Showing posts with label ஆம்னிபஸ். Show all posts
Showing posts with label ஆம்னிபஸ். Show all posts

Jun 2, 2013

பெற்றோர் - குழந்தைகள் வாரம்

ஆம்னிபஸ் மீண்டும் ஒரு சிறப்பு வாரத்தைக் கொண்டாட இருக்கிறது.

தமிழ் எழுத்துச் சூழலில் தரமான குழந்தை இலக்கியத்திற்கான இடம் மிகமிகக் குறைவு என்பதை எல்லோரும் எப்போதும் பேசுகிறோம்.

நம் குழந்தைகளின் அடுத்த தலைமுறை புத்தகம் படிக்கும் தலைமுறையாக இருக்குமா இல்லையா என்பதை யார் எப்படித் தீர்மானிக்கப் போகிறார்கள் / போகிறோம் என்பது பெரிய கேள்வியாக, கவலையாக இருக்கிறது.


இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதற்கான தேடலில், வேலையில் இறங்குமுன்; ஆம்னிபஸ்சின் தொடர் வாசக சீனியர்கள் சிலரிடம் தங்கள் குழந்தைகளுக்கு என்ன கதை/புத்தகத்தை பரிந்துரைப்பீர்கள், அல்லது அவர்களுக்கு என்ன கதையைச் சொல்வீர்கள். ஏன் சொல்வீர்கள்? அதாவது அந்தக் கதையிலிருந்து நீங்கள் குழந்தைகளுக்கு உணர்த்தும் values என்ன? அதைக் குழந்தைகள் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்று கேட்டோம்.

இவற்றைத் தங்கள் சொந்த அனுபவத்தைக் கொண்டு எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என கேட்டுக் கொண்டோம். தங்கள் குழந்தை அந்த புத்தகத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்,நீங்கள் எந்த values ஐ கற்றுக் கொடுக்க உங்கள் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை வாங்கிக் கொடுத்தீர்கள் என்பதையும் எழுதக் கேட்டுக் கொண்டோம்.

மிகவும் சுவாரசியமான சில பதிவுகள் வந்து சேர்ந்துள்ளன. குட்டிச்சுட்டிகளை வீட்டில் கொண்ட ஒவ்வொரு பெற்றோருக்கும் இந்தப் பதிவுகள் நிச்சயம் சுவாரசிய பகிர்வுகளாக அமையும்.

நாளை தொடங்கி அடுத்த ஒருவார காலத்திற்கு வெளிவரும் இந்த சிறப்புப் பதிவுகளைக் காத்திருந்து வாசிக்குமாறு ஆம்னிபஸ் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். 


Nov 29, 2012

வர்றாரு பாரதி


நண்பர் நடராஜன் (டிவிட்டரில் @vNattu) ஒரு பாரதிப் பித்தர். எந்த அளவிற்கு என்றால், சிரத்தையாக தினமும் http://bhaarathi.blogspot.com/ என்ற தளத்தில் பாரதியின் எழுத்துகள், பாரதி பற்றிய தகவல்கள் ஆகியவற்றை தொகுப்பவர். பாரதி எழுதியவை மட்டுமல்லாமல் பாரதி பற்றிய புத்தகங்களை யாரேனும் எழுதியிருந்தாலும் அவற்றையும் சேகரிப்பவர். ஆம்னிபஸ்ஸில் இதுவரை பாரதி பற்றி வந்த புத்தக அறிமுகங்கள் எல்லாம் இவர் எழுதியவையே.

வரும் டிசம்பர் பதினொன்றாம் தேதி பாரதியார் பிறந்த தினம். அதனையொட்டி அந்த வாரம் முழுவதும் (டிசம்பர் 9 தொடங்கி - டிசம்பர் 16 முடிய) பாரதி தொடர்பான புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆம்னிபஸ் அன்பர்களுக்கு அன்புக் கட்டளை விடுத்திருக்கிறார். நாங்களும் அந்தக் ஏற்றுள்ளோம்.

காத்திருந்து வாசியுங்கள் நண்பர்களே!

