Feb 8, 2015

2015 உலகக்கோப்பையும் இந்தியாவும்


2015 உலகக்கோப்பையின் warm-up ஆட்டங்கள் இன்று துவங்கின. முதல் ஆட்டம் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவின் மோதல். இந்திய அணியின் தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த ஒவ்வொரு ரசிகனுக்கும் இந்த ஆட்டத்தில் இந்தியா அசத்தும்; அது பூஸ்ட் குடித்தாற்போல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு. 

இன்று காலை எட்டேமுக்காலுக்கு மேட்ச் துவங்கியது. ஆட்டத்தின் முடிவில் ஸ்கோர்போர்டு இப்படி இருந்தது:

ஆஸ்திரேலியா - 371/10        < === > இந்தியா - 265/10

இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தியா தோற்றால் என்ன. இருக்கவே இருக்கின்றன மற்றைய பதிமூன்று அணிகள். அவற்றைப் பற்றிப் பேசலாம். நம் கிரிக்கெட் ப்ளாகில் < http://batballstump.blogspot.in/ > . சென்ற உலகக்கோப்பையின் போது துவங்கிய ப்ளாக்.. இந்த உலகக்கோப்பைக்கு தூசிதட்டி எடுத்திருக்கிறேன்.

 

இன்று பாட்டியாலாவில் நடந்த தில்லிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டி இடைவேளையில் நம் அணியின் முன்னாள் சிங்கங்கள் என்னத்தைப் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று நாம் உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறோம்

Jan 11, 2015

பிசாசும் லிங்காவும்

இந்த இரண்டு படங்களைப் பற்றியும் இணைய ஜாம்பவான்கள் தொடங்கி, குஞ்சுக் குளுவான்கள் வரைக்கும் அனைவரும் அலசிப் பிழிந்து காயப்போட்ட பின் நான் இரண்டு படங்களையும் பார்க்கப் போனேன்.

வழக்கம் போல் இணைய மொண்ணைகள் (be it ஜாம்பவான்ஸ் or be it குகுs), என்னை ஏமாற்றவில்லை; ஏனென்றால் வழக்கம்போல் அவர்களது அலசலுக்கு நேர்மாறாய் இருந்தன இரு படங்களும்.

பிசாசு - எனக்குப் பிடிக்கவில்லை அல்லது புரியவில்லை

லிங்கா - எனக்கு ஒரு மிக நல்ல ரஜினி படமாகப் பிடித்திருந்தது.

பிசாசு:



அச்சுப் பிச்சுத் தனமாக இருந்தது படம், என் பார்வையில்.

May be, கலைப் பார்வை, கொலைப் பார்வை, கலைஞனின்  பார்வை, படைப்பாளியின் பார்வை எல்லாம் கொண்டு பார்த்தால் நமக்குப் படம் பிடிக்கலாம். சராசரி ரசிகப் பார்வையில் படம் என்ன சொல்ல வருகிறது எனப் புரியவில்லை.

என் கஸினுகள் இருவருடன் படம் பார்க்கப் போயிருந்தேன். ஆளாளுக்கு என்ன சொல்ல வருகிறார் மிஸ்கின் என்பதில் ஒவ்வொரு கருத்து கொண்டு தியேட்டர் விட்டு வெளியே வந்தோம்.

அச்சுப் பிச்சு என நான் குறிப்பிட்டதன் காரணம் - பிச்சுப் பிச்சுப் பார்த்தால் படம் நன்றாகவே இருக்கிறது. பிசாசுப் படத்தை வித்தியாசமாகத்தான் காட்டித் தீருவேன் என கங்கணம் கட்டிக் கொண்டு (பேய்ப் படம் இதுவரியும் சொல்லாத வித்தியாசமான கோணத்துல சொல்லியிருக்காங்கன்னு ரசிகன் சொல்லணும்) எடுக்கப்பட்டிருக்கிறது.

But at the end of the day what are you trying to tell....???

சொல்லப்படும் விஷயமல்ல; சொல்லப்படும் முறையே ஒரு படைப்பை...... என்னும் சால்ஜாப்புகளுக்குள் எல்லாம் என்னைப் போன்ற ரசிகன் நுழைய முடியவில்லை. படத்தின் ப்ரசண்டேஷன் கலைப்படைப்புக்கு சமானம் எனக் கொண்டால், அச்சுப்பிச்சுத்தனமாக வரும் பிசாசின் விளையாட்டு சமரசங்கள் ஏன் எனப் புரியவில்லை.

