தினமலரில் இன்றைய செய்தி: சாலை விபத்துகளில் இறந்தவர் எண்ணிக்கை இந்த ஆண்டு மட்டும் 90000. (இது உலக அளவிலான செய்தி என நம்புகிறேன்). சிறிய காயங்களுடன் தப்பிப்பவர்கள் பல லட்சம் பேர். நிரந்தர ஊனத்திற்கு தள்ளப்படுபவர்கள் சில லட்சம் பேர் என்கிறது அறிக்கை. நிஜத்திலும் நிஜக் கொடுமையான செய்தி.
இந்த சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக போக்குவரத்து இயக்குனர் தெரிவித்து இருப்பது Drink & Drive. அதிலும் குறிப்பாக 35 வயதுக்கு உட்பட்டவர்களின் drink drive. சிறு வயதில் கன்னா பின்னா என சம்பாதிப்பது அதிகரித்ததே இதன் காரணம் என நினைக்கிறேன்.
My friends; நல்லா சம்பாதிங்க, நல்ல்ல்ல்ல்லா குடிங்க, ஆனா மத்தவங்க குடிய கெடுக்காதீங்க, please. Never drive while you are on drink's control.
விபத்துகளுக்கான இன்னொரு காரணம் அதிவேகமாக வண்டி ஓட்டுவது. இவர்களை என்ன சொல்லி திருத்த. ஒன்றே ஒன்றுதான் நான் செய்வது. அது லேனா தமிழ்வாணன் அருளிய ஒரு அறிவுரை. எப்போதும் உங்களைச் சுற்றி 20 முட்டாள்கள் வண்டி ஓட்டுவதாய் நினைத்து உங்கள் வண்டியை ஓட்டுங்கள். இந்த வகையில் ஓட்டும் போது தன்னாலே நீங்கள் முடிந்தவரை உங்களைக் காத்துக் கொள்கிறீர்கள்.
Aug 9, 2009
Jul 26, 2009
Rakhi Ka स्वयंवर

தொலைக்காட்சிகள் தனியார் வசமான இந்த பதினைந்து வருடங்களில் எத்தனையோ முட்டாள் தனமான நிகழ்ச்சிகளை கண்டிருக்கிறோம். ஆனால் அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல நடப்பதுதான் NDTV Imagine-ல் வரும் இந்த "Rakhi Ka स्वयंवर" நிகழ்ச்சி. கவுண்டமணி பாஷையில் சொல்லவேண்டும் என்றால், "யம்மா யப்பா! என்னா டகால்டி வேல காட்டரீங்கடா சாமி?"
விஷயம் என்னவென்றால் இந்த celebrity நூற்றுக்கணக்கான போட்டியாளர்களில் இருந்து "அந்த சுற்று" "இந்த சுற்று" என எல்லோரையும் சுற்றியடித்துவிட்டு கடைசி சுற்றில் வெற்றி பெரும் வெற்றியாளனைத் திருமணம் செய்யப் போகிறாராம். இப்போது கடைசியாக மூன்று அல்லது நான்கு போட்டியாளர்கள் கடைசி ரவுண்டில் ரவுண்டு கட்ட காத்திருக்கிறார்கள்.
விசேஷம் என்னவென்றால் போட்டியாளர்களில் பலர் முன்னமே மணமானவர்கள், சிலர் குழந்தைகள் பெற்றவர்கள், சிலர் ராக்கியின் முன்னாள் காதலர்கள். Idiot Box என்று தெரியாமலா சொன்னார்கள் T.V. யை?
Apr 27, 2009
ஆயிரம் ஜன்னல்
படிப்பதில் பலவிதம். அதை நாம் பயனுறுவதிலும் பலவிதம். சில கதைகளோ கட்டுரைகளோ வாழ்விற்கும் மறக்காமல் நாம் பின்பற்ற நமைத் தூண்டுபவை; சத்குருவின் "ஆயிரம் ஜன்னல்கள்" அவைகளுள் ஒருவகை. இந்தக் கட்டுரை என்னுள் பலப்பல மாற்றங்களைக் கொணர்ந்தது. உங்களை ஏதேனும் செய்கிறதா எனப் பாருங்கள்:
ஆயிரம் ஜன்னல்!
- சத்குரு ஜக்கி வாசுதேவ்
''சூழ்நிலைகளால் வேதனைகள் உருவாவதில்லை. அந்தச் சூழ்நிலையைக் கையாளத் தெரியாமல், நீங்கள் செய்யும் குளறுபடிகள்தாம் அதை விபரீதமாக்குகின்றன!''
- சத்குரு ஜக்கி வாசுதேவ்
கடவுளின் குழந்தைகள் என்ற முத்திரை ஏன்?
ஒரு முறை குன்னூரில் தங்கி, ஊட்டியில் மாலை வகுப்பு எடுக்கக் காரில் சென்றுகொண்டு இருந்தேன். மாலை நேரம். எலும்பைத் தொடும் குளிரில், தெருஓரம் மேல் துணியில்லாமல் ஒரு பெண் நடுங்கிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கவனித்தேன். முப்பது வயதிருக்கலாம். அவள் முகத்தில் இருந்த துன்பமும் வேதனையும் கண்டு வண்டியை நிறுத்தினேன். அவள் சற்று மனநலம் பிசகியவள் என்பதால், குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவள் என்று பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள். அதைக் கேட்டு என் மனைவி கண் கலங்கினாள்.
அந்தப் பெண்ணைக் குளிரிலிருந்து உடனடியாகப் பாதுகாக்க, நான் அணிந்திருந்த மேல் துணியை எடுத்து, அவள் மீது போர்த்தினேன். அவளிடம் உணவுக்காகக் கொஞ்சம் பணம் கொடுத்தேன்.
இப்படிச் சிலரை மன நலம் குன்றியவர்களாகச் சமூகம் ஒதுக்கிவைப்பதை அவ்வப்போது காண்கிறேன்.
மனதளவிலோ உடலளவிலோ ஒருவரை ஊனமுற்றவர் என்று எப்படித் தீர்மானிக்கிறீர்கள்? இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்துத்தானே?
உங்களைவிட அதீத புத்திசாலியாக விளங்குபவரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், உங்களுக்கும் புத்தி குறைவுதானே? அதற்காக உங்களையும் புத்தி அளவில் ஊனமானவர் என்று சொல்லலாமா?
அமெரிக்க வகுப்புகளில் பங்குகொண்ட ஒரு பெண்மணிக்கு ஜூலி என்று ஒரு மகள் இருக்கிறாள். ஜூலி குறுகிய தலையும், மிகப் பெருத்த உடலுமாக, குள்ளமான தோற்றத்துடன் இருப்பாள். ஜூலிக்கு 24 வயது. ஆனால், மூளையைப் பொறுத்தவரை எட்டு வயதுச் சிறுமியின் வளர்ச்சிதான்.
'ஜூலி மீது மிகுந்த அன்புகொண்டு இருந்த அவளுடைய பாட்டிதான் அவளை வளர்த்து வந்தாள். மூன்று வருடங்களுக்கு முன்பு அந்தப் பாட்டி இறந்துவிட்டாள். அப்போதிருந்து ஜூலி மிகவும் நிலையற்று இருக்கிறாள். 'ஜூலி உங்கள் வகுப்பில் அமரலாமா?' என்று அவள் அம்மா கேட்டாள். ஜூலியிடம், 'உனக்கு விருப்பமா?' என்று கேட்டேன். அவள் மிக விருப்பம் என்றாள்.
அவளை எந்த விதத்திலும் வித்தியாசப்படுத்தாமல், மற்றவரிடம் நடந்துகொள்வது போலவே நடந்துகொண்டேன். அவளிடம் நான் சற்று இரக்கமற்றவனாக இருப்பதாகக்கூட சிலருக்குத் தோன்றியது. அப்படி அல்ல. தனியான கவனம் கொடுப்பதைவிட, மற்றவரைப் போலவே தானும் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அவள் ஆசை.
வகுப்பில் நான் சொன்ன பல விஷயங்கள் அவளுக்குப் புரியவில்லை. ஆனால், அசையாமல் என்னைக் கவனித்துக்கொண்டு இருந்தாள். ஒரு கட்டத்தில், என் சக்தி அலைவரிசை அவளை எட்டியது. அவள் உடலில் துள்ளலான அதிர்வுகள் தோன்றின. அதற்குப் பிறகு மேல்நிலை வகுப்பு வரை வந்த தியான அன்பர்களிடம் காணக்கூடிய சக்தி மாற்றம் அவளிடம் காணப்பட்டது. ஒரு சில நாட்கள் கழித்து அவள் என்னிடம் 'என் பாட்டி இல்லாத குறை எனக்கு இப்போது தெரியவில்லை' என்றாள்.
பொதுவான அளவுகோல்களின்படி, மூளை வளர்ச்சியில் அவள் சற்றுப் பின்தங்கியிருந்தாலும், அற்புதமான பெண்.
