Nov 26, 2011

மயக்கம் என்ன


என்னத்த எழுத எனப் புரியவில்லை!

ஃ போட்டோகிராபியில் பெரிதாய் சாதிக்க விழையும் கத்துக்குட்டி தனுஷ், இது ஆரம்பம். உலகமே பார்க்க சர்வதேச புகைப்படக்கலை விருது வாங்கும் வித்தகர் தனுஷ், இது கிளைமாக்ஸ். இரண்டுக்கும் இடையில் நடக்கும் வழக்கமான கதை, வழக்கத்திற்கு ரொம்பவே மாறான திரைக்கதையில்.... இதுதான் மயக்கம் என்ன.

படத்தின் குறைநிறைகளைச் சொல்ல விரும்பவில்லை. படம் டிபிக்கல் செல்வா'த்தனமாக இருக்கிறது. விரும்பி ரசிக்கிறேன்  என்பவர்கள் தைர்யமாகப் போகலாம். வேண்டாம் என்பவர்கள் வீட்டில் இருக்கலாம்.

Nov 24, 2011

இந்தா பிடி இன்னும் அறுபது - முன்னுரை



வரவிருக்கும் புத்தகத் திருவிழாவில் வரவிருக்கும் பேயோனின் 108 புத்தகங்களில் வரவிருக்கும் இந்தா பிடி இன்னும் ஐம்பது கவிதைத் தொகுப்பில் வரவிருக்கும் கவிதைகள் எப்படியிருக்கும் என்று யோசித்து யோசித்து என் வீட்டுச்சுவர்க் காரைகள் பேர்ந்ததுதான் மிச்சம்.

இதென்ன போச்சு! நாமும் இந்தத் தலைப்பைக் கொஞ்சம் வளைத்து அதே புத்தகவிழாவில் ஒரு புத்தகம் ரிலீஸிட்டால் போச்சு என்று ராத்திரி முழுக்கக் கண்விழிக்காமல் எழுதிய கவிதைகளின் ஊர்வலம் நம் தளத்தில் இனி வாரம் ஆறாக வெளிவரவிருக்கின்றன.

என் முந்தைய கவிதைகளை வாசிக்காதவர்கள் இந்தத் தளத்தின் ஆர்க்கைவில் எப்படியேனும் தேடிக் கண்டுபிடித்து அவற்றில் ஒன்றிரண்டை வாசித்து விட்டு மேலே தொடர்ந்தால் எங்கெங்கே அடிபட்டு அவஸ்தைப்பட நேரிடும் என்பதறிந்து கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் படிக்கும் பாக்கியம் பெறலாம்.

மேலும் இவையெல்லாம் உயர் ஹைக்கூ வகையைச் சேர்ந்தவை என்பதால் மூன்றாம் வரியில் சரேலென்ற ஒரு மாபெரும் திருப்பம் இருக்கும்.

ஒரு உதாரணம் இங்கே: 
அடிப்பாள் அணைப்பாள்
அவள் தான்
அம்மா
இங்கே இரண்டாம் வரியின் மத்தியில் ”அவள்” என்னும் வார்த்தையில் நீங்கள் பயணம் செய்கையில் நிறுத்தி நிதானமாகப் பயணத்தைத் தொடர்தல் நல்லது. அப்போதுதான் மூன்றாம் வரியின் சரேல் திருப்பமான “அம்மா” என்னும் ட்விஸ்ட் உங்களை விபத்திலிருந்து காக்கும்.

சரி! ஆரம் பிக்கலாமா?




Nov 22, 2011

என்னை யாரென்று எண்ணி எண்ணி!


”ஹலோ”

“ஹலோ”

“ஹலோ, சொல்லுங்க”

“ஹலோ”

“ம்ம்... சொல்லுங்க”

“அப்புறம், எப்படி இருக்கீங்க”

“நல்லா இருக்கேன், சொல்லுங்க”

“நான் எப்படி இருக்கேன்னு கேக்க மாட்டீங்களா?”

“சொல்லுங்க. எப்படி இருக்கீங்க?”

“நல்லாதான் இருக்கேன். யாருன்னு தெரியுதா?”

“தெரியலைங்க. உங்க நம்பர் என் மொபைல்ல இல்லை. ரெண்டு மூணு மொபைல் மாறினதுல சில நம்பர்ல்லாம் மிஸ் ஆகிடுச்சி”

“ஓ! அப்போ நாங்க எல்லாம் முக்கியமான ஃப்ரெண்ட்ஸ் இல்லையா?”

“யார் பேசறீங்க?”

”கொரல் தெரியலையா”

“தெரியலையே”

”என் நம்பரை எப்படி மிஸ் பண்ணலாம்”

“நீங்க யாருன்னே தெரியலையே”

“கொரல் நிஜமாவே தெரியலையா?”

“இல்லை தெரியலை”

“நான் உங்க ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு”

“ஓ!”

“மாதவரத்துலதானே இருக்கீங்க?”

