Showing posts with label இசைக் கோலங்கள். Show all posts
Showing posts with label இசைக் கோலங்கள். Show all posts

Feb 21, 2011

இசைக் கோலங்கள் - மலேசியா வாசுதேவன் நினைவாக...

படம் நன்றி: ரேடியோஸ்பதி 

நான் ஏதேதோ எழுதுகிறேன். ஆனால் அவையெல்லாம் நான் எழுத வந்தவையல்ல.

நீங்கள் ஏதேனும் கல்யாண ரிசப்ஷனுக்குச் செல்லுங்கள். மெல்லிசைக் கச்சேரி இருக்கிறதா? ஆம் இருக்கிறது. அவர்களுக்கு என்று ஒரு வரிசைக்கிரமம் இருக்கும். பக்திப் பாடல், லேட்டஸ்ட் மெலடி, கொஞ்சம் பழைய கல்யாணப் பாடல், லேட்டஸ்ட் ஃபாஸ்ட் நம்பர், மீண்டும் இடைக்கால மெலடி ஒன்று, பின்னர் கச்சேரியின் கடைசி கட்டங்களில் வேகப் பாடல்கள் என.

அதில் அவர்களுக்கு என இருபத்தைந்து முப்பது பாடல்கள் கொண்ட ஒரு ஸ்டாண்டர்ட் லிஸ்ட் ஒன்று இருக்கும். அந்தப் பாடல்களை பாட, இசைக்க என அந்த குழுவில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அவற்றிலிருந்து பத்து பாடல்களை நீங்கள் எந்த கல்யாண ரிசப்ஷன் என்றாலும் கேட்கலாம். 

அந்த லிஸ்டில் எந்தப் பாடலைப் பாடினாலும் சரி, அல்லது எந்தப் பாடலை ஒதுக்கினாலும் சரி....ஒரேயொரு பாடல் மாத்திரம் எல்லா கச்சேரிகளிலும் கட்டாயம் நீங்கள் கேட்பீர்கள் . அது என்ன பாட்டு என உங்களால் சொல்ல முடியுமா? உங்களிடம் விடையில்லை என்றால் நானே அதைக் கடைசியில் சொல்கிறேன்.

லேசியா வாசுதேவன் அவர்கள் பற்றி என் நினைவுகளை வருடினால் காலச் சக்கரம் முன்னும் பின்னுமாகச் சுற்றி ஏதேதோ நினைவுகளில் ஊசலாடுகிறது.

"பூவே.....இளைய பூவே...." பாடலின் கம்பீரம், "ஒரு கூட்டுக் குயிலாக" பாடலில் தெறிக்கும் அன்பு, "முதல் மரியாதை" படத்தில் நடிகர் திலகத்திற்கு அவர் தொடுத்த இதமான, நையாண்டித்தனமான, ரொமான்சான  விதவிதமான பாடல்கள், அதிசயபிறவியில் ரஜினிக்கு அவர் கட்டிய தோரணங்கள், எஜமான் படத்தின் "தூக்குச்சட்டி" பாடலில் ரஜினி, கவுண்டமணி என இருவருக்கும் அவர் இருகுரலில் பாடினது  என அவர் பாடிய பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

"ஓ,,,, பார்ட்டி நல்ல பார்ட்டிதான்" ஒரு நல்ல மெலோடியஸ் கில்மா பாடல் பாடுவது எப்படி என்பதற்கு அடுத்த தலைமுறைக்கு ஒரு பாடம்.

தர்மயுத்தம் படத்தின் தங்கைப்பாடல் "ஒரு தங்க ரதத்தில்" நம்முள் இருக்கும் அந்த அன்பான அண்ணனை ரஜினி வடிவில் நம் கண்முன் கொணர்கிறது.

டி.எம்.எஸ்.'சுக்கு அப்புறம் சிவாஜிக்குப் பொருத்தமான குரல் மலேசியா சார் குரல்தான்  என இதுவரை ஒரு நூறுபேர் சொல்லக் கேட்டிருப்பேன்.

ரஹ்மானுக்கு அவர் பாடிய "தென் கிழக்குச் சீமையில" எப்படிப்பட்டவனையும் கரைய வைக்கும்.

"கதாநாயகன்" படத்தில் அவர் ஏற்ற காமெடி வில்லன் ரோல் எப்படிப் பட்டவரையும் சிரிக்க வைக்கும்.