மனநலத்தில் பின்தங்கியவர் பொதுவாகத் தாமாகத் துன்பப்படுவதில்லை. அவர் உங்களையெல்லாம்விட மிக சந்தோஷமாகத்தான் இருக்கிறார். வெளிச் சூழ்நிலை களால் பாதிப்பில்லாமல் குழந்தைகள் போல் இருப்பது ஒரு வரம். அதை நீங்கள் குறைபாடாக நினைத்து, அவரை ஏளனமாகப் பேசுகிறீர்கள். அவரைப் பார்க்கும் பார்வையில், நடத்தும் விதத்தில், குறைபாடுள்ளவர் என்று நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறீர்கள். இப்படி நீங்கள்தான் அவரை வருத்தப்பட வைக்கிறீர்கள்.
உங்களால் மட்டும் உங்கள் உடலையும் மனதையும் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறதா என்று நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். மனநலம் தவறியவராக உங்களால் கருதப்படுபவருக்கும் உங்களுக்கும் அளவுகோலில் கொஞ்சம் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. அவ்வளவுதானே?
எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருடைய மனைவி கர்ப்பமாயிருந்தபோது, அவரை ஒரு கொடிய விஷத் தேள் கடித்துவிட்டது. விஷம் வயிற்றில் இருக்கும் சிசுவைப் பாதிக்கக்கூடும் என்று டாக்டர் கருதினார். மனைவியிடம் கருக்கலைப்பு செய்யலாம் என்றுகூடச் சொன்னார். ஆனால், ஐந்து மாதக் கர்ப்பத்தைச் சிதைக்க மனைவிக்கு மனமில்லை.
ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர் பயந்தபடி, குழந்தை மாறுபாடான உடல் கொண்டிருந்தது. அதன் தலை மட்டும்தான் முழுமை அடைந்திருந்தது. கைகள், கால்கள் உருவாகாமலேயே குழந்தை பூமிக்கு வந்துவிட்டது.
டாக்டரின் வீட்டில் நான் தங்க நேர்ந்தபோதெல்லாம், அவர்கள் தங்கள் குழந்தையைப் பார்த்து பெரும் வேதனை கொள்வதைக் கவனித்தேன். மற்றவரைப் போல் இயங்க முடியாத சிறுவனாக இருந்தாலும், பெற்றோரிடம் காணப்பட்ட வேதனை அவனிடம் இருந்ததில்லை. எதையும் பிரித்துப் பார்த்துப் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததே அவனுக்குப் பெரிய வசதியாகிவிட்டது. தான் எதையோ இழந்துவிட்டோம் என்ற எண்ணமே அவனுக்குக் கிடையாது. அவன் எப்போதும் சிரித்துக்கொண்டு சந்தோஷமாகத்தான் இருந்தான். என்னைப் பார்த்தால் உருண்டு உருண்டு வருவான். என் மடியில் ஏறி உட்கார்ந்துவிடுவான்.
எந்தவித ஊனமும் இல்லாதவராகத் தங்களை நினைக்கும் பலரிடம் காண முடியாத சந்தோஷத்தை அந்தக் குழந்தையிடம் என்னால் பார்க்க முடிந்தது. அப்படியானால், யார் ஊனமுற்றவர்கள்?
ஒருவேளை, எல்லா மனிதர்களுக்குமே இரண்டு கைகளுமே இல்லாது போயிருந்தாலும், பிழைத்திருப்போம்தானே? அப்புறம் ஏன் ஒற்றைக் கை குறைந்தால், அவரைக் குறைபாடானவர் என்று நினைக்கிறீர்கள்? பறவைகளும் பாம்பும் கைகள் இல்லாமல் வாயை அற்புதமாகப் பயன்படுத்தவில்லையா?
உடல் அளவிலும் மன அளவிலும் ஒரு வித இயலாமை இருந்தால், அப்படிப்பட்டவர்களுக்குச் சில இடங்களில் சில உதவிகள் செய்யப்பட வேண்டியதுதான். அதற்காக ஊனம் என்று முத்திரை குத்துவதா?
பெரிய மூளையை வைத்துக்கொண்டு அதை முழுமையாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களைவிட, இவர்கள் எந்த விதத்தில் குறைந்துவிட்டார்கள்? முறைப்படுத்தத் தெரியாமல் அதீத திறன் இருந்தால், அதுதான் ஆபத்து. இருக்கும் மூளையைக் கொதிக்க விட்டுக்கொண்டு, எப்போதும் நிம்மதியற்று இருப்பதைவிட மூளையே இல்லாமல் சாதுவாகப் போய்க்கொண்டு இருப்பவர்கள் எவ்வளவோ பரவாயில்லை.
ஒன்று ஊனம் என்பார்கள்; அல்லது, கடவுளின் குழந்தை என்பார்கள். இப்படி ஏதாவது சொல்லி மற்றவர்களிலிருந்து ஒதுக்கிவைத்துவிடுவார்கள். ஊனமுற்றவர் என்று சொல்வது எப்படியோ அப்படித்தான் பிரத்யேகமானவர் என்று சொல்வதும். மாறுபாடான உடலுடனோ, புத்தியுடனோ பிறந்த குழந்தையையும் ஒரு சாதாரண, இயல்பான குழந்தையாகப் பார்க்கும் பக்குவம் சமூகத்தில் வர வேண்டும்.
உண்மையில், உடலிலும் மனதிலும் ஊனம் என்று ஒன்று இல்லவே இல்லை. வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறுவிதமாக இந்தப் பூமிக்கு வருகிறார்கள். வெவ்வேறு திறன்களோடு வளர்கிறார்கள். அவ்வளவுதான்.
பாரபட்சத்தை விடுத்து முழுமையான மனித நேயத்துடன் பழகினால், யாரிடமும் எந்தக் குறைபாடும் தெரியாது. எந்த வருத்தமும் துன்பமும் இருக்காது!
- ஜன்னல் திறக்கும்...
ஆயிரம் ஜன்னல்!
- சத்குரு ஜக்கி வாசுதேவ்
''சூழ்நிலைகளால் வேதனைகள் உருவாவதில்லை. அந்தச் சூழ்நிலையைக் கையாளத் தெரியாமல், நீங்கள் செய்யும் குளறுபடிகள்தாம் அதை விபரீதமாக்குகின்றன!''
- சத்குரு ஜக்கி வாசுதேவ்
கடவுளின் குழந்தைகள் என்ற முத்திரை ஏன்?
ஒரு முறை குன்னூரில் தங்கி, ஊட்டியில் மாலை வகுப்பு எடுக்கக் காரில் சென்றுகொண்டு இருந்தேன். மாலை நேரம். எலும்பைத் தொடும் குளிரில், தெருஓரம் மேல் துணியில்லாமல் ஒரு பெண் நடுங்கிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கவனித்தேன். முப்பது வயதிருக்கலாம். அவள் முகத்தில் இருந்த துன்பமும் வேதனையும் கண்டு வண்டியை நிறுத்தினேன். அவள் சற்று மனநலம் பிசகியவள் என்பதால், குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவள் என்று பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள். அதைக் கேட்டு என் மனைவி கண் கலங்கினாள்.
அந்தப் பெண்ணைக் குளிரிலிருந்து உடனடியாகப் பாதுகாக்க, நான் அணிந்திருந்த மேல் துணியை எடுத்து, அவள் மீது போர்த்தினேன். அவளிடம் உணவுக்காகக் கொஞ்சம் பணம் கொடுத்தேன்.
இப்படிச் சிலரை மன நலம் குன்றியவர்களாகச் சமூகம் ஒதுக்கிவைப்பதை அவ்வப்போது காண்கிறேன்.
மனதளவிலோ உடலளவிலோ ஒருவரை ஊனமுற்றவர் என்று எப்படித் தீர்மானிக்கிறீர்கள்? இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்துத்தானே?
உங்களைவிட அதீத புத்திசாலியாக விளங்குபவரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், உங்களுக்கும் புத்தி குறைவுதானே? அதற்காக உங்களையும் புத்தி அளவில் ஊனமானவர் என்று சொல்லலாமா?
அமெரிக்க வகுப்புகளில் பங்குகொண்ட ஒரு பெண்மணிக்கு ஜூலி என்று ஒரு மகள் இருக்கிறாள். ஜூலி குறுகிய தலையும், மிகப் பெருத்த உடலுமாக, குள்ளமான தோற்றத்துடன் இருப்பாள். ஜூலிக்கு 24 வயது. ஆனால், மூளையைப் பொறுத்தவரை எட்டு வயதுச் சிறுமியின் வளர்ச்சிதான்.
'ஜூலி மீது மிகுந்த அன்புகொண்டு இருந்த அவளுடைய பாட்டிதான் அவளை வளர்த்து வந்தாள். மூன்று வருடங்களுக்கு முன்பு அந்தப் பாட்டி இறந்துவிட்டாள். அப்போதிருந்து ஜூலி மிகவும் நிலையற்று இருக்கிறாள். 'ஜூலி உங்கள் வகுப்பில் அமரலாமா?' என்று அவள் அம்மா கேட்டாள். ஜூலியிடம், 'உனக்கு விருப்பமா?' என்று கேட்டேன். அவள் மிக விருப்பம் என்றாள்.
