Showing posts with label விமலாதித்த மாமல்லன். Show all posts
Showing posts with label விமலாதித்த மாமல்லன். Show all posts

Jan 11, 2011

பேயோன்- எஸ் ரா, எஸ்சு!


சந்தேகம் ஒரு தொற்று நோய் போலும். எந்த இலக்கிய கூட்டத்தில் யாரை பார்த்தாலு்ம நான் இவனாக இருப்பேனோ என்கிற சந்தேகம் எழுகிறது.





திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள்தான் திரு பேயோன் என்ற பெயரில் நகைச்சுவை இலக்கியம் படைக்கிறார் என்பது நாமனைவரும் நன்கறிந்த உண்மையே.

இந்த உண்மையை மெய்ப்பிக்கும் அண்மைய நிகழ்வு:
திரு மாமல்லன் அவர்கள் எழுதியுள்ள பேயோன் நீங்கள் எம்டிஎம் ஆக இல்லாவிட்டால்..... என்ற பதிவை சற்றே படிக்கவும்.

திரு மாமல்லன் அவர்கள் தன் புத்தகத்துக்கு ஒரு மதிப்பீடு எழுதித் தரும்படி திரு பேயோன் சார் அவர்களிடம் கேட்கிறார். அதற்கு பதில் அஞ்சலில் திரு பேயோன் சார் தான் யார் என்பதைக் குறித்து தேவைப்பட்ட பல முக்கிய தகவல்களைத் தந்தாலும், மாமல்லன் அவர்களின் கதைகள் குறித்து தன் மதிப்பீடாக ஒரே ஒரு வாக்கியம்தான் எழுதுகிறார்:
இப்போதுதான் 'வலி' படித்து முடித்தேன். மனதைப் பிசைந்தது. என் குழந்தைப் பருவம் நினைவுக்கு வந்தது. இரண்டாம் வாசிப்பில் இன்னும் பல விஷயங்கள் புரிபடலாம்.
நீங்களே சொல்லுங்கள் சார், எதைப் பார்த்தாலும் படித்தாலும் யாருக்கு சார் தன்னுடைய குழந்தைப் பருவம் நினைவுக்கு வரும்?

திரு பேயோன் அவர்களுக்கு வலி என்ற சிறுகதையைப் படித்ததும் அவருடைய குழந்தைப் பருவம் நினைவுக்கு வந்ததில் ஏதேனும் ஆச்சரியம் இருக்கிறதா என்ன?

இல்லை, எனக்கு இதை விட முக்கியமான வேலை இருக்கிறது, என்று சொல்லி அவர் மதிப்புரை எழுதும் பொறுப்பைத் தவிர்த்ததில்தான் ஏதேனும் ஆச்சரியம் இருக்கிறதா?

உண்மையில் பேயோன் அவர்கள் மிகவும் நுட்பமான மனிதர்தான், ஐயமே இல்லை!

சிறப்புப் பதிவர்: நட்பாஸ் 
.
.
.

Dec 18, 2010

இணையவெளியில் மெட்ராஸ் தாதா



மாமல்லனின் ஜெமோ நிலைப்பாடுகள் குறித்து எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. பிதொநிகு என் கற்பனை என விமா சொன்னது ஜெமோ-விமா இடையேயான விஷயமே. இடையே ஊடாடி அடிதடியில் ஈடுபட நாமொருவருமில்லை. எனினும், விமா'வின் தொடர் ஜெ தாக்குகள் அவரது புது புத்தக ரிலீசொடு அதை முடிச்சுப் போடசொல்கிறது.

எப்படியோ... இப்படியப்படி உணர்ச்சிவசப் பட்டு எழுதுகிறாரேயோழிய... சிலப்பல நேரங்களில் மனிதரின் ஜீனியஸ்தனம் பட்டுத் தெறிக்கிறது...

தன் தளத்தில் அவர் வடிக்கும் விஷயங்களை விடுங்கள்,ஒரு பின்னூட்டத்தில் மனிதர் எழுதிய கவிதை படித்து மிரண்டேனேன்றால் மிரண்டேன் அப்படி மிரண்டேன். இதுவும் ஜெமோ தாக்கு எனினும் இதில் உள்ள அனாயாசமான அதேசமயம் ஆழ்ந்த கவித்திறனை ரசித்தேன்.

அறம்

எதற்கும் அசையாத
எம்பெருமான் விஷ்னு
கருவறை துறந்து
உற்சவ மூர்த்தியாய்
உலா வருதல்
உனக்காக அல்ல தனக்காக

ஸ்வாமி ஏள்றார் என
தரைவீழும் மனுஷா கேள்

பொன்முலாமின் உள்ளிருக்கும்
காரியார்த்தக் கல்மனிதனைக் காண்

இங்கே டார்கெட் ஜெமோ'தான் என்றாலும் மோதிரக்கைக் குட்டு வாங்கினது என் நெருங்கின நண்பர் ஒருவர். இப்படி நான் எழுதுவதை அவர் க்ஷமிக்கணும்.

இத்தனை நாள் கழித்து இதுபற்றி நான் இங்கே எழுதக் காரணம், தலைவர் கொஞ்சம் இடைவெளிக்குப் பின் தன் தளத்தில் இன்று ஒரு கவிதை வடித்திருப்பதுதான். இப்போ டார்கெட் நம்ம அன்பிற்கும் பாசத்திற்கும் பண்பிற்கும் இப்போதைய சூழலில்  பரிதாபத்திற்கும் உரிய தேக எழுத்தாளர் அவர்கள்.

தேகக் கொசு
வெளியிட்டு இருப்பது
வெற்றுக் குசு


.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...