Sep 3, 2010

பதிவுலகில் அயாம்



இத்தொடர்ப் பதிவை எழுத என்னை தினந்தோறும் தொலைபேசியிலும் கடித வாயிலாகவும் தொடர்பு கொண்டு நிர்பந்தித்த தலைவர் கலைஞர் அவர்களுக்கும், புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் நன்றி.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அங்கும் இங்கும் எங்கும்.... "கிரி"

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?



முப்பத்தி சொச்ச வருஷமா அதுதானுங்க என் பெயர். பதிவுக்காக ஒரு பூனைப் பெயரை....அயம் சாரி...புனைப் பெயரை சூட்டிக்கலாம்'னு பாக்கறேன். என்னோட பேர்லயே ஒரு புண்ணியவான் (கிரிப்லாக்.காம்) எழுதறாரு. அவரோட நல்ல பேரை நான் எந்த விதத்துலயும் கெடுத்த மாதிரி ஆகிடக் கூடாது பாருங்க, அட் லீஸ்ட் அதுக்காகவாச்சும்.

கீழ இருக்கறது எல்லாம் என் மனசுல இருக்கற யோசனைப் பெயர்கள். எது சரிவரும்'னு நீங்கதான் சொல்லுங்களேன்!?

"மாதவரம்" கிரி (என்னோட இருவது வருஷ சென்னை வாசம் அங்கதான், மாதவரம்  என் அடையாளம்)

கிரி கிருஷ்ணா (கிருஷ்ணகிரி நான் பிறந்த ஊரு)

"சங்கமம்" கிரி (சங்கமம் நான் சார்ந்த இசைக் குழுவோட பேரு)

"அகில்" கிரி (அகில் என் பையன் பேரு)


3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.


அட, நான் ருச்தாவ் பஸ்தூகி, யாகிவ் சோரதேன் போன்ற ரஷ்ய எழுத்தாளர்கள் மற்றும் மாகிவ் சிம்மசோ, பாலமு யாதினே ஆகிய இத்தாலிய எழுத்தாளர்களை இரண்டு ஜென்மங்களாகப் படித்து வளர்ந்தவன். முதல் ஜென்மத்தில் இருபது வருடங்களும், இரண்டாம் ஜென்மத்தில் பதினைந்துமாக ஆ மொத்தம் முப்பத்தைந்து வருட வாசிப்பு அனுபவம் எனக்கு இருக்கிறது. 

நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்.... பே...பெப்பேப்பே...


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?


தமிழ்மணம், தமிழிஷ் என்கிற இன்ட்லி வாழ்க வாழ்க....!!!


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


இல்லைன்னு சொல்லலாகாதுங்க. ஏன்னா ஆம் அப்படின்னு சொல்றதுதான் சரியான பதில். ஆனா இதுவரைக்கும் இல்லைன்னு சொன்னா என்னவாகியிருக்குமோ அதுதானுங்க விளைவா ஆகியிருக்கு. 

இப்போ நான் என்ன சொல்லணும்க? ஆமாவா, இல்லையா? 




6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

சம்பாத்தியம்? எதுனா வலைப்பதிவு வழியா ஒரு வழி இருந்தா சொல்லுங்க சாமி.

எங்க ஆபீஸ்ல கூட நெறைய பேரு என்னைப் பார்த்து சொல்றாங்க. அவரு வெப்சைட்டு நடத்தி சம்பாதிக்கறாருன்னு. ஓங்கி அப்பணும் போல இருக்கும். சரி என்ன பண்ண, பழகித் தொலச்சுட்டாங்க.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


ரெண்டுங்க. 

இது ஒண்ணு. 
எப்பவும் பொண்ணுங்களப் பத்தி எழுத ஒன்ணு (http://eppodhumpenn.blogspot.com).

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


ரெண்டுமே உண்டுங்க. 

கோபம் பத்தி இங்க வேணாமுங்க. ஏன்னா, இந்த பதிவுக்கு கீழ கெட்ட வசவு எதுவும் வேணாம்னு பாக்கறேன்.

துளசிதளம் (http://thulasidhalam.blogspot.com/) / Think Loud (http://arvindsdad.blogspot.com) போன்ற தளங்களை பராமரித்து வரும் சீனியர் சிடிசன்களைக் கண்டு கன்னா பின்னாவென்று பொறாமை வரும். 

நட்பாஸ் அவர்களின் வாசிப்புத்திறன் குறித்தும் பொறாமை உண்டு.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..



என் அருமைத் தம்பி ரகுபாஸ்கர் லண்டன்'ல இருந்து லெட்டர் எழுதியிருந்தான். அதுக்கும் முன்னால, பின்னால, நடுவுலன்னு எனக்கு ஊக்க மருந்து திரு.நட்பாஸ் அவர்கள். அவரைப் போல பாராட்டவும் முடியாது, திட்டவும் முடியாது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...


புதுசா ஒண்ணுமில்லை சார். எல்லாமே கிட்டத்தட்ட எழுதியாச்சு. அப்படியும் வேணுமின்னா இங்கிட்டு (http://www.sasariri.com/p/blog-page.html) போயி படிச்சிக்கங்க.


கடைசியாக நானே சேர்த்துக் கொண்ட ஒரு கேள்வி.


11) பதிவுலகிற்கு வந்திராவிட்டால் என்ன செய்து கொண்டிருந்திருப்பீர்கள்? (என்ன ஒரு கேள்வி?)


உருப்படியாக இன்னும் நான்கைந்து சுஜாதா புத்தகங்களையும், அலை ஓசை  முதலான இதுவரை நான் படிக்காத பத்து இருபது நல்ல புத்தகங்களை படித்திருப்பேன்.




இதைத் தொடர நான் அழைப்பது: ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ரா., நாஞ்சில் நாடன் ஆகியோர் மட்டும்.

5 comments:

natbas said...

அவங்களையும் பதிவர் ஆக்கிட்டீங்களா!

காலக் கொடுமைன்னா இதுதான் போல இருக்கு :)

natbas said...

விட்டா இளையராஜாவையும் இசைப் புயலையும் உங்க சங்கமத்தில சேந்து தாளம் போட சொல்லுவீங்க போல இருக்கே!

Unknown said...

நல்ல பதில்கள்..

Anonymous said...

//இதைத் தொடர நான் அழைப்பது: ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ரா., நாஞ்சில் நாடன் ஆகியோர் மட்டும்.//

ரைட்டு!

virutcham said...

interesting

Related Posts Plugin for WordPress, Blogger...