படத்தை சிலாகித்து எழுதப்பட்ட விமர்சனங்களை ஒரு ரவுண்டு படித்தும் பார்த்தேன். கலாய்ப்பதற்காகவே விஜய் படங்களைப் பார்த்து விமர்சனங்கள் வரையும் ஒரு கூட்டத்தின் எதிர்க்கூட்டமாகத்தான் எனக்கு அவை தோன்றின. (தமிழ் இணைய உலகின் சீனியர் ஒருத்தர் அழுகாச்சி அழுகாச்சியா ஒக்காந்துட்டு வரணும்னு சில படங்களுக்குப் போய் வருவது போலவும் - சாரி அண்ணேய்ய்ய் :) )

படத்தின் இரண்டு விஷயங்கள் ஓஹோ! ஒன்று பின்னணி இசை; இரண்டு ஒளிப்பதிவு.

படத்தின் இரண்டு குறியீடுகள் எனக்கு விளங்கவில்லை. யாரேனும் பெரியோர் விளக்கினால் தேவலாம்.

1) அது ஏன் (கிட்டத்தட்ட) எல்லா காட்சிகளிலும் “ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்”என டைரக்டர் கூவி முடித்து ஐந்தரை செகண்டுக்குப் பிறகே நடிக நடிகையர் நடிக்கத் துவங்குகின்றனர்? இதே போல் அஞ்சாதே படத்திலும் பார்த்த நினைவு,

2) அந்த பிரியாணிக் கடை காட்சிக்கு முன் காட்டப்படும் கும்பலான வளையல் அல்லது ரயில் பூச்சிகளுக்கு என்ன அர்த்தம்?


லிங்கா:

தமிழ் கூறும் நல் இணையவுலகம் லிங்கா படத்தை ஏன், எதற்கு, வொய், எந்துகு கய்வி கய்வி (yeah, I mean it... கய்வி கய்வி) ஊற்றுகிறார்கள் என எனக்குப் புரியலை.

லிங்கா ஒரு, நல்ல, ரஜினி படம் - தட்ஸ் இட். இரு தினங்களுக்கு முன் ஒரு ட்விட்டர் அரட்டையின் போது இதைத்தான் சொன்னேன்.

அன்னை ஓர் ஆலயம் நான் முதன்முதலில் தியேட்டரில் பார்த்த ரஜினி படம். எந்திரன் கடைசியாய்ப் பார்த்தது. இத்தனை டிகேடுகள் ரஜினி படம் பார்த்துப் பழகியவனுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு எதையும் நிறைவேற்றாப் படமாக லிங்கா வந்திருந்தால் அந்தக் கய்வியூற்றலில் அர்த்தமுண்டு என்பது மட்டும் என் சிம்பிள் ஹம்பிள் கருத்து.

நிறைய பேர் லிங்காவானது படையப்பாவை விட சுமார் என்றார்கள். என் பார்வையில் படையப்பாவை விட பெட்டர் மூவி இது - என் பார்வையில்.

படம் ஆக்சுவல்லி சொல்லவரும் நடு செண்டர் மையக் கருத்து மெய்யாலுமே அற்புதமானது.

“பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் அவன் புன்னகையைக் கொள்ளையிட முடியாதே”, என்று படத்தின் ஒரு பாடலினூடே வைரமுத்து சொல்வதுதான் அது. I am really touched. May be, எல்லாவற்றையும் இழந்துவிட்டு ஒரு காலத்தில் நடு ரோட்டில் ஓட்டாண்டிகளாக குடும்பத்துடன் நின்ற அனுபவம் இருந்தமையால் படம் என் மனசுக்கு நெருக்கமாகிவிட்டதா எனத் தெரியவில்லை.

பை தி வே, கே.எஸ்.ரவிக்குமாரின் இந்தப் பேட்டி எனக்கு முற்றிலும் ஏற்புடையதாகவே பட்டது. குறிப்பாக அந்தக் கடைசிக்கு முந்தின கேள்வி:

https://www.youtube.com/watch?v=qge65LahC3Q

Dec 21, 2014

இப்பல்லாம் யார் சார்.....

