Jul 31, 2016

கபாலி


#மகிழ்ச்சி

நேற்று #கபாலி பார்த்தேன்.

பா.ரஞ்சித்தின் அட்டக்கத்தி ரிலீஸ் ஆனபோது நண்பர் நாகராஜ் over a dinner table கொடுத்த விமர்சனத்தை வைத்து படம் குறித்து என் கருத்தை நிறுவிக் கொண்டேன். டிவியில் அந்தப் படத்தைப் போட்டபோதும் ரெகார்டு செய்து வைத்து ஓரிரண்டு முறைகள் பார்க்க முயற்சித்தேன். எனக்கு ரொம்பவும் போரிங் என்று தோன்றியதால் எழுந்து போய் விட்டேன்.

ரஞ்சித்தின் மெட்றாஸ் - இந்த உலகோர் கொடுத்த ஓவர் ஹைப் ஒன்றே போதுமானதாய் இருந்தது, அந்தப் படத்தை நான் பார்க்காமல் இருந்திட. (இந்த வகையான வெறுப்புகளை மனதில் விதைத்துக் கொள்வதிலிருந்து வெளிவர என்ன வழி?) மெட்றாஸும் டாடா ஸ்கை ரெகார்டில் உறங்குகிறது. அதைப் பார்க்கும் பொறுமை இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

சரி, கபாலிக்கு வருவோம்.

//ஒரு ரெண்டு வாரங்கழிச்சு, அடுத்தடுத்து மூணு காட்சி. பெரம்பூர் எஸ்2ல போயி ஒக்காந்து பாத்துத் தொலையப்போறேன். யாரேனும் கூட சாவுறதுக்கு வர்றீங்கன்னா, தெரியப்படுத்துங்க. டிக்கட் வாங்குறேன்//

என்று கோகுல் எழுதியிருந்தான். போகலாம் என்றிருக்கிறேன்.

இந்தப் படத்தைக் கடந்த பத்து நாட்களில் பார்த்தவர்கள் இருநூற்று நாற்பத்தெட்டு விதங்களில் விமர்சனம் படத்தார்கள்.

அதில் டாப் 5 வகைகள் இவை...

1) படம் அட்டர்ஃப்ளாப். கேவலாமா இருக்கு.
2) மரணமாஸ் மூவி. கபாலிடா...
3) நல்லாதான் இருக்கு.
4) இது ரஞ்சித் படம் இல்லை
5) இது ரஜினி படமும் இல்லை

என் தாழ்மையான கருத்தினில் எல்லாமுமே துரிதஸ்கலிதங்கள். In fact, நான் எழுதும் இதுவும் கூட அவற்றுள் ஒன்றாயிருக்கலாம். You need a ton times viewing to review Kabali. If you don't have patience to watch it even once, thats fine.... it is not your cup of movie.

ரஜினியையும் ரஞ்சித்தையும் விடுங்கள்....

படத்தின் பாத்திரப் படைப்புகள், ராதிகா ஆப்தே, தன்சிகா, தினேஷ், சந்தோஷ் நாராயண் + அவரின் அபரிமிதத் துணிச்சல் (ங்கொய்யால ரகம்), The making என்று ஒரு பத்து - இருபது விஷயங்களைப் பட்டியலிட்டால் குறைந்தது ஒவ்வொன்று பற்றியும் இருநூறு வார்த்தைகளாவது பேசலாம். ஆனால், அதுவெல்லாம் அவசரம் இல்லாமல் நிதானமாக இன்னும் சிலமுறைகள் படம் பார்த்துவிட்டுச் செய்ய வேண்டியவைகள்.

ஒன்றேவொன்றைச் சொல்லவேண்டுமென்றால், it is not another movie.... not just another movie of Rajini. அவ்வளவுதான். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. Go, watch.... if you haven't watched it already.

அப்படியும் மேலும் என் கருத்தைச் சொல்ல வேண்டுமென்றால், எனக்குத் தோன்றியதைச் சொல்லுவேன். நான் பார்த்த ரஜினி படங்களில், “எங்கேயோ கேட்ட குரல்” படத்திற்குப் பிறகு நான் ரொம்பவும் ரசித்த ரஜினி படம் இது. (இடையில் வந்த பல நல்ல படங்களை நான் பாராது இருந்திருக்கலாம்).

ரைட்....

இப்போது துரிதஸ்கலிதர்கள் பற்றி....

