டாக்டர்களுக்கு அவர்களிடம் வரும் நோயாளிகள் ஒரு வகையில் Modern ATMகள் என்று எங்கோ படித்தேன்.
அவர்களுக்கு பணம் வேண்டுமென்றால் அவர்கள் நேரடியாக demand செய்து வாங்கிக் கொண்டாலும் பரவாயில்லை. சமீபத்தில் என் அண்ணன் மகளை test செய்த அந்த லேடி டாக்டர், "இவளுக்கு heart beat கொஞ்சம் அப்நார்மலா இருக்கு, ஒரு test எடுக்கணும்" என்று சொல்லி, Echo என எழுதுவதற்கு பதிலாக EEG என எழுதித் தந்தார். முதலில் EEG எடுத்து, பின்னர் "அடடா, Echo இல்ல எடுத்து இருக்கணும்" என அதையும் எடுத்து, ஒரு நியுமரலாஜி sorry நியுரோ டாக்டரை பார்த்து, கடைசியில் "ஒண்ணும் இல்லை" என்றார்கள்.
இதில் கஷ்டம் நாம் செலவழித்த ஆயிரக்கணக்கான பணம் இல்லை, அந்த 15 நாட்கள் பட்ட மன உளைச்சல்தான். குழந்தைக்கு என்னவோ ஏதோ என்று பயந்து, நமக்கு உணவு இறங்காமல், உறக்கம் இல்லாமல் நாம் தவித்தோம்.
Lab-ல் அவன் பங்கிற்கு அவனும் அவன் மூலமாக கமிஷன் என டாக்டரும் சம்பாதித்து சந்தோஷப் பட்டுக் கொண்டனர். நம் மன உளைச்சல் குறித்து அவர்களுக்கு என்ன?
ஷைலஜாவிற்கு backpain வந்தபோது இன்னொரு கொடுமை. அவர் ஷைலஜாவின் குடும்ப டாக்டர் ஆதலால் MRI எடுக்கச் சொல்லிவிட்டு எழுதித் தந்த காகிதத்திலேயே Rs.4000/- எழுதித் தந்தார். அவர் எழுதாவிடில் அந்த test-எடுக்க 7000 முதல் 10000 வரை ஆகுமாம். என்ன கொடும சார் இது?
Sep 11, 2008
Sep 4, 2008
சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போம்"
இன்றுதான் படித்து முடித்தேன் இரண்டாம் பாகத்தை. எப்படியும் இன்னும் ஒருவாரம் கதையின் ஆக்கிரமிப்பில் இருப்பேன், நிச்சயம்.
பாபநாசம் ரகுவைக் காதலித்து கல்யாணம் நிச்சயித்தபின் அமெரிக்க ராதாகிஷனை அப்பா சொல்படி மணந்து அமெரிக்காசெல்கிறாள் மதுமிதா. ரகுவைச் சுற்றியே வலம் வரும் முதல் பாகம் அவன் உள்ளக்குமுறல்களுடன் முடிகிறது . இரண்டாம் பாகம் MBA படிக்க ரகுவையும் அமெரிக்கா அழைத்துச் செல்கிறது. அவன் அங்கு சந்திக்கும் விந்தையான அனுபவங்கள், மதுவை சந்திப்பது, மதுவுக்கு ராதாகிஷன் செய்யும் துரோகம், இந்திய வம்சாவளிப் பெண் ரத்னாவை சந்திப்பது என கதை விரிந்து எங்கெங்கோ சென்று கடைசியில் மது இறந்து, ரத்னாவை ரகு மணப்பதாய்கதை முடிகிறது.
இந்தக் கதையில் கதையை விட அதை சொன்ன விதத்தில் சுஜாதா எங்கோ நிற்கிறார்.
1980களில் அப்போது சுஜாதா விவரிக்கும் நாகரிகத்தில், கலாச்சாரத்தில் இப்போது நாம் கொஞ்சம்தான் மிச்சம் வைத்திருக்கிறோம்; கம்ப்யுட்டர், மொபைல் போன், சாட்டிலைட் TV தவிர பெரிய வளர்ச்சி எதையும் சொல்லமுடியவில்லை. ஆனால், அப்போதே அவர் விவரிக்கும் அமெரிக்கா, அதன் தொழில்நுட்பம், அந்த மக்கள், அவர்களின் கலாச்சாரம், விமானம், கார்கள், சாலைகள் அனைத்தும் நமக்கு பிரமிப்பு, மயக்கம், பயம், அருவருப்பு அனைத்தையும் தருகின்றன.
நான் ஏற்கெனவே சுஜாதாவின் அதிதீவிர வாசகன். இந்தக் கதையை படித்த பின், அவரைப் போன்ற பிதாமகர்களுக்கும் சாவைக் குறித்து அழைத்துச் சென்ற கடவுள் மேல் கோபம் வந்தது.
Aug 16, 2008
நாம் விரும்பும் மாற்றம்....
கதை ஒன்று உண்டு. ஒரு கிறிஸ்துவ பெண் ஒரு வேற்று மதம் சார்ந்த ஒருவனை காதலித்தாள். வீட்டில் அவள் அப்பா வழக்கமான அப்பாவாய் இதனை எதிர்த்தார். காரணமாக அவர் சொன்னது, “வேற்று மதத்தவனை என் மருமகனாய் என்னால் ஏற்க இயலாது, நீ அவனை மதம் மாறச்சொல் நான் சம்மதிக்கிறேன்” என்றார். இவள் இதனை காதலனிடம் சொல்ல, அவன் காதலின் மிகுதியில் மதம் மாற சம்மதித்தான். இவளுடன் அவன் தேவாலயம் செல்லத் தொடங்கினான்.
சில நாட்கள் சென்ற பின் அப்பெண் அழுது கொண்டே அப்பாவிடம் வந்தாள்.
"என்னம்மா, என்ன ஆச்சு?",
"அப்பா, அவர் வந்து......."
"என்னம்மா ஆச்சு, மதம் மாற மாட்டேன்னு இப்போ சொல்றனா...?"
"இல்லப்பா....வந்து...."
"என்ன சொல்லு, உன்ன மதம் மாற சொல்றனா?"
இல்லப்பா, வந்து......"
"என்னன்னு சொல்லி தொலையேன்....."
"அவர் பாதிரியாரா போயிட்டருப்பா...."
பொதுவாக நாம் மற்றவர்களிடம் மாற்றத்தை எதிர் பார்க்கிறோம். ஆனால் அந்த மாற்றத்திற்கும் ஒரு வரையறை வைக்கிறோம். நீ இந்த அளவுக்கு மாறினா போதும், அதுக்கு மேலே மாறாதே என்று....
இதை நம் விஷயத்தில் compare செய்ய வேண்டுமென்றால் நம் matrimonial வெப்சைட்-கள் பக்கம் சென்று பார்த்தால் தெரியும். "I expect a girl with a blend of modern & our traditional values" என்று எல்லாம் இருக்கும். எது எந்த விகிதத்தில் வேண்டும் என்பது அவனவனுக்கே வெளிச்சம்.
.
.
Subscribe to:
Posts (Atom)