May 8, 2013

தமிழிணைய ஸினிமா விமர்ஸகன்

அதாகப்பட்டது....

சென்ற மாதத்தில் பொழுதுபோகாதவோர் வெள்ளிக்கிழமை மதியம் அலுவலக நண்பர் தரணி ”கேடி பில்லா கில்லாடி ரங்கா” சினிமாவுக்குப் போகலாம் என்றழைத்தார்.

“அய்யீய... வேணாம் நண்பரே! மொக்கப் படமாம் அது. கலீஜாக் கீதாமில்ல”, என்றவனை.... “அட சர்தான் சும்மா வாய்யா!”

”என்னய்யா நீர். படம் மொத்தமும் டல்லாமய்யா. ஒன்னியுமே இல்லியாமே. போட்ட சோத்தையே போட்டு மொக்கப் போடறாங்களாமய்யா?”

”யாரு சொன்னா?”

“அட! எனக்கு தமிழ் இணையத்துல, ஃபேஸ்புக்குல, ட்விட்டர்ல அம்பதாயிரம் பேரைத் தெரியுமய்யா. அவங்கள்ல நாப்பத்தெட்டாயிரம் பேரு இத்தத்தான சொன்னாங்க”

“அவிங்க கெடக்காங்க. நான் உன் நண்பேன் கூப்பிடறேன் வா...”

“இல்ல சாமி.... என் இணைய நண்பர்கள் என் இதயம் மாதிரி...”

டேய், நான் உன் கிட்னி மாதிரின்னு வெச்சிக்கோ வாடா....

‘இருந்தாலும்....

”ய்ய்யோவ்வ்வ் சுறா, மாற்றான், இந்திரலோக அழகப்பன், தாண்டவம் மெர்ஸான படத்தயெல்லாம் தேட்டர்ல பாக்கலியா நீ? இத்தயும் எனக்காகப் பாரு வா” ”என தரதரவென என்னைக் காரோட்டச் சொல்லி இழுத்துச் சென்றார்.

அட! படம் பரவால்லீங்க. பாக்கறாப்லதான் இருந்துச்சி. தொண்ணூறுகளில் வி.சேகர் எடுப்பாரே, அதுபோல இன்றைய ட்ரெண்டிற்கு இருந்துச்சி. இணைய அன்பர்கள் போட்டுப் புரட்டிய அளவிற்கெல்லாம் மோசமில்லை.

ஓகே!

அதற்கு அடுத்த வாரம். அதே போல வெள்ளிக்கெளமை.

“சாமி, சென்னையில் ஒருநாள்ன்னு ஒரு படம் வந்திருக்காம். ஷோக்கான படமாம் போங்க. டமில் இணைய மகாசனங்களெல்லா  அந்த படத்தத் தூக்கி கொண்டாடோ கொண்டாடோன்னு கொண்டாடுது. ஸிப்ட்டு முடிஞ்சதும் மொதோ வேலையா அந்தப் படம் ஆடற தேட்டர்ல போயி குந்திக்கறோம். ஓகேவா?  இந்த தபா நான் தரணியைத் தரதரவென காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு இஸ்த்துக்கினு போனேன்.

நம்ம தரணி ஒரு ஸினிமா ஸ்னேஹர். கூப்ட்ட கொரலுக்கு ஓடி வந்திடுவார்.

தமிழ் இணையத்தில் இந்தப் படத்தை ஹாலிவுட் படம், அப்படி இப்படி, டோண்ட் மிஸ், தமிழ் சினிமாவின் மைல்கல் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். இத்தை மிஸ் பண்ணினால் உம்மாச்சி கண்ணைக் குத்திரும், கும்மாச்சி கன்னைத் தூக்கிரும் என்றெல்லாம் மிரட்டல்கள் வேறு.

அப்படிப்பட்டவொரு படத்தை மிஸ் பண்ணலாமா? அந்தப் படத்தையும் பார்த்தோம். 

படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்....

அதாவது....  அதுவந்து....  ம்ம்ம்ம்ம்....  எப்படி சொல்ல..... ஆஆஆஆஆங்ங்ங்ங்ங்......  அதாகப்பட்டது..... எனக்கு அந்தப் படம் புடிக்கலீங்க.

“என்னாது? அந்தப் படம் புடிக்கலியா? டேய்! என்னா சூப்பர் படம் அது. எவ்ளோ சூப்பரா எட்த்துருக்காங்க”, என்று டால்பி எஃபெக்டில் பக்கவாட்டில் யாரோ குரல் தருகிறார்களோ?

”யோவ்.... படம் நல்லா இல்லைன்னா சொன்னேன். எனக்குப் புடிக்கலைன்னுதானேய்யா சொன்னேன்.”

”&**&^%&&&! உனக்கெல்லாம் எவண்டா ரசனையப் படைச்சான்”

“எக்ஸ்க்யூஸ்மீ.... நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“டேய்.... அந்த நாப்பத்தியெட்டாயிரத்துல நானும் ஒருத்தண்டா... மூஞ்சி மறந்து போச்சா?”

“ஓ! அவரா நீங்க. கொஞ்சம் கிட்ட வாங்க...”

“என்னாது..... அங்கயே இருந்து சொல்லு.....”

“இல்ல பயப்படாம வாங்க. ஒண்ணும் பண்ணிடமாட்டேன்”

“ம்ம்ம்ம்... வந்தாச்சு. இப்ப சொல்லு”

“உன்னத்தாண்டா ரொம்ப நாளா தேடினுருந்தேன்”

பளார்.... டமார்..... படால்.... பொளேர்.....கும்ஹ்ஹைக்.... கும்ஹ்ஹைக்.... டிஷ்யூம்....டிஷ்யூம்..... ஓடிப்போயிரு படவா!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அடி பலமோ...? (இருவருக்கும் வேறு விதத்தில்) ஹா... ஹா...

Related Posts Plugin for WordPress, Blogger...