Showing posts with label புதுக்கவிதை. Show all posts
Showing posts with label புதுக்கவிதை. Show all posts

Sep 25, 2015

உன்னுதும் என்னுது

திருப்பதி கோயிலு
முருகன் கோயிலா
இருந்துச்சுதாம்.
தாஜ்மஹால் உள்ற
சிவங்கோயில்
உண்டாமாம்.
ஒகேனக்கலு பரிசலெல்லாம்
கர்நாடக கவுடாவுதாம்.
கோயமுத்தூரு ரயில்வண்டி
பாலக்காட்டுக்கு பாத்தியதையாம்.
மாலத்தீவு சிங்களனுதாம்;
காஷ்மீரு கராச்சிக்காம்...

என்ன நியாயத்துல
சேர்த்தி மச்சின்னு
இத்தையெல்லாம்
லிஸ்ட்டு போடுறான்
ஹாஸ்டலு தோஸ்த்து
ஹரிஹர சொப்ரமணி.

"மச்சி! என் ஜட்டியை
நீ மாத்திப்
போட்டுங்குறியா பாருடா"
பாத்ரூம்லர்ந்துனு
கொரலுட்றான் பால்டு பளநி.

Apr 6, 2010

நானும் புதுக்கவிதை எழுதுவேன்

சமீபத்தில் நண்பர் ஒருவர் ஜெயமோகனின் பழைய கோப்பிலிருந்து ஒரு இடுகையை எனக்குப் படிக்க இணைப்பை அனுப்பியிருந்தார். அதன் தலைப்பு.... நீங்களும் புதுக்கவிதை எழுதலாம்

ஜெயமோகனை விமரிசிக்குமளவு எனக்கு பப்பு இல்லாவிடினும், சமீபத்தில் படித்த ஒரு புதுக்கவிதையைப் பற்றி.... 

படித்தது தினமலர் வாரமலரில்.

பின்னால்!


* பரிதாபமாக இருக்கிறது...
லஞ்ச ஊழல் செய்து,
தலை குனிந்து,
முகம் மூடி...
* காவலர் துணையுடன்
அழைத்துச் செல்லப்படும்
அரசு அதிகாரிகளைக்
காணும்போது...
* கட்டுக் கட்டாகப் பணம்
நகை நட்டுக்கள்...
சொத்து சுகம்,
பங்கு பத்திரங்கள்,
வாகனங்கள்...
* மனைவிக்குத் தெரியாமல்
இத்தனையையும்
பதுக்கி வைத்திருக்க முடியாது
வீட்டிற்குள்...
* பேராசை... ஆடம்பரம்
ஆணவம்... துணிவு
இவைகளால் ஆடவரைத்
தூண்டுவதும் பெண்கள்தான்...
* ஆண்களின் வெற்றிக்குப்
பின்னால் பல பெண்கள்...
தோல்விகளுக்குப்
பின்னாலும் சில
பெண்கள்!

இந்தக் கவிதைக்கு (!!!) சிறப்புப் பதிவாக அங்கீகாரம் தரப்பட்டு ருபாய் 1250 பரிசு வேறு. என்ன கொடுமை ஆண்டவா...!!! பெண்ணினக் காவலராக தன்னை வரித்துக் கொள்ளும் அந்துமணி சார்....உங்க மேற்பார்வைல வர்ற வாரமலருக்கு இது தேவையா?
Related Posts Plugin for WordPress, Blogger...