Sep 21, 2012

கதம்பம் - 2



கடவுளுக்குக் காதைக் கொடு

சில வருஷங்கள் முன் ஒரு யோகா மையத்தில் சூன்ய தியானம் கற்றுக் கொள்ளப் போயிருந்தேன். நூற்று சொச்ச மாணவர்கள் தியானம் கற்க வந்திருந்தனர். தியானப் பயிற்றுவிப்பு முடிந்து, தீட்சை தந்தபின் தியானம் எதற்கு என்பது பற்றி குருநாதர் பேசத் துவங்கினார்.

கேள்வியை எங்களிடமே கேட்டு தியானத்தின் அவசியத்தி விளக்க முயன்றார் அவர். ”தியானம் எதற்காக செய்ய வேண்டும்?”, இது முதல் கேள்வி.

விதவித பதில்கள் வந்து குதித்தன. நோய் எதிர்ப்பு சக்தி, தீராத நோய்களில் இருந்து விடுதலை, மனநிம்மதி, மனக்குவிப்புத் திறன், செயல்திறன் அதிகரிப்பு என்று ஆளுக்கு ஒரு காரணம் அடுக்கினார்கள்.

”எல்லாம் சரியான பதில்களே. சரி, என் அடுத்த கேள்வி இது, கோயிலுக்குப் போனால் சாமியிடம் என்ன கேட்பீர்கள்?”

இந்தக் கேள்விக்கு இன்னும் நான்கு மடங்கு பதில்கள். ஆரோக்யம், மனநிம்மதி, படிப்பு, வேலை, பெண்ணுக்குக் கல்யாணம், பணம், குறைந்த வட்டியில் கடன், இத்யாதி, இத்யாதி.

“ஆக, கடவுளைப் பார்க்கப் போனால் அவரை விடுவதாயில்லை. இத்தைக் கொடு, அத்தைக் கொடு என்று ஒரே பிடுங்கல்தான். அப்படித்தானே?”

“................”

“கடவுளை என்றாவது உங்களிடம் பேச அனுமதித்திருக்கிறீர்களா?”, கேட்டாரே ஒரு கேள்வி?

“.................”

”அதற்காகத்தான் இந்த பதினைந்து நிமிட தியான நேரம் உங்களுக்கு. அந்த பதினைந்து நிமிடங்களாவது உங்கள் வாயை சாத்துங்கள். கடவுளை உங்களிடம் பேச அனுமதியுங்கள்”

நீலத்திமிங்கிலம்

Blue Whale எனப்படும் நீலத் திமிங்கிலத்தின் நாக்கின் எடை மட்டுமே ஒரு சராசரி யானையின் எடையைக் காட்டிலும் அதிகமாம்.


யம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


ததாஸ்து

குமரகுருவுடன் இந்த வாரமும் ராமாயண, மகாபாரத விவாதம் தொடர்ந்தது. ராமரைப் பற்றி ஏதோ கேட்கப் போக வழக்கம்போல நீண்டநெடிய வியாக்கியானம் தந்துவிட்டு குமரகுரு சடாரென்று மகாபாரதத்திற்குத் தாவினார்.

மகாபாரதப் போர் நேரம். குந்திதேவி கிருஷ்ணனைச் சந்திக்கிறாள். அவனிடம் கேட்கிறாள், “என் ஐந்து பிள்ளைகளையும் இந்தக் கொடும் சகோதரச் சண்டையில் இருந்து உயிருடன் காப்பாற்றிக் கொடுத்துவிடு கண்ணா”

“ததாஸ்து”, என்று விடுகிறான் கிருஷ்ணன். தட்ஸ் இட்!

கேள்வி கேட்ட தருணத்தில் தன் மூத்த மகனை, கர்ணனை மனதில் நினைக்கவில்லை குந்தி. ”என் பிள்ளைகளை” என்று கேட்டிருக்க வேண்டியதை குறிப்பாக என் ஐந்து பிள்ளைகளை என்று அவள் குறிப்பிட்டது தவறாய்ப் போனது. ஐந்து மகன்கள் மீண்டார்கள், கர்ணன் மாண்டான்.

“அதனால்தான் கடவுளிடம் எதுவும் கேட்கக் கூடாது என்பார்கள். உனக்கு என்ன வேண்டும் என்பது உன்னைவிட அவனுக்குத்தான் நன்றாகத் தெரியும். அதனால் நீயாகக் கேட்கத் தெரியாமல் கேட்டுவிட்டு பின்னர் அவனைக் குறை சொல்லாதே”  என்கிறார் குமரகுரு. 

சரியான பாய்ண்ட்தான், ரைட்?


இன்னொரு முட்டாள்


ராஜபக்‌ஷே ராட்சஷன் டெல்லி வந்திருக்கிறான். அதை எதிர்த்து இந்த வாரம் சேலத்தைச் சேர்ந்த இன்னொரு முட்டாள் தீக்குளித்து இறந்திருக்கிறான். 

இவர்களுக்கு நினைவேந்தல்களும், வீரவணக்கங்களும், துக்க விசாரிப்புகளும், தர்ணாக்கள், மாவீரன் பட்டங்கள் என்று எல்லா நாடகங்களும் நடக்கின்றன. இவை இன்னமும் நடக்கும். நடந்து கொண்டே இருக்கும்.

"ஏண்டா டேய்! உனக்கு அவன் மேல கோபமுன்னா நீ ஏண்டா சாவற? அது எப்படிடா வீரம் ஆகும்? அதுக்கு எந்த _______க்குடா வீர வணக்கம்”ன்னு ஒருவனும் கேட்பதில்லை.

இந்தத் தற்கொலைகளை மறைமுகமாகக் கொண்டாடுபவர்களைக் கழுவிலேற்றினாலே ஒழிய இந்த நாடகங்கள் முடியும் என்று தோன்றவில்லை.
.
.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கதம்பம்...

முதலும் மூன்றும் சூப்பர்...

நீலத்திமிங்கிலம்... வியக்க வைக்கிறது...

Easy (EZ) Editorial Calendar said...

இன்றைய கதம்பம் மிக அருமை ....உங்கள் பகிர்வுக்கு நன்றி.......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Unknown said...

கதம்பம் அருமை , கடைசி அருமையான சூடு . நன்றி

ஸ்வர்ணரேக்கா said...

கடவுளை உங்களிடம் பேச அனுமதியுங்கள்”
-- உண்மை.. நாம் அவர் சொல்வதை கேட்க விரும்புவதில்லையே..

த்தாஸ்த்து
-- மிகச் சரி.. அவனுக்கு தெரியாதா நமக்கு என்ன வேண்டும் என்று..

Related Posts Plugin for WordPress, Blogger...