முன்குறிப்பு:இந்தப் பதிவு உண்மையிலேயே ஒரு சீரியஸ் பதிவு. சத்தியமாக சமூக அக்கறையுடன் எழுதப்பட்டது. 

--   --

நிஜ வாழ்வில் புருஷன் பொண்டாட்டி சண்டை, மாமியார் மருமகள் பிரச்னை, டேமேஜர் எம்ப்ளாயி பிரச்னைகளுக்கு இணையாக இந்த சாதி சார்ந்த அடிதடிகள் இணையத்தில் வாழ்வாங்கு வாழும் போல...! எத்தனை வருடம் ஆனாலும் கதை, திரைக்கதை, வசனம் என்று எதுவுமே மாறாத அதே வறட், வறட் பதிவுகள்... அதே அதே பின்னூட்ட அடிதடிகள். ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... ஆயாசமாய் இருக்கிறது.

இணையம் வந்த புதிதில் இந்த சாதி சார்ந்த அடிதடிகள் எல்லாம் எனக்கு விசித்திரமாக இருக்கும். பார்ப்பனீயம், ஆரியம், திராவிடம், அடிவருடி, வந்தேரிகள் (றி?) மற்றும் இன்னபிற வார்த்தைகளை நாள்தவறாமல் வாசிக்கத் தொடங்கின போது கொஞ்சநாள் நன்றாகவே பொழுது போனது. பின்னர் நாளாக நாளாக ‘என்னாங்கடா டேய்’ எனும் ரேஞ்சுக்கு எரிச்சலானது. கொஞ்சம் உக்கிரமாகி நாமும் சற்றே “உர்ர்ர்ர்ர்ர்”, எனப் பொங்கவும் செய்ய ஆரம்பித்து, கொஞ்சம் கொலைவெறியுமாகி, பின்னர் நிறுத்தி நிதானமாக யோசித்து, நம் ரத்தக் கொதிப்பு, எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நம்மால் நாய் வாலையெல்லாம் நிமிர்த்த முடியாது என்று தீர்மானித்து மறுபடியும் சைலண்ட் வாட்சர் ரேஞ்சுக்கு எல்லாவற்றையும் மேய்வதோடு நிறுத்தும் நிலைக்கு வந்தாயிற்று.

பை தி வே, வெறுமனே ஆரியம், அடிவருடி, பார்ப்ஸ் என பொங்குபவர்கள், எதிர்ப் பொங்குனர்கள் எனக்கு ஓகே. நேரம் எப்போதாவது எச்சாய்க் கிட்டும் சில பொழுது போகாத தருணங்களில் பதிவுகள், பின்னூட்டப் பொங்கல்களைப் படித்து ரசிக்க ருசிக்க அவர்கள் உதவுகிறார்கள்.

ஆனால் பாருங்கள், சாதியற்ற சமூகத்தை சமைக்க இந்த ட்விட்டரும், ஃபேஸ்புக்கும், தத்தமது ப்ளாகுமே (blog) போதும் என கங்கணம் கட்டிக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் குதிப்போருக்கு ஆற்றுவதற்கு நிறையவே பிசிக்கல் வொர்க் இருக்கிறது என்பதை மட்டும் நான் சொல்லிக் கொள்கிறேன். சீரியஸாகச் சொல்கிறேன். உட்கார்ந்த இடத்தில் பொங்கினால் ஒன்றும் உதவாது. உங்கள் மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு வாருங்கள். களமிறங்கி ஆற்றோ ஆற்று என்று ஆற்ற கடமைகள் ஆயிரம் உண்டு உமக்கு.

நிறைய விஷயங்களை நீங்கள் பள்ளிகளிலிருந்தே தொடங்க வேண்டும். லேபர் வார்டிலேயே ஆரம்பித்தால் இன்னமும் க்ஷேமம்.


தமிழ்சார் ட்விட்டர், ஃபேஸ்புக், ப்ளாக் உலகத்தையும் தாண்டி உள்ள பரந்து விரிந்த உலகில் (கிட்டத்தட்ட சமீபத்தில்) நடந்த சம்பாஷனைகள் நான்கினை இங்கே தருகிறேன். உங்களுக்கு எவ்வளவு வேலை காத்துக் கிடக்கிறது என்பது சரியாய்ப் புரியும்.