உங்களிடம் பாரதி குறித்த புத்தகங்கள் இருந்தாலும் அதுபற்றிய அறிமுகத்தை / விமர்சனத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். சிறப்புப் பதிவாக வெளியிட சித்தமாக இருக்கிறோம். கட்டுரைகளை rsgiri @ gmail . com என்ற முகவரிக்கு அனுப்பவும். அனுப்புபவர்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.


Nov 18, 2012

எளிய தமிழில் சுஜாதாவின் ஆழ்வார்கள் அறிமுகம்


ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்.தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும், ஆழ்வார்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் எளியவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் ரசிக்கக்-கூடிய புத்தகம் இது. சுஜாதாவுக்கே உரித்தான பாணியில் மிக எளிமையாக, மிக மிக சுவாரஸ்யமாக.



ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்என்ற இந்நூலில் பிரபல எழுத்தாளரும், வைணவருமான சுஜாதா எல்லா ஆழ்வார்களையும், ஆண்டாளையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 

கிபி 650 முதல் 950 வரையிலான காலத்தைத் தமிழில் பக்தி இலக்கிய காலம் என்பர். இதில் வைணவத்தைச் சார்ந்த பாடல்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தம்என்று நாதமுனிகளால் தொகுக்கப்பட்டன. 

இவைகளை இயற்றிய ஆழ்வார்கள் பக்தி நெறிகளையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். திருமாலை எப்போதும் மறக்காதவர்கள். திருமால் ஒருவனே பரம்பொருள் என்று நிரூபித்தவர்கள். மனித நேயத்தை வளர்த்தவர்கள். தமிழுக்கு மேன்மையளித்தவர்கள். இவர்கள் அனைவரும் பகவானின் அம்சங்கள் என்று கருதப்படுகிறார்கள். 

ஆழ்வார்களை எளிய தமிழில் அவர்கள் காலம் ,வாழ்க்கை பற்றிய சரித்திரக் குறிப்புகளுடன் அறிமுகப்படுத்தி பல பாடல்களின் நேரடியான பொருளைச் சொல்லும் இந்நூலின் முதல் நோக்கம் ஆழ்வார்களைப் பற்றியே பற்றியே அறியாதவர்களுக்கு அதன் மேல் ஈடுபாடு ஏற்படுத்துவதே. மேற்கொண்டு அவர்கள் மேல் ஈடுபாடு ஏற்படுத்துவதே. 

மேற்கொண்டு அவர்கள் பாடல்களின் உள்ளர்த்தங்களையும் ஸ்வாபதேசங்களையும் அறிய விரும்பினால் அவைகளை விரிவாக பல வைணவ நூல்களில் காணலாம். 



வைணவம் என்னும் மகா சாகரத்தின் கரையில் இருந்து கொண்டு அதை வியப்பாகப் பார்த்து ஆழ்வார்கள் மேல் ஒரு பிரமிப்யையும் மரியாதையையும் வாசகர்களிடம் ஏற்படுத்துகிறார் சுஜாதா.

- சத்யா ஆம்னிபஸ்சில் எழுதிய ”ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம்”  புத்தக விமர்சனத்திற்கு அன்பர் பால்ஹனுமான் எழுதிய பின்னூட்டம்.

மிக்க நன்றி பால்ஹனுமான்.
.
.
.

Nov 11, 2012

சிறுவர் இலக்கிய வாரம்

சென்ற வாரம் ஆம்னிபஸ் தளத்தில் ஒரு அறிவிக்கப்படாத “வனவிலங்கு” வாரமாக அமைந்தது. வனவிலங்கு என்பதைவிட, நாங்கள் அதனை “கானுயிர் வாரம்” என்று அழைத்தோம்,

இந்த சப்ஜக்டில் நான்கு நல்ல பதிவுகள் தேறின. அவற்றை நீங்கள் இந்த இணைப்பில் வாசிக்கலாம்: கானுயிர் வாரம்

வரும் பதினான்காம் தேதி குழந்தைகள் தினம். அதனை முன்னிட்டு இந்த வாரம் ஆம்னிபஸ்ஸில் சிறுவர் இலக்கிய வாரம் என்ற தலைப்பில் புத்தக விமர்சனங்கள் வெளிவரும். மினிமம் ஐந்து பதிவுகள் இதுவரை தயாராயுள்ளன.



