Jun 30, 2011

பாட்டும் நானே பாவமும் நானே

நான் எந்தவிதத்திலும் 'யாரு'வைப் போலவும் இல்லை என்றாலும் தங்கமணி ஒரு விஷயத்தில் 'மிஸஸ்.யாரு'வைப் போல. நான் இசை, எழுத்து, இலக்கியம் (!!) என்று வாழும் நிலையில் அவர் மார்கழிக் கோலங்கள், சமையல் கலை, கிராஃப்ட் தொடர்பான புத்தகங்கள் மற்றும் டி.வி. நிகழ்ச்சிகளிடையே வாழ்பவர்.

கல்யாணமான நாள்தொட்டு எங்களிடையே பரஸ்பரம் பல மனக்குறைகள் உண்டு. அவர் போடும் கோலங்களை நான் ரசிப்பதில்லை, நான் எழுதும் எழுத்தை (!!) அவர் கண்டு கொள்வதில்லை என்பன போல. இவற்றில் என் பக்கமிருந்து மிக முக்கியமான ஒன்று நான் பாடும் பாடல்களுக்கு அவர் ஒருபோதும் செவிசாய்ப்பதில்லை என்பது.

இது சம்பந்தமான 'செவிசாய்க்கா' அனுபவங்களைச் சொல்லி போரடிப்பதைவிட என் மனக்குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுபவத்தைச் சொல்லிவிடுகிறேன்.

கால்-டாக்சி'யில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். FM ரேடியோவில் வரிசையாக என் மனதிற்குப் பிடித்த நல்ல நல்ல மெலடி பாடல்களாக ஓடிக் கொண்டிருந்தன. வழக்கமான கெட்டப் பழக்கமாக, நான் கண்களை மூடிக்கொண்டு அந்தப் பாடல்களை கொஞ்சமே சத்தமாக பாடிக் கொண்டிருந்தேன். நான்கைந்து பாடல்கள் கடந்திருக்கும், இன்னமும் நான் பாடுதலைத் தொடர்ந்த வண்ணமே இருக்கிறேன். எனக்கே என் குரல் இன்று புதிதாய்த் தெரிகிறது. பிசிரு, சுருதி பேதமற்ற தெளிவான குரலா என் குரல்? ஆஹா, இனி சாதகங்களை முறைப்படுத்தி, தொடர்ந்து பயிற்சி செய்து குரல்வளத்தைத் தேற்ற வேண்டும் என எண்ணிக் கொள்கிறேன்.


அப்படியே அடுத்து ஒலித்த 'மிஸ்டர் ரோமியோ' படத்தின் மெல்லிசையே'வைப் பாடிக் கொண்டே திரும்பிப் பார்க்கிறேன்....


....பார்க்கிறேன்.....

....பார்க்கிறேன்.....

....பார்க்கிறேன்.....

குளமாக, ஏரியாக, ஆறாக, கடலாக.... என்ன வேண்டுமானால் 'prefix' போட்டுக் கொள்ளுங்கள். அப்படிக் கரகரவென தங்கமணியின் கண்களில் கண்ணீர் வழிகிறது.

"என்னம்மா, என்னாச்சு?"

"வந்துங்க.... நீங்க எவ்ளோ நல்லாப் பாடறீங்க! சினிமாவுல எல்லாம் என்ன பாடறாங்க? அவங்க பாடறது எல்லாம் உங்க பாட்டுக்கு ஈடாகுமா? நீங்க இவ்ளோ நல்லா பாடறதை இத்தனை நாள் கேட்காத செவிடா இருந்துட்டேனே. அதை நெனச்சேன், அழுகையா வந்துடுச்சி...."

.... எனச் சொல்வார் என எதிர்பார்த்தேன்....

... ஆனால்…

... ஆனால்…

... ஆனால்…

"ஒரே தூக்கம்ங்க! ஆஆவ்...! கொட்டாவியா கொட்டாவியா வருது. அதுல கண்ணுல தண்ணியாக் கொட்டுது"

அடுத்து சுதா ரகுநாதன் பங்கேற்கும் அரங்கிசை. முதலில் "குறையொன்றும் இல்லை" ராகம் - ராகமாலிகா, ஆதி தாளம்.

"குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா....
 குறையொன்றும் இல்லை கண்ணா.... ஆ.ஆ.ஆ.ஆ..."
.
.
.