இந்த நான்கு காட்சிகளுமே நான் வேலை பார்ப்பது போன்றதொரு நிறுவனத்தில் நடந்ததே:

காட்சி 1: புதிதாய் வேலைக்குச் சேர்ந்த பெண்ணிடம் விவரங்கள் சேகரிக்கும் நேரம்.

அலுவலர்: உங்க முழுப்பெயர் என்னம்மா? people file;ல அப்டேட் பண்ணனும் சொல்லுங்க.

புதியவர்: XYCABZ....

அலுவலர்: < ஆர்வ மிகுதியில் > நீங்க கேரளாவா?

புதியவர்: இல்லையே.

அலுவலர்: ஓ... ரைட். உங்க பேர்ல மலையாள வாடை அடிச்சதால கேட்டேன்.

புதியவர்: இல்லை சார் நாங்கல்லாம் ABCDFG < தன் சாதியின் பெயரை சொல்கிறார் >

அலுவலர்: மைண்ட் வாய்ஸ் - நான் கேட்டனா முருகேஷா?

காட்சி 2: 
அதே அலுவலகம். அதே அலுவலர். அதே போன்றதோர் புதிதாய் வேலைக்குச் சேர்ந்தவர்.

அலுவலர்: அதே முதற்கேள்வி...

புதியவர்: ஆனந்த்  XXXYYY.

அலுவலர்: சாரி, உங்க surname இன்னொரு தடவை சொல்லுங்க.

புதியவர்: XXXYYY

அலுவலர்: pardon me. சரியாப் புரியலை. can you spell it?

புதியவர்: X X X Y Y Y - we are vaishyaas sir....

அலுவலர்: அதே கடைசி மைண்ட் வாய்ஸ்.

காட்சி 3: 

நகரின் மத்தியில் தன் நண்பரின் வீடு ஒன்று வாடகைக்கு உள்ளது. அது குறித்த தகவல்களை சகாக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் அன்பர்.

அன்பர்: நல்ல குடும்பமா வாடகைக்கு இருந்தா சொல்லுங்கப்பா.

அன்பரின் நண்பர்: பேச்சிலர்ஸ்ன்னா ஓகேவா சார்?

அன்பர்: இல்லப்பா வேணாம். ஃபேமிலியாத்தான் பாக்கறான் என் ஃப்ரெண்டு. May be XYCABZ < ஒரு சாதியின் பெயர் > பசங்களா இருந்தா ஓகே. பசங்க நல்லவங்களா இருக்கணும் பாரு.
பிகு: அன்பர் XYZABZ சாதியைச் சேர்ந்தவர் இல்லையாம்.
பிகு 2: விதி படத்தில் வரும் இடைச்செருகலான பாக்யராஜ் ஜோக்தான் நினைவுக்கு வந்தது.


காட்சி 4: மதிய உணவு வேளை. பக்கத்து மேஜை.

அன்பர் 1: ஆம்லெட் எடுத்துக்கங்கப்பா.

அன்பர் 2: இட்ஸ் ஓகே சார்., சாப்புடுங்க.

அ1: தட்ஸ் ஓகே.... எடு. நான் இன்னும் கை வெக்கல.

அ2: இல்ல சார். நான் ஆம்லெட் சாப்பிட மாட்டேன்.

அ1: வெஜிடேரியனா நீ?

அ2: யெஸ்

அ1: ???ரா? (ஒரு சாதியின் பெயர்....)

அ2: நீங்க பன்னிக் கறி திம்பீங்களா?

அ1: சீச்சீ

அ2: அப்போ நீங்க ???மா? (ஒரு மதத்தின் பெயர்)

(ஐந்து நிமிடத்திற்கு ஒரு tug of war லெவலுக்கு இருவருக்கும் பிடிகொடா விவாதம். ஐம்பத்தியிரண்டு சாதிகளையும் அவர்களின் உணவு முறைகளையும் அங்கே அந்தட் டேபிளில் விரித்துப் பரப்புகிறார்கள்)

இடையில் என்னைப் போன்றதொரு வேலைவெட்டி இல்லாத (இணையத்திலும் இருக்கும்) அன்பர் உட்புகுகிறார்

அன்பர் 3: யோவ்.... உங்களுக்கு வேற வேலையே இல்லையா? இப்போ எதுக்குய்யா சாதி பேர் சொல்லி ஒரு விவாதம்?

