Jan 12, 2012

நண்பன்

Image courtesy: http://www.progarchives.com

விஜய்க்கு ரொம்ப நாளாகவே உடம்பைக் குறைக்க ஆசையோ ஆசை. ஆசை அதன் பல்வேறு பரிமாணங்களில் உருவெடுத்து வெறியில் நிலைகொண்டு நின்ற தருணத்தில், “காலைல ஓட்ஸ் சாப்பிடு, ஒடம்பு கொறையும்”, என்ற அறிவுரையை யாரோ வழங்கியிருக்கிறார்கள்.

ஒரு முனிவனின் தவத்தோடு மூன்று மாதங்கள் இடைவிடாது பிடித்ததோ பிடிக்கவில்லையோ தினப்படி ஓட்ஸ் கஞ்சி குடித்துக் கரைத்தாயிற்று. கஞ்சி கரைத்ததும் காசு கரைந்ததும்தான் நடந்ததே தவிர உடம்பு கரைந்தபாடில்லை.

எடை மெஷின் முன் போய் நிற்பதற்கு முன்னரே தெரிந்துவிட்டது; அதன் முள் இன்னமும் நான்கு கிலோகிராம்கள் அதிகம்தான் காட்டும் என்று. எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை எடைமெஷின்.

கூப்பிட்டு விசாரித்ததில்தான் தெரிந்தது, காலை ஏழுமணிக்கு ஒண்ணரை சொம்பு ஓட்ஸ் கஞ்சியும், அதன்பின் எட்டரை மணிக்குப் பசிக்கிறதே என்று வழக்கம்போல் இரண்டரை ப்ளேட் நாஸ்தா தின்பதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் நம்ம விஜய்.


”யோவ்...........”, என்றால்


“என்னா சார் பண்றுது யாரும் தெளிவா சொல்லலையில்ல”, என்று பதில் வருகிறது.


இப்போது அந்த எக்ஸ்ட்ரா நான்கு கிலோவையாவது குறைக்க விஜய் ஓட்ஸ் சாப்பிடுவதைக் குறைத்திருப்பதாகக் கேள்வி


------------------

லோகேஷுக்கு இரண்டு மகன்கள். ஒருநாள் மாலை அரக்கப்பரக்க அலுவலகத்திலிருந்து புறப்பட்டார்.

“என்னா சார்?”

“வைஃப் வீட்ல இல்லை சார். பசங்களை டியூஷன்ல கொண்டு விடணும்”

“எதுக்கு சார் டியூஷன் எல்லாம். வீட்லயே படிக்க சொல்லுங்க”

“அட நீங்க வேற, சிலபஸ் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு சார். நம்மால சமாளிக்க முடியாது”

“என்ன படிக்கறாங்க?”

“பெரியவன் யூகேஜி, சின்னவன் எல்கேஜி”


------------

கண்ணனுக்கு நல்லவேளை ராமன் என்று அவனைப் பெற்றவர்கள் பெயர் வைத்திடவில்லை. கண்ணன் கதை கண்ணனின் கதையேதான்.

“மச்சி”

“சொல்லு சந்தீப்”

“உங்க அப்பா இந்த வீக்-எண்ட் ஊருக்குப் போறாரா?”

“ஆமாம்”

“இல்ல, நானும் என் கேர்ள்ஃப்ரெண்டும் பேசிப்பழகி நாளாச்சு, ஒரு அரைநாள் உங்க வீடு கெடைச்சா கொஞ்சம் நாங்க சொந்த விஷயம் எல்லாம் டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கு, பண்ணிக்குவோம்”

“சொந்த விஷயம் டிஸ்கஷன் அப்டின்னா?”

“ஏ, சொன்னா வெளங்காதா உனக்கு?”

“சரி அப்போ அந்த டிஸ்கஷன்ல என்னையும் சேத்துக்கோ, எடம் தர்றேன்”

”டேய்! அவ என் கேர்ள் ஃப்ரெண்டுடா”

“இருக்கட்டும்! நான் எவ்ளோ ரிஸ்க் எடுத்து இந்த ஹெல்ப் பண்றேன்”

“இதுல என்னடா ரிஸ்கு” 

”எங்க வீட்ல, இல்லை அக்கம்பக்கத்துல இந்த விஷயம் தெரிஞ்சா என்னாகும் யோசி, அது ஒண்ணும் பெரிசில்லை”

“போடா! பேமானி!”

அந்த டிஸ்கஷன் நடக்காமல் போன காரணத்தால் சந்தீப் சமீபத்தில் தன் காதலியை இழந்து தாடி வளர்க்காமல் தவிப்பதாகக் கேள்வி.

-----------

இப்படிப்பட்ட அற்புதமான மூன்று நண்பர்களுடன் கடந்த மூன்று மாதங்களாக ஆபீஸ் பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். தடாலடியாக ஒரு ப்ராஜக்ட்டைக் காட்டி அதில் இப்போது என்னை அமர வைத்திருக்கிறார்கள்.

ஐ மிஸ் யூ மை டியர் த்ரீ இடியட்ஸ்!
.
.
.

1 comment:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...