Aug 25, 2012

ஓ அப்படியா?


வடபழனி க்ரீன்பார்க் ஹோட்டல். ஆறுவருஷம் மின்ன இப்போ வேலை பாக்கற கம்பேனில சேர்ந்த புதுசுல மூணுநாள் இண்டக்‌ஷன் நடந்தது.  அதாகப்பட்டது கம்பேனி உள்ள எப்படி நடந்துக்கணும், செய்வன, செய்யத்தகாதன, ரூல்ஸ், ரெகுலேஷன்ஸ் கத்துக்குடுக்கற நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

ரெண்டாவது நாள் காலைல உள்ள அடைச்சி வெச்சு ஏதேதோ மந்திரங்கள் ஓதினாங்க. அவனவன் வந்தவேலையைக் கவனிக்கறேன்னு தலையைத் தொங்கப் போட்டுட்டு ஊசலாடிட்டு இருக்கான். 

மீட்டிங் தொடங்கி ஒண்ணரை மணிநேரம் ஆகியிருந்தது. கைக்கு எட்டற தூரத்துல பாட்டில் பாட்டிலா மினரல் வாட்டரும், சாக்லேட்டுகளும் டேபிள்ல வெச்சிருந்தாங்க. ஆர்வக்கோளாருல இதைத் தின்னு அதைக் குடிச்சுன்னு நேரத்தை ஓட்டிட்டு இருந்ததால ‘அவசர’ வேலைக்கு அவசியம் ஏற்பட்டது. ப்ரேக் குடுப்பாங்க குடுப்பாங்க’ன்னு பாத்தா தர்ற வழியாக் காணோம்.

அந்தநேரம் பாத்து ‘நான் பாடுவேன்’னு தெரிஞ்ச ஒரு ப்ரம்மஹத்தி “சார், கிரியை ஒரு பாட்டு பாடி எண்டர்டெயின் பண்ண சொல்லுங்க’ன்னுச்சு.

”இஸ் இட்? கிரி ப்ளீஸ் ஸிங் ஃபார் அஸ்”, என்றார் அந்த ஸெஷன் நடத்திக் கொண்டிருந்தவர்.

“டேய்! இப்போ எனக்கு வேண்டியது ஒரு ப்ரேக்’டா. ஒரேஒரு நிமிஷம் அனுமதிங்கடா, அதை முடிச்சிட்டு வந்து எதை வேணா பண்றேன்’னு சொல்லணும் போல இருந்துச்சி. ஆனா, ”நான் என்ன ச்சீர் கேர்ளாடா”ன்னு கேக்க வந்த கோவத்தையும் மறைச்சிக்கிட்டு வேற வழியில்லாம என்னத்தையோ பாடினேன்.

அப்புறம் ஒருவழியா ஒரு ரெண்டுமணிநேரத்துக்குப் பெறகு ஒரு ப்ரேக் குடுத்தாங்க. மூணரை மணிநேர அடக்குமுறையை ரிலீஸ் செய்ய ‘தடதட’ன்னு ஷார்ட் ஸ்டெப் வெச்சு சினிமா ஃபாஸ்ட் மோஷன் மாதிரி ஓடறேன்.

ரெஸ்ட் ரூம் வாசல்ல முன்னாடியே ‘ரிலீஸ்’ வேலையை முடிச்ச இன்னொரு ப்ரம்மஹத்தி வழியை அடைச்சி நின்னுக்கிட்டு “அப்புறம், எங்க வந்தீங்க”ன்னுது.

“டேய் வழியை வுடுடா. ரிலீஸுக்கு முன்ன இங்கயே ப்ரீவ்யூ நடந்துடப் போவுது’ன்னு அவனை இடிச்சித் தள்ளிட்டு உள்ள போறேன்.

“ஹ்ஹ்ஹ்ஹ்ஹப்பாஆஆஆஆஆஆடாஆஆஆஆஆஆஆஆ”ன்னு நிம்மதியா கண்ணை மூடி லயிச்சி போன வேலையைப் பாத்துட்டு இருக்கேன், பக்கத்துல ஒரு கொரல்.

“சார்....”

ஒத்தைக் கண்ணை ஓபன் பண்ணிப் பக்கவாட்டுல பாக்கறேன். பனைமர ஒசரத்துக்கு ஒருத்தன் இருக்கான்.

அண்ணாந்து ஆகாசத்தைப் பாத்தா அவன் மூஞ்சி தெரியுது.

“ம்ம்ம்??”

“நீங்க நல்லாப் பாடினீங்க சார்”

”அவனவன் எந்த அவசரத்துல எந்த நிலைமை எல்லாம் கடந்து வந்து லயிச்சி ஒரு காரியத்தை பண்ணிட்டு இருக்கான். சக காரியவாதி காரியத்தை கவனிக்காம என்னாடா நல்லாப் பாடினீங்க, நொள்ளாப் பாடினீங்கன்னுட்டு”, அப்டின்னு கேட்டிருக்கணும். ஆனா நாம  கண்ணெல்லாம் சொருகின கோலத்துல இருந்ததால....

“ஓ அப்படியா?”, அப்டின்னு ஒரு மடத்தனமான எக்ஸ்ப்ரெஷன் தந்தேன்.

மூணுநாள் கழிச்சி வேலைக்கு ஆபீஸ் வந்தப்போதான் தெரியுது கேள்வி கேட்ட ப்ரம்மஹத்தி என் டீம் மெம்பர்’ன்னு.

இன்னைய வரைக்கும் அந்த, “ஓ அப்படியா?”ங்கற பதிலை அவன் மறக்கலை. “ஒண்ணா தேங்க்ஸ்’னு சொல்லணும். இல்லை அட்லீஸ்ட் ஜஸ்ட் ஒரு ஸ்மைல் செஞ்சிருக்கணும். அதென்னய்யா - ஓ அப்படியா’ன்னு ஒரு எக்ஸ்ப்ரெஷன்?”ன்னு இன்னைய வரைக்கும் சந்தர்ப்பம் கெடைக்கும்போதெல்லாம் என்னை ஓட்டறதுதான் அவன் வேலை.

நம்ம ச்சின்னப்பையன் எழுதின எப்படி இருக்கீங்க? எப்படி இருந்துச்சு உங்க நாளு? பதிவை வாசிச்சதும் அந்தப் பழைய நியாபகம் வந்துடுச்சு. அதான் சரசரன்னு இந்தப் பதிவு.

2 comments:

natbas said...

ஒரு சினிமாவோட கிளைமாக்ஸ் சீன் மாதிரி செம டென்ஷனா கொண்டு சென்றிருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்.

Giri Ramasubramanian said...

நட்பாஸ்,

கிண்டல் பண்றீங்களோ?

Related Posts Plugin for WordPress, Blogger...