Aug 23, 2012

தாஜ்மஹாலும் என் தாத்தா அமர்ந்த நாற்காலியும் - தொடர்ச்சி

முந்தைய பகுதி


ஸ்டாம்ப்பிலும், புகைப்படங்களிலும், சின்னத்திரையிலும், பெரிய திரையிலும் பார்த்து என் மனதில் பதிய வைத்திருந்த தாஜ்மஹாலின் உயரமானது சுமாரே சுமாராக ஒரு வீட்டின் உயரம் இருக்கும். 

“வி ஹேவ் எண்டர்ட் தி மெயின் எண்ட்ரன்ஸ் சார், மேடம்! நவ் வி ஆர் கோயிங் டு ஸீ தி வேர்ல்ட் ஃபேமஸ் தாஜ்”, என்று சொல்லி சினிமாத்தனமாக தனக்கு வலப்புறம் கையை நீட்டினான் எங்கள் ’கைட்’ ரவி.

தலையை சமர்த்தாக நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்க முயற்சித்தவனுக்கு அங்கிருந்து சுமார் கால் கிலோ மீட்டர் தூரத்தில் தெரிந்த தாஜ்மஹாலை கொஞ்சம் நிமிர்ந்தேதான் பார்க்கத் தேவையிருந்தது.

ஹா.................... என்ன ஒரு பிரம்மாண்டம். கட்டிடக் கலைச் சிறப்புகளுக்கெல்லாம் அரசன்/அரசி என புகழப்படும் அந்த “வொண்டர்”. நேரில் பார்க்கும்போதுதான் எத்தனை சிறப்பானது என்று விளங்குகிறது.

மழைபெய்து கழுவித் துடைத்திருந்த அந்த வெள்ளைப் பளிங்கு அதிசயம் கருமேகங்களைப் பின்னணியாய்க் கொண்டு ரம்மியமாய்க் காட்சி தந்தது.



என் வாய் திறந்த நிலையில் இருக்க மற்றவர்களை கவனித்தேன். அவர்களும் வாய் பிளந்து தாஜை ரசித்துக் கொண்டிருந்தனர். “ஓகே, யூ மே க்ளோஸ் யுவர் மௌத். லெட் மீ ஓபன் மை மௌத் டு எக்ஸ்ப்ளெய்ன் ஃபர்தர்”, என்று தன் வாய் திறந்தான் ரவி.

