Nov 9, 2008

தெலு(ங்)கு

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் வீட்டில் சுந்தரத் தெலுகு மாட்லாடும் ஒரு கோடி பேரில் நானும் ஒருவன். சென்னைத் தெலுகு சேலம் தெலுகுவை கிண்டலடிப்பதும், சேலம் தெலுகு திருநெல்வேலித் தெலுகுவைக் கிண்டலடிப்பதும், திருத்தணி சென்னையைக் கிண்டலடிப்பதும்தான் இதில் காமெடி.

அவரவர் வட்டாரத்தமிழை தெலுகுவாக transliterate செய்வது அடுத்த காமெடி. உதாரணம்: கோவையில் செஞ்சுபோட்டு, தின்னுபோட்டு என்பார்கள், தமிழில். சிலர் இதைத் சேசிவேசி, தினிவேசி என்று தெலுகுப் "படுத்துகிறார்கள்".

சும்மா என்ற சொல், சுகமா என்பதில் இருந்து வந்ததாய் சொல்வர். நெல்லை வட்டாரத்தில் "சௌக்கியமா" என்பதை "சுகமா இருக்கீயளா?" என்பார்கள். இதை தெலுகுப் படுத்தி, "ஊரிக (சும்மா) உன்னாரா (இருக்கீங்களா) ? என்கிறார்கள்....!!?

ஏமி கொடும பாசு இதி...!!!!

By the way... மொழி விற்பன்னர்கள் தெலுகுவை இந்தியாவின் இரண்டாவது இனிய மொழியாக பெங்காலிக்கு அடுத்து சொல்கிறார்கள். தமிழ் எங்கே சார்....?

Nov 1, 2008

வட சென்னையும் அதன் சாபக்கேடும்..

1990ல் சென்னை வந்தேன். 18 வருடங்கள். அதே சாலைகள், அதே பாலங்கள், அதே போக்குவரத்து நெரிசல், மழை வந்தால் அதே குண்டும் குழியுமான கடந்தே செல்ல முடியாத வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ் பாலங்கள். சாலைகளில் காத்திருந்து காத்திருந்து வயது ஏறியதுதான் மிச்சம்.

கட்டப்பட இருந்த ஒரே பெரம்பூர் பாலத்தையும் கட்ட விடாமல் 'அம்மா' அவர்கள் புண்ணியம் கட்டிக் கொண்டார். பத்து வருடங்களாக ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது பால வேலை. வாழ்க ஜனநாயகம்.

வைரமுத்து "கள்ளிக்காட்டு இதிகாசத்தில்" எழுதியது போல், கடந்து செல்லும்போது கடவுள் கூட கண்ணை மூடிக்கொள்வார் என நினைக்கிறேன்.

தென் சென்னைக்காரன் கட்டும் அதே வரியைத்தான் நானும் கட்டுகிறேன். ஏலே அரசியல்வாதிகள், ஏன் இந்த ஓர வஞ்சனை?
Related Posts Plugin for WordPress, Blogger...