“இல்லை, நான் மடிப்பாக்கம் வந்து வருஷமாச்சு”

“என் கொரல் நிஜமாவே தெரியலையா”

“டேய் முண்டகலப்ப! நான் சொல்றது புரியலை. தெரியலைடா எழவெடுத்த பன்னி”

“யேய்! என்னய்யா திட்டற? நான் பாலாஜி பேசறேன். ஆஃபீஸ் மாறினா மேனேஜர் கொரலை மறந்துடுவியா?”

“டேய்! பொறம்போக்கு யார் பேரை சொல்லி வெளையாடுற? பாலாஜி சார் கொரல் எனக்குத் தெரியாதா?”

”இல்லைப்பா நான்தான் பேசறேன்”

“நான்தான்’னு சொல்ற பேமானி எல்லாம் பாலாஜி சார் ஆகிடுவானாடா பொறம்போக்கு?”

“இல்லைய்யா... நான் பாலாஜிதான்...”

“நிறுத்துடா நாரப்பயலே! என்ன வேணும் உனக்கு? போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணனுமாடா பன்னாடை?”

“ஆண்டவா!”

“ஆண்டவனா? அவனை ஏண்டா இழுக்கற வெண்ணவெட்டி. வைடா ஃபோனை !“



பி.கு 1: போன் மாற்றுவது, தொலைவது, நம்பர்கள் மிஸ் பண்ணுவது சகஜமான இந்தக் கலி காலத்தில் இனிமே எவனாவது ஃபோன் போட்டு பேர் சொல்லாம கலாட்டா பண்ணினா அவனுகளுக்கும் இதே கதிதான்.

பி.கு 2: அயாம் சாரி பாலாஜி சார், உங்களை கொஞ்சம் ஓவராத்தான் திட்டிட்டேன். ஆனா, இனிமே நீங்க யார்கிட்டயும் இப்படி வெளையாட மாட்டீங்கன்னு நம்பறேன்

பி.கு 3: இங்கே நான் கெட்ட வார்த்தைத் திட்டல்களை எடிட் செய்திருக்கிறேன்.

Nov 21, 2011

சுதந்திர போராட்ட தியாகி ஷெய்தி ராம்




1942 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 8 ந்தேதி அப்போதைய பம்பாயில் கூடிய, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தேசத்தந்தை காந்தி அனல் பறக்க பேசுகிறார். "இனியும் பொறுக்கமுடியாது,உலகப்போரின் காரணமாக ஆங்கிலேயே அரசின் மீது கொண்டிருந்த பச்சதாபம் முடிந்துவிட்டது. இனி இந்த ஆங்கிலேயே அரசை எதிர்த்து போர்ப்பிரகடனம்தான்.'' "செய் அல்லது செத்துமடி''; "இந்த வெள்ளையர்கள் நம்மைவிட்டு போகும்வரை அவர்களுக்கு எந்தவிதத்திலும் ஒத்துழைப்பது இல்லை.இந்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஒவ்வொருவரும் போர் வீரர்கள் போல செயல்படவேண்டும்''.


காந்தியின் இந்த வெள்ளையரை வெளியேற்றும் அறைகூவல் போராட்டம் ,மக்களிடையே "வெள்ளையனே வெளியேறு' போராட்டமாக எழுச்சியுடன் வெடித்தது. நாடு முழுவதும் காங்.தலைவர்களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் வடமாநிலத்தில் இருந்தால் 1300 கிலோமீட்டர் தாண்டி தென் மாநில சிறையில் அடைக்கப்பட்டனர்,தென் மாநிலத்தை சேர்ந்தவர் என்றால் வடமாநிலத்தில் அடைக்கப்பட்டனர்.



நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னெடுத்துச் செல்லப்பட்ட இந்த முக்கிய போராட்டத்தில் பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்றனர். ரயில்கள் மறிக்கப்பட்டது, பஸ்கள் நிறுத்தப்பட்டது, அரசு அலுவலகங்கள் முடக்கப்பட்டது, போரட்ட களத்தில் நின்ற பொதுமக்களில் ஒருவர்தான் இன்றைய ஜார்கண்ட் மாநிலம் கூடா மாவட்டத்தை சேர்ந்த ஷெய்தி ராம்.



வெள்ளையனே வெளியேறு கோஷத்துடன் போராட்ட களத்தில் இறங்கிய ராமை ஆவேசத்துடன் இருந்த போலீசும், ராணுவமும் தனது குண்டாந்தடிகளால் பந்தாடினர். குற்றுயிரும் குலைஉயிருமாக உடம்பெல்லாம் ரத்தம் வழிய வீழ்ந்து கிடந்தாலும், உதடுகள் மட்டும் வெள்ளையனை வெளியேறச் சொல்லும் கோஷமிட்டது. ராமைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்தும் அடித்து துவைத்தனர்,இனி ஆள் தாங்கமாட்டார் என்ற நிலையில் விடுதலை செய்தனர். வெளியே வந்தவர்,கொஞ்சம் தெம்பு வந்ததும் மீண்டும் போராட்ட களம் சென்றார், மீண்டும் கைதானார். மீண்டும் தடியடி தாங்கினார். மீண்டும் சிறை சென்றார்.



இப்படியே எவ்வளவு நாள்தான் போராடுவாய் என்ற கேள்விக்கு, " எங்கள் நாடு சுதந்திரமடையவேண்டும் ,அந்த உணர்வு இருக்கும்வரை போராடுவேன்'' என்று பதில் தந்து இருக்கிறார். "சரி இந்த உணர்வு எத்தனை நாள் இருக்கும்'' என்ற அடுத்த கேள்விக்கு ""உயிர் இருக்கும் வரை என் உணர்வு இருக்கும்'' இந்த முறை பதில் சற்று உரத்தே வந்தது



இப்படி பொங்கி வழிந்த தேசபக்தியோடும், தன் மணைவி ஷாம்னி தேவியோடு பல முறை போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்கு சென்ற ராம், நாடு சுதந்திரமடைந்ததும் நாட்டிற்கான தனது கடைமை முடிந்தது என விவசாய தொழிலில் இறங்கினார். சுதந்திர போராட்ட வீரர்கள் பலரும் பெட்ரோல் பங்கு முதல் பென்ஷன் வரை வாங்கிக்கொண்டு வளமாகவும்,நலமாகவும் இருக்கிறார்கள்,நீங்கள் ஏன் இதற்கு முயற்சிக்க கூடாது என்ற போது,எதையும் எதிர்பார்த்து நான் என் நாட்டிற்காக போராடவில்லை,என் உழைப்பு என்னைக்காப்பாற்றும் என்பதே ராமின் பதிலாக இருந்தது



வருடங்கள் உருண்டோடின. இப்போது ஷெய்தி ராமிற்கு வயது 99 அவரது மனனவி ஷாம்னி தேவிக்கு வயது 85. மனதில் தெம்பு இருந்தாலும் உடம்பில் தெம்பு இல்லாததால், வாழ்வாதரத்திற்காக சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான பென்ஷன் கேட்டு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பங்கள் கேலியுடனும்,கிண்டலுடனும் நிராகரிக்கப்பட்டன



தமிழகத்தில் ஏழாயிரமாகவும், கர்நாடகா மாநிலத்தில் ஆறாயிராமாகவும், மகராஷ்ட்ரா மாநிலத்தில் ஐயாயிரமாகவும் குறைந்து கொண்டே போய் ஜார்கண்ட் மாநிலத்தில் மூவாயிரம்தான் "பென்ஷனாக' சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்குகிறார்கள். அந்த மூவாயிரத்தை கேட்டு நடையாய் நடந்தும், அரசு அலுவலகங்களில் கிடையாய் கிடந்தும் எதுவும் பலனில்லை.



எங்களை தியாகியாக கூட மதிக்கவேண்டாம், வயதானவர்களாக மதித்து முதியோர் பென்ஷனாவது வழங்குங்கள், மிச்சமுள்ள வாழ்க்கையை யாரிடமும் தஞ்சமடையாமல் மானத்தோடு வாழவழி காணுங்கள் என்றபோதும் அதற்கும் வழியில்லாமல் போனது. பொறுமை இழந்த இந்த சுதந்திர போராட்ட தம்பதிகள் கடந்த 05/11/11 ந்தேதி ராஞ்சியில் உள்ள கவர்னர் மாளிகை முன் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்



போதுமான ஆவணங்கள், சான்றுகளுடன் உண்ணாவிரதமிருந்த இந்த தியாகிகளை உடனடியாக கவர்னர் கூப்பிட்டு முறைப்படி நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆனால்... ஆனால்... கவர்னர் மாளிகை வாசலை அசிங்கப்படுத்தும் இவர்களை அப்புறப்படுத்துங்கள் என்று வந்த உத்திரவை அடுத்து போலீசார் இவர்களை குண்டு கட்டாக அள்ளிச் சென்று விட்டனர்



அப்புறப்படுத்தும் இடத்தில் முன்பு குப்பைகூளங்கள் இருந்தது



இப்போது சுதந்திர போராட்ட தியாகிகள்


நன்றி: தினமலர் மற்றும் இந்த இணைப்பை பகிரச் சொன்ன ரகுபாஸ்கர்

Nov 20, 2011

இந்த வார புகைப்படம் - 5

தமிழ்நாடு இதழ்கள் பதிப்பாளர் சங்கத் துவக்கவிழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு சில மாதங்களுக்கு முன் கிடைத்தது. அங்கே சென்ற போதுதான் தமிழ்ச்சூழலில் வணிக மற்றும் இலக்கியப் பத்திரிக்கைகளைத் தாண்டி எத்தனை விதவிதமான துறைசார் இதழ்கள் (உ.ம்: விவசாயம், மோட்டார் வாகனம், நெசவு, கால்நடை வளர்ப்பு) வருகின்றன எனத் தெரிந்தது.

அங்கே அடித்த ஒரு “க்ளிக்”



Related Posts Plugin for WordPress, Blogger...