Jun 2, 2013

பெற்றோர் - குழந்தைகள் வாரம்

ஆம்னிபஸ் மீண்டும் ஒரு சிறப்பு வாரத்தைக் கொண்டாட இருக்கிறது.

தமிழ் எழுத்துச் சூழலில் தரமான குழந்தை இலக்கியத்திற்கான இடம் மிகமிகக் குறைவு என்பதை எல்லோரும் எப்போதும் பேசுகிறோம்.

நம் குழந்தைகளின் அடுத்த தலைமுறை புத்தகம் படிக்கும் தலைமுறையாக இருக்குமா இல்லையா என்பதை யார் எப்படித் தீர்மானிக்கப் போகிறார்கள் / போகிறோம் என்பது பெரிய கேள்வியாக, கவலையாக இருக்கிறது.


இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதற்கான தேடலில், வேலையில் இறங்குமுன்; ஆம்னிபஸ்சின் தொடர் வாசக சீனியர்கள் சிலரிடம் தங்கள் குழந்தைகளுக்கு என்ன கதை/புத்தகத்தை பரிந்துரைப்பீர்கள், அல்லது அவர்களுக்கு என்ன கதையைச் சொல்வீர்கள். ஏன் சொல்வீர்கள்? அதாவது அந்தக் கதையிலிருந்து நீங்கள் குழந்தைகளுக்கு உணர்த்தும் values என்ன? அதைக் குழந்தைகள் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்று கேட்டோம்.

இவற்றைத் தங்கள் சொந்த அனுபவத்தைக் கொண்டு எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என கேட்டுக் கொண்டோம். தங்கள் குழந்தை அந்த புத்தகத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்,நீங்கள் எந்த values ஐ கற்றுக் கொடுக்க உங்கள் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை வாங்கிக் கொடுத்தீர்கள் என்பதையும் எழுதக் கேட்டுக் கொண்டோம்.

மிகவும் சுவாரசியமான சில பதிவுகள் வந்து சேர்ந்துள்ளன. குட்டிச்சுட்டிகளை வீட்டில் கொண்ட ஒவ்வொரு பெற்றோருக்கும் இந்தப் பதிவுகள் நிச்சயம் சுவாரசிய பகிர்வுகளாக அமையும்.

நாளை தொடங்கி அடுத்த ஒருவார காலத்திற்கு வெளிவரும் இந்த சிறப்புப் பதிவுகளைக் காத்திருந்து வாசிக்குமாறு ஆம்னிபஸ் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். 


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...