Showing posts with label நா.முத்துக்குமார். Show all posts
Showing posts with label நா.முத்துக்குமார். Show all posts

Jan 24, 2013

ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய


டேபிளைக் கடக்கையில் டாமினிக் அழைத்தான்.

”ஆழ் யூ கோயிங் டு டாக்டர்ழ்’ஸ் டெஸ்க்?”

“யெஸ் டாமினிக்”

”கென் யு ட்ழாப் திஸ் தேர்ழ்?”

ஃபைலை வாங்கிச் சென்று சீனியர் பாஸ் மேஜை மேல் வைத்துவிட்டு, அவர் கையொப்பமிட்டு அடுக்கி வைத்திருந்த நேற்றைய ஃபைல்களை அள்ளிக் கொண்டு சீட்டுக்கு வந்தேன்.

உட்கார்ந்த மறுநிமிடம் சீனியர்  பாஸ் இண்டர்காமில் அழைத்தார். "ஹூ ட்ராஃப்டட் திஸ்  லெட்டர்?"

”எது டாக்டர்?”

“நீங்க கொண்டு வந்து இப்போ வெச்சீங்களே அது”

"இட்ஸ் டாமினிக் டாக்டர்" 

"ஜஸ்ட் கம் டு  மை கேபின்"

"போச்சு! போச்சு! இந்த மனுஷன் சாதாரணமாவே சன்னதம் ஆடுவாரு இதுல சலங்கை வேற கட்டி விட்டாச்சா? இவரு டாக்டருக்குப் படிச்சாரா இல்ல இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சாரா? ஒவ்வொரு லெட்டரா இப்படி நோண்டி நுங்கெடுத்து நம்மைப் படுத்தறாரு!"

இப்போதே நமக்கு ஆங்கிலம் ததிங்கினதோம். அப்போது இந்தத் ததிங்கினத்தோமே அரைகுறை.

"என்னய்யா பொலம்பல்? ", பக்கத்து சீட் ஈஸ்வரி கேட்டார். 

"நம்ம புதுப்பய எழுதின லெட்டர் தலைவர் டேபிள்ல வெச்சிருக்கேன் என்ன பிரச்னைன்னு தெரியலை கூப்பிடறார்"

"ய்யே! அந்த டாமினிக் ஆங்கிலோ இந்தியன்யா. என்னாமா இங்கிலீஷ் பேசறான். தப்பெல்லாம் எதுவும் இருக்காது. எப்படி லெட்டர் எழுதனும்னு அவன் எழுதின லெட்டரை வெச்சு உனக்கு பாடம் எடுப்பாரு, போ"

எனக்கென்னவோ நம்பிக்கையில்லை.

என் நம்பிக்கையை வீணாக்காமல் டாமினிக் அந்த லெட்டரை சொதப்போ சொதப்பு என்று சொதப்பி வடித்திருந்தான். இதற்கு மேல் தப்பு செய்ய இடமே இல்லை என்று எழுத்து, சொல், இலக்கணம், இத்யாதி, இத்யாதி என்று 360 டிகிரியிலும் தவறுகள்.

அப்போதுதான் முதல்முறையாக ஆங்கிலத்தில் பேச்சுக்கும் எழுத்துக்கும் இடைவெளி என்பது உண்டு என்பதைப் புரிந்து கொண்டேன்.

"ஜஸ்ட் த்ரோ இட் டு ஹிஸ் ஃபேஸ் ஐ சே. யூ கென் ரைட் பெட்டர் தேன்  திஸ்" 

அது பாராட்டா இல்லை இடுப்பில் இடிப்பா என்று புரியாமல் காகிதங்களைப் பொறுக்கி வந்தேன்.  

ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியும் சிலருக்கு ஆங்கிலத்தில் நான்கு வார்த்தைகள் சேர்ந்தாற்போல் தவறின்றி எழுத வராது. சிலர் மிக அருமையாக ஆங்கிலத்தில் கட்டுரைகளை  எழுதுவார்கள். ஆனால் அவர்களுக்கு சகஜமாக அல்லது சரளமாக  இன்னொருவர் எதிரில் ஆங்கிலத்தில் பேச வராது. முதல் வகையினராக  நம் டாமினிக் போன்றவர்கள்.   இரண்டாம் வகையினருக்குப்  பிரதான உதாரணமாக  அரசுத்துறையில் பணிபுரியும் சில நிர்வாக அலுவலர்களைச் சொல்லலாம்.

இரண்டு விஷயங்களிலும் கைதேர்ந்தவர்களை அபூர்வமாகத்தான் பார்க்க முடியும்.


அட ஆங்கிலத்தை விடுங்கள்! அது அன்னியன் போட்டுவிட்டுப் போன மொழி!

தமிழில் உரைநடை, கவிதை எழுதுபவர்களும் இந்த வகையினர் தான். இது கை வருபவர்க்கு அது பிடிபடாது அது எழுதுபவர்களுக்கு இது சரிவராது அல்லது பிடிக்காது எனவும் சொல்லலாம்.

இரண்டையும் மனசைக் கவருமாறு எழுதவல்லவர்கள் வெகுசிலரே.