நீங்கள் so called ரஜினி ரசிகர் என்றால் ரஜினியை ஒரு புட்டியில் அடக்கினீர்கள். அல்லது, ரஜினி நின்னா ஸ்டைல், நடந்தா ஸ்டைல் என்ற நூற்றாண்டு டயலாகை மறவாது பேசி, thats ok man, its a good movie.... after all our thalaivar comes in to the screen, what else you need என்று என்ன பார்க்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதறியாது உளறினீர்கள். ரஞ்சித்துக்கு என்று ஒரு வரையறை வைத்துக் கொண்டு அதைத் தாண்டி அவர் வந்துவிடக்கூடாது என்று ஏங்கினீர்கள். அந்த ஏக்கம் ஏமாற்றத்தில் முடிந்தபோது பக்கத்து சீட்காரனைக் குத்த ஓங்கிய கையை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாது என்னத்தையோ ட்வீட்டினீர்கள், ஃபேஸ்புக்கினீர்கள். ரஜினியை sofa’வில் ரிலாக்ஸ்டாக உட்கார்ந்து கொண்டு பஞ்ச் எல்லாம் இல்லாத டயலாகுகள்அடிக்க வேண்டாம் என்கிறீர்கள். ரஞ்சித்தை வேகமாகப் படம் எடுக்கச் சொல்கிறீர்கள். எஸ்பிபி ஓபெனிங் ஸாங் கொடுக்காத ரஜினி படமா என்கிறீர்கள். ரஞ்சித்துக்கு க்ளைமாக்ஸ் எப்படி எடுக்க வேண்டும் என்று பாடம் எடுக்கும் அறிவு உங்களுக்கு இருப்பதாக நம்புகிறீர்கள்.

தயவு செய்து நீங்கள் படம் பார்ப்பதை நிறுத்தி விடுங்கள்.

நிற்க....

...படம் பிடிக்கவில்லை, நன்றாக இல்லை என்று சொன்னவர்களை விட..... படம் நல்லா”தான்” இருக்கு என்று சொன்னவர்கள் இந்த உலகுக்கு எதையோ சொல்ல விழைகிறார்கள் என்று எனக்குப்படுகிறது. In fact, நம்மை ஆகப்பெரும் டரியல் டெலிகேட் பொஸிஷனில் தள்ள வல்லவர்கள் இவர்கள்தான்.

படம் பிடிக்கவில்லை என்றால் - thats fine. உங்க டேஸ்ட்டுக்குப் படம் ஒத்து வரவில்லை.

படம் நல்லாயில்லை என்றாலும் ஓகே. உங்களுக்குத் தெரிந்தது, புரிந்து கொள்ளும் சக்தி அவ்வளவுதான்.... அல்லது உங்களுக்குக் கமல், மணிரத்னம் என்று ப்ரிஃபரன்ஸஸ் இருக்கலாம். அல்லது ரஜினி படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டத்தைவிட்டு நீங்கள் வெளிவர விரும்பாத ஆளாக இருக்கலாம் - thats also fine.

நல்லா”தான்” இருக்கு என்பது என்ன வகையான விமர்சனம் என்று புரியவில்லை. அப்படி என்னத்துக்கு காம்ப்ரமைஸ் செய்து கொண்டு படம் பார்க்கணும்?

இன்னொரு வகையினர் உண்டு. இப்படிப்பட்ட படம் எடிசன் காலத்திலிருந்தே வந்ததில்லை என்பவர்கள். அது இன்னும் டேஞ்சர். அப்படிப்பட்ட விமர்சனங்கள் தான் மெட்றாஸை விட்டு என்னை விலக்கி வைத்தவை.

எனிவேஸ்ஸ்ஸ்.... கபாலி படத்தின் flaws, லாஜிக் ஓட்டைகள் பற்றி நிறைய பேர் நிறைய கேட்டு விட்டார்கள். என் கண்ணுக்கு அப்படி ஒன்றும் நெருடவில்லை.

அப்படியே கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு என் பங்கிற்கு நானும் கேட்க வேண்டுமென்றால்....

1991’ல் ஜெயிலிக்கு உள்ளே சென்ற கபாலி எப்படித் தன் பேச்சினூடே வடிவேலு டயலாக் ஒன்றை quote செய்கிறார் என்ற ஒன்றே ஒன்றுதான்.

#நெகிழ்ச்சி
Related Posts Plugin for WordPress, Blogger...