ஊமையாக நின்றது வெளி
நிச்சலனமென நித்திரை
ஒளியில் ஒளிந்தது
ஒற்றைக் காற்று
பார்வைக்குப் பக்கம்
பக்கமில்லை தூரம்
தகதகக்கவாவெனக் கேட்டு
தத்தி தாவிய தட்டான்
தூரத்து மரமொன்றில்
வெட்டுமொலி மரங்கொத்தி
கேணித்திட்டு போல்
வாளி நிறைய நிலா
கயிற்றுக் கட்டிலாய் மேகம்
மிச்சமிருந்தது இருட்டு...