரு வரம் அருள்வீர்களா?"

"நாங்களாஉனக்கு என்ன வரம் தரமுடியும் நாங்க?"

"நான் பூதம்தான் என்றாலும் எனக்குள்ளும் ஐந்து நூறு வருடங்களாக உறங்கிக் கிடந்த ஒரு மனிதன் இருக்கிறான்"

"சரி?"

"அவனுக்கும் அமிழ்த்தி வைக்கப்பட்ட காதற்பசியும் இருக்கிறது..."

"அதனால?"

"உங்கள் மனைவியும் மிகவும் அழகாக இருக்கிறார்நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால்...

”...தவறாக நினைக்கவில்லை என்றால்...???”, அதிர்ச்சியும் கோபமும் சேர்ந்த கேள்வி கணவனிடமிருந்து...

நான்....நான்.... அவருடன் சிறிது நேரம் செலவிடலாமா?"

யோவ்! போய்யா, ஏதோ நல்ல பூதம்னு சொன்ன? நீயும் வேணாம் உன் வரமும் வேணாம். வாடீ....”, மனைவியின் கைபிடித்துத் தரதரவென்று வெளியே இழுத்தான் கணவன்

ஆனால் இங்கே மனைவியின் தியரி வேறுவிதமாக இருக்கிறது. எதுக்குங்க டென்ஷன் ஆகறீங்க?”

ஏய்! என்ன பேசற நீ?”

அவன் ஒண்ணும் மனுஷன் இல்லையே? அதுவும் இல்லாம இத்தனை வசதி வாய்ப்பு நமக்கு எப்படி திரும்ப அமையும்? நான் சின்ன காம்ப்ரமைஸ் பண்ணத் தயார்

செருப்பால அடிப்பேன். அப்படியே போயிடு அவனோட....”, என்று ஆரம்பித்த கணவன் கால்மணிநேர விவாதத்திற்குப் பிறகு சமாதானம் ஆகிறான். மனைவி அந்த பூதத்துடன் மேல்மாடி அறைக்குள் போகிறாள்.

அடுத்த ஒன்றரை மணிநேரம்.... ஆயகலைகள் எத்தனையோ நாமறியோம். ஆனால் அந்தக்கலையின் அறுபத்து சொச்ச வகைகளையும் ஒருங்கே அவளிடம் முயற்சிக்கிறான் அந்தப் பூதம். 

இப்படி ஒரு பெண்ணை நான் கண்டதேயில்லை. யூ ஆர் ஸோ செக்ஸி....”,சிரித்துக் கொள்கிறாள் அவள்.

களைப்பின் உச்சத்தில் கடைசிக் கலையை அவளிடம் பழகிக் களைக்கிறான் அந்தப் பூதம். பெருமூச்சின் உச்சத்தில் அவளிடம் கேட்கிறான்...

உனக்கு என்ன வயது?”

முப்பத்து நான்கு

உன் கணவனுக்கு?”

முப்பத்து ஆறு

ம்ம்ம்ம்... முப்பத்து ஆறு, முப்பத்து நான்கு.... இன்னமுமா இந்த பூதம், பிசாசுக் கதைகளையெல்லாம் நம்புகிறீர்கள் நீங்கள்?”








Related Posts Plugin for WordPress, Blogger...