Showing posts with label half baked. Show all posts
Showing posts with label half baked. Show all posts

Jul 4, 2015

சர்வ நாசம்

 
"அதைவுடு நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு!"
 
"இல்ல அண்ணே! படத்துல அவரு என்ன பேசுதாருன்னு நீங்க பாக்கோணும்...."
 
அதைவுடு நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு!
 
"இதை புரிஞ்சிக்கிட்டா உங்க கேள்வியே வீண் அண்ணே!"
 
"அதைவுடு நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு!", "
 
இப்படி கமல் செய்த ஒரு கேரக்டரின் தீவிரத்தை, தேவையை, வீரியத்தை எல்லாம்  புறந்தள்ளிவிட்டு முழுக்க முழுக்க அவரது அவுட்லுக்கை வைத்து அவரை டேமேஜ் செய்வதாய் எண்ணி அவர் ரசிகசிகாமணி ஒருத்தரை ஒரண்டு இழுத்துக் கொண்டிருந்த ஒரு சில்லறைக் கூட்டத்தின் கான்வோ ஒன்றைப் படித்து நகைத்துக் கொண்டிருந்த போது......
 
......இந்த புத்திசாலியைவிட அதிபுத்திசாலி இன்னொருத்தரின் தளத்தில் தெரியாமல் கால் வைத்துவிட்டேன்.....
 
பாபநாசம்: சைவம் அசைவமாக மாறிய கதை" என்ற பதிவு அது.
 
இப்படியெல்லாம் போகிறது அந்தப் பதிவு......
 
//திர்ஷ்யம் நாயகன் மோகன்லால், ஜார்ஜ் என்ற கிறிஸ்துவராக நடித்திருந்தார். பாபநாசத்தில் நிச்சயம் நாயகனை இந்துவாக மாற்றி முதல் ‘நாசம்’ நடந்திருக்கும். சாட்சி கமல் நெற்றியில் வழியும் திருநீர்.//
 
மனிதர் பெரியார் வழி வந்தவர் போல. கிறிஸ்துவராக இருப்பது அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. நெற்றியில் திருநீறு வழிந்தால் அதுதான் பிரச்னை. செம்ம பகுத்தறிவு இல்ல?
 
//கத்தோலிக்க தேவாலயத்தை சாட்சியாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை, ஏராளமான இந்துக்கள் விரும்பி பார்த்து மாபெரும் வெற்றி படமாக்கினார்கள்//
 
அண்ணே! விண்ணைத் தாண்டி வருவாயா இங்க எப்டி பிச்சிக்கிட்டு ஒடுச்சுன்னு உங்களுக்கு நான் சொல்லோணுமாண்ணே?
 
//ஆனால், பாபநாசத்தில் நாயகன் இந்துவாக வருவதால், வீட்டிற்குள் இந்துக் கடவுள் படங்கள், இந்துக்கோயில், குருக்கள் (அய்யர்) என்று இந்து அடையாளத்தோடே இந்தப் படம் சுற்றிவரும். //
 
மலையாளத்தான் புத்திசாலிவே! சர்ச் வெச்சி பகுத்தறிவோட படம் எடுப்பான். இந்த கமல் பாப்பானுக்கு குருக்களும் அய்யரும்தான் தெரியும் - படத்தை பாக்காமலே என்னவொரு முன்முடிவோடவொரு பதிவு...... வார்ரேவா!
 
//தமிழில் இவர்களாக உருவாக்குகிற படத்தில்தான் நாயகனை கிறிஸ்துவராகக் காட்டுவதில்லை; அடுத்த மொழி படத்தை எடுக்கும்போதும் அதில் முதல் மாற்றம் நாயகனை இந்துவாக மாற்றுவதுதான் என்பது எவ்வளவு பெரிய மோசடி.//
 
இது நிச்சயமா இந்த உலகின் மாபெரும் மோசடி.
 
டேய் கமல்! எதுக்குடா இப்டில்லாம் மோசடி பண்ணி அண்ணனோட வயித்தெரிச்சலை கொட்டிக்கற? அண்ணன் பொங்குறாருல்ல ?
 
//திர்ஷயம் படத்தில் பிரியாணி (அசைவம்) மிக முக்கிய சாட்சியாக வரும். பாபநாசத்தில் தயிர் சாதமோ? புளியோதரையோ?//
எங்க அட்ச்சாம் பாரு எங்கண்ணன்....
என்னண்ணே! தயிர் சாதம் புளியோதரையோட நிறுத்திட்ட? அக்காரவடிசில், அகங்கார அடிசில்'ன்னு பாப்பார பதார்த்தர்மா இன்னும் நாலு எடுத்து வுடக்கூடாதா?
 
பை தி வே அண்ணே! பாபநாசம் படத்துலயும் அது பிரியாணி'தானாம்ணே! என்ன சிவாஜிண்ணே! இப்டி ஆகிப்போச்சு?
 
//இந்த இந்து மனோபாவம் ஒரு ஜாதிய மனோபாவம் தான். திருநெல்வேலி மாவட்டத்தில் நடக்கிற கதையாகக் காட்டினால் கிறிஸ்த்துவரை கண்டிப்பாகச் சி.எஸ்.ஐ நாடாராகத்தான் காட்டவேண்டும். பார்ப்பனராகவோ அல்லது சைவ பிள்ளையாகவோ காட்ட முடியாது. கிறித்துவ நாடாராக வருவது நாயகனுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால்..? அதனால்தான் இந்து. இந்து என்றால்… அய்யரா?//
 
ஜாதி இல்லைன்னு சொல்ற ​​​​​​​ ​​​​​​ ---------ங்கதான்யா ஜாதி, உபஜாதி, உபஉப ஜாதின்னு எல்லா தகவலும் தெரிஞ்சி வெச்சிருக்கீங்க....
 
//விளம்பரங்களில் கமல் பேசுகிற வசனத்தைப் பார்த்தால் அப்படித் தெரியல. எந்தக் காலத்தில் வட்டார வழக்கை அவர்கள் பேசியிருக்கிறார்கள்?
அப்போ சைவப் பிள்ளையாகதான் இருக்க வேண்டும். நல்ல வௌங்கும் தமிழ்நாடு.//
 
அண்ணே!! நீ இன்னும் படமே பாக்கலையா? வெளம்பரத்தப் பாத்துட்டே இப்பிடி ஒரு பொங்கலா? ஒரு வெங்கலப்----  பதிவைத்தான் படிச்சுப்புட்டனா நான்?
 
கமல் சார்..... நெஜமாவே அயம் வெறிறிறிறிறி  ப்ரௌட் ஆஃப் யூ! உங்க மேலதான்..... உங்க தன்னிகரில்லா திறமையால்தான்.... எத்தனை ஜென்மங்களுக்கு உங்க மேல காழ்ப்புணர்ச்சி.....
 
ஆனா அண்ணனுகளா ! அந்த காழ்ப்புணர்ச்சி தர்ற ப்ரஷர்லையே செத்துப் போயிடப் போறீங்கய்யா....! அதான் நடக்கப் போவுது!
 
சரி விடுங்கய்யா! நான் புள்ள குட்டிங்கள படிக்க வெக்கப் போறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...