Jun 27, 2011

மழலை, பேச்சு, பேசுதிறன்

அகில் இப்போதுதான் ப்ளா ப்ளா ப்ளா என இரண்டு மூன்று எழுத்துக்கள் கூட்டிப் பேசத் துவங்கியிருக்கிறான்.  அகிலுக்காக எதையோ தேடிக் கொண்டிருந்த போது, இந்தப் பதிவு வாசிக்கக் கிடைத்தது. குழந்தைகள் மழலை மொழி பேசத் துவங்குகையில் அவர்களின் பேசுதிறனை மேம்படுத்த சில டிப்ஸ்'கள் இங்கே...

முதல் அட்வைஸ்: எல்லாக் குழந்தைகளுமே ஒரே மாதிரியான காலக் கட்டத்தில் பேசத் துவங்கிவிடுவது இல்லை. சில குழந்தைகள் ஒரு வயது நிறையும் முன்னே சுமாராகப் பேசத் துவங்குகின்றன. சில மழலைகள் இரண்டு வயது கடந்த பின்னரே ஆரம்பப் பேச்சுக்கு அடி போடுகின்றன. எனவே, ஒரு குழந்தையின் செய்கைகளை மறு குழந்தையிடம் எப்போதும் எதிர்பாராதீர்.

இப்போது மேம்படுத்த சில டிப்ஸ்.......


பேசுங்கள்.... நீங்கள் பேசுங்கள்:


உங்களைத் தவிர வேறு யாரும் உங்கள் குழந்தைக்கு பிரைமரி டூல் என இருந்துவிட முடியாது. எனவே, குழந்தைக்கென நேரம் ஒதுக்கி பேசிக்கொண்டே இருங்கள்.  குழந்தையுடன் ஏதேனும் விளையாடிய வண்ணம் பேசுதல் சாலச் சிறந்தது. ஏனெனில், குழந்தைகளின் கவனிப்புத்திறன் நம் கவனிப்பித்திறனைக் காட்டிலும் சிறந்தது. உங்கள் குழந்தை காதுகளால் கேட்பதை திரும்பச் சொல்வதைக் காட்டிலும், கண்களால் காண்பதை திரும்பச் செய்து பேசுகிறது..... புரிகிறதா?


கண்ணாடி..... முன்னாடி.....


கண்ணாடியின் முன் உங்கள் குழந்தையை நிறுத்திப் பாருங்கள். உங்கள் குழந்தைக்கும் ஆகட்டும் உங்களுக்கும் ஆகட்டும் பொழுது போவதே தெரியாது. கண்ணாடியில் எதிரில் இருக்கும் தன் உருவம்  தனக்கே தனக்கான, தான் சொல்வதைத் தட்டாமல் செய்யும் தோழன்/தோழியாக உங்கள் குழந்தை உணர்வதால் பேச்சு மேலும் பலப்படும். இங்கே நீங்கள் இடையில் புகுந்து பாடவோ, அல்லது ஏதேனும் கதை சொல்லிப் பேசவோ செய்தால் இன்னும் சிறப்பு.


பேர் சொல்லும் பிள்ளை....
நாம் பொதுவாக ஃபேன், லைட், டிவி போன்ற பொதுப்படையான பொருட்களை மட்டும் குழந்தைகளுக்கு முதலில் அறிமுகம் செய்கிறோம். மற்ற பொருட்கள் "அது அல்லது இது" என்றாகிப் போகிறது. அப்படி அல்லாமல், குழந்தை ஒரு கார் பொம்மையை வைத்து விளையாடினால், "கார் ஓடுது பாரு", "அந்தக் கார் என் கிட்ட குடு", "தேங்க்ஸ் செல்லம் கார் குடுத்ததுக்கு" என எந்தப் பொருள் என்றாலும் நீங்கள் பெயரைக் குறிப்பிட்டுப் பேசுவதை வழக்கம் ஆக்கிக் கொண்டால் குழந்தைகளின் மொழி அறியும் திறன் அல்லது பொருள் அறியும் திறனும் கூட வேகமாக வளரும்.


நண்பேன்டா....
மொழித்திறன் வளர்ச்சியில் உங்கள் குழந்தைக்கு அவர்கள் வயதை ஒத்த நண்பர்களை அறிமுகப்படுத்துவதை விட சாலச் சிறந்த வழிமுறை ஏதும் இல்லை என்கிறார்கள் வல்லுனர்கள். 'பேசப் பேசத்தானே பேச்சு?"