நீங்கள் யாரேனும் சிறுவர் இலக்கியப் புத்தகங்கள் ஏதேனும் வாசித்திருந்தால் அவற்றை மற்றவருடன் பகிரும் நல்ல மனமிருந்தால் நமக்கு (rsgiri @ gmail <dot> com) எழுதி அனுப்புங்கள். சிறப்புப் பதிவாக அவை வெளிவரும். அனுப்புபவர்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.

Sep 30, 2012

தி.ஜானகிராமன் வாரம்


நாளை (அக்.1) தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு ஆம்னிபஸ் தளத்தில் தி.ஜானகிராமன் புத்தகங்களுக்கு அறிமுக / விமர்சனப் பதிவுகள் வெளிவருகின்றன. 

சென்றவாரம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இதுவரை ஐந்து பதிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளோம். ஆம்னிபஸ் ரெகுலர் ஓட்டுனர்களே அந்தப் பதிவுகளை எழுதச் சித்தமாக இருக்கிறார்கள். எனினும், சிறப்புப் பதிவர்களின் பதிவுகளும் வரவேற்கப்படுகின்றன.

நாளை தொடங்கி அடுத்த ஞாயிறுவரை மாலை ஆறுமணிக்கு மேலாக பதிவுகள் வலையேற்றப்படும். 

காத்திருந்து வாசிக்கவும்.

Sep 26, 2012

வண்ணத்துப்பூச்சி வரைந்தவன்


ஒருமுறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை;
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண்மனம் புரிவதில்லை

நா.முத்துக்குமார் - இன்றைய தமிழ்த் திரைப்பாடல் உலகின் தலைசிறந்த பாடலாசிரியர்.

கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்று வரிசைப்படுத்தினால் அதற்கு அடுத்த தலைமுறைப் பாடலாசிரியர்களில் ஒரு பெரிய சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர். மிக முக்கியமானவர்.

2004’ஆம் வருடம் கோவை சென்றிருந்தபோது என் ரெண்டுவிட்ட சகோதரன் சந்தோஷுடன் ”7ஜி ரெயின்போ காலனிபடத்தில் வரும் கண்பேசும் வார்த்தைகள்பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படம் வெளியான வாரயிறுதி அது. அப்போதுதான் அந்தப் பாடலை முதல்முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.

சந்தோஷிடம் சொன்னேன், “இந்தப் பாட்டு பாரு. சூப்பர் ஹிட் ஆகும், படமும்”.

பாடல் முதல்முறை டிவியில் பார்த்தபோது ரவிகிருஷ்ணாவின் சோகம் தோய்ந்த விரக்தியான எக்ஸ்ப்ரெஷன்களும், சுமன் ஷெட்டி தகரக்கதவில் தாளம் போடுவதுமாக ஏதோ ரெண்டாந்தர காட்சிப்படுத்தல் போலத் தோன்றியது முதல்முறை பார்த்தபோது. 

சான்ஸே இல்லை. மொக்கை பாட்டு இது. கேவலமா இருக்கு”, என்றான்.

நான் கவனித்தது அந்தப் பாடல் வரிகளை,  யார் எழுதியவை என அப்போது தெரியவில்லை என்ற போதிலும். காலாகாலமாய்க் காதல் விஷயத்தில் பெண்களைக் குறைசொல்லும் ஒரு ஆண்வர்க்கத்துப் பாடல். ஆனால், காயம்பட்ட ஒரு ஆணின் மனதிற்கு மருந்தாய் நச்என்ற அற்புத வரிகள் அவை. அந்தக் காலகட்டத்தில் என் மனம் ஏதும் புண்பட்டிருந்ததா என்ற க்ராஸ் கொஸ்சின் எல்லாம் இங்கே வேண்டாமே, ப்ளீஸ்! 

அடுத்த இரண்டுவார காலத்தில் பாடல்களுக்காய் அந்தப் படத்தை சந்தோஷ் நான்குமுறை பார்த்தது தனிக்கதை.

