தமிழ்நாட்டின் ஒவ்வொரு சினிமா ரசிகனையும் போல நானும் மூன்று வருடங்கள் எந்திரனுக்காகக் காத்திருந்தவன். இத்தனை நாள் காத்திருந்தேன். ஆனால் இனி ஒரே ஒரு நாள் கூட எந்திரனைக் காணாது இருக்க இயலாது.
நமக்கு இந்த முறை ப்ரிவியு ஷோ காணும் பாக்கியம் வாய்க்கவில்லை எனினும் முதல் நாள் முதல் ஷோ ஆரவாரமான ரஜினி ரசிகர்களுடன் அடையாரின் ஒரு தியேட்டரில் காணும் வாய்ப்பு அமைந்தது.
எந்திரன் கதையை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் இது "ஷங்கரின் அவதார்". சயின்ஸ் பிக்ஷன், காதல், ரொமான்ஸ் என்று கொண்ட கலவையாக எந்திரன். வழக்கமாக நான் ரசித்து ருசிக்கும் ரஜினியின் பஞ்ச் டயலாகுகள், சூப்பர் ஸ்டாரின் கரிஸ்மாடிக் ஒபெநிங் சாங் ஆகியவை எந்திரனில் மிஸ்ஸிங். இருந்தால் என்ன? ஒரு டை ஹார்ட் ரஜினி ரசிகனை எப்படி முழுமையான நிறைவுடன் படம் பார்க்க வைக்க வேண்டும் என சங்கருக்குத் தெரிந்திருக்கிறது.
பொதுவாக ஸ்டைலில் கவனம் செலுத்தும் ரஜினி இங்கே நடிப்பில் சற்றே கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார். குறிப்பாக அந்த வில்லன் ரோல் தமிழ் வில்லன்களுக்கு ஒரு பெஞ்ச்மார்க்கையே உருவாக்கித் தந்திருக்கிறது என்றால் அது மிகை ஆகாது.
சிவாஜிக்குப் பின்னர் ஷங்கர் - ரஜினி என்னும் மாஜிகல் காம்பினேஷன் மீண்டும் இணைந்து எந்திரனாய் அட்டகாசம் செய்திருக்கிறார்கள். கிராபிக்சில் இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு மைல் கல் எனலாம். அந்தக் குழந்தை டெலிவரி காட்சியை கிராபிக்சில் காணும்போது தியேட்டரே எழுந்து நின்று ஆர்ப்பரிக்கிறது.
கடைசி முப்பது நிமிடங்களில்தான் படத்தின் ஹைலைட்டே. டெக்னாலஜியில் ஹாலிவுட்டுக்குப் பின் கோலிவுட்தான் என ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறது எந்திரன் டீம்.
சூப்பர் ஸ்டாரின் அட்டகாச நடனங்கள், ரஹ்மானின் பாடல்கள் இவற்றைக் காண, கேட்க ஆயிரம் கண்களும் காதுகளும் வேண்டும்.
படத்தின் மைனஸ் என்று எதையேனும் குறிப்பிடவேண்டும் என்றால் அந்த மஸ்கிடோ அனிமேஷனை சொல்லலாம். ஆனால் அந்தக் காட்சி சற்றே கிட்டிஷ் ஆக இருப்பதால் குழந்தைகள் ரசிக்க வாய்ப்புண்டு.
On the whole it was an awesome, splendid & fantabulous family entertainment worth watching again.
கமல்குமார், அடையார்
(பேரு கமலு...ஆனா அதி தீவிர ரஜினி விசிறிங்கோ)