இந்த விடியோவைப் பாருங்கள்..... நல்ல உதாரணம்தானே?




நன்றி: Build baby language skills

Jun 23, 2011

We want to change ....

கூகுள் இப்போது தன் மொழி பெயர்ப்புச் சேவையில் தமிழ் மொழியையும் பெருமையுடன் இணைத்து நம் முழிபெயர்க்க வைத்துக் கொண்டிருக்கிறது..

கீழே நான் தந்திருப்பது நான் எழுதின ஒரு முன்னாள் பதிவின் மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு உதவி: கூகுள்

இது என்ன பதிவு, நான் எப்போது எழுதினது எனக் கண்டுபிடிப்பவர் யாரேனும் இருந்தால், அவர் வேலைவெட்டி ஏதுமில்லாத என் நீண்ட நாள் வாசகர் என அடையாளம் காணப்படுவார்.


There is a story. Religious man, a Christian girl in love with a stranger. Her father was opposed to the traditional father in the house. Because he said, "If I accept a stranger matattavanai soninlaw not my, I agree with you maracce religion," he said. We tell her lover, he agreed to the religion of love and abundance. He started to go to church with her.

After a few days she came crying to her father.

"Yes, dear, what happened?"
"Dad, he ......."
"What happened dear, religion will not change now ...?" colrana
"Come on .... papa ...."
"Tell me what you rather colrana Religion?"
Father, come ......"
"What you get lost ....."
"He poyittaruppa patiriyara ...."

In general, we are expecting others to change. But that'll change a definition. Enough of this marina, on top of it .... that marate

If you want to compare this to our matrimonial website in our case - and if you know it s side. "I expect a girl with a blend of modern & our traditional values" that is all. What is the rate at which light avanavanukke.


Jun 21, 2011

அன்புள்ள அப்பா - திடீர்த் தொடர்

courtesy : http://ecoki.com


 "Be kind to thy father, for when thou wert young, Who loved thee so fondly as he? He caught the first accents that fell from thy tongue, And joined in thy innocent glee." -- Margaret Courtney 

கடந்த ஞாயிறன்று உலக அப்பாக்கள் தினம் உலகெங்கும் பரவலாகக் கொண்டாடப்பட்டதா எனத் தெரியவில்லை. எனினும், இணைய உலகில் உலாவரும் (கிட்டத்தட்ட) ஒவ்வொருவரும் குறைந்தது பத்து முறைகள் ஒருவருக்கு ஒருவர் 'தந்தையர் தின' வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. இது போன்ற அப்பா, அம்மா, நண்பன், காதல் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நாளினைக் கொண்டாடுவது நம் நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு ஸ்டைல் போல ஆகி வளர்ந்து விட்டாலும், இது தேவை-தேவையில்லை எனும் விவாதங்களும் அந்தக் கொண்டாட்டக் கடைபிடிப்புகளுக்கு இடையே நடந்து கொண்டே இருக்கின்றன. 

என்ன இருந்தும் அம்மா, நட்பு, காதல் தினங்களுக்குக் கிடைத்த மரியாதை தந்தையர் தினத்திற்குக் கிடைக்காததைக் கண்கூடாகக் காண முடிந்தது. இதில் வருந்தவோ, வியக்கவோ ஏதுமில்லை. அப்பாக்களின் கதை என்றுமே இங்கே சொல்ல மறந்த கதைதான். பெண் பிள்ளைக்கும் அப்பாவிற்குமான அன்பை இங்கே கதைகள், சினிமாக்கள் மற்றும் தொலைகாட்சி விளம்பரங்கள் பதிவு செய்திருக்கின்றன. அப்பா - மகன் இடையேயான அந்த உறவு பற்றின பதிவுகள் இந்தத் தளங்கள் அனைத்திலும் எப்போதேனும்தான் தென்படுகின்றன. 

என் பதினான்காம் வயதினில் என் அப்பா எங்களை விட்டுச் சென்றார். அதன் பின் எனக்கு எல்லாமுமே அம்மாதான். சின்ன வயது முதலே அம்மாக்கோண்டு என வளர்ந்த நான் அப்பாவின் அன்பைப் பெற என் அந்தச் சின்ன வயது வரை என்றுமே விழைந்ததில்லை. அதனால் அவர் மறைந்த பின்னரும் கூட பெரிதாய் எதையும் இழந்ததாய் நான் உணர்ந்ததில்லை, இது உங்களுக்குக் கேட்கக் கொஞ்சம் வியப்பாகத் தோன்றினாலும் இதுவே நிஜம்.