2006’ஆம் ஆண்டு இன்னொரு ஒன்றுவிட்ட சகோதரனான குருபிரசாத் என் கையில் சூப்பர் புக்ண்ணா”, என்று எனக்குப் பிறந்தநாள் பரிசாக கண்பேசும் வார்த்தைகள் புத்தகத்தைத் தந்தபோதுதான் எனக்கு நா.முத்துக்குமாரை அறிமுகம். அதுவரை மற்றுமோர் பாடலாசிரியராக நா.முத்துக்குமாரை அறிந்திருந்தவன் நான். நான் வாசித்த மனசைத் தொட்ட புத்தகங்களுள் கபேவாவும் முக்கியமான ஒன்று. கபேவா பற்றித் தனியாக நெடுங்கட்டுரையே எழுதலாம். நா.முத்துக்குமார் குறித்த என் சிலாகிப்புகளை ஒரு தொடராகத்தான் எழுதவேண்டும்.

கபேவா புத்தகத்தில் இருந்த ஒரு குறிப்பை வைத்துக் கொண்டு  பட்டாம்பூச்சி விற்பவன் புத்தகம் பற்றி அறிந்தவன்ஐந்து வருடங்களாக அதைத் தேடியலைந்தேன். இந்த வருட சென்னைப் புத்தகக் கண்காட்சியில்தான் கடைசியாக அந்தப் புத்தகம் கிடைத்தது.

நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவனுக்கு ஆம்னிபஸ்சில் எழுதிய விமர்சனம் இங்கே



Sep 7, 2012

ஆம்னிபஸ் 50

ஆம்னிபஸ் தளம் துவங்குமுன் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்
365 நாள்கள் ப்ராஜக்டாக அல்லாமல் 365 புத்தகங்கள் பற்றிப் பேசும் தளமாக இந்தத் தளம் அமையும். குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் குறித்த பதிவுகள் ஒவ்வொரு வாரமும் இடம்பெறும்.

சொன்னதற்கு மாறாக...... நெகட்டிவ் ஸைடில் அல்ல... ஆனால் பாஸிட்டின்வ் ஸைடில்.... ஆம்னிபஸ் தளம் தொடங்கிய 37’வது நாளான நேற்று (செப் 6) தன் ஐம்பதாவது பதிவை வலையேற்றினோம். ஏதோ இரண்டு பேர் கஷ்டப்பட்டு ஓட்டவேண்டிய பஸ் என்று நினைத்திருந்தது இப்போது தொடர்ந்து எழுத எட்டு பேருடனும் வாரம் ஒன்று அல்லது இரண்டு சிறப்புப் பதிவர்களின் பதிவுடனும் அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது ஆம்னிபஸ்.
.
பைராகி, சத்யா, நட்பாஸ், சுநீல் கிருஷ்ணன், பாலாஜி, அர்ஜூன், நடராஜன் என்று இங்கே தொடர்ந்து எழுதும் அனைவரின் வாசிப்பு இச்சையும், வாசித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர்கள் கொண்ட தொடர் ஆர்வமும் பெரும் பாராட்டிற்கு உரியது. அனைவருக்கும் நன்றிகள் ஆயிரம்.

அரசு, நவீன், ரவி, ’ஜில்’ ராஜன் ஆகியோர் தங்கள் சிறப்புப் பதிவுகளை ஆர்வமுடன் ஆம்னிபஸ்சுக்கு அளித்தமை பெருமகிழ்ச்சிக்கு உரிய விஷயம். நன்றி நண்பர்களே.

இதோ இன்றைக்கு 10000’ஆவது ஹிட்டையும் தொடப்போகின்றது ஆம்னிபஸ்.

இந்த ஐம்பது, பத்தாயிரம் என்பதெல்லாம் இன்னும் சில மாதங்களில் மிகச் சிறிய இலக்க எண்களாக மாறப்போவது உறுதி என்றே தோன்றுகிறது.

தொடர்ந்து வாசித்து, கருத்துகளைப் பகிர்ந்து ஊக்கம் தரும் அனைவருக்கும் நன்றிகள்.


ர்ரை..... ர்ர்ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்...............!
.
.
.

Aug 22, 2012

ஆம்னிபஸ் - புத்தகப் புழுக்களுக்கு ஒரு தளம்


ஆம்னிபஸ் தளம் தொடங்கி வெற்றிகரமாக இருபத்தியிரண்டு நாள்கள் ஆகின்றன. வாரம் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் என்ற உத்தரவாதத்துடன் துவங்கிய ப்ராஜக்ட் இது. அதற்குள் முப்பது பதிவுகள் வாயிலாக முப்பது புத்தக அறிமுகங்கள் ஆயிற்று. 