அவளை எந்த விதத்திலும் வித்தியாசப்படுத்தாமல், மற்றவரிடம் நடந்துகொள்வது போலவே நடந்துகொண்டேன். அவளிடம் நான் சற்று இரக்கமற்றவனாக இருப்பதாகக்கூட சிலருக்குத் தோன்றியது. அப்படி அல்ல. தனியான கவனம் கொடுப்பதைவிட, மற்றவரைப் போலவே தானும் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அவள் ஆசை.
வகுப்பில் நான் சொன்ன பல விஷயங்கள் அவளுக்குப் புரியவில்லை. ஆனால், அசையாமல் என்னைக் கவனித்துக்கொண்டு இருந்தாள். ஒரு கட்டத்தில், என் சக்தி அலைவரிசை அவளை எட்டியது. அவள் உடலில் துள்ளலான அதிர்வுகள் தோன்றின. அதற்குப் பிறகு மேல்நிலை வகுப்பு வரை வந்த தியான அன்பர்களிடம் காணக்கூடிய சக்தி மாற்றம் அவளிடம் காணப்பட்டது. ஒரு சில நாட்கள் கழித்து அவள் என்னிடம் 'என் பாட்டி இல்லாத குறை எனக்கு இப்போது தெரியவில்லை' என்றாள்.
பொதுவான அளவுகோல்களின்படி, மூளை வளர்ச்சியில் அவள் சற்றுப் பின்தங்கியிருந்தாலும், அற்புதமான பெண்.
மனநலத்தில் பின்தங்கியவர் பொதுவாகத் தாமாகத் துன்பப்படுவதில்லை. அவர் உங்களையெல்லாம்விட மிக சந்தோஷமாகத்தான் இருக்கிறார். வெளிச் சூழ்நிலை களால் பாதிப்பில்லாமல் குழந்தைகள் போல் இருப்பது ஒரு வரம். அதை நீங்கள் குறைபாடாக நினைத்து, அவரை ஏளனமாகப் பேசுகிறீர்கள். அவரைப் பார்க்கும் பார்வையில், நடத்தும் விதத்தில், குறைபாடுள்ளவர் என்று நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறீர்கள். இப்படி நீங்கள்தான் அவரை வருத்தப்பட வைக்கிறீர்கள்.
உங்களால் மட்டும் உங்கள் உடலையும் மனதையும் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறதா என்று நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். மனநலம் தவறியவராக உங்களால் கருதப்படுபவருக்கும் உங்களுக்கும் அளவுகோலில் கொஞ்சம் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. அவ்வளவுதானே?
எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருடைய மனைவி கர்ப்பமாயிருந்தபோது, அவரை ஒரு கொடிய விஷத் தேள் கடித்துவிட்டது. விஷம் வயிற்றில் இருக்கும் சிசுவைப் பாதிக்கக்கூடும் என்று டாக்டர் கருதினார். மனைவியிடம் கருக்கலைப்பு செய்யலாம் என்றுகூடச் சொன்னார். ஆனால், ஐந்து மாதக் கர்ப்பத்தைச் சிதைக்க மனைவிக்கு மனமில்லை.
ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர் பயந்தபடி, குழந்தை மாறுபாடான உடல் கொண்டிருந்தது. அதன் தலை மட்டும்தான் முழுமை அடைந்திருந்தது. கைகள், கால்கள் உருவாகாமலேயே குழந்தை பூமிக்கு வந்துவிட்டது.
டாக்டரின் வீட்டில் நான் தங்க நேர்ந்தபோதெல்லாம், அவர்கள் தங்கள் குழந்தையைப் பார்த்து பெரும் வேதனை கொள்வதைக் கவனித்தேன். மற்றவரைப் போல் இயங்க முடியாத சிறுவனாக இருந்தாலும், பெற்றோரிடம் காணப்பட்ட வேதனை அவனிடம் இருந்ததில்லை. எதையும் பிரித்துப் பார்த்துப் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததே அவனுக்குப் பெரிய வசதியாகிவிட்டது. தான் எதையோ இழந்துவிட்டோம் என்ற எண்ணமே அவனுக்குக் கிடையாது. அவன் எப்போதும் சிரித்துக்கொண்டு சந்தோஷமாகத்தான் இருந்தான். என்னைப் பார்த்தால் உருண்டு உருண்டு வருவான். என் மடியில் ஏறி உட்கார்ந்துவிடுவான்.
எந்தவித ஊனமும் இல்லாதவராகத் தங்களை நினைக்கும் பலரிடம் காண முடியாத சந்தோஷத்தை அந்தக் குழந்தையிடம் என்னால் பார்க்க முடிந்தது. அப்படியானால், யார் ஊனமுற்றவர்கள்?
ஒருவேளை, எல்லா மனிதர்களுக்குமே இரண்டு கைகளுமே இல்லாது போயிருந்தாலும், பிழைத்திருப்போம்தானே? அப்புறம் ஏன் ஒற்றைக் கை குறைந்தால், அவரைக் குறைபாடானவர் என்று நினைக்கிறீர்கள்? பறவைகளும் பாம்பும் கைகள் இல்லாமல் வாயை அற்புதமாகப் பயன்படுத்தவில்லையா?
உடல் அளவிலும் மன அளவிலும் ஒரு வித இயலாமை இருந்தால், அப்படிப்பட்டவர்களுக்குச் சில இடங்களில் சில உதவிகள் செய்யப்பட வேண்டியதுதான். அதற்காக ஊனம் என்று முத்திரை குத்துவதா?
பெரிய மூளையை வைத்துக்கொண்டு அதை முழுமையாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களைவிட, இவர்கள் எந்த விதத்தில் குறைந்துவிட்டார்கள்? முறைப்படுத்தத் தெரியாமல் அதீத திறன் இருந்தால், அதுதான் ஆபத்து. இருக்கும் மூளையைக் கொதிக்க விட்டுக்கொண்டு, எப்போதும் நிம்மதியற்று இருப்பதைவிட மூளையே இல்லாமல் சாதுவாகப் போய்க்கொண்டு இருப்பவர்கள் எவ்வளவோ பரவாயில்லை.
ஒன்று ஊனம் என்பார்கள்; அல்லது, கடவுளின் குழந்தை என்பார்கள். இப்படி ஏதாவது சொல்லி மற்றவர்களிலிருந்து ஒதுக்கிவைத்துவிடுவார்கள். ஊனமுற்றவர் என்று சொல்வது எப்படியோ அப்படித்தான் பிரத்யேகமானவர் என்று சொல்வதும். மாறுபாடான உடலுடனோ, புத்தியுடனோ பிறந்த குழந்தையையும் ஒரு சாதாரண, இயல்பான குழந்தையாகப் பார்க்கும் பக்குவம் சமூகத்தில் வர வேண்டும்.
உண்மையில், உடலிலும் மனதிலும் ஊனம் என்று ஒன்று இல்லவே இல்லை. வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறுவிதமாக இந்தப் பூமிக்கு வருகிறார்கள். வெவ்வேறு திறன்களோடு வளர்கிறார்கள். அவ்வளவுதான்.
பாரபட்சத்தை விடுத்து முழுமையான மனித நேயத்துடன் பழகினால், யாரிடமும் எந்தக் குறைபாடும் தெரியாது. எந்த வருத்தமும் துன்பமும் இருக்காது!
- ஜன்னல் திறக்கும்...
Jan 4, 2009
தீதும் நன்றும்! - நன்றி: ஆனந்தவிகடன்.
தீதும் நன்றும்! - 25
ஏரிக்கரைப் படித்துறைகளில், நகரப் பேருந்து நிறுத்தங்களில், கல்யாண வீடுகளில், கருமாதிக் காடுகளில் இன்று சர்வ சாதாரணமாகக் கேட்கும் உரையாடல்களில் விப்ரோ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், அக்சஞ்சர், காக்னசன்ட், ஸ்டேட்ஸ், லண்டன், ஆஸ்திரேலியா எனும் சொற்கள் விரவிக்கிடக்கின்றன. மத்தியதர வீடுகளில் பலர், மேற்கண்ட நிறுவனங்களில் பணி நிமித்தம் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புனே, மும்பை எனப் பரவிக்கிடக்கிறார்கள். ஈழத் தமிழ்க் குடும்பங்களில் போரில் சாவைச் சந்திக்காத குடும்பம் இல்லை என்பது போல, கேரளத்தில் அரேபியாவுக்கு ஆள் அனுப்பாத வீடுகள் இல்லை என்பது போல, ஐ.டி. செக்டரில் வேலை செய்யும் இளைஞர் இல்லாத வீடுகள் எதிர்காலத்தில் அபூர்வமாகிப்போகும். அந்த வீடுகள் கலங்கிய தண்ணீர் தெளிந்தாற் போன்று தெளிந்து வரும். வீடுகள் கட்டப்படும், மனைகள் வாங்கப்படும், பெண் பிள்ளைகளுக்குச் சிரமமில்லாமல் திருமணங்கள் நடக்கும், நகைகள் வாங்கப்படும். புத்தம் புதிய 450 லிட்டர் ஃபிரிஜ்கள், எல்.சி.டி-கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், ஆட்டோமேட்டிக் வாஷிங்மெஷின்கள் வாங்கப்படும். குடும்ப உறுப்பினர்களிடம் புது மெருகு, மினுக்கம், தளதளப்பு தெரியும்.
