Nov 1, 2008

வட சென்னையும் அதன் சாபக்கேடும்..

1990ல் சென்னை வந்தேன். 18 வருடங்கள். அதே சாலைகள், அதே பாலங்கள், அதே போக்குவரத்து நெரிசல், மழை வந்தால் அதே குண்டும் குழியுமான கடந்தே செல்ல முடியாத வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ் பாலங்கள். சாலைகளில் காத்திருந்து காத்திருந்து வயது ஏறியதுதான் மிச்சம்.

கட்டப்பட இருந்த ஒரே பெரம்பூர் பாலத்தையும் கட்ட விடாமல் 'அம்மா' அவர்கள் புண்ணியம் கட்டிக் கொண்டார். பத்து வருடங்களாக ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது பால வேலை. வாழ்க ஜனநாயகம்.

வைரமுத்து "கள்ளிக்காட்டு இதிகாசத்தில்" எழுதியது போல், கடந்து செல்லும்போது கடவுள் கூட கண்ணை மூடிக்கொள்வார் என நினைக்கிறேன்.

தென் சென்னைக்காரன் கட்டும் அதே வரியைத்தான் நானும் கட்டுகிறேன். ஏலே அரசியல்வாதிகள், ஏன் இந்த ஓர வஞ்சனை?

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...