சுஜாதா, நாஞ்சில் நாடன், பாரதியார், ஆதவன், லா.ச.ரா, ஷோபா சக்தி, என்.சொக்கன், வாலி, கலாப்ரியா, சா.கந்தசாமி, சுகுமாரன், யுவன் சந்திரசேகர், லலிதா ராம் என்று ஒரு பெரிய ரவுண்டு அதற்குள் அடித்தாகிவிட்டது.

எட்டு நண்பர்கள் தொடர்ந்து எழுதுகிறோம். அவ்வப்போது சிறப்புப் பதிவர்களும் தனியே பதிவுகளை அனுப்பிச் சிறப்பிக்கிறார்கள்.

A library is a hospital for mind என்பார்கள். புத்தக வாசிப்பின் அவசியம் சொல்ல இந்த ஒரு quote போதுமானது. இந்த 365 ப்ராஜக்ட் மூலம் நாங்கள் புதிது புதிதாய் வாசிக்கிறோம், வாசிப்பவற்றை அறிமுகம் செய்கிறோம்.

இந்த நல்ல நோய் உங்களையும் தொற்றிக் கொள்ள http://omnibus.sasariri.com தளத்தைத் தொடர்ந்து வாசிக்க அழைக்கிறோம்.


கூகுள் ரீடரில் ஆம்னிபஸ்

Jul 30, 2012

ஆம்னிபஸ் - மற்றுமோர் 365

நன்றி:  http://www.scholastic.com

ஃபோட்டோ 365, பாசுரம் 365, Quotes 365 வரிசையில் நானும் நுழைகிறேன் என்று பாடுகிறேன் 365 ப்ராஜக்டை நாம் துவங்கிய விஷயம் தமிழ்கூறும் நல்லுலகம் ஆல்ரெடி அறிந்தது.

எப்படியோ அரைகுறையாக அந்த ப்ராஜக்டை நிறைவு செய்தாகிவிட்டது.

சும்மா இருக்கும் நேரத்தில் விட்டத்தைப் பார்த்துத் தலையைச் சொறிந்ததில் தோன்றிய ஐடியாதான் இந்த “அடுத்த” 365 ப்ராஜக்ட்.

புத்தகங்களுக்கான அறிமுகம், விமர்சனம் செய்யும் தளங்கள் ஏற்கெனவே இங்கு அழியாச் சுடர்கள், சிலிகன் ஷெல்ஃப் என  நிறைய உண்டு. அந்த வரிசையில் நாங்களும் எங்கள் பங்காக ”ஆம்னிபஸ்” தளத்தை துவங்குகிறோம்.

நாங்கள் படித்து ரசித்த நூல்கள் குறித்த பதிவாக இந்தத் தளம் இருக்கும். சிலசமயம் விரிவான விமர்சனமாக அமையும், பல நேரங்களில் ஜஸ்ட் ஒரு நூலைப் பற்றின அறிமுகப் பதிவாக இருக்கும்.

என்ன மாதிரியான புத்தகங்கள் பற்றி எழுதுவோம்?  எட்டுத்தொகையாகவும் இருக்கும், எக்ஸைலாகவும் இருக்கும். திருக்குறளாக இருக்கும், திருப்பூந்துருத்தியாகவும் இருக்கும். 

நண்பர் நட்பாஸ் இப்போதைக்குக் கை கோர்த்திருக்கிறார். இன்னமும் மூன்று நண்பர்கள் அவ்வப்போது எழுதுகிறேன் என்று உறுதி கொடுத்திருக்கிறார்கள்.

இந்தமுறை 365 நாள்கள் ப்ராஜக்டாக அல்லாமல் 365 புத்தகங்கள் பற்றிப் பேசும் தளமாக இந்தத் தளம் அமையும். குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் குறித்த பதிவுகள் ஒவ்வொரு வாரமும் இடம்பெறும்.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் புதிய ப்ராஜக்ட் துவங்குகிறது.

இணையதளம் இங்கே ==> ஆம்னிபஸ்

Jun 30, 2012

விரைவில்....

image courtesy: http://soe.ucdavis.edu
Related Posts Plugin for WordPress, Blogger...