Jun 21, 2014

அறை குரை

Wrote in FB a couple of days back. Posting it here.... rather pasting it here! :))

பெல்ஜியமும் அல்ஜீரியாவும் ஆடி முடித்த இடைவெளி. இதோ பிரேசில் மெக்சிகோவுடன் மோதத் தயாராகும் இடைவெளியில் கிடைக்கும் பத்து நிமிஷத்தில் ஏதும் எழுதலாமென்று பார்க்கிறேன்.

எழுதி நெம்ப நாளாச்சு. அதிலும்நெகட்டிவாக ஏதும் எழுதி ஜன்மம் ஒன்று கடந்தாற்போல் உணர்வு. ஆகவே இதோ....

நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னவொரு விஷயம் இதை எழுதத் தூண்டியது. தூண்டியதை சுத்தமாய் மறந்தே மறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இருந்தும், நினைவில் நிற்பவற்றை அரைக்கிறேன். அவர் சொன்ன வார்த்தைகள் இந்தப் பதிவின் கடைசி பத்தியில்.

அதற்குமுன்....

எனக்குத் தெரியும்
எனக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும்
எனக்குத் தெரியாது
எனக்குத் தெரியாதுன்னு எனக்குத் தெரியாது

இப்படித்தான் நாலுவகையாக மக்களை நான் பிரித்துக் கொள்வேன். இரண்டாவது ஆள் அலட்டல் பார்ட்டி. நான்காவது ஆள் முட்டாள்.

எங்கேயோ படித்ததை “யாரோ” என்றும் கூடக் குறிப்பிட்டு க்ரெடிட் தாராது தன் பெயரில் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டுக் கொள்பவர்களைக் கண்டால் முன்பெல்லாம் பத்திக் கொண்டு வரும். இப்போதெல்லாம் அப்படி வருவதில்லை. காரணம் இந்த ஐந்தாவது வகை மக்கள்.

"Jack of all trades; master of none" - டேமியனில் வேலை பார்த்தபோது தன்னைப் பற்றி இப்படி சொல்லிக் கொள்வார் ப்ரேம் சார்.

ப்ரேம் சாருக்கு கீபோர்டு வாசிக்கத் தெரியும், கிடார் வாசிப்பார், அரசியல் அத்துப்படி, மெடிக்கல் பேசுவார், கடவுள் நம்பிக்கை அரைக்கால் மாத்திரையளவே இருந்தாலும் பைபிளில் இருந்து கதைகள் சொல்லிக் கொண்டேயிருப்பார், எங்கள் ஆபீஸின் கம்ப்யூட்டர் கில்லாடி அவர்தான்... இன்னும் சொல்லிக் கொண்டே....

இருந்தும் தன்னை மாஸ்டர் ஆஃப் நன் என்றுதான் ஒரு கோடு போட்டு நிறுத்தி வைத்துக் கொள்வார். அவரை எழுத வாராத சுஜாதா என்றால் அது மிகைதான் என்றாலும் அதில் கொஞ்சமே கொஞ்சம் உண்மையும் உண்டு. தனக்குச் சொந்தமில்லாத விஷயத்திற்கு என்றும் சொந்தம் கொண்டாட மாட்டார் ப்ரேம் சார். அங்க படிச்சம்பா, இங்க படிச்சம்பா என்று யாருடைய சரக்கு அது என்று சொல்லிவிடுவார்.

மேலே சொன்ன நான்கு வகைகளில் ப்ரேம் சார் முதல்வகையறா. எனக்குத் தெரியும் என்பதுடன் சேர்த்து சைலண்ட்டாக < டாட் > என்று தனக்குள் முடித்துக் கொள்பவர்.

சோஷியல் நெட்வொர்க்குகளுக்கு வந்தபிறகு; குறிப்பாக ட்விட்டருக்கு வந்த பிறகு மேலே சொன்னவைகள் அல்லாது இதில் ஐந்தாவது வகை நபர்கள் சிலரைச் சந்திக்க (அல்லது அவர்களுடன் உரையாட) நேருகிறது.

எனக்குத் தெரியாதுன்னு எனக்குத் தெரியும்; ஆனா அது இங்க யாருக்கும் தெரியாது என்கிற ரகம் இவர்கள்.

ஒரு கம்ப்யூட்டர் (அல்லது மொபைல் அல்லது டேப்) ஒன்றையும் தேடும் நல் சூட்சுமத்தையும் கையகப் படுத்திக் கொண்டு இவர்கள் செய்யும் அலப்பரை இருக்குதே...... ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷபாஆஆஆஆஆ!

தெரியாத விஷயத்தைப் பேசும்போதும் கூட உச்சாணிக் கொம்பில் ஏறி நின்றுகொண்டு ஆத்தெண்டிக்காகப் பேச ஒரு பெரும் மனோதிடம் வேண்டும் பாருங்கள்.

ஆனால், இந்த விஷயத்தில் இந்த உச்சாணிக் கொம்பர்களை விட எனக்கு உச்சாணிக் கொம்பின் அடிப்பகுதியைப் பற்றிக் கொண்டு “அண்ணா, அண்ணா, தம்பீ, தம்பீ, மகனே, மக்கா, அக்கா” என்று அந்த உ.கொ’களை இன்னும் உச்சிக்கு ஏற்றி விடும் பிருஹஸ்பதிகளைக் கண்டால்தான் சிரிப்புப் பொத்துக் கொண்டு வருவது.

ஆ.... இதோ மேட்ச் தொடங்கி விட்டது. ப்ரேசிலப் பெண்மணியர் குதித்துக் குதித்துத் தம் நாட்டின் தேசிய கீதந்தனைப் பாடிக் களிக்கின்றனர் அரங்கத்தினில்.

எது ஹெட் எது டெயில் என்று இரண்டு கேப்டன்களுக்கும் சொல்லிக் கொடுத்துவிட்டு காயினைச் சுண்டுகிறார் அம்பயர்... இல்லையில்லை இவர் அவர்.... ஆம் ரெஃப்ரீ...!

மேல்மருவத்தூருக்க்கு நேர்ந்து கொண்டார்போலான உடையில் டீம் ஹட்டுல் நடத்துகிறார்கள் சலவைக்காரி நாட்டினர்....

ஆம்... மேட்ச் தொடங்கிவிட்டது.

ஆ... நண்பர் ஏதோ சொன்னதாய்ச் சொன்னேனே....

That fellow is always like that. What surprises me is that why many think he knows a lot despite his half baked knowledge on everything 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...