இப்படிப் போய்க்கொண்டே இருக்கிறது என் எண்ணத்தில் தோன்றும் மலேசியா அவர்களின் நினைவுகள்.

நான் ஏதேதோ எழுதுகிறேன் என முதலில் சொன்னேன் இல்லையா அதற்குக் காரணம் நான் இங்கே விவரிக்கப் போகும் ஒரு சம்பவம் அல்லது அனுபவம்.

ந்த நண்பரின் பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை. அவர் அஸ்ஸாமைச் சேர்ந்தவர். 2006 ஆம் ஆண்டு விஜய் டி.வி. சூப்பர் சிங்கரில் கோவையில் முதல் இரு சுற்றுக்கள் கலந்து கொண்டுவிட்டு மேற்கொண்டு சுற்றுகளில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார்.

ஆரம்ப ரவுண்டுகளில் அவர் பெயர் பரபரப்பாக அடிபட ஆரம்பித்தது. சென்னை சின்மயா சென்டரில் உள்ள ஆடிட்டோரியத்தில் மூன்றாம் சுற்று பதிவுகள் நடந்து கொண்டிருந்த போது அவரை நான் அங்கே பார்த்தேன். அவர் கலந்து கொண்டபோது அவருக்கு மலேசியா அவர்கள் நடுவராக இருந்தார். எங்கள் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டோம். நான்காம் சுற்றில் வெளியேறி அவர் அஸ்ஸாம் திரும்பினார்.

சில மாதங்கள் கழித்து அந்த நண்பர் என்னை அழைத்திருந்தார்.

"கிரி, நான் மலேசியா வாசுதேவன் சார் நம்பர் கலெக்ட் பண்ணி வெச்சிருந்தேன். மிஸ் பண்ணிட்டேன். எப்படியாவது யாரையாவது புடிச்சி வாங்கித் தர முடியுமா. அவர் ஒரு அற்புதமான மனிதர்.  நான் அடுத்த மாசம் சென்னை வர்றேன். அவரை சந்திக்க விருப்பமா இருக்கு. ரொம்ப எளிமையான நம்மைப் போல பார்டிசிபன்ட்கள் கிட்ட கூட ரொம்ப எளிமையா பழகினார், நான் சூப்பர் சிங்கர் போல நிறைய போட்டிகள்'ல கல்கத்தாவுக்கு எல்லாம் போயி பாடியிருக்கேன். அங்கயும் சரி, உங்க சென்னை'ல இருக்கற மத்த நடுவர்கள்'லயும் சரி மலேசியா போல ஒருத்தரை பார்க்க முடியாது சார். தோத்துப் போனவங்களுக்கு அவர் சொன்ன அட்வைஸ் சும்மா சால்ஜாப்பு போல இல்லாம, நிஜமாவே அடுத்த முறை அவங்க இங்க வந்து பாடணும் அப்படின்ற மாதிரி இருந்துச்சு. அவரைப் போல் ஒரு ஜெம் ஆஃப் தி பர்ஸனை இந்த லோகத்துல பார்க்கறது ரொம்ப கஷ்டம்".

ஒரு தனி மனிதனின் தனித் திறமையை உலகம் வியப்பது, ஆராதிப்பது என்பது காலகாலமாக பலதுறைகளில் பலருக்கும் நிகழ்ந்து வருவது. கலையம்சம் சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்வது, அதில் சிறந்து விளங்குவது, உலகப் புகழ் பெறுவது, மனிதர்களின் மாறா அன்பைப் பெறுவது என்பவற்றைக் காட்டிலும் எனக்கென்னவோ இது போன்ற நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு ரசிகனின் இதயத்தில் ஒருவர் அவரது இயல்பான செயல்பாடுகள் மூலம் பெரும் இடம் உன்னதம் பெற்றதாகத் தெரிகிறது.

ஒரு உன்னதக் கலைஞனின் இழப்பு தேற்ற முடியாத ஒரு சோகம். ஒரு அற்புதமான மனிதனின் மறைவு எவ்வகையிலும் ஈடு செய்ய இயலாத ஒரு வெற்றிடம்.


மலேசியா அவர்கள் நினைவாக அவர் பாடிய ஒரு அரிதான மெலடி இங்கே:




அந்தப் பாடல்: "ஆசை நூறுவகை வாழ்வில் நூறுசுவை"
.
.
.