30, 40, 50, 60 ஆயிரங்கள் எனச் சம்பளம் வாங்கும் ஆடவரும் பெண்டிருமான இளைஞர் கேமரா வைத்த, ரெக்கார்டர் வைத்த, எஃப்எம் ரேடியோ வைத்த 30 ஆயிரம் விலையுள்ள செல்போன்கள் வாங்கிக்கொள்கிறார்கள். காதுகளில் ஐ-பாட் மாட்டிக்கொள்கிறார்கள், கழுத்தில் தொங்கவிட்டுக்கொள்கிறார்கள். பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி., இ.சி.இ, சி.எஸ், இ.இ.இ எனும் படிப்புகளுக்குள் நுழையப் பந்தயம் நடக்கிறது. கேம்பஸ் இன்டர்வியூ எனும் சொல்லாடல் கேட்கிறது. பெற்றோருக்கு மாதம் 5 ஆயிரம் அல்லது 10 ஆயிரம் அனுப்பிவிட்டு, சிவகாசி பட்டாசு வாங்கித் தினந்தோறும் கொளுத்துகிறார்கள்.
6 ஆயிரம் விலையுள்ள காலணிகள், 2 ஆயிரத்துச் சொச்சம் விலையில் சட்டைகள், ஜெர்கின் அல்லது ஓவர்கோட், டிஜிட்டல் கேமராக்கள், ஐ-பாட், பர்ஃப்யூம் தூறல் இல்லாதவர் இல்லை. பெண் பிள்ளைகள் சொந்த ஊரில் ஒருக்காலமும் அணியத் துணியாத உடைகளுடன் தாய்மார்கள் காணும் தூரத்தில் இல்லை. முன்புறம் வந்து விழுந்து முகத்தை மறைக்கும் தலைமயிரை ஒதுக்குவதற்கு ஒரு கை போதவில்லை. எல்லோரும் மாதம் ஒரு முறை ஊருக்கு வருவதற்கு என பெற்றோருக்கு எரிச்சல் ஊட்டாத உடைகள் வைத்துள்ளனர்.
முன்பெல்லாம் பேன்ட் அணிபவர் பக்கவாட்டுப் பைகள் இரண்டும் பின்பக்கப் பை இரண்டும் வைத்திருப்பார்கள். அவற்றுள் எனக்கு எப்போதும் இரண்டு பைகள் காலியாகவே இருக்கும். மலை, காடு ஏறுபவர்கள், மருந்துகள், ஆயுதங்கள், கயிறு, டார்ச், உணவு, தண்ணீர் எனப் பல சுமந்து செல்பவராதலால், 8 பைகள் வைத்து கால்சட்டை தைப்பார்கள். ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்களும் 10 பைகள் வைத்து அணிகிறார்கள். அவற்றுள் என்ன வைத்திருப்பார்கள் என்று எனக்குப் பெருவியப்பு.
ஆண்கள் முழுக்க முழுக்க மூடிக்கொள்ள, பெண்கள் முழுக்க முழுக்கத் திறந்து வருகிறார்கள். டார்ஜிலிங், குலுமனாலி, மவுன்ட் அபு, சிம்லா, முசோரி எனப் போய் காதல் செய்யும் நடிகன் பனியன், சட்டை, செஸ்ட் கோட், ஓவர் கோட் என்று அணிந்திருக்க, நடிகையோ உள்ளாடையோடு ஓடியாடுவதைப் போல.
மேலும் செய்திகளை நம்புவதானால், ஐ.டி. தொழில் இளைஞரிடையே திருமணத்துக்கு முன்பான கருக்கலைப்பு, திருமணமான சொற்ப நாட்களில் மண முறிவு, தற்கொலைகளின் அளவு எல்லாமே கவலை தருவதாக இருக்கிறது.
கல்லூரி மாணவருக்கு உரையாற்றும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம், 'பாடப் புத்தக நெருக்கடிகளில் இருந்து சற்று தம்மை மீட்டெடுத்துக்கொள்ள நல்ல இசை கேளுங்கள், நல்ல புத்தகங்களை வாசியுங்கள்' என்று சொல்வேன். விளைநிலத்துக்கு ஓய்வு கொடுக்க, மாற்றுப் பயிர் செய்வதைப் போன்றது அது. அல்லால் எதிர்காலத்தில் திடீர் ஆன்மிகவாதிகளிடமும், மனநல மருத்துவர்களிடமும் சரணடைய வேண்டியதிருக்கும்.
ஆதிகாலத்தில் சைகை மொழிகளிலும், நயன மொழியிலும், குறியீட்டு மொழியிலும் பகிர்ந்துகொண்ட மனிதன், பின்பு பண்பட்ட முழுமையான மொழிக்கு வளர்ந்தான். இன்று இளைஞர் எல்லாம் எஸ்.எம்.எஸ். மொழிக்கு மாறி வருகிறார்கள். க்ஷி 2 ணிகிஜி என்று போய்க்கொண்டு இருக்கிறது. இதில் செம் மொழி சாதிக்கப்போவது என்ன? மூடி திறந்துவைத்த பெட்ரோல் கேன் போல நேரம் ஆவியாகிக்கொண்டு இருக்கிறது.
பெங்களூரில் சாதாரணமாகத் தென்படும் ஹோட்டல்கள்கூட லஞ்ச் ரூ. 225/- என்று எழுதி அறிவிக்கின்றன. எனது பயண நாட் களில் அந்தத் தொகைக்கு 3 நாட்கள் சாப் பிடுவேன். எல்லாம் வலது கையில் கொடுக் கும் ஊதியத்தை இடது கையில் பறித்துக் கொள்ளும் சாதுர்யம். வாழ்க்கைத் தரம்உயர் கிறது என்றால், வாங்கும் திறன் அதிகரிக்கிறது என்பது மறுதலை அல்லவா?
நவம்பர் மாதத்தில் 2 தவணைகளாக, ஒரு வாரம் பெங்களூரில் தங்கி இருந்தேன். மூன்று பேர் சேர்ந்து ஆடவர் தனியாகவும் பெண்டிர் தனியாகவும் மாடிக் குடியிருப்பு ஒன்றை அங்கே வாடகைக்குப் பிடித்துக்கொள்கின்றனர். 2 பெட்ரூம் வாழ்வறை, அடுக்களை, கக்கூஸ்-குளிமுறி. வாழ்வறையிலேயே தலைக்கு ஒரு ஜோடி ஷூ, வார் செருப்பு, ரப்பர் செப்பல், உட்கார்ந்து ஷூ கட்ட ஒரு பிளாஸ்டிக் ஸ்டூல், ஆங்கில நாளிதழ் விரித்து அதன் மேல் அவரவர் சூட்கேஸ், 25 கிலோ சுமக்கும்படி ஏராளமான பைகளும் வார்களும் தொங்கும் முதுகுப் பை, தலைக்கு ஓர் அழுக்குக் கூடை, ஞாயிற்றுக்கிழமை துவைத்துத் தேய்த்து மடித்துவைக்க தலைக்கு ஒரு வேஸ்ட் கேரி பேக், வாரம் ஒரு முறை அப்படியே தூக்கி வெளியே வீச. டாய்லெட் உப கரணங்கள், பாடி ஸ்ப்ரே, பர்ஃப்யூம் எல்லோருக்கும் பொதுவான தண்ணீர் கேன், சுவரில் ஆணி அடித்து அதில் தொங்கும் அவரவர் தின்பண்டப் பைகள், அவரவர் செல்போன் சார்ஜர், ஆளுக்கொரு பக்கெட், மக், மலிவு விலைப் படுக்கை. சிலருக்கு தெருச் சந்தில் சாய்த்து நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனமும் உண்டு.
தண்ணீர் தாராளம், தட்பவெப்பம் அற்புதம். காலை பல் தேய்த்துக் குளித்து உடை மாற்றி, ஏழே காலுக்கு இறங்குகிறார்கள். ஒரு கோப்பை சாய்கூடப் பருகாமல், சிலர் நடக்கும்போதே பிஸ்கட் அல்லது குக்கீஸ் கடித்துக்கொள்கிறார்கள். சில அலுவல கங்கள் மதிய உணவு அளிக்கின்றன. சில அளிப்பதில்லை. வெளி யில் மெஸ் கண்டுபிடித்துவைத்துள்ளனர். சிலவற்றில் சாம்பார், சிலவற்றில் மீன் குழம்பு, சிலவற்றில் ரசம் நன்றாக இருக்கும் என்கிறார்கள். மெஸ்களின் பெயர்கள் ஐந்து நட்சத்திரத்தில் உள்ளன. மதுரை கேட், இந்தியா கேட், பார்க் இன், தாஜ் இன் என. தென்னிந்திய, பஞ்சாபி, குஜராத்தி, ராஜஸ்தானி உணவகங்கள். சமோசா. சாண்ட்விச் பர்கர், பீட்ஸா இவற்றில் ஏதோ ஒன்று உணவு. மேலும் ஒரு பழச்சாறு.
