Sep 29, 2013

நாலு கர்ப்பிணிகளும் ஒரு டொக்டரும்

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்.....


ரொம்பவே அழகான ஃபோட்டோக்ராஃபி, நான்கு அல்லது ஐந்தே ஐந்து ஷூட்டிங் ஸ்பாட்கள், தேவையான அளவு மட்டுமே நடிக்கும் நடிக நடிகைகள், ரொம்பவெல்லாம் அலட்டல் இல்லாத; நீட்டி முழக்காத ஸ்க்ரிப்ட், தேவைக்கு சில பாடல்கள், கொஞ்சம் நாடகத்தனம் - இதுதான் Zachariayude Gharbinikal. மகப்பேறு மருத்துவர் லால்’தான் படத்தினிண்ட வயசான ஹீரோவாணு. அவர் சந்திக்கும் நான்கு கர்ப்பிணிப் பெண்களின் கதைதான் இந்தப் படம்.

படத்தின் ஸ்பெஷல் மென்ஷன் ஃபாத்திமாவாக வரும் ரீமாவின் சௌந்தர்யமும், அவர் அனியனாக வரும் அந்த த்தடியனின் (அப்படித்தான் மலையாளத்தில் படிக்கணும்:) ) காமெடிகளும். ரீமாவின் காதலனாக வரும் அஜு வெர்கீஸ்.... வெய்ட் வெய்ட்.... அஜுவோ பிஜுவோ அவரை விட முக்கிய மென்ஷன் படத்தின் இசையமைப்பாளர். அந்த ஆல்பம்’தனமாக "வெயில்...ச்சில... கிளி”  என்ற வார்த்தைகள் கொண்டு வரும் பாடல் அள்ளிக் கொண்டு போகிறது.

சீட்டின் நுனிக்கெல்லாம் உங்களை டைரக்டர் எங்கேயும் எப்போதும் வர விடுவதில்லை. நன்கு ரிலாக்ஸ்டாக படத்தைப் பார்க்க வைக்கிறார். (படத்தின் க்ளைமாக்ஸில் வெளிப்படும் ஒரு நிஜம் நம் முகத்தில் அறைகிறது - அது மட்டும் ஒரு பெரிய விதிவிலக்கு). நான்கு பெண்களின் கர்ப்பங்களிலும் ஒவ்வொரு விதத்தில் ஏதோவொரு விதிமீறல் இருக்கிறது.  அவற்றின் பின்னணியில் புனையப்பட்ட கதைப் பின்னலில் காம்ப்ரமைஸும் இல்லை; க்ளிஷேவும் இல்லை; ‘ஸாரி கொஞ்சம் ஓவர்’த்தனமும் இல்லை. டைரக்டரை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும்.

ஸ்டார் வேல்யூ இல்லாமல், பன்ச் டயலாக் இல்லாமல், தளுக்கல்கள் குலுக்குகள் இல்லாமல், சந்தான சூரிகளின் சூர மொக்கைகள் இல்லாமல் எல்லாம் கூட நாமும் இங்கே படம் எடுக்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் கமர்ஷியல் நிர்பந்தங்கள் புடைசூழ இந்தத் திரையுலகம் உலா வருவதால் Zachariayude Gharbinikal போல எந்த இடத்திலும் காம்ப்ரமைஸ் ஏதும் செய்து கொள்ளாத படங்கள் இங்கே வரத் தொடங்கி விட்டனவா எனத் தெரியவில்லை.

அது ஒரு கனாக்காலம் போன்ற படங்களுக்கே “ஒன்னால தூக்கம் கெட்டுப் போச்சு” போன்ற பாடல்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. எனிவேய்ஸ்.... இந்தப் படத்தினால் யாரேனும் நம்மவர்கள் ஈர்க்கப்பட்டு இதைத் தமிழுக்குத் தருவித்தால் லாலிண்ட கேரக்டரிலே நாமெல்லாம் பிரகாஷ்ராஜைக் காணத் நேரலாம். ”ஒன்னால தூங்கங் கெட்டுப் போச்சி” ஒன்றை ஏதேனும் ஒரு கர்ப்பத்தின் கொசுவத்திச் சுழற்றலில் திணிக்கத் தலைப்படும். அதிலே ஆரு நடிப்பா என்று நான் இப்போ யோசிச்சிங்.... ஹிஹ்ஹீ!

....and why I inserted "மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு" in the beginning?  You watch the movie no...!

Sep 22, 2013

என்னத்த சொல்ல....


நண்பர் ஒருவர் வழக்கமாகத் தன் நெற்றியில் இட்டு வரும் திருமண் நிறம் அன்று கொஞ்சம் மாறிப்போயிருந்தது.

“என்ன சார்? கலர் வேறயா இருக்கே?”

“என்னது?”

“உங்க நெத்தியில? ஏதோ நெறம் மாறிப்னாப்ல இருக்கே?”

“அது கொஞ்சம் அவசரத்துல இட்டுண்டு வந்துட்டேன் சார். கையில எடுத்த... இந்த....அது.... அது எதோ பழையசு போல., கொஞ்சம் நெறம் தப்பிடுத்து. ரொம்ப எல்லோயிஷ் ஆயிடுத்தா?”

“________ நெறமாட்டம் இருக்கே?”, என்றேன்.

“அப்படியா?”

“இப்ப அசப்புல பாத்தா உங்களை ___கலை’ன்னு சொல்லலாம்”

“என்னது?”, அடுத்த க்ஷணம் இடது கையால் தன் நெற்றியிலிட்டதைப் பரபரவென்று அழித்துக் கொள்கிறார்.

“சார்! லலாட ஷூன்யம் ஸ்மசான துல்யம்பா”

“என்ன சார் அது?”

“பாழும் நெத்தி மயானத்துக்குச் சமமாம்”

“அது பரவால்லை சார். இதுதான் படாது”

பிகு: என்ன செண்ட்ரல் கவர்மெண்ட்; என்ன ஸ்டேட் கவர்மெண்ட். சப்செக்ட்லேயே இன்னும் இந்த அடிதடி இருக்குதே....!

Sep 4, 2013

முயற்சித்தேன்! முடியவில்லை!

மூன்றே வரியில்
ஒரு கவிதை எழுதச்
சொன்னார்கள்

முயற்சித்தேன்
முடியவில்லை!
Related Posts Plugin for WordPress, Blogger...