எனக்கென ஒரு மகன் வந்தபின் இப்போதுதான் எப்போதேனும் என் தந்தையை நினைத்துக் கொள்கிறேன். மற்றபடி, சில ஆண்டுகளுக்கு முன் நல்லவேலையில் செட்டில் ஆகாமல் திண்டாடிக் கொண்டிருந்த தருணங்களில் மாத்திரம் 'பெரிய படிப்பு' படிக்காமல் போன இயலாமையை எண்ணி மனதால் வைவதற்கு 'சின்ன வயதில்' விட்டுச் சென்ற தந்தை தேவைப்பட்டார் எனக்கு. இப்போது நல்ல உத்தியோகத்தில் இருக்கையில் அவற்றை நினைத்தால் எனக்கு நானே புன்னகைத்துக் கொள்கிறேன்.

என் அப்பாக் கதை இப்படியிருக்க, என் நண்பர்கள் வட்ட்டத்தில், உறவுகள் வட்டத்தில் என நான் சந்தித்து வரும், கேள்வியுறும் அப்பா - மகன் உறவு ரீதியிலான நிகழ்வுகள் எல்லாம் ஜஸ்ட் மேலோட்டமாகப் பார்த்தவாறு எல்லோரும் கடந்து செல்பவை. ஆனால், நான் சந்தித்த அந்த அனுபவங்களில்  கண்டிப்பாகப் பதிவு செய்யவேண்டிய சுவாரசியமான நிகழ்வுகள் உண்டு, பெரும் காவியங்கள் கூட பதிவு செய்யாத உணர்ச்சிமிகு சம்பவங்கள் உண்டு, காரணம் ஏதுமற்று ஒருவருக்கு ஒருவர் புரிதல் ஏதுமின்றி பிரிதல் நிலையில் வாழும் அப்பா - மகன் கதைகள் உண்டு, அன்பே உருவாக 'ரோல் மாடல்கள்' போல இருக்கும், கொஞ்சம் சினிமாடிக், அப்பா-மகன்களும் கூட உண்டு.

அந்த அப்பா - மகன்கள் பற்றின என் பார்வையைப் பதிவு செய்யும் ஒரு சிறு முயற்சியே இந்த சின்னத் தொடர்.

தொடங்கலாமா?
.
.
.


Jun 18, 2011

கோவிந்தனைக் கண்டேன்!


முப்பது வினாடிகள் தரிசிக்க ஐந்து மணி நேரங்கள் கால்கடுக்கக் காத்திருந்து பத்தடி தூரத்திலிருந்து பார்த்தேன் பத்மனை.

என்ன பூக்கள் சூடியிருந்தான்? 

பூக்களை நான் எங்கே கண்டேன்? 

என்ன அலங்காரம்? 

அதையுமெங்கே கண்டேன்?

பின்னே என்னத்தைக் கண்டாய் அவனிடம்?

அவன் கைகளைக் கண்டேன்?

கைகளை?

ஆம், வலது கையைப் பார்த்தேன், தன் பாதம் பணியெனப் பணித்தான்.

சரி...

இடது கையைப் பார்த்தேன்; பணிந்தனையெனில் உன் சம்சார சாகரத்தின் ஆழம் உன் முழங்காலளவுதான், நீந்திக் கடப்பாய் எளிதினில் என்றான். 

அட....

ஆம், அவன் பாதங்களைப் பார்த்தேன்.... மனமுருகிப் பணிந்தேன், மனத்தினால் அவன் முன் சாஷ்டாங்கமாய் வீழ்ந்தேன். எனையறியாது என் கன்னத்தில் உருண்டோடின இரு துளிகள்.

ஏடுகொண்டலவாடா.... வெங்கடரமணா கோவிந்தா கோவிந்தா!




.
.
.

அவன் - இவன் - first look



அவன் அப்படி இருந்தான்...