இரவு ஏழரை மணிக்கு மேல் வீடு சேரும் வழியில் இரண்டு தோசை அல்லது சப்பாத்தி சாப்பிடுகிறார்கள். பலர் கையில் கேரி பேக்கில் வாங்கிக்கொள்கிறார்கள். ஆணோ, பெண்ணோ சிலருக்கு இரவு 10 மணி ஆகிறது. அவர்களுக்காக அறைவாசிகள் பார்சல் வாங்கி வைத்துக்கொள்கின்றனர். ஒரு மெஸ் அலுத்துப்போனால் - அலுத்துப்போகும் இரண்டு மாதங்களில் - மறு மெஸ். தமிழ்நாட்டுக்காரன் வாரக்கணக்கில் சோறு தின்பதில்லை.
பலர் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் வேலை உள்ளது என்று கூறி அலுவலகம் போகிறார்கள். வாங்கும் சம்பளத்துக்கான மலர்ச்சி மறைந்துபோன முகத்துடன் நடமாடுகிறார்கள். ஆணும் பெண்ணும் கைகோத்து நடப்பது அங்கு புதுமை இல்லை. நிறுவனம் தேர்ந்து, சம்பளம் அறிந்து, தோதான சாதி பார்த்தே காதலிக்கிறார்கள். காதல் ஒரு தற்காலிக பாலைவனச் சோலை. திருமணத்துக்குப் பிறகு தனித் தனியாக அதுவரை இருந்த சுழற்சி, கூட்டாக இயங்கும் சுழற்சியாக மாறுகிறது. இரவு 10 மணிக்குத் திரும்பும் காதல் கணவனும் மனைவியும் அதன் பின் என்ன சமைத்து, எப்படி உண்டு, எங்ஙனம் உறங்கி..?
ஆயாசமாக இருக்கிறது. எல்லாப் பையன்களும் நம் பையன்கள்தானே! எல்லாப் பெண்களும் நம் பெண்கள்தானே! கல்லில் இருந்து முறுகிய தோசை சுடச்சுட தட்டில் விழுந்திருக்கும்தானே! எல்லோருக்கும் ஆதரவாகப் பேசும், வேண்டியது செய்து கொடுக்கும் தாய்கள் இருப்பார்கள்தானே! சுழற்றி வீசும் உள்ளாடைகளைப் பொறுக்கித் துவைத்து, மடித்து வைப்பார்கள்தானே! காய்ச்சலுக்கும் வயிற்றுப்போக்குக்கும் வைத்தியம், பண்டுவம் பார்ப்பார்கள்தானே! வெய்தாய் நறுவிதாய் வேண்டளவு தின்பதாய் நெய்தான் அளாவி நிறையிட்டு அமுதம் அளிப்பார்கள்தானே!
அநேகமாக, எல்லா இளைஞர் வீட்டிலும் அவர்களது மிதக்கும் வாழ்வியல்தன்மை காரணமாக, டி.வி, ஃபிரிஜ், வாஷிங்மெஷின் கிடையாது. சுடு தண்ணீர்கூட வைத்துக்கொள்வது கிடையாது. செல்போன் ஒன்றுதான் புற உலகத்துடன் அவர்கள் தொடர்பு.
'குழலும் வீணையும் யாழும் என்று இனையன இழைய
மழலைமென்மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்' என கம்பன் மெச்சும் மகளிரைத்தான் இன்று நாம் குற்றம்சாட்டுகிறோம். கண்டபடி உடை அணிகிறார்கள், விருப்பம் போல் திரிகிறார்கள், தின்கிறார்கள், பார்களில் அமர்ந்து இரண்டு லார்ஜ் குடிக்கிறார்கள் என்றெல்லாம். இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.
எப்போதும் பொதுமைப்படுத்துதல் நன்றன்று. மூத்து நரைத்துத் திரைத்த எந்த மாபெரும் அரசியல் வாதியும் செய்யாதவிதத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளில் அவர்கள் நாட்டுக்கு வருமானம் காண் கிறார்கள். எந்த வீர தீர சினிமாக்காரனும்எண்ணிப் பாராத விதத்தில் நேர்மையாக வருமான வரி கட்டு கிறார்கள். அவர்கள் எவருக்கும் முதலமைச்சர் கனவு இல்லை, எனினும் 16 மணி நேரம் தினமும்உழைக் கிறர்கள். மனதில்கொள்ளுங்கள் ஓவர்டைம் கிடையாது, ஓய்வூதியம் கிடையாது. காருண்ய அடிப்படையில் உறவினருக்கு வேலைவாய்ப்பு கிடையாது.
கிடைக்கும் விடுமுறைகளில் காலை உணவு, மதிய உணவு மறந்து நெடுந் தூக்கம் போடுகிறார்கள். அவர்களில் பெரும்பான்மை புகை பிடிப்பது இல்லை. டயட் பற்றி அக்கறை கிடையாது, ஏனெனில் உணவே டயட்தான்.
சிலர் படிப்பார்களாக இருக்கும், சிலர் பாட்டு கேட்பாளர்களாக இருக்கும், சிலர் சினிமா பார்ப்பார்களாக இருக்கும். அவர்களுக்குள் சாதி இல்லை, சமயம் இல்லை, அரசியல் இல்லை, ஏற்றத்தாழ்வுகள் இல்லை, நம்மைப் போன்று இறுமாப்பும் இல்லை.
என்றாலும், சமூகத்தின் ஒட்டுமொத்தமான அதிருப்தியைக் குறுகிய காலத்தில் சம்பாதித்துள்ள துர்ப்பாக்கியசாலிகள் இவர்கள். ஏனெனில், அவர்களது அதிநவீன நடை, உடை, தாராளமான செலவினம், எதையும் எதிர்கொள்ளும்போக்கு எல்லாம் சமூகத்தை எரிச்சலூட்டுவதாக அமைந்துள்ளது.
சொல்கிறார்கள்... தற்சமயம் ரயிலில் கூட்டம் அதிகமானதற்கு, விலைவாசி உயர்வுக்கு, சமூக ஒழுங்கு கெட்டுப்போனதற்கு, ஏற்றத்தாழ்வு அதிகரிப்பதற்கு அவர்களே காரணம் என்கிறார்கள். மெய்யாக இருக்கலாம்.
என்றாலும், எனக்கு அவர்கள் வாழ்முறை கவலை தருகிறது. இதே வேகத்தில் எத்தனை ஆண்டுகள் உழைக்க இயலும்? இன்றுள்ள உலகப் பொருளாதார வீழ்ச்சிச் சூழலில் என்ன ஆவார்கள்? 40 வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு, மன அழுத்த நோய்களுக்கு ஆட்பட மாட்டார்களா? இன்றைய வருமானத்துக்குக் கொடுக்கும் விலை அதிகம் இல்லையா? அதற்கு என்ன மாற்று யோசிக்கப் போகிறோம்?
'யானை மூத்திரத்தை நம்பிக் கட்டுச் சோறு அவிழ்த்தாற் போல' என்றொரு பழமொழி உண்டு. தாராளமாகவும் நெடுநேரமும் அது ஊற்றிக்கொண்டு இருக்கும். அதற்குள் கட்டுச்சோறு அவிழ்த்துத் தின்று, கை கழுவி, வாய் கொப்பளித்து இரண்டு வாய் ஏந்திக் குடித்துக்கொள்ளலாம் என்று நம்பலாகாது எனும் பொருளில்.
ஆம், இது வெகுநாட்கள் இவ்வாறேபோய்க் கொண்டு இருக்க இயலாதுதான்!
