Showing posts with label பொன்னியின் செல்வன். Show all posts
Showing posts with label பொன்னியின் செல்வன். Show all posts

Nov 2, 2010

சன்-மணி-விக்ரம்-ஜெமோ கூட்டணியில் பொன்னியின்செல்வன்

ஊடகங்கள் யூகிக்கும் ஹேஷ்யங்கள் நிஜமானால்....

.... இந்த இடுகையின் தலைப்பு நிஜமாகவிருக்கிறது.

நூற்று சொச்ச கோடிகளுக்கு எந்திரனைப் படைத்த பின் அடுத்து என்ன என்ற விவாதம் சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் வந்தபோது,  அமரர் கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்"என்ற முடிவிற்கு வந்திருப்பதாக செய்திகள் கசிகின்றன.

தமிழில் முக்கிய கதாநாயகப் பாத்திரத்தில் (வந்தியத்தேவன் - வேறு யார்?) விக்ரம் நடிப்பதாகச் செய்தி. தெலுகு வெர்ஷனில் மகேஷ் பாபு வல்லவரயுடு எனத் தெரிகிறது..

படத்தை இயக்குபவர்? நம்ம மணிரத்னம் என்கின்றன யூகங்கள். மொத்த பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களையும் எண்பது சீன்களில் அடக்கி ஒரு அட்டகாச ஸ்க்ரிப்டை மணி ரெடி செய்து வைத்திருப்பதாகவும் கூடுதல் தகவல் சொல்கிறது.

அடுத்த தகவல்தான் இங்கே ஹைலைட்.....

படத்திற்கு வசனமெழுத சன் குழுமத்தால் ஜெமோ தொடர்பு கொள்ளப்பட்டுள்ளார். அவர்க்குப் பேசப்பட்டிருக்கும் சம்பளம்...அம்மாடியோவ்... ரெண்டு கோடியாம் சார்...!!!




ஜெமோ'வை உ.த.எ. எனச் செல்லமாக அழைக்கும் கேங் பக்கம் காது கொடுத்த போது..

சன் பிக்சர்ஸ் நமக்கு ஆவாது....

மணியைக் கண்டா கொஞ்சமும் சரிப்படாது...

பரப்பிலக்கிய எழுத்தாளர் கல்கி எழுதின பொன்னியின் செல்வன் கதையையா, சொல்லவே வேணாம்!

ஜெமோவை அறவே புடிக்காது... 

ஒன் மோர் திங்.... இசைக்கு இளைய ராசாவைச் சேர்க்கச் சொல்லுங்கோ...

அட நம்ம ஆழ்வார்க்கடியான் பாத்திரத்துல கமல்ஹாசனை நடிக்கச் சொல்லுங்கப்பா...

நம்ம அண்ணன் அறிவுடைநம்பிக்கு.... அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு தமிழ்நாட்டையே கெட்ட கெட்ட வார்த்தையில அர்ச்சனை, மறு அர்ச்சனை, மறுபடி மறுபடி அர்ச்சனை செய்ய வகையாப் போச்சு.

(அதுவும் இந்த ரெண்டு கோடி சமாசாரம் மீண்டும் மீண்டும் (அ)ராத் தொந்தரவுகள் தந்து நள்ளிரவு இடுகைகளுக்கு வழிவகுக்கும்)

ஆட்றா சாமி ஆட்றா சாமி.... தையத் தக்கா தையத் தக்கா.....


Oct 31, 2010

பொன்னியின் செல்வன் - வைரவிழா ஆண்டு

பொன்னியின் செல்வன் படைப்பு வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் 29.10.10
- கானா பிரபா (ட்விட்டர் வழியாக)

பொன்னியின் செல்வன் குறித்துச் சிலாகிக்க ஆயிரமாயிரம் விஷயங்கள் ஒரு மூலை முடுக்கு வாசகனாக எனக்கு உண்டு.

வந்தியத்தேவன், நந்தினி, அருள்மொழிவர்மன், வானதி, குந்தவை, திருமலைநம்பி, பழுவேட்டரையர்கள், ஆதித்த கரிகாலன் மற்றும் இன்னபிற கதாபாத்திரங்கள், அவற்றின் குணாதிசயங்கள் குறித்த என் சிலாகிப்பைச் சொல்கிறேன் என தமிழ் இணைய உலகில் இங்குமங்கும் ஏகப்பட்ட சிலாகிப்புகள் பரவி விரவிக் கிடக்கின்றன. 

எல்லா சிலாகிப்புகளுக்கும் மகுடம் சூட்டுவது என நான் கருதுவது இதுவரை  பதிவு செய்யப்படாத என் சிலாகிப்பை. பொன்னியின் செல்வனில் மணிமேகலை பாடும் இந்தப் பாடல்... இந்தப் பாடல் மட்டுமல்ல, மணிமேகலையின் கதாபாத்திரம், வந்தியத்தேவன் மீதான அவளது அப்பழுக்கற்ற தூய்மையான காதல்... இதுவே பொன்னியின் செல்வன் என்றதும் என் மனதில் முதலில் கீற்றாய்ப் பாயும் மின்னல் நினைவு.

பொன்னியின் செல்வன் கதையில் மணிமேகலை இரண்டு இடங்களில் இந்தப் பாடலைப் பாடுகிறாள். இதில் உருக்கம் தருவது அவள் மடியும் வேளையில் வல்லவரையன் மடி சாய்ந்து இதனைப் பாடியவாறு மடியும் கணம்.... பொன்னியின் செல்வன் முடியும் கணம்....




இனியபுனல் அருவிதவழ் இன்பமலைச் சாரலிலே
கனிகுலவும் மரநிழலில் கரம்பிடித்து உகந்ததெல்லாம்
கனவுதானோடி சகியே நினைவுதானோடி!

புன்னைமரச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே
என்னைவரச் சொல்லி அவர் கன்னல் மொழி பகர்ந்ததெல்லாம்
சொப்பனந்தானோடி - அந்த அற்புதம் பொய்யோடி! 

கட்டுக்காவல் தான் கடந்து கள்ளரைப்போல் மெள்ளவந்து
மட்டில்லாத காதலுடன் கட்டி முத்தம் ஈந்ததெல்லாம்
நிகழ்ந்ததுண்டோடி நாங்கள் மகிழ்ந்ததுண்டோடி!

இதனினும் இனிய தவழ்ந்து தாவிச் செல்லும் ஒரு கவிதையை, உருக்கமாய் உணர்வுகளைப் பரிமாறும் ஒரு பாடலை நான் இதுவரை படித்ததுமில்லை கேட்டதுமில்லை.

கல்கி கல்கிதானுங்களே?
Related Posts Plugin for WordPress, Blogger...