Aug 22, 2012

மறுபடி ஒரு தமிழ்ப்படம்

டைப்பிங் ஏறுக்கு மாறாக இருப்பதற்கு நான் பொறுப்பல்ல.....

படத்தின் தாறுமாறுத்தனத்தை நீங்கள் உணர அப்படி டைப்பப் பட்டுள்ளது :)


வழக்கம் போல நேற்று இரவு உணவு நேரத்தில் நாகராஜ் தான் சென்ற வாரம் பார்த்த இன்னொரு லேட்டஸ்ட் சினிமாவின் கதை சொன்னார்.

சென்னையை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த பரட்டைத்தலை நாயகன்- பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம்  வகுப்போ தாண்ட பிரம்மப் பிரயத்தனப்படுகிறார்-  முதல் அழகு ஈரோயினியை பஸ்ஸில் சந்திக்கிறார் - காதல் - பின் சுற்றல்- கடிதம் தரல்-  இவரை அண்ணா என்கிறார் ஈரோயின்- எஸ்கேப்- அடுத்து இரட்டை சகோதரிகளை அதே பஸ்ஸில் பார்க்கிறார்- ரெண்டு பேரில் யாரோ ஒருத்தர் மேல் காதல்- பொத்தாம் பொதுவாய் லெட்டர் தந்து யாருக்கு புடிச்சிருக்கோ எனக்கு ஒக்கே என்கிறார்- இரட்டையர் ஊரில் அடி பின்னுகிறார்கள்-  மீண்டும் எஸ்கேப்- மூன்றாவது ஒருத்தி வீடு தேடி வருகிறாள்-  இவரிடம் கடிதம் நீட்டி இவர் அண்ணனிடம் தரச் சொல்கிறார் - அங்கும் எஸ்கேப்பு.

ஒரு வழியாக பன்னிரண்டு தாண்டி சென்னை வந்து கல்லூரி சேர்கிறார்- மீண்டும் முதல் ஈரோயினி என்ட் ரி- மீண்டும் காதல்- கடைசியில் அந்தக் காதலி காதலி த்தது தன்னையல்ல எனப் புரிகிறது- அவளுக்கு வேறொருவனுடன் திருமணம்- ட்டமால்- தொய்ந்து போய் ஊருக்கு நடந்தே வருகிறார்- வழியில் ஒரு சைக்கிளில் வரும் பெண்ணுடன் உரசி இடிக்க - கட்- அடுத்த சீன் ஓபன் செய்தால்.... அந்த சைக்கிள் பெண்ணுடன் இவருக்குத் திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் வாழ்க்கை - சுபமாம்.

இந்தப் படத்திற்குத்தான் டைம்ஸ் ஆஃப் இந்தியா மூன்றரை நட்சத்திரங்கள் தந்திருக்கிறது.

என்னவோ போடா மாதவா!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...