Jan 16, 2011

இசைக் கோலங்கள் - ஊரெல்லாம் உன் பாட்டு

முன்குறிப்பு: இந்தப் பாடல் என் டாப் டென் பாடல் லிஸ்டில் ஒன்று.

இந்த வார்த்தைகளை இதுவரை ஆயிரத்தியெட்டு பேர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதோ நானும் சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். "மோகனுக்கும் ராமராஜனுக்கும் அமைத்துத் தந்த பாடல்கள் போல் ரஜினிக்கும் கமலுக்கும் கூட இளையராஜா அமைத்துத் தந்ததில்லை"


இந்த வார்த்தைகள் அப்படியே நிஜமில்லை என்றாலும் சில நேரங்களில் சில பாடல்களைக் கேட்கையில் "அப்படித்தானப்பா" என எண்ணத் தோன்றுகிறது. ஊரெல்லாம் உன் பாட்டு படத்தின் இந்தப் பாடல் அப்படிப்பட்ட ஒரு பாடல்.

கிராமராஜனுக்கு என வந்த "மாங்குயிலே பூங்குயிலே", "கலைவாணியோ ராணியோ" போன்ற கிராமிய மனம் கவழ்ந்த பாடல்கள்; செண்பகமே, தானா வந்த சந்தனமே போன்ற மெல் மெல் மெலடிகள்; மதுர மரிக்கொழுந்து போன்ற துள்ளல் டூயட்கள் என இவைதான் ராமராஜனின் அடையாளம் என்று இருந்தது. 

ஆச்சர்யம் தரும் வகையில் வெளிவந்த ஒரு செமி கிளாசிகல் ரகப்பாடல் ராமராஜன் படத்தில் என்றால் அது இந்தப்பாடலாக மட்டுமே இருக்க முடியும்.  ராமராஜனுக்கு யேசுதாஸ் அவர்கள் குரல் ஒலிப்பதும் ரொம்பவே அபூர்வம். பெரும்பாலும் மெலடிகளுக்கு மனோ அல்லது எஸ்.பி.பி., எப்போதாவது அருண்மொழி, நையாண்டி / குத்துப் பாடல்களுக்கு மலேசியா வாசுதேவன் என இருக்கும் ராமராஜன் பாடல்கள். அப்படிப் பார்த்தாலும் யேசுதாஸ் குரலாக ஒலிக்கும் இந்தப் பாடல் ஒரு தனித்தன்மைப் பாடல்.

யேசுதாஸ் அவர்களின் தெள்ளத் தெளிவான ஆளுமையை இந்தப் பாடலில் நாம் உணரலாம். பாடலுக்குத் தேவையான கிளாசிக்கல் டச்'சுடன் நச்சென்று சங்கீதசாகரம் அவர்கள் பாடுவதை நாம் பாடல் முழுக்க உணரலாம். கல்யாணி ராக அடிப்படையில் அமைந்த பாடல் என்பது என் அனுமானம். மற்றபடி பாடலின் கமகங்கள், ஸ்தாயிகள், இதர நுணுக்கங்களை அலச நாம் இப்போதைக்கு லலிதராமைத்தான் அழைக்க வேண்டும்.

இவ்வளவு தூரம் பாடலைப் பேசிவிட்டு நம்ம தலைவர் ராமராஜன் பற்றி இரண்டொரு வார்த்தைகள் பேசாவிட்டால் நமக்கு நரகம் நிச்சயம். நம்ம தலைவர் அம்மனை நினைத்து உருகிப் பாடுவதும், படத்தின் ஹீரோயினி இவர் தன்னைப் பற்றித்தான் பாடுகிறார் என நினைத்துக் கொள்வதுவும் பாடலின் முக்கிய ஹைலைட். அப்படியொரு அர்த்தம் கொண்ட பாடலாக இப்பாடலைச் சமைத்த கவிஞர் வாலி அவர்களின் திறமையை என்னவென்று சொல்வது?

ரொம்பவும் பிரயத்தனப் படாமல் தன் முந்தைய எண்ணூற்று சொச்ச பாடல் வரிகளிலிருந்தே அர்த்தங்களை மையமாய்க் கொண்டாலும், வரிகளை அமைத்த விதத்தில் பாடலின் சந்தத்தை தூக்கி நிறுத்துகின்றன வாலிபக் கவிஞரின் வசீகர வரிகள்.