இப்போது இவன் இப்படியிருக்கிறான்


Jun 9, 2011

சொக்கனின் கார்காலம்


சிறப்புப் பதிவர்: நட்பாஸ் 


இத்தனை நாட்களாக நான் நம் டிவிட்டர் நண்பர் என் சொக்கன் அவர்களின் கார்காலம்என்ற தொடர்கதையைப் படிப்பதை ஏன் தவிர்த்தேன் என்று வியப்பாக இருக்கிறது. ஒரு சமயம் அவருடன் அன்றாடம், நிமிடத்துக்கு நிமிடம் டிவிட்டரில் தொடர்பில் இருப்பதால் அவரை ஒரு இளையராஜா ரசிகராக, புத்தகங்களின் ஆராதகராக நினைக்கத் தோன்றுகிறதே தவிர, அவரை ஒரு இலக்கியவாதியாக என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதை இப்போது படித்துக் கொண்டிருந்தால், சொக்கனும் இந்த வரிகளை ஒரு மெல்லிய புன்னகையோடு கடந்து செல்வார் என்று தோன்றுகிறது- அவருக்கு தான் ஒரு இலக்கியவாதி என்ற பாவனை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் அப்படி அவர் தன்னை நினைத்துக் கொண்டால் அதில் தவறிருப்பதாகச் சொல்ல முடியாது. டிவிட்டரில் உள்ள ஒவ்வொருத்தரும் இலக்கியவாதிதான் என்பதைத் தவிர வேறு ஒரு வலுவான காரணமும் எனக்குத் தோன்றுகிறது. அதைச் சொன்னால் நீங்கள் எல்லாரும் என்னை அடிக்க வருவீர்கள். 

சொக்கனின் கார்காலம் படிக்கும்போது எனக்கு முதலில் வண்ணதாசனின் "போர்த்துக் கொள்ளுதல்" என்ற கதை நினைவுக்கு வந்தது. வண்ணதாசன் தன் கதையை ஏறத்தாழ முழுதும் சரசு என்ற பாத்திரத்தின் பார்வையில் எழுதியிருப்பார். வண்ணதாசனின் அவன் என்ற பெயர் சொல்லப்படாத பாத்திரம், சொக்கனின் கதையில் அரவிந்தனாகப் பேசுகிறதோ என்றுகூட நினைத்தேன். சரசு வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சொக்கனின் செல்வி தன்னுள் பொதித்து வைத்திருக்கிறாள். அவள் அரவிந்தனுக்கு அறிய முடியாத புதிராகவே இருக்கிறாள். ஆனால் சரசுவை அலட்சியப்படுத்தும், சரசுவின் உணர்வுகளில் அக்கறை காட்டாத அந்த அவன், அவனும் இதயம் உள்ளவன்தான். அவனால் தன் உணர்வுகளைப் பேச முடிந்திருந்தால் அவனும் அரவிந்தன் மாதிரி பேசியிருப்பானோ என்று தோன்றுகிறது.

போர்த்துக் கொள்ளுதலைப் படித்த காரணத்தால், எனக்கு கார்காலத்தில் அதன் எதிரொலிகளை நினைவு கூர்ந்து ரசிக்க முடிந்தது. வண்ணதாசனின் சிறுகதையில் வந்தவர்களின் வாழ்வின் மறுபக்கம் சொக்கனின் கார்காலத்தில் தென்படுவதாக நினைத்துக் கொண்டேன்.

எவ்வளவுதான் நேசம் மிகுந்தவர்களாக இருந்தாலும், உடலளவில் ஒன்றுகூட, மன அளவில் நிரந்தரமாய் இருக்கும் நிறைக்க முடியாத இடைவெளி எந்தவொரு தம்பதியராலும் நெருடலாகவே உணரப்படும் என்று நினைக்கிறேன். அதிலும் புதுமணத் தம்பதிகளுக்கு இந்த உணர்வு மனதை வருத்தும் தொடர்ந்த உறுத்தலாக இருக்கும் என்று தோன்றுகிறது. காதல் என்பது தன்வயமாக்கிக் கொள்ளுதல் என்று சொன்னால், இவர்களில் யாருக்கு வலுவான ஆளுமை இருக்கிறதோ அவர்கள் மற்றவரின் ஆளுமையை முழுமையாக தனதாக்கிக் கொள்ள நினைப்பார்கள், இல்லையா?

கார்காலத்தில் செல்விக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை- அவள் அரவிந்தனை உள்ளபடி ஏற்றுக் கொண்டு சூழலின் தேவைகளுக்கேற்ப தன் உணர்வுகளை நெகிழ்த்திக் கொள்கிறாள். ஆனால், அரவிந்தனுக்கு அவள் தன்னை முழுமையாக இப்படி ஒப்புக் கொடுத்ததும்கூட ஒரு குற்ற உணர்வையே தருகிறது- அவன் தனக்கும் செல்விக்கும் இடையில் ஒரு பெரிய பள்ளம் இருப்பதாக நினைக்கிறான்- செல்வியால் அதைக் கடக்க முடிகிறது, ஆனால் அரவிந்தன் எப்போதும் தான் எட்டியே நிற்பதாக உணர்கிறான். தன்னால் ஏன் அவளுடன் இயல்பாக நெருங்கியிருக்க முடியவில்லை, அவளது உணர்வுகளோடு ஒருமித்து உணர முடியவில்லை என்று மன உளைச்சலடைகிறான்- தன் இந்த விலகலுக்கு தனது பணம், பதவி மற்றும் தொழில் ஈடுபாடு இவையே காரணமாக இருக்குமோ என்றே சந்தேகப்படுகிறான்.

தொடர்கதை மிக மெதுவாக, பெரும்பாலும் அரவிந்தனின் மன ஓட்டத்தை ஒட்டியே சென்றாலும் அவனது உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார் சொக்கன். அரவிந்தனுடைய உணர்வுகளுக்கு நம்மால் இசைய முடியவில்லையென்றால், இந்தக்கதையை நம்மால் பத்து நிமிடத்துக்குமேல் படிக்க முடியாது என்று நினைக்கிறேன்.

வண்ணதாசனின் கதையின் சாயலில் சொக்கனின் கதை இருக்கிறது என்று சொல்வது சொக்கனுக்கு நாம் இழைக்கும் அநீதி- இருந்தபோதும், இதைச் சொன்னதற்கு வண்ணதாசன் ரசிகர்கள் என்னை அடிக்க வருவீர்கள் என்றால், அடுத்து நான் சொல்வதைக் கேட்டால் சொக்கனே அடிக்க வந்து விடுவார்.

காளிதாசனின் மேக சந்தேசம் நினைவிருக்கிறதா? ஒரு யக்ஷன், குபேரனின் பணியாள், ஏதோ ஒரு குற்றம் செய்த காரணத்தால் விரட்டி விடப்படுவான். அவன் பருவமழைகால மேகங்களை பிரிந்திருக்கும் தன் காதலிக்கு தூது அனுப்புவான்.

கார்காலம் தொடர்கதையில், ஒரு வகையில் பார்த்தால் அரவிந்தன் யாரோ ஒரு குபேரனுக்குப் பணியாளாக இருக்கிறான். அவன் செய்த குற்றம்? தன் தொழிலில் முனைப்பாக இருப்பது என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் ஒவ்வொரு வாரமும் பம்பாய், கல்கத்தா என்று தன் மனைவியை கண்ணீரும் கம்பலையுமாக விழுங்க முடியாத தொண்டை அடைப்புடன் பிரிந்து செல்கிறான்- தன் காதலையே வெளிப்படுத்தத் தெரியாதவன், பிரிவின் தவிப்பை மட்டும் சொல்லி விடுவானா என்ன?

காளிதாசனின் யக்ஷனுக்குத் தூது செல்ல மேகங்கள் கிடைத்தன, தன் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைத்தன. இங்கே,  அரவிந்தன் மும்பையின் மழைக்கால அழுக்கு சாலைகளில், செல்வி இல்லாத போதுகளின் தன் பிரிவாற்றாமையை அவளிடம் சொல்லக்கூடிய வல்லமை பொருந்திய காதலின் மொழியை, ஒரு பரிசுப் பொருளில் காணத்தேடி அலைகிறான்- சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் உளைச்சல் தரும் பிரிவின் வேதனையை விவரிக்க வார்த்தைகள் கிடைக்காமல். காளிதாசனின் யக்ஷனுக்கு இருக்கிற கவித்துவ உணர்வுகள், சொக்கனின் அரவிந்தனுக்கு சரியான வாக்கியங்களாகக்கூட பிடிபடுவதில்லை.

கதை இதுவரை வந்திருக்கிறது- இனி என்ன நடக்கும் என்பதை வாசிக்க ஆவலாக இருக்கிறேன். 
 .
.
.