- இன்னும் உண்டு
ஏரிக்கரைப் படித்துறைகளில், நகரப் பேருந்து நிறுத்தங்களில், கல்யாண வீடுகளில், கருமாதிக் காடுகளில் இன்று சர்வ சாதாரணமாகக் கேட்கும் உரையாடல்களில் விப்ரோ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், அக்சஞ்சர், காக்னசன்ட், ஸ்டேட்ஸ், லண்டன், ஆஸ்திரேலியா எனும் சொற்கள் விரவிக்கிடக்கின்றன. மத்தியதர வீடுகளில் பலர், மேற்கண்ட நிறுவனங்களில் பணி நிமித்தம் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புனே, மும்பை எனப் பரவிக்கிடக்கிறார்கள். ஈழத் தமிழ்க் குடும்பங்களில் போரில் சாவைச் சந்திக்காத குடும்பம் இல்லை என்பது போல, கேரளத்தில் அரேபியாவுக்கு ஆள் அனுப்பாத வீடுகள் இல்லை என்பது போல, ஐ.டி. செக்டரில் வேலை செய்யும் இளைஞர் இல்லாத வீடுகள் எதிர்காலத்தில் அபூர்வமாகிப்போகும். அந்த வீடுகள் கலங்கிய தண்ணீர் தெளிந்தாற் போன்று தெளிந்து வரும். வீடுகள் கட்டப்படும், மனைகள் வாங்கப்படும், பெண் பிள்ளைகளுக்குச் சிரமமில்லாமல் திருமணங்கள் நடக்கும், நகைகள் வாங்கப்படும். புத்தம் புதிய 450 லிட்டர் ஃபிரிஜ்கள், எல்.சி.டி-கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், ஆட்டோமேட்டிக் வாஷிங்மெஷின்கள் வாங்கப்படும். குடும்ப உறுப்பினர்களிடம் புது மெருகு, மினுக்கம், தளதளப்பு தெரியும்.
30, 40, 50, 60 ஆயிரங்கள் எனச் சம்பளம் வாங்கும் ஆடவரும் பெண்டிருமான இளைஞர் கேமரா வைத்த, ரெக்கார்டர் வைத்த, எஃப்எம் ரேடியோ வைத்த 30 ஆயிரம் விலையுள்ள செல்போன்கள் வாங்கிக்கொள்கிறார்கள். காதுகளில் ஐ-பாட் மாட்டிக்கொள்கிறார்கள், கழுத்தில் தொங்கவிட்டுக்கொள்கிறார்கள். பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி., இ.சி.இ, சி.எஸ், இ.இ.இ எனும் படிப்புகளுக்குள் நுழையப் பந்தயம் நடக்கிறது. கேம்பஸ் இன்டர்வியூ எனும் சொல்லாடல் கேட்கிறது. பெற்றோருக்கு மாதம் 5 ஆயிரம் அல்லது 10 ஆயிரம் அனுப்பிவிட்டு, சிவகாசி பட்டாசு வாங்கித் தினந்தோறும் கொளுத்துகிறார்கள்.
6 ஆயிரம் விலையுள்ள காலணிகள், 2 ஆயிரத்துச் சொச்சம் விலையில் சட்டைகள், ஜெர்கின் அல்லது ஓவர்கோட், டிஜிட்டல் கேமராக்கள், ஐ-பாட், பர்ஃப்யூம் தூறல் இல்லாதவர் இல்லை. பெண் பிள்ளைகள் சொந்த ஊரில் ஒருக்காலமும் அணியத் துணியாத உடைகளுடன் தாய்மார்கள் காணும் தூரத்தில் இல்லை. முன்புறம் வந்து விழுந்து முகத்தை மறைக்கும் தலைமயிரை ஒதுக்குவதற்கு ஒரு கை போதவில்லை. எல்லோரும் மாதம் ஒரு முறை ஊருக்கு வருவதற்கு என பெற்றோருக்கு எரிச்சல் ஊட்டாத உடைகள் வைத்துள்ளனர்.
முன்பெல்லாம் பேன்ட் அணிபவர் பக்கவாட்டுப் பைகள் இரண்டும் பின்பக்கப் பை இரண்டும் வைத்திருப்பார்கள். அவற்றுள் எனக்கு எப்போதும் இரண்டு பைகள் காலியாகவே இருக்கும். மலை, காடு ஏறுபவர்கள், மருந்துகள், ஆயுதங்கள், கயிறு, டார்ச், உணவு, தண்ணீர் எனப் பல சுமந்து செல்பவராதலால், 8 பைகள் வைத்து கால்சட்டை தைப்பார்கள். ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்களும் 10 பைகள் வைத்து அணிகிறார்கள். அவற்றுள் என்ன வைத்திருப்பார்கள் என்று எனக்குப் பெருவியப்பு.
ஆண்கள் முழுக்க முழுக்க மூடிக்கொள்ள, பெண்கள் முழுக்க முழுக்கத் திறந்து வருகிறார்கள். டார்ஜிலிங், குலுமனாலி, மவுன்ட் அபு, சிம்லா, முசோரி எனப் போய் காதல் செய்யும் நடிகன் பனியன், சட்டை, செஸ்ட் கோட், ஓவர் கோட் என்று அணிந்திருக்க, நடிகையோ உள்ளாடையோடு ஓடியாடுவதைப் போல.
மேலும் செய்திகளை நம்புவதானால், ஐ.டி. தொழில் இளைஞரிடையே திருமணத்துக்கு முன்பான கருக்கலைப்பு, திருமணமான சொற்ப நாட்களில் மண முறிவு, தற்கொலைகளின் அளவு எல்லாமே கவலை தருவதாக இருக்கிறது.
கல்லூரி மாணவருக்கு உரையாற்றும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம், 'பாடப் புத்தக நெருக்கடிகளில் இருந்து சற்று தம்மை மீட்டெடுத்துக்கொள்ள நல்ல இசை கேளுங்கள், நல்ல புத்தகங்களை வாசியுங்கள்' என்று சொல்வேன். விளைநிலத்துக்கு ஓய்வு கொடுக்க, மாற்றுப் பயிர் செய்வதைப் போன்றது அது. அல்லால் எதிர்காலத்தில் திடீர் ஆன்மிகவாதிகளிடமும், மனநல மருத்துவர்களிடமும் சரணடைய வேண்டியதிருக்கும்.
ஆதிகாலத்தில் சைகை மொழிகளிலும், நயன மொழியிலும், குறியீட்டு மொழியிலும் பகிர்ந்துகொண்ட மனிதன், பின்பு பண்பட்ட முழுமையான மொழிக்கு வளர்ந்தான். இன்று இளைஞர் எல்லாம் எஸ்.எம்.எஸ். மொழிக்கு மாறி வருகிறார்கள். க்ஷி 2 ணிகிஜி என்று போய்க்கொண்டு இருக்கிறது. இதில் செம் மொழி சாதிக்கப்போவது என்ன? மூடி திறந்துவைத்த பெட்ரோல் கேன் போல நேரம் ஆவியாகிக்கொண்டு இருக்கிறது.
பெங்களூரில் சாதாரணமாகத் தென்படும் ஹோட்டல்கள்கூட லஞ்ச் ரூ. 225/- என்று எழுதி அறிவிக்கின்றன. எனது பயண நாட் களில் அந்தத் தொகைக்கு 3 நாட்கள் சாப் பிடுவேன். எல்லாம் வலது கையில் கொடுக் கும் ஊதியத்தை இடது கையில் பறித்துக் கொள்ளும் சாதுர்யம். வாழ்க்கைத் தரம்உயர் கிறது என்றால், வாங்கும் திறன் அதிகரிக்கிறது என்பது மறுதலை அல்லவா?
நவம்பர் மாதத்தில் 2 தவணைகளாக, ஒரு வாரம் பெங்களூரில் தங்கி இருந்தேன். மூன்று பேர் சேர்ந்து ஆடவர் தனியாகவும் பெண்டிர் தனியாகவும் மாடிக் குடியிருப்பு ஒன்றை அங்கே வாடகைக்குப் பிடித்துக்கொள்கின்றனர். 2 பெட்ரூம் வாழ்வறை, அடுக்களை, கக்கூஸ்-குளிமுறி. வாழ்வறையிலேயே தலைக்கு ஒரு ஜோடி ஷூ, வார் செருப்பு, ரப்பர் செப்பல், உட்கார்ந்து ஷூ கட்ட ஒரு பிளாஸ்டிக் ஸ்டூல், ஆங்கில நாளிதழ் விரித்து அதன் மேல் அவரவர் சூட்கேஸ், 25 கிலோ சுமக்கும்படி ஏராளமான பைகளும் வார்களும் தொங்கும் முதுகுப் பை, தலைக்கு ஓர் அழுக்குக் கூடை, ஞாயிற்றுக்கிழமை துவைத்துத் தேய்த்து மடித்துவைக்க தலைக்கு ஒரு வேஸ்ட் கேரி பேக், வாரம் ஒரு முறை அப்படியே தூக்கி வெளியே வீச. டாய்லெட் உப கரணங்கள், பாடி ஸ்ப்ரே, பர்ஃப்யூம் எல்லோருக்கும் பொதுவான தண்ணீர் கேன், சுவரில் ஆணி அடித்து அதில் தொங்கும் அவரவர் தின்பண்டப் பைகள், அவரவர் செல்போன் சார்ஜர், ஆளுக்கொரு பக்கெட், மக், மலிவு விலைப் படுக்கை. சிலருக்கு தெருச் சந்தில் சாய்த்து நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனமும் உண்டு.