அந்த வெகுசிலரில் முக்கியமானவர் கவிஞர் நா.முத்துக்குமார். உரைநடை கவிதை இரண்டையும் பிரமாதமாகக் கையாளத் தெரிந்தவர். இவர் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் மற்றும் அ'னா ஆ'ன்னா  புத்தகங்களுக்கு ஆம்நிபஸ் தளத்தில் முன்னரே விமர்சனம் எழுதியிருக்கிறேன். என்னை அந்த இரண்டு புத்தகங்களையும் வாங்க வைத்த பெருமை “கண்பேசும் வார்த்தைகள்” புத்தகத்திற்கு உண்டு.

அந்தப் புத்தகத்திற்கு ஆம்னிபஸ்சில் நாம் எழுதிய விமர்சனம் ===>>> இங்கே

பிகு: இந்தப் பதிவின் தலைப்பு நா.முத்துக்குமார் எழுதிய “கண்பேசும் வார்த்தைகளி’ல் வருவது :))

Sep 26, 2012

வண்ணத்துப்பூச்சி வரைந்தவன்


ஒருமுறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை;
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண்மனம் புரிவதில்லை

நா.முத்துக்குமார் - இன்றைய தமிழ்த் திரைப்பாடல் உலகின் தலைசிறந்த பாடலாசிரியர்.

கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்று வரிசைப்படுத்தினால் அதற்கு அடுத்த தலைமுறைப் பாடலாசிரியர்களில் ஒரு பெரிய சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர். மிக முக்கியமானவர்.

2004’ஆம் வருடம் கோவை சென்றிருந்தபோது என் ரெண்டுவிட்ட சகோதரன் சந்தோஷுடன் ”7ஜி ரெயின்போ காலனிபடத்தில் வரும் கண்பேசும் வார்த்தைகள்பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படம் வெளியான வாரயிறுதி அது. அப்போதுதான் அந்தப் பாடலை முதல்முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.

சந்தோஷிடம் சொன்னேன், “இந்தப் பாட்டு பாரு. சூப்பர் ஹிட் ஆகும், படமும்”.

பாடல் முதல்முறை டிவியில் பார்த்தபோது ரவிகிருஷ்ணாவின் சோகம் தோய்ந்த விரக்தியான எக்ஸ்ப்ரெஷன்களும், சுமன் ஷெட்டி தகரக்கதவில் தாளம் போடுவதுமாக ஏதோ ரெண்டாந்தர காட்சிப்படுத்தல் போலத் தோன்றியது முதல்முறை பார்த்தபோது. 

சான்ஸே இல்லை. மொக்கை பாட்டு இது. கேவலமா இருக்கு”, என்றான்.

நான் கவனித்தது அந்தப் பாடல் வரிகளை,  யார் எழுதியவை என அப்போது தெரியவில்லை என்ற போதிலும். காலாகாலமாய்க் காதல் விஷயத்தில் பெண்களைக் குறைசொல்லும் ஒரு ஆண்வர்க்கத்துப் பாடல். ஆனால், காயம்பட்ட ஒரு ஆணின் மனதிற்கு மருந்தாய் நச்என்ற அற்புத வரிகள் அவை. அந்தக் காலகட்டத்தில் என் மனம் ஏதும் புண்பட்டிருந்ததா என்ற க்ராஸ் கொஸ்சின் எல்லாம் இங்கே வேண்டாமே, ப்ளீஸ்! 

அடுத்த இரண்டுவார காலத்தில் பாடல்களுக்காய் அந்தப் படத்தை சந்தோஷ் நான்குமுறை பார்த்தது தனிக்கதை.

2006’ஆம் ஆண்டு இன்னொரு ஒன்றுவிட்ட சகோதரனான குருபிரசாத் என் கையில் சூப்பர் புக்ண்ணா”, என்று எனக்குப் பிறந்தநாள் பரிசாக கண்பேசும் வார்த்தைகள் புத்தகத்தைத் தந்தபோதுதான் எனக்கு நா.முத்துக்குமாரை அறிமுகம். அதுவரை மற்றுமோர் பாடலாசிரியராக நா.முத்துக்குமாரை அறிந்திருந்தவன் நான். நான் வாசித்த மனசைத் தொட்ட புத்தகங்களுள் கபேவாவும் முக்கியமான ஒன்று. கபேவா பற்றித் தனியாக நெடுங்கட்டுரையே எழுதலாம். நா.முத்துக்குமார் குறித்த என் சிலாகிப்புகளை ஒரு தொடராகத்தான் எழுதவேண்டும்.

கபேவா புத்தகத்தில் இருந்த ஒரு குறிப்பை வைத்துக் கொண்டு  பட்டாம்பூச்சி விற்பவன் புத்தகம் பற்றி அறிந்தவன்ஐந்து வருடங்களாக அதைத் தேடியலைந்தேன். இந்த வருட சென்னைப் புத்தகக் கண்காட்சியில்தான் கடைசியாக அந்தப் புத்தகம் கிடைத்தது.

நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவனுக்கு ஆம்னிபஸ்சில் எழுதிய விமர்சனம் இங்கே



Related Posts Plugin for WordPress, Blogger...