Jun 4, 2011

சனிக்கிழமை காக்டெயில்!




மிஸ்டர் ராஜ்தீப் உங்க பணம் சுவிஸ்'சில் இருக்கிறதா?

நேற்று பாபா ராம்தேவின் உண்ணாவிரதம் குறித்த கவரேஜை ஐ.பி.என்.'னில் காட்டுகையில் ராம்தேவ் & கோ உண்ணாவிரதத்திற்கு வருகை தரும் தன் தொண்டர்களுக்கு (!!) அமைக்கும் 650 தாற்காலிக டாய்லெட்கள் பற்றியும், வருகை புரிபவர்களுக்கு சிறப்பு இயக்க ஷட்டில் சர்வீஸ் பஸ்கள் பற்றியும், டெல்லியில் அமைக்கப்பட்டுவரும் மாபெரும் உண்ணாவிரதப் பந்தலையும் ஏதோ கொள்ளைக் கூட்ட கும்பல்களின் சொத்து விபரங்களை பட்டியலிடுவது போல காட்டினார்கள்.

யோவ்! இதெல்லாம் முன்னேற்பாடு நடவடிக்கைய்யா!

இவற்றை ராம்தேவ் செய்யாமல் இருந்திருந்தால்....?

ராம்தேவ் பக்தர்கள் சாலையோரங்களை இயற்கை உபாதைகளுக்கு பயன்படுத்தியதாகவும், டெல்லியின் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் பாபா பக்தர்களால் கதிகலங்கியது எனவும் அலறியிருப்பீர்கள்?  சரிதானே ராஜ்தீப்? 

அப்புறம்.... சொல்லுங்க உங்க சம்பந்தப்பட்ட பணம் எதுனா சுவிஸ்'ல இருக்கா? எதுக்கு இந்த அலறல்?


காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி, கருணாநிதி விளக்கம்

சென்னை ஜூன் 4, 2014: காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி ஏன் என கருணாநிதி தன் கேள்வி-பதில் அறிக்கையில் விளக்கியுள்ளார்.

கேள்வி: "மூன்று வருடங்கள் முன் நீங்கள் "கூடா நட்பு கேடாய் முடியும்" என்று குறிப்பிட்டீர்களே? இப்போது மீண்டும் காங்கிரசுடன் கூடா நட்பு கொள்கிறீர்களா?

பதில்: ஆம், கூடாமல் விட்ட நட்பினால் விளையும் பயன்கள் கேடினில் சென்று முடியும் என்று குறிப்பிட்டேன். எம் மக்களுக்கு (!!!) எங்கள் கூடா(மல்விட்ட) நட்பினால் இந்த மூன்று ஆண்டுகள் நிகழ்ந்த அராஜங்களை மனதில் கொண்டு மீண்டும் மக்களுக்காகவென (!!!) அமைத்த கூட்டணி இது.

ஹெல்மெட் போட்டால்தான் பெட்ரோல்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஒருலட்சத்தி நாற்பதினாயிரம் பேர் சாலை விபத்துகளில் இறக்கிறார்களாம். இவர்களில் பெரும்பாலனோர் இரு சக்கர வாகன ஓட்டிகள். பல நடவடிக்கைகள் மூலம் அரசு இதனை குறைக்க முற்பட்டாலும் இந்த எண்ணிக்கையில் ஏற்றம்தான் இருக்கிறதேயொழிய இறக்கம் இல்லையாம்.

டெல்லியை அடுத்த குர்கான் மாவட்டத்தில் (ஹரியானா) போக்குவரத்து போலீசார் பெட்ரோல் நிலையங்களுக்கு லேட்டஸ்டாக விடுத்திருக்கும் அறிவுரை நல்ல ஒன்றாகத் தெரிகிறது. "ஹெல்மெட் போட்டு வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் தாருங்கள்" என்பதே அது. நிச்சயம் நல்ல வழிமுறை. நம்மூரிலும் இதைக் கடைபிடித்தால் நன்றாக இருக்கும். <நன்றி: தினமலர்>



மல்லையாவும் அஸ்வினும்

ஃபேஸ்புக்ல இருதினங்களாக உலாவரும் இந்த விடியோ.... சூப்பரப்பு!


.
.
.

Related Posts Plugin for WordPress, Blogger...