Showing posts with label மகாகவி சுப்ரமணிய பாரதியார். Show all posts
Showing posts with label மகாகவி சுப்ரமணிய பாரதியார். Show all posts

Dec 3, 2012

பாரதிப் பெருவிழா


நூல் உலகம் இணையதளத்திலிருந்து வந்த கடிதம்...


அன்புடையீர் வணக்கம்,

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவாக, இன்று டிசம்பர் 2 -ம் நாள் துவங்கி பாரதியின் பிறந்த நாளான டிசம்பர் 11 முடிய, தமிழ் நூல்கள் 5 முதல் 10 சதவித தள்ளுபடி விற்பனையில் எங்கள் இணையத்தில் (நூல் உலகம் http://www.noolulagam.com ) கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

மேலும், வரும் டிசம்பர் 8-ம் நாள், சனிக்கிழமை சென்னை இராஜா அண்ணாமலை மண்டபத்தில் பாரதிப் பெருவிழா காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 11 -ம் நாள் பாரதி விழா ஈரோடு கொங்கு கலை அரங்கத்தில் நடை பெறுகிறது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

அன்புடன்,
ஜீவா புத்தகாலயம்.




Nov 29, 2012

வர்றாரு பாரதி


நண்பர் நடராஜன் (டிவிட்டரில் @vNattu) ஒரு பாரதிப் பித்தர். எந்த அளவிற்கு என்றால், சிரத்தையாக தினமும் http://bhaarathi.blogspot.com/ என்ற தளத்தில் பாரதியின் எழுத்துகள், பாரதி பற்றிய தகவல்கள் ஆகியவற்றை தொகுப்பவர். பாரதி எழுதியவை மட்டுமல்லாமல் பாரதி பற்றிய புத்தகங்களை யாரேனும் எழுதியிருந்தாலும் அவற்றையும் சேகரிப்பவர். ஆம்னிபஸ்ஸில் இதுவரை பாரதி பற்றி வந்த புத்தக அறிமுகங்கள் எல்லாம் இவர் எழுதியவையே.

வரும் டிசம்பர் பதினொன்றாம் தேதி பாரதியார் பிறந்த தினம். அதனையொட்டி அந்த வாரம் முழுவதும் (டிசம்பர் 9 தொடங்கி - டிசம்பர் 16 முடிய) பாரதி தொடர்பான புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆம்னிபஸ் அன்பர்களுக்கு அன்புக் கட்டளை விடுத்திருக்கிறார். நாங்களும் அந்தக் ஏற்றுள்ளோம்.

காத்திருந்து வாசியுங்கள் நண்பர்களே!

உங்களிடம் பாரதி குறித்த புத்தகங்கள் இருந்தாலும் அதுபற்றிய அறிமுகத்தை / விமர்சனத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். சிறப்புப் பதிவாக வெளியிட சித்தமாக இருக்கிறோம். கட்டுரைகளை rsgiri @ gmail . com என்ற முகவரிக்கு அனுப்பவும். அனுப்புபவர்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.


Related Posts Plugin for WordPress, Blogger...