அன்பர் 1 & 2 (கூட்டாக): மிஸ்டர் புலவர், உங்க வெங்காய வெள்ளைப்பூண்டு பேச்சையெல்லாம் ஃபேஸ்புக் ஷேரிங்கோட நிறுத்திக்கோங்க. சும்மா இங்க வந்து உங்க டகுளு (!!??) வேலையெல்லாம் காட்ட வேணாம்.

அன்பர் 3: ங்ஙே.....

என்னருகே அமர்ந்திருந்த அன்பர் 4: கிரி, இந்த ஜாதியெல்லாம் ஒழிக்க முடியாதில்ல? 

நான்: (ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவாறு மோர்க் குழம்பு சாதத்தில் மூழ்கியிருக்க....)

அன்பர் 4: முடியாதுன்றீங்களா?

நான்: (கண்களில் கண்ணீர்ப் பெருக.... நாயகன் கமல் குரலில்): த்த்த்தெரியலியேப்பா......

Oct 5, 2014

ஆரம்பம்.....


Courtesy: The Hindu

இன்னும் 12 தினங்களில்.....!


Aug 6, 2014

தெலுசுகோ தெலுகு



ட்விட்டரில் #Telugu365 என்ற tag'ன் கீழ் ஒரு 365 தின ப்ராஜக்ட் துவக்கி கடந்த 25 நாட்களாக தெலுகு வார்த்தைகளுக்கு அர்த்தம் பகிர்ந்து வருகிறேன்.

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் எனக்குச் சரியாக தெலுகு தெரியாது. பிறந்தது கிருஷ்ணகிரி. வளர்ந்தது மேற்கு மற்றும் வட தமிழகம். அதிகம் போனால் திருப்பதியின் ஜருகண்டி ஜருகண்டி தெலுசு. கொஞ்சம் அருகே சித்தூரில் உறவினர் இருந்தமையால் அங்கே ஓரிருமுறை சென்று வந்தது உண்டு. இவை தாண்டி அக்கட தேசத்துடன் நமக்கு வேறெந்த எக்ஸ்ட்ரா ஸ்னானப்ராப்தியும் லேது.

வீட்டில் நாம் பேசும் மொழி தெலுகு. அது எப்படி எங்கள் மாத்ருபாஷா ஆனது என்பதன் வரலாறையும் நாம் அறியோம். 

நாம் பேசும் உடைந்த தெலுகுவை சரி செய்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் எப்போதும் நமக்கு உண்டு. அலுவலகத்தில் அதனாலேயே தெலுகு பேசும் அக்கட தேசத்து நண்பர்களிடம் சரியோ தவறோ தெலுகுவில் பேசி விடுவது. அவர்கள் திருத்தம் சொல்லிச் சொல்லி இப்போது 25% fluency என்பது 30% வரை என்று வந்துள்ளது. ஆந்திரத் தெலுகு பேசுமளவிற்கு / எழுதுமளவிற்கு பண்டிதன் ஆகும் எண்ணமெல்லாம் இல்லை. எனினும், தெரிந்ததை கொஞ்சம் மேலும் சரியாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வமே இந்த ப்ராஜக்டைத் தொடங்கியதன் நோக்கம்.

எனக்குத் தெரிந்த தெலுகுவை வைத்து, நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, இணையத்தையும் துணைக்கு வைத்துக் கொண்டு இந்த ப்ராஜக்டைத் துவங்கியுள்ளேன்.

ஆர்வம் இருப்பவர்கள் https://twitter.com/ipammal என்ற என் ட்விட்டர் ஹேண்டிலையோ அல்லது https://twitter.com/hashtag/Telugu365 எனும் ஹேஷ்டேகையோ தொடரலாம்.

இந்த ப்ராஜக்டின் முடிவில் புதிதாக சிலப்பல வார்த்தைகள்/அர்த்தங்களை நாமும், நம்மால் ஒரு பத்து வார்த்தைகளை மற்றோரும் கற்றுக் கொண்டால் மகிழ்ச்சி. மேலும், இந்த ப்ராஜக்டின் முடியுமுன் தெலுகுவை தட்டுத்தடுமாறியேனும் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

இவற்றை பத்து பத்து ட்வீட்டாகத் தொகுத்து ஒவ்வொரு பதிவாக இங்கே அவ்வப்போது நம் ப்ளாகில் பகிர்கிறேன். அந்தப் பதிவுகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட விரும்பும் பதிப்பாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்  :)
Related Posts Plugin for WordPress, Blogger...