Jul 30, 2013

#365RajaQuiz

கடந்த ஒரு வருடமாகவே இணையத்தை விட்டு கொஞ்சம் ஒதுங்கியே இருக்கிறேன். இரவுநேர அல்லது அதிஅதிகாலை நேர வேலைக்குப் போகத் தொடங்கியதால் பர்சனல் விஷயங்களுக்கே சிலப்பல நேரங்களில் நேரம் ஒதுக்க முடியாமல் போக, சோஷியல் லைஃப்’க்கான ஒதுக்கல் சாத்தியமே இல்லாமற்போயிற்று. 

ஆம்னிபஸ் தளத்தில் வாராவாரம் எழுதியதுதான் இணையத்துடனான என் தொடர் தொடர்பு. ஆம்னிபஸ்சில் பிஸியாக இருந்ததுவும் ஒருவிதத்தில் இணையவிலகலுக்குக் காரணமாயிற்று.

இந்த விலகலிலும் ஆம்னிபஸ் பிஸினஸ்சிலும் நான் பெரிதும் இழந்தது என்று பார்த்தால் அன்பர் ரெக்ஸ் நடத்திய 365 ராஜா க்விஸ்களைத்தான்.

கடந்த ஞாயிறன்று சேகர்-சுஷிமா சேகர் இல்லத்தில் வெகுஜோராக இந்த க்விஸ் போட்டிகளின் ஃபைனல்ஸ் நடந்தது. அதாவது 365'வது கேள்வி - பதில் அரங்கேற்றம் அன்று நிகழ்ந்தது.

இரண்டு டசன் ராஜ பக்தர்கள் புடைசூழ அங்கு இல்லமே இசையால் நிரம்பியிருந்தது. பிரசன்னா என்ற அன்பர் அற்புதமாகப் பாடிக் கொண்டிருந்தார். ஸ்ரீவத்சன், (இன்னொரு) பிரசன்னா, இவர் என்று எல்லோரும் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இந்த நிகழ்வுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டு வந்திருந்தார்கள். ஜேயெம்மார் சாரின் டோலக்கு அடி அன்றைய ஸ்பெஷல். ஆர்.கோகுலின் பாடல்வரிகள் நினைவாற்றல் பேராச்சர்யம். 

திருவாசகமும் இளையராஜாவும் குறித்து சொக்கன் பேசினார். என் திருவாசக ஸிடி முழுக்க ராஜாவின் குரலே ஒலித்தது என்பதற்கு சொக்கனை விட்டால் வேறு யாரால் சரியான காரணத்தைச் சொல்ல முடியும்? 

என் பங்குக்கு நானும் ஒரு பாட்டு பாடினேன்.

செவிக்கு உணவு குறையாதபோதே வயிற்றுக்கும் அறுசுவை உண்டி படைக்கப்பட்டது. என்னுடன் அகில் வந்திருந்தான். சமையலறையில் அவன் அதகளம் பண்ணிக் கொண்டிருந்தான்.

எது இருந்ததோ எது தெரிந்ததோ, என்னுள் அன்று ஒன்றேயொன்று நிகழ்ந்தது. கூட்டுத் தியானங்களின் போது ஒரு அதிர்வு (vibration) தோன்றும். அது உங்களை இருவேறு நிலைகளில் நிறுத்தும். ஒன்று மனதில் நிலையிலாதவொரு அலை அடித்துக் கொண்டேயிருக்கும், இன்னொன்று மனம் எப்போதும் காண ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிறைவை, நிம்மதியை அந்த அதிர்வு உங்களுக்கு அந்தத் தருணத்தில் தரும். அன்றைய கூடலில் நான் இந்த அதிர்வை அனுபவித்தேன். 

அன்றைய நிகழ்வையொட்டி நிறைய பேர் பதிவுகள் எழுதிவிட்டார்கள். பலரும் இன்னமும் பேசிக் கொண்டேயிருக்கிறோம். எல்லாவற்றிலும் @amas32 எழுதிய ட்விட்லாங்கரின் ஒற்றைவரியொன்று எனக்கு மிக முக்கியமாகப் படுகிறது...

6. There are lots of good people. You just have to look for them.

Hats-off maa...

வயலின் வாசித்த அன்பருக்குத் தமிழ் தெரியாது என்றார்கள். ராஜாவின் பாடல்கள் மட்டுமல்லாமல் பிஜிஎம் எல்லாவற்றையும் அட்சரத்திற்கு அட்சரம் அத்துப்படியாக வைத்துக் கொண்டிருந்தார் அந்த அன்பர். நம்மூரில் நாம்தான் ராஜாவைக் (என்னையும் இதிலே கொஞ்சம் சேர்த்துக் கொள்கிறேன்) கிண்டலடிக்கிறோம்.

நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த ”தச்சிமம்மு” ஸ்ரீவத்சன், பிரசன்னா மற்றும் சேகர் தம்பதியினருக்கு நன்றிகள் ஆயிரம் :)


1 comment:

M.G.ரவிக்குமார்™..., said...

என்னது நீர் ராஜாவைக் கிண்டலடிக்கிறீரா..உம்மையெல்லாம்...

Related Posts Plugin for WordPress, Blogger...