Sep 9, 2009

சாலை விபத்துகள் - follow up

இது "குடி குடியை கெடுக்கும்" என்று நான் சமீபத்தில் எழுதிய சாலை விபத்துகள் குறித்த blog-இன் follow up. இந்த சம்பவம் குடியின் பலனால் வந்ததல்ல. The so called இந்திய அசட்டையால் நிகழ்ந்தது.

சமீபத்தில் எங்கள் அலுவலகத்தின் மேனேஜர் ஒருவர் தன் 15 மாத குழந்தையை சாலை விபத்தில் இழந்தார். காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தையை feed செய்வதற்காக முன்னே எடுத்து, தான் அணிந்திருந்த seat-belt-ஐ அவர் release செய்த வேளையில் விபத்து நடந்திருக்கிறது. அவருக்கு எலும்பு முறிவு. குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டு ஏக ரத்த இழப்பு நேர்ந்து , நேரத்திற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் ரத்த இழப்பிலேயே குழந்தை இறந்து விட்டது.



Seat-belt உங்களை எல்லா நேரத்திலும் காப்பாற்றி விடும் என உறுதி சொல்ல முடியாது. ஆனால் இது போன்ற minor accident-களில் குறைந்தபட்சம் தலைக் காயங்களையாவது அது காப்பாற்றும். கார்களில் குழந்தைகளை free-யாக முன்னே உட்கார வைக்கும் இந்திய வாடிக்கையை இனியாவது நிறுத்துவோம். ஒரு உயிர் என்பது விலை மதிப்பில்லாதது. யாராலும் திருப்பித் தர இயலாதது....!!

எனவே நண்பர்களே..... Please wear seat-belts.....!! Please....Please......!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...