Nov 9, 2008

தெலு(ங்)கு

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் வீட்டில் சுந்தரத் தெலுகு மாட்லாடும் ஒரு கோடி பேரில் நானும் ஒருவன். சென்னைத் தெலுகு சேலம் தெலுகுவை கிண்டலடிப்பதும், சேலம் தெலுகு திருநெல்வேலித் தெலுகுவைக் கிண்டலடிப்பதும், திருத்தணி சென்னையைக் கிண்டலடிப்பதும்தான் இதில் காமெடி.

அவரவர் வட்டாரத்தமிழை தெலுகுவாக transliterate செய்வது அடுத்த காமெடி. உதாரணம்: கோவையில் செஞ்சுபோட்டு, தின்னுபோட்டு என்பார்கள், தமிழில். சிலர் இதைத் சேசிவேசி, தினிவேசி என்று தெலுகுப் "படுத்துகிறார்கள்".

சும்மா என்ற சொல், சுகமா என்பதில் இருந்து வந்ததாய் சொல்வர். நெல்லை வட்டாரத்தில் "சௌக்கியமா" என்பதை "சுகமா இருக்கீயளா?" என்பார்கள். இதை தெலுகுப் படுத்தி, "ஊரிக (சும்மா) உன்னாரா (இருக்கீங்களா) ? என்கிறார்கள்....!!?

ஏமி கொடும பாசு இதி...!!!!

By the way... மொழி விற்பன்னர்கள் தெலுகுவை இந்தியாவின் இரண்டாவது இனிய மொழியாக பெங்காலிக்கு அடுத்து சொல்கிறார்கள். தமிழ் எங்கே சார்....?

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...