உன்னிடம் சொல்வதற்கு…
எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு
அதை நீயும் கேட்க நானும் சொல்ல 

ஏது வாசகம்


ச்சே... கவிஞன் கலக்குறானையா....!!!

இங்கே நான் இணைத்திருக்கும் யு.டியூப் இணைப்பு ஆடியோ மட்டும் கொண்ட இணைப்பாக இருக்கிறது. முடிந்தால் ஹெட்போனில் பாடலை கேட்டு ரசியுங்கள்.

பாடல் வரிகளுக்கு இங்கே


படங்கள் -நன்றி: இசைத்தேன்
.
.
.

Jan 8, 2011

இசைக் கோலங்கள் - தேங்க் யு ஃபார் தி ம்யுசிக்!


நான் சின்னஞ்சிறு வயதில் பேசத் துவங்கு முன்னமே பாடத் தொடங்கினேனாம், என் அம்மா சொல்லுவார்!

இசையின் துணையின்றி யாரேனும் வாழ இயலுமா? பாடலின்றி நடனமன்றி வாழும் வாழ்க்கை என்னவாய் இருக்கும்?

எழுபதுகளில் கொடிகட்டிப் பறந்த மேற்கத்திய இசைக் குழுவான ABBA அவர்களின் பாடலில் ஒன்றான "தேங்க் யு ஃபார் தி ம்யுசிக்" பாடல் வரிகள்தான் இவை.



சரி! பாடலுக்கும் உங்களுக்கும் இடையில் குறுக்கே நிற்காமல் வழி விடுகிறேன்!



I'm nothing special, in fact I'm a bit of a bore 
If I tell a joke, you've probably heard it before 
But I have a talent, a wonderful thing 
'Cause everyone listens when I start to sing 
I'm so grateful and proud 
All I want is to sing it out loud 

So I say 
Thank you for the music, the songs I'm singing 
Thanks for all the joy they're bringing 
Who can live without it, I ask in all honesty 
What would life be? 
Without a song or a dance what are we?
So I say thank you for the music 
For giving it to me 

Mother says I was a dancer before I could walk 
(M'M)She says I began to sing long before I could talk 
And I've often wondered, how did it all start 
Who found out that nothing can capture a heart 
Like a melody can 
Well, whoever it was, I'm a fan 

So I say 
Thank you for the music, the songs I'm singing 
Thanks for all the joy they're bringing 
Who can live without it, I ask in all honesty 
What would life be?
Without a song or a dance what are we?
So I say thank you for the music 
For giving it to me 

I've been so lucky, I am the girl with golden hair 
I wanna sing it out to everybody 
What a joy, what a life, what a chance! 

Thank you for the music, the songs I'm singing 
Thanks for all the joy they're bringing 
Who can live without it, I ask in all honesty 
What would life be? 
Without a song or a dance what are we?
So I say thank you for the music 
For giving it to me 

Thank you for the music 
For giving it to me...


Nov 16, 2010

வீணையின் சரஸ்வதி'யிடமிருந்து ஓர் கடிதம்

நான் எழுதிய "வீணையின் சரஸ்வதி" பதிவு குறித்து வீணை காயத்ரி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அவரிடமிருந்து வந்த நன்றி, பாராட்டுகள், ஆசிகள் கலந்த கடித்தை இங்கே மிகப் பெருமையுடன் வெளியிடுகிறேன்.
Dear Sri.Giri,



First and foremost I thank you for your appreciation of my music. I read your article about me in your blog and am extremely happy and touched that you have presented me so well through thr same.


I also think it is a great idea to present articles on music and I thank you for starting the series with your ideas about my music. So well written and presented!


I wish you all the best!



Kind regards and may God bless you!
Gayathri

.
.
.

Nov 14, 2010

இசைக் கோலங்கள்: வீணையின் சரஸ்வதி

மாதங்களில் மார்கழிக்கு இருக்கும் மகத்துவம் வீணை இசைக்கலைஞர்கள் இடையே காயத்ரிக்கு உண்டு 
- இசை விமரிசகர் சுப்புடு


வீணை காயத்ரி அவர்கள் பூமிக்கு வந்த சரஸ்வதி
 - தினமணி நாளிதழ்


_______________________________


வீணையின் நாதத்திற்கு எப்போதுமே தனி மயக்கம் உண்டு எனக்கு. குரலில் கொண்டு வர இயலும் நெளிவு சுளிவுகளையும், குரல் வடிவின் குழைவுகளையும் கூட அனாயசமாக வெளிக்கொணர இயலும் ஒரு இசைக் கருவி வீணை மட்டும்தான் என நான் முழுமையாக நம்புவேன்.