மும்தாஜ் ஷாஜஹானின் மூன்றாவது மனைவி, அதன் பின் எத்தனை பேர் அவன் மனைவியர் எனத் தெரியவில்லை. ஆனாலும் எல்லோரிலும் மோஸ்ட் ஃபேவரிட் மும்தாஜ்தான் என்பது சொல்லித் தெரியும் அவசியமில்லை.
தன் 14’ஆவது குழந்தையைப் பிரசவிக்கும் தருவாயில் மரணித்தவள் மும்தாஜ். 
தன் மீதான காதலை எப்படி நிரூபிப்பாய் என்ற மும்தாஜின் மரணப் படுக்கைக் கேள்விக்கு பதிலாய் ஷாஜஹான் அவள் கல்லறை மீது எழுப்பிய கட்டிடம்தான் உலகப்புகழ் தாஜ் :)
அந்தக் காலத்திலேயே (பதினேழாம் நூற்றாண்டு) கிட்டத்தட்ட முப்பது கோடி ரூபாய்களுக்கு மேல் செலவு வைத்தது.
இருபது வருடங்களுக்கும் மேல் கஜானாப் பணத்தின் பெரும்பங்கு தாஜ்மஹாலைக் கட்டுவதற்கு திருப்பிவிடப்பட்டது. அடுத்ததாக தாஜுக்கு எதிரே தனக்கும் ஒரு கல்லறை (இன் அட்வான்ஸ்) கட்டப் பூர்வாங்க வேலைகளை ஷாஜூ துவக்கிய நேரத்தில்தான் ”போதும்டா சாமி உன் கலை ஆர்வம்”, என்று சொந்த மகன் ஔரங்கசீப்பால் சிறை வைக்கப்பட்டான். அந்தச் சிறை யமுனையின் மறுகரையில் ஜன்னல் வழியே தாஜ்மஹாலைப் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டதாம். அங்கிருந்தே கடைசி காலத்தைக் கழித்தானாம் ஷாஜூ.
உத்திரப்பிரதேசத்தில் சென்ற ஆட்சி காலத்தில் மாயாவதி செய்த சிலை இன்ஸ்டல்லேஷன்களுக்கும், அதே உ.பி.யில் அண்ணன் ஷாஜஹான் செய்த இந்த ’கல்லறை” இன்ஸ்டலேஷனுக்கும் பெரிய வித்யாசம் உண்டா என்ன என்று பக்கவாட்டில் ஒரு கேள்வி வர, சாதுர்யமாகச் சிரித்து மழுப்பினான் ரவி. 
இந்தியா, அரேபிய நாடுகள், திபெத், சைனா, ஆப்கன் என்று உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் விதவித மார்பிள்கள் வரவழைக்கப்பட்டு தாஜ்மஹால் நிறுவப்பட்டுள்ளது.
உலகின் பல பகுதிகளிலிருந்து கட்டடக் கலை வஸ்தாதுகளை தாஜ்மஹால் கட்ட பயன்படுத்தியிருக்கிறான் ஷாஜஹான்.
மற்ற ஃபேக்ட்டுகள் கூகுள் செய்தால் உங்களுக்குக் கொட்டிக் கிடைக்கும்.


தாஹ்மஹாலின் பிரம்மாண்டத் தோற்றம், புற அழகு இவற்றைவிட அங்கே கவனிக்கத்தக்க விஷயம் தாஜ்மஹாலின் உள்ளே காணக்கிடைக்கும் நுணுக்கமான டிசைன்கள். மேலே படத்தில் காணக் கிடைக்கும் பச்சை/சிவப்பு வண்ண டிசைன் பார்க்க பெயிண்ட் போலத் தோன்றினாலும் அருகில் சென்றால்தான் அது காலத்தால் அழியாத மார்பிளால் பதிப்பிக்கப்பட்ட டிசைன் எனத் தெரிகிறது. இங்கே காணும் அந்தப் பூ வடிவை உருவாக்க நுண்ணிய அளவில் முப்பத்தி இரண்டு சிறுசிறு மார்பிள் துண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

தாஜ்மஹாலைக் கட்டிய பணியாளர்களின் சந்ததியினர் இன்னமும் ஆக்ரா நகரிலேயே வசிக்கின்றனர். பளிங்கினால் பலப்பல பொருள்கள் செய்து விற்பதே அவர்கள் தொழில்.

தாஜ் கட்டி முடிக்கப்பட்டதும் அதைக் கட்டியவர்கள் கைகளை வெட்டினான் ஷாஜஹான் என்று சொல்லப்படுவதன் பொருளையும் சொன்னான் ரவி. அதாவது, தாஜ் எழுப்பப் பாடுபட்டவர்கள் அத்தகைய அதிசயம் வேறெங்கும் கட்டிவிடாமல் தடுக்க அவர்களுக்கு சம்பளமாக ஏதும் தராமல், ஆக்ராவிலேயே நிலபுலன்களை வழங்கினானாம் ஷாஜஹான். ஆக, அவர்கள் ஊரைவிட்டு வெளியேற முடியாது என்பது அவன் திட்டம்.

தாஜ் உள்ளே நாங்கள் நுழைந்ததும் ரொமாண்டிக்காக ”ஸோ”வென மழை. உள்ளே விளக்குகள் ஏதும் கூடாது என்பதால் இருட்டறையாக இருந்தது உட்புறம். உள்ளே நுழைந்ததும் தபுசங்கர் ”தத்துபித்துