Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Jul 25, 2012

தில்லு முல்லு - ரீமேக்



பாலசந்தர் - ரஜினி கூட்டணியில் 80’களின் தொடக்கத்தில் வெளிவந்த தமிழின் தலைசிறந்த காமெடி திரைப்படங்களுள் ஒன்றான ”தில்லு முல்லு” படம் ரீமேக் செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன.

”தமிழ்ப்படம்” புகழ் சிவா கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிய வருகின்றன.

நம் தில்லுமுல்லு படத்திற்கே ஒரிஜினல் வெர்ஷனான கோல்மால் (ஹிந்தி) படம் சமீபத்தில் அஜய் தேவ்கன் தயாரிப்பில் “போல் பச்சன்” என்ற பெயரில் வெளிவந்து சுமாரே சுமாராக நல்லபடியாக இப்போது ஓடிக் கொண்டிருந்தாலும் பழைய படத்தின் கதை வடிவத்தை நிறையவே மாற்றியிருக்கிறார்கள். 



நகரத்தில் சொத்துகளை இழக்கும் அபிஷேக் கிராமத்திற்கு தன் தங்கையுடன் குடிபெயர்கிறார். அங்கே தேங்காய் சீனிவாச முதலாளியாக அஜய்தேவ்கன் இருக்கிறார். வேலை வேண்டி இந்து-இஸ்லாமிய கதாபாத்திரங்களில் அஜய்தேவ்கனை மீசை வைத்தும் வைக்காமலும் ஏமாற்றுகிறார் அபிஷேக். பைப் பிடித்து மாடி ஏறி வந்து நடிக்கும் சௌக்கார் அம்மா கேரக்டரும் உண்டு. இவரின் தங்கையை அவர் காதலிக்க, அவர் தங்கையை இவர் காதலிக்க இறுதியில் வழக்கம் போல உண்மைகள் வெளிவந்து சுபம்.

இப்படிப்பட்ட உல்டா-புல்டா வேலைகளைச் செய்துதான் தமிழ் ரீமேக்கும் வெளி வருமா, இல்லை வந்தது வந்ததாய் வந்து சேருமா எனத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் ரீமேக் எடுத்து சொதப்புவதைக் காட்டிலும் நிஜ வெர்ஷனை ஏதேனும் டிஜிடலைஸ் வேலைகள் செய்து நம்மவர்கள் ரீ’ரிலீஸ் செய்யலாம் என்பதே என் கருத்து. அதுவே பிய்த்துக் கொண்டு ஓடும் என் உத்திரவாதம் தரலாம்.

”ரீமேக்கா? வேணாம்யா”, என்று ஓங்கிக் கத்த வேண்டும் போலிருக்கிறது.

படங்கள்: நன்றி - விக்கி

May 31, 2011

ஒரு பிரார்த்தனை... ஒரு வாழ்த்து...



பிரார்த்தனைகள்..... இவருக்காக!



வாழ்த்துக்கள் இவருக்கு....
.
.
.

Jul 30, 2010

எந்திரன் - எளிமையின் திருவுருவம்

இன்னமும் ஒரேயொரு நாள்தான் இருக்கிறது. தமிழகமே தயாராகு எந்திரன் இசையைக் கேட்க என பதிவர் உலகத்தில் ஒரு கூட்டமே கூக்குரலிட்டுக் கொண்டிருப்பதால்..... அந்த சப்ஜெக்டை அவர்களுக்குத் தாரை வார்த்துவிட்டு.......
(அதுக்குன்னு அப்படியே விட்டுடறதா இல்லை, நாளைக்கு சுடச்சுட இசை விமரிசனம் உண்டுங்கோவ்)



.......சில மாதங்களுக்கு முன், எந்திரன் படத்தின் கடைசிக் கட்ட பேட்ச் (patch) வேலைகள் சிலவற்றை முடிக்க சூப்பர் ஸ்டார் அவர்கள் சென்னையில் உள்ள அனிமேஷன் / கிராபிக்ஸ் ஸ்டுடியோ ஒன்றுக்கு திக்விஜயம் புரிந்திருந்தார்.

அந்த அனிமேஷன் நிறுவனத்தின் திருவனந்தபுர அலுவலகத்தில் பணிபுரியும் என் தம்பி அருண் அந்த ப்ராஜெக்ட் தொடர்பான வேலையாக வந்திருக்க, அதிஷ்டவசமாக சூப்பர்ஸ்டார் அவர்களை தரிசிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டியுள்ளது.

வழக்கமான பெரிய மனிதர்களின் எளிமை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். எளிமையாக வாழ்வதை ஒரு விளம்பர உத்தியாகக் கையாள்பவர்களை நாம் பார்க்கிறோம். அவர்களுக்கு எளிமையாக வாழ்வதே ஒரு பந்தா நிறைந்த செயல். ஆனால் அப்படியல்ல ரஜினியின் எளிமை. அது நிஜமான மற்றும் மெய்மறக்கச் செய்யும் ஒன்று என்கிறான் என் சகோதரன். அவனால் இன்னமும் கூட நம்ப முடியவில்லை, தான் சந்தித்தது ரஜினியைத்தானா என்று.

தான் அங்கு வந்த வேலையை தனக்கே உரிய நேர்த்தியுடன் முடித்துவிட்டு மிகவும் hi-fi விஷயங்களாக அல்லாமல், அங்கிருந்த இளைஞர்களுடன் மிக எளிமையாக உரையாடிவிட்டு மீண்டும் தனக்கே உரிய விடுவிடு வேகத்துடன் அங்கிருந்து புறப்பட்டாராம் ரஜினிகாந்த்.

ரஜினி அங்கு இருந்த அனிமேஷன் செய்யும் இளைஞர்களிடம் கேட்ட சில கேள்விகள்,

"நீங்க சாப்பாடு தூக்கம் இல்லாம வேலை செய்வீங்களாமே , நிஜமா?"

"இப்போ நீங்க எல்லாரும் சாப்டுட்டீங்களா?"

"ஒழுங்கா நேரத்துக்குத் தூங்கறீங்களா?"

போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என இவர்கள் கேட்டுக் கொண்டவுடன், "வொய்  நாட்!" என்ற பதிலுடன் தன்னருகில் தயங்கித் தயங்கி வந்தவர்களை குதூகலமாக அணைத்தவாறே போஸ் கொடுத்தாராம் பாருங்கள்.... மல்லு இளைஞர்கள் அனைவரும் மயங்கி விட்டார்களாம்.

அவர்கிட்ட கத்துக்க நமக்கு நெறைய இருக்கு சாமி....



.

தொடர்புடைய இடுகை: எந்திரன் தகவல்கள்
.
.
.

.

Apr 11, 2010

பெண்களுக்கு எதிரி?

நண்பர் பாஸ்கரின் இன்றைய இடுகை "பெண்ணுக்கு பெண்தான் எதிரி!" படித்ததும் கோபமாக வந்தது.


நான் எப்போதும் பெண்கள் பக்கம் பரிந்து பேசுபவன். மக்கள்திலகம்  எம்.ஜி.ஆர்., சூப்பர்ஸ்டார் ரஜினி, இளையதளபதி விஜய் இந்த மூவருக்கும் அடுத்ததாக தமிழகத்தில் பெண்களுக்காக குரல் கொடுக்க ஒருவர்(ன்) உண்டென்றால் அது நான்தான் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. சரி அவசரமாக நண்பனைப் பார்க்க வேண்டியிருந்ததால், திரும்பி வந்ததும் காரசாரமாக பாஸ்கர் அவர்களுக்கு கச்சேரி வைத்துக் கொள்ளலாம் எனப் புறப்பட்டேன்.


வா மச்சான் என பரிவுடன் வீட்டினுள் அழைத்துச் சென்றான் நண்பன். "எப்படி இருக்கீங்க?" எனக் கேட்டவாறு நண்பனின் அண்ணி காப்பி கொண்டு வந்து கொடுத்தார்.  சமீபத்தில்தான் நண்பனின் அண்ணனுக்கு கல்யாணமாகி இருந்தது. "நல்லா இருக்கேன் அண்ணி", என்றவாறு அந்தக் காப்பியை குடித்து முடித்தேன். "காபி நல்லாருக்கு", என்று நான் சொல்ல, "அது டீ", என பதில் வந்து என்னை அசடு வழிய வைத்தது. ஹிஹி என சமாளித்தேன்.

"அம்மா எங்கேடா?", என நான் கேட்க, ஜன்னலைத் திறந்து வீதி முனையைக் காட்டினான். அங்கே அவன் அம்மா ஒரு பெட்டிக்கடையில் அமர்ந்தவாறு மிட்டாய், பிஸ்கட்டுகள் விற்றுக் கொண்டிருந்தார். "டேய், என்னடா நடக்குது?, இப்போ என்ன தேவைன்னு அங்க கடை போட்டுக் கொடுத்திருக்கீங்க?", எனக் கேட்டேன். அவர்கள் வீட்டில் அவன் அம்மா உழைத்துத்தான் உலை பொங்கும் அவசியம் இல்லை. சுமாராய் வசதி உள்ள குடும்பம்தான்.

"மச்சான் உனக்கே தெரியும், அண்ணனுக்கு இப்போதான் கல்யாணம் ஆச்சு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ மச்சான், ரெண்டு சிங்கத்த ஒரு கூண்டுல வெக்கலாம், ஆனா ரெண்டு பொம்பளைங்கள ஒரு வீட்டுல வெக்கக் கூடாதுடா!" என ஏதோ தத்துவம் உதிர்த்தான். எனக்கு ஏதோ புரிந்தது, ஏதோ புரியவில்லை. "சரிடா, நான் வர்றேன்", எனப் புறப்பட்டு வந்தேன்.

ஒருவேளை பாஸ்கர் ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோள் காட்டி எழுதினது சரிதானோ? நீங்கள்  யாராவது சொல்லுங்களேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...