தண்ணீர் தாராளம், தட்பவெப்பம் அற்புதம். காலை பல் தேய்த்துக் குளித்து உடை மாற்றி, ஏழே காலுக்கு இறங்குகிறார்கள். ஒரு கோப்பை சாய்கூடப் பருகாமல், சிலர் நடக்கும்போதே பிஸ்கட் அல்லது குக்கீஸ் கடித்துக்கொள்கிறார்கள். சில அலுவல கங்கள் மதிய உணவு அளிக்கின்றன. சில அளிப்பதில்லை. வெளி யில் மெஸ் கண்டுபிடித்துவைத்துள்ளனர். சிலவற்றில் சாம்பார், சிலவற்றில் மீன் குழம்பு, சிலவற்றில் ரசம் நன்றாக இருக்கும் என்கிறார்கள். மெஸ்களின் பெயர்கள் ஐந்து நட்சத்திரத்தில் உள்ளன. மதுரை கேட், இந்தியா கேட், பார்க் இன், தாஜ் இன் என. தென்னிந்திய, பஞ்சாபி, குஜராத்தி, ராஜஸ்தானி உணவகங்கள். சமோசா. சாண்ட்விச் பர்கர், பீட்ஸா இவற்றில் ஏதோ ஒன்று உணவு. மேலும் ஒரு பழச்சாறு.
இரவு ஏழரை மணிக்கு மேல் வீடு சேரும் வழியில் இரண்டு தோசை அல்லது சப்பாத்தி சாப்பிடுகிறார்கள். பலர் கையில் கேரி பேக்கில் வாங்கிக்கொள்கிறார்கள். ஆணோ, பெண்ணோ சிலருக்கு இரவு 10 மணி ஆகிறது. அவர்களுக்காக அறைவாசிகள் பார்சல் வாங்கி வைத்துக்கொள்கின்றனர். ஒரு மெஸ் அலுத்துப்போனால் - அலுத்துப்போகும் இரண்டு மாதங்களில் - மறு மெஸ். தமிழ்நாட்டுக்காரன் வாரக்கணக்கில் சோறு தின்பதில்லை.
பலர் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் வேலை உள்ளது என்று கூறி அலுவலகம் போகிறார்கள். வாங்கும் சம்பளத்துக்கான மலர்ச்சி மறைந்துபோன முகத்துடன் நடமாடுகிறார்கள். ஆணும் பெண்ணும் கைகோத்து நடப்பது அங்கு புதுமை இல்லை. நிறுவனம் தேர்ந்து, சம்பளம் அறிந்து, தோதான சாதி பார்த்தே காதலிக்கிறார்கள். காதல் ஒரு தற்காலிக பாலைவனச் சோலை. திருமணத்துக்குப் பிறகு தனித் தனியாக அதுவரை இருந்த சுழற்சி, கூட்டாக இயங்கும் சுழற்சியாக மாறுகிறது. இரவு 10 மணிக்குத் திரும்பும் காதல் கணவனும் மனைவியும் அதன் பின் என்ன சமைத்து, எப்படி உண்டு, எங்ஙனம் உறங்கி..?
ஆயாசமாக இருக்கிறது. எல்லாப் பையன்களும் நம் பையன்கள்தானே! எல்லாப் பெண்களும் நம் பெண்கள்தானே! கல்லில் இருந்து முறுகிய தோசை சுடச்சுட தட்டில் விழுந்திருக்கும்தானே! எல்லோருக்கும் ஆதரவாகப் பேசும், வேண்டியது செய்து கொடுக்கும் தாய்கள் இருப்பார்கள்தானே! சுழற்றி வீசும் உள்ளாடைகளைப் பொறுக்கித் துவைத்து, மடித்து வைப்பார்கள்தானே! காய்ச்சலுக்கும் வயிற்றுப்போக்குக்கும் வைத்தியம், பண்டுவம் பார்ப்பார்கள்தானே! வெய்தாய் நறுவிதாய் வேண்டளவு தின்பதாய் நெய்தான் அளாவி நிறையிட்டு அமுதம் அளிப்பார்கள்தானே!
அநேகமாக, எல்லா இளைஞர் வீட்டிலும் அவர்களது மிதக்கும் வாழ்வியல்தன்மை காரணமாக, டி.வி, ஃபிரிஜ், வாஷிங்மெஷின் கிடையாது. சுடு தண்ணீர்கூட வைத்துக்கொள்வது கிடையாது. செல்போன் ஒன்றுதான் புற உலகத்துடன் அவர்கள் தொடர்பு.
'குழலும் வீணையும் யாழும் என்று இனையன இழைய
மழலைமென்மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்' என கம்பன் மெச்சும் மகளிரைத்தான் இன்று நாம் குற்றம்சாட்டுகிறோம். கண்டபடி உடை அணிகிறார்கள், விருப்பம் போல் திரிகிறார்கள், தின்கிறார்கள், பார்களில் அமர்ந்து இரண்டு லார்ஜ் குடிக்கிறார்கள் என்றெல்லாம். இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.
எப்போதும் பொதுமைப்படுத்துதல் நன்றன்று. மூத்து நரைத்துத் திரைத்த எந்த மாபெரும் அரசியல் வாதியும் செய்யாதவிதத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளில் அவர்கள் நாட்டுக்கு வருமானம் காண் கிறார்கள். எந்த வீர தீர சினிமாக்காரனும்எண்ணிப் பாராத விதத்தில் நேர்மையாக வருமான வரி கட்டு கிறார்கள். அவர்கள் எவருக்கும் முதலமைச்சர் கனவு இல்லை, எனினும் 16 மணி நேரம் தினமும்உழைக் கிறர்கள். மனதில்கொள்ளுங்கள் ஓவர்டைம் கிடையாது, ஓய்வூதியம் கிடையாது. காருண்ய அடிப்படையில் உறவினருக்கு வேலைவாய்ப்பு கிடையாது.
கிடைக்கும் விடுமுறைகளில் காலை உணவு, மதிய உணவு மறந்து நெடுந் தூக்கம் போடுகிறார்கள். அவர்களில் பெரும்பான்மை புகை பிடிப்பது இல்லை. டயட் பற்றி அக்கறை கிடையாது, ஏனெனில் உணவே டயட்தான்.
சிலர் படிப்பார்களாக இருக்கும், சிலர் பாட்டு கேட்பாளர்களாக இருக்கும், சிலர் சினிமா பார்ப்பார்களாக இருக்கும். அவர்களுக்குள் சாதி இல்லை, சமயம் இல்லை, அரசியல் இல்லை, ஏற்றத்தாழ்வுகள் இல்லை, நம்மைப் போன்று இறுமாப்பும் இல்லை.
என்றாலும், சமூகத்தின் ஒட்டுமொத்தமான அதிருப்தியைக் குறுகிய காலத்தில் சம்பாதித்துள்ள துர்ப்பாக்கியசாலிகள் இவர்கள். ஏனெனில், அவர்களது அதிநவீன நடை, உடை, தாராளமான செலவினம், எதையும் எதிர்கொள்ளும்போக்கு எல்லாம் சமூகத்தை எரிச்சலூட்டுவதாக அமைந்துள்ளது.
சொல்கிறார்கள்... தற்சமயம் ரயிலில் கூட்டம் அதிகமானதற்கு, விலைவாசி உயர்வுக்கு, சமூக ஒழுங்கு கெட்டுப்போனதற்கு, ஏற்றத்தாழ்வு அதிகரிப்பதற்கு அவர்களே காரணம் என்கிறார்கள். மெய்யாக இருக்கலாம்.
என்றாலும், எனக்கு அவர்கள் வாழ்முறை கவலை தருகிறது. இதே வேகத்தில் எத்தனை ஆண்டுகள் உழைக்க இயலும்? இன்றுள்ள உலகப் பொருளாதார வீழ்ச்சிச் சூழலில் என்ன ஆவார்கள்? 40 வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு, மன அழுத்த நோய்களுக்கு ஆட்பட மாட்டார்களா? இன்றைய வருமானத்துக்குக் கொடுக்கும் விலை அதிகம் இல்லையா? அதற்கு என்ன மாற்று யோசிக்கப் போகிறோம்?
'யானை மூத்திரத்தை நம்பிக் கட்டுச் சோறு அவிழ்த்தாற் போல' என்றொரு பழமொழி உண்டு. தாராளமாகவும் நெடுநேரமும் அது ஊற்றிக்கொண்டு இருக்கும். அதற்குள் கட்டுச்சோறு அவிழ்த்துத் தின்று, கை கழுவி, வாய் கொப்பளித்து இரண்டு வாய் ஏந்திக் குடித்துக்கொள்ளலாம் என்று நம்பலாகாது எனும் பொருளில்.
ஆம், இது வெகுநாட்கள் இவ்வாறேபோய்க் கொண்டு இருக்க இயலாதுதான்!
- இன்னும் உண்டு
Dec 7, 2008
வி.பி. சிங்
மும்பை தாக்குதல்களின் பரபரப்பில் கண்டுகொள்ளப்படாத செய்திகளில் முக்கியமானது முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மறைவு குறித்த செய்தி.
காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி இந்தியாவிற்குத் தந்த பிரதமர்களுள் ஒருவர், மண்டல் கமிஷன் பரிந்துரைத்தவர், ரத யாத்திரை சென்ற அத்வானியை கைது செய்து ஆட்சியை இழந்தவர், புற்றுநோயோடு போராடி வாழ்ந்தவர் என இவர் பற்றி சில விஷயங்கள் எனக்கு ஞாபகம் உண்டு. இவர் மறைந்த ராஜீவ் காந்தியின் சிறந்த நண்பர் என்பது நான் அறியாதது. விகடனில் வந்த அவர் பற்றிய ஒரு article உங்கள் பார்வைக்கு.

காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி இந்தியாவிற்குத் தந்த பிரதமர்களுள் ஒருவர், மண்டல் கமிஷன் பரிந்துரைத்தவர், ரத யாத்திரை சென்ற அத்வானியை கைது செய்து ஆட்சியை இழந்தவர், புற்றுநோயோடு போராடி வாழ்ந்தவர் என இவர் பற்றி சில விஷயங்கள் எனக்கு ஞாபகம் உண்டு. இவர் மறைந்த ராஜீவ் காந்தியின் சிறந்த நண்பர் என்பது நான் அறியாதது. விகடனில் வந்த அவர் பற்றிய ஒரு article உங்கள் பார்வைக்கு.

ஆக்கிரமிப்பது அவமானம்... பின்வாங்குவது பெருமை!
விஸ்வநாத் பிரதாப் சிங் என்றால் பலருக்குத் தெரியாது. அனைவருக்கும் அவர் வி.பி.சிங்!
திடீரென்று அரசியலில் அவரைப் போல உச்சத்தில் போனவரும் இல்லை. சத்தமில்லாமல் ஒதுங்கியவரும் இல்லை. 'காற்றைப் போல எளிமையானவர். வானத்தைப் போல சுத்தமானவர்' என்று இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் பெயர் வாங்கிய தலைவர், சமீப காலச் சரித்திரத்தில் இவர்தான்.
கேன்சருக்கான அறிகுறி தெரிய ஆரம்பித்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 'நாட்களை எண்ணி வாழ்பவன் நான்' என்று சொல்லி, கவலை இல்லாமல் நாட்களைக் கழித்தவர் இந்த ராஜ குடும்பத்துக்காரர். மாண்டோ சமஸ்தான மன்னர் ராம்கோபால் சிங் இவரின் சித்தப்பா. அவருக்கு வாரிசுகள் இல்லாததால், வி.பி.சிங்கைத் தனது வளர்ப்பு மகனாக எடுத்து வளர்த்தார்.
உ.பி. முதல்வராக இருந்தவரை தேசிய அரசியலுக்குக் கொண்டுவந்தவர் இந்திரா. ராஜீவுக்கு நெருக்கமான நண்பரானார் சிங். ராஜீவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் ஆனார். 'நண்பன் என்ற எல்லையைத் தாண்டி, ராஜீவ் என் துறையில் அதிகமாகத் தலையிடுகிறார்' என்று வெளிப்படையாகவே குற்றம் சொன்னவர் வி.பி.சிங். அதன் பிறகு, அவருக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டது. அதில் போபர்ஸ் பூதம் கிளம்பியது. சுமார் 1,700 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதப் பரிமாற்றத்துக்கு 68 கோடி கமிஷன் தரப்பட்டதாக எழுந்த புகாரில், பிரதமர் ராஜீவைப் பதவி விலக எதிர்க் கட்சிகள் சொல்லின. பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் வி.பி.சிங் பதவி விலகினார். அரசியலில் நேர்மையை வலியுறுத்தி தனது நண்பனுக்கு எதிராகவே தேசிய முன்னணியை ஆரம்பித்து, அதிரடியாக ஆட்சியிலும் அமர்ந்தார் சிங்.
341 நாட்கள் இந்தியாவின் பிரதமராக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் செய்த மூன்று காரியங்கள் காலங்கள் கடந்தும் பேசப்படுகின்றன. பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் அமல்படுத்தினார்.
அடுத்ததாக, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கரசேவை செய்ய பாரதிய ஜனதா, வி.ஹெச்.பி. கிளம்பியபோது, ராணுவத்தை வைத்து அடக்கினார். இத்தனைக்கும் பி.ஜே.பி. தயவில்தான் வி.பி.சிங் பிரதமர் நாற்காலியில் இருந்தார். 'எனக்கு நாற்காலியைவிட தத்துவம்தான் முக்கியம்' என்று அறிவித்தார்.
இலங்கையில் இந்திய அமைதிப் படை இருந்தது. அதை வாபஸ் வாங்க வேண்டும் என்று தமிழகக் கட்சிகள் கோரிக்கைவைத்தன. 'வாபஸ் வாங்கினால் இந்தியாவுக்கு அவமானம்' என்றார்கள் வெளியுறவுத் துறை அதிகாரிகள். 'ஆக்கிரமிப்பதுதான் அவமானம். பின்வாங்குவது பெருமைதான்' என்று சொல்லி, அமைதிப் படையை வாபஸ் வாங்கினார்.
பதவி நாற்காலி பற்றி கவலைப்படாமல் தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காகக் கடைசி வரை வாழ்ந்தவர்களில் வி.பி.சிங்குக்கு ஓர் இடம் உண்டு!
திடீரென்று அரசியலில் அவரைப் போல உச்சத்தில் போனவரும் இல்லை. சத்தமில்லாமல் ஒதுங்கியவரும் இல்லை. 'காற்றைப் போல எளிமையானவர். வானத்தைப் போல சுத்தமானவர்' என்று இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் பெயர் வாங்கிய தலைவர், சமீப காலச் சரித்திரத்தில் இவர்தான்.
கேன்சருக்கான அறிகுறி தெரிய ஆரம்பித்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 'நாட்களை எண்ணி வாழ்பவன் நான்' என்று சொல்லி, கவலை இல்லாமல் நாட்களைக் கழித்தவர் இந்த ராஜ குடும்பத்துக்காரர். மாண்டோ சமஸ்தான மன்னர் ராம்கோபால் சிங் இவரின் சித்தப்பா. அவருக்கு வாரிசுகள் இல்லாததால், வி.பி.சிங்கைத் தனது வளர்ப்பு மகனாக எடுத்து வளர்த்தார்.
உ.பி. முதல்வராக இருந்தவரை தேசிய அரசியலுக்குக் கொண்டுவந்தவர் இந்திரா. ராஜீவுக்கு நெருக்கமான நண்பரானார் சிங். ராஜீவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் ஆனார். 'நண்பன் என்ற எல்லையைத் தாண்டி, ராஜீவ் என் துறையில் அதிகமாகத் தலையிடுகிறார்' என்று வெளிப்படையாகவே குற்றம் சொன்னவர் வி.பி.சிங். அதன் பிறகு, அவருக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டது. அதில் போபர்ஸ் பூதம் கிளம்பியது. சுமார் 1,700 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதப் பரிமாற்றத்துக்கு 68 கோடி கமிஷன் தரப்பட்டதாக எழுந்த புகாரில், பிரதமர் ராஜீவைப் பதவி விலக எதிர்க் கட்சிகள் சொல்லின. பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் வி.பி.சிங் பதவி விலகினார். அரசியலில் நேர்மையை வலியுறுத்தி தனது நண்பனுக்கு எதிராகவே தேசிய முன்னணியை ஆரம்பித்து, அதிரடியாக ஆட்சியிலும் அமர்ந்தார் சிங்.
341 நாட்கள் இந்தியாவின் பிரதமராக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் செய்த மூன்று காரியங்கள் காலங்கள் கடந்தும் பேசப்படுகின்றன. பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் அமல்படுத்தினார்.
அடுத்ததாக, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கரசேவை செய்ய பாரதிய ஜனதா, வி.ஹெச்.பி. கிளம்பியபோது, ராணுவத்தை வைத்து அடக்கினார். இத்தனைக்கும் பி.ஜே.பி. தயவில்தான் வி.பி.சிங் பிரதமர் நாற்காலியில் இருந்தார். 'எனக்கு நாற்காலியைவிட தத்துவம்தான் முக்கியம்' என்று அறிவித்தார்.
இலங்கையில் இந்திய அமைதிப் படை இருந்தது. அதை வாபஸ் வாங்க வேண்டும் என்று தமிழகக் கட்சிகள் கோரிக்கைவைத்தன. 'வாபஸ் வாங்கினால் இந்தியாவுக்கு அவமானம்' என்றார்கள் வெளியுறவுத் துறை அதிகாரிகள். 'ஆக்கிரமிப்பதுதான் அவமானம். பின்வாங்குவது பெருமைதான்' என்று சொல்லி, அமைதிப் படையை வாபஸ் வாங்கினார்.
பதவி நாற்காலி பற்றி கவலைப்படாமல் தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காகக் கடைசி வரை வாழ்ந்தவர்களில் வி.பி.சிங்குக்கு ஓர் இடம் உண்டு!
Subscribe to:
Posts (Atom)