Sep 23, 2012

டியர் ராஜா சார்....

டியர் ராஜா சார்,

உங்க நீஎபொவ பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கேன். என்னோடு வா வா, காற்றைக் கொஞ்சம், முதல்முறை பார்த்த, சற்றுமுன்பு’ன்னு என் மனசுக்கு நெருக்கமான பாடல்கள் பத்தியெல்லாம் பத்தி பத்தியா சொல்லிக்கிட்டு சுத்தி வளைச்சி, நீட்டிமுழக்க விரும்பலை.

யுவன் தன் ம்யூசிக்’ல பாடும்போதே ஓடற வண்டியில இருந்து குதிக்கறவன் நான். உங்களுக்கு யுவன் பாடகரா இல்லையான்னு தெரியாதா? அவருக்கு எதுக்கு ரெண்டு பாட்டைத் தூக்கித் தந்தீங்க? காலத்தின் கட்டாயமா? அதுக்கு நீங்களும் அடிமையா? முடியலை சார்.

அடுத்து, உங்க குரலுக்குன்னு கோடானுகோடி ரசிகர்கள் இருக்காங்கன்றது இந்த உலகம் அறிஞ்ச விஷயம். ஆனா, வானம் மெல்ல மாதிரியான க்ளாஸ் ட்யூனை நீங்க பாட நினைச்சது ஏன்? எதுக்கு எட்டாத ரேஞ்ச் பத்தியெல்லாம் கவலைப்படாம அந்தப் பாட்டை நீங்க பாடிக் கெடுத்தீங்க. யெஸ், ஐ ரிப்பீட். எதுக்காக அந்தப் பாட்டை நீங்க பாடிக் கெடுத்தீங்க?

உங்க கொலைவெறி ரசிகர்கள் நீங்க படத்துக்கு ஒரு பாட்டு பாடியே ஆகணும்னு நெனைக்கறாங்க, நிஜம்தான். அதுக்கு நீங்களும் செவி சாய்க்கணும்னு நெனைச்சீங்கன்னா ”என்னைத் தாலாட்ட வருவாளா” பாட்டை கேஸட்ல எக்ஸ்ட்ராவா பாடினாப்ல, ”வானம் மெல்ல” பாட்டை ஹரிஹரனுக்கோ ஹரிசரணுக்கோ தந்துட்டு நீங்க எக்ஸ்ட்ராவா பாடி கேஸட்ல சேத்துருக்கலாம். 

எட்டு ட்யூன் போட்டுட்டு அதுல நாலு ட்யூனை மட்டும் என்னைக் கேக்க விடற நீங்க..... விதவிதமா விருந்து சமைச்சிட்டு அதைப் பாதிக்குப் பாதி தின்னவிடாம செஞ்சாப் போல எனக்குத் தோணுது.

இந்த காலத்தின் கட்டாயத்தின் பேர்லயும், கொலைவெறி ரசிகர்களுக்காகவும் செய்யப்படற காம்ப்ரமைஸ்கள் எனக்குப் பிடிக்கலை சார். என்னைப் போல லட்சக்கணக்கான ரசிகர்கள் இதே கருத்தோட இருப்பாங்கன்னு நான் வலுவா நம்பறேன்.

இப்பவும் ஒண்ணும் மோசமில்லை. நீஎபொவ படத்துல நாலே பாட்டுதான்னு நாங்க எங்களைச் சமாதானப்படுத்திக்கறோம், விடுங்க.

அன்புடன்,
உங்கள் ரசிகன்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படி கோபப்பற்றது ...செல்லமா...

Related Posts Plugin for WordPress, Blogger...