Showing posts with label எஸ்.ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label எஸ்.ராமகிருஷ்ணன். Show all posts

Jan 11, 2011

பேயோன்- எஸ் ரா, எஸ்சு!


சந்தேகம் ஒரு தொற்று நோய் போலும். எந்த இலக்கிய கூட்டத்தில் யாரை பார்த்தாலு்ம நான் இவனாக இருப்பேனோ என்கிற சந்தேகம் எழுகிறது.





திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள்தான் திரு பேயோன் என்ற பெயரில் நகைச்சுவை இலக்கியம் படைக்கிறார் என்பது நாமனைவரும் நன்கறிந்த உண்மையே.

இந்த உண்மையை மெய்ப்பிக்கும் அண்மைய நிகழ்வு:
திரு மாமல்லன் அவர்கள் எழுதியுள்ள பேயோன் நீங்கள் எம்டிஎம் ஆக இல்லாவிட்டால்..... என்ற பதிவை சற்றே படிக்கவும்.

திரு மாமல்லன் அவர்கள் தன் புத்தகத்துக்கு ஒரு மதிப்பீடு எழுதித் தரும்படி திரு பேயோன் சார் அவர்களிடம் கேட்கிறார். அதற்கு பதில் அஞ்சலில் திரு பேயோன் சார் தான் யார் என்பதைக் குறித்து தேவைப்பட்ட பல முக்கிய தகவல்களைத் தந்தாலும், மாமல்லன் அவர்களின் கதைகள் குறித்து தன் மதிப்பீடாக ஒரே ஒரு வாக்கியம்தான் எழுதுகிறார்:
இப்போதுதான் 'வலி' படித்து முடித்தேன். மனதைப் பிசைந்தது. என் குழந்தைப் பருவம் நினைவுக்கு வந்தது. இரண்டாம் வாசிப்பில் இன்னும் பல விஷயங்கள் புரிபடலாம்.
நீங்களே சொல்லுங்கள் சார், எதைப் பார்த்தாலும் படித்தாலும் யாருக்கு சார் தன்னுடைய குழந்தைப் பருவம் நினைவுக்கு வரும்?

திரு பேயோன் அவர்களுக்கு வலி என்ற சிறுகதையைப் படித்ததும் அவருடைய குழந்தைப் பருவம் நினைவுக்கு வந்ததில் ஏதேனும் ஆச்சரியம் இருக்கிறதா என்ன?

இல்லை, எனக்கு இதை விட முக்கியமான வேலை இருக்கிறது, என்று சொல்லி அவர் மதிப்புரை எழுதும் பொறுப்பைத் தவிர்த்ததில்தான் ஏதேனும் ஆச்சரியம் இருக்கிறதா?

உண்மையில் பேயோன் அவர்கள் மிகவும் நுட்பமான மனிதர்தான், ஐயமே இல்லை!

சிறப்புப் பதிவர்: நட்பாஸ் 
.
.
.

Related Posts Plugin for WordPress, Blogger...