அதிலும் வீணை காயத்ரியின் வாசிப்பில் வீணையின் நாதம் கேட்கும் சுகம் தனி.




வீணை E.காயத்ரி அவர்களைத் தமிழகத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. 


அதென்ன வீணை காயத்ரி? தமிழ்நாட்டில் இவரை விட்டால் வீணை வாசிக்க ஆளே இல்லையா என்ன எனக் கேட்பவர்களுக்கு இவர் தன் அற்புத வீணை வாசிப்பின் மூலமே பதில் தருகிறார்.

உன்னத வாசிப்பு, மயக்கும் இசை, அபார ஞானம் என்றெல்லாம் இவர் வாசிப்பை எளிய வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது.

எனவே, ஒரு மிக எளிய உதாரணத்தில் காயத்ரி அவர்கள் மீட்டும் வீணையின் நாதத்தைக் கேளுங்கள். முகமது ரபி அவர்களின் கிளாசிக்களில் ஒன்றான இந்தப் பாடலில் நெஞ்சைத் தைக்கிறது வீணையின் தந்தி.



ஆறு வயதில் இவர் கைகள் வீணையிசைக்க ஆரம்பித்தன. கூடிய விரைவில் பொன்விழா காணவிருக்கிறது வீணைக்கும் இவருக்குமான பந்தம்.

ஒன்பது வயதினில் இசையுலகிற்கு பேபி காயத்ரி என அறிமுகமான இவர் தன் பன்னிரண்டாவது வயதிலேயே ஆல் இந்தியா ரேடியோவின் இசைக் கலைஞர் ஆனது இவரின் குறிப்பிடத்தக்க சாதனைகளுள் ஒன்று.

அதே பன்னிரண்டாம் வயதில் 1971'ல் இவர் வீணை வாசிப்பை "அது கடவுளின் மொழி" என டெக்கன் க்ரானிகல் (செகந்தராபாத்) குறிப்பிட்டது.

கர்நாடக இசை மட்டுமல்லாது, திரையிசை, கஜல், ஜாஸ், வெஸ்டர்ன், ப்யூஷன், கிராமிய இசை என இவர் மீட்டாத இசைப்பாணி இல்லை எனலாம். இந்திய வம்சாவளியினர் வாழ்ந்து வரும் எல்லா நாடுகளிலும் இவர் வீணையிசைப்  பயணம் நிகழ்ந்துள்ளது.

இந்தியத் திரையிசையிலும் கூட இவரின் பங்கு குறிப்பிடும்படியானது. கிட்டத்தட்ட அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களுடனும் இவர் பணியாற்றியுள்ளார். 

 இவர் பெற்ற விருதுகளும் பட்டங்களும் ஒரு கட்டுரைக்குள் சொல்லி முடிக்க இயலாத அளவிற்கு உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை எம்.எஸ். அவர்கள் கரங்களால் இவர் பெற்ற இசைப்பேரொளி விருது மற்றும் இவரின் இருபத்தி ஐந்தாம் வயதிலேயே இவரை வந்தடைந்த கலைமாமணி விருது ஆகியவை.

காயத்ரி அவர்களின் வீணை மட்டுமே பேசும் என எண்ண வேண்டாம். Jasmine Strings என்னும் வலைப்பக்கத்தின் வாயிலாகவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தன் ரசிகசிகாமணிகளிடம் உரையாடத் துவங்கியுள்ளார் இவர்.

வீணையின் மகத்துவம், சிறப்புகள், இசையுலகில் வீணை வாசிப்பில் ஜாம்பவான்கள் பற்றிய அரிய தகவல்கள், இசையின் மூலம் நோய் தீர்ப்பு பற்றிய தகவல்கள், மறைந்த இசை மேதைகளுக்கு புகழாஞ்சலி எனப் பலப்பல விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது இவர் வலைமனை.


காயத்ரி அவர்களின் வீணையிசைத் தொகுப்புகள் http://gvshobha.blogspot.com/
என்ற தளத்தில் கிடைக்கின்றன.


இந்தப் பதிவிற்கு வீணை காயத்ரி அவர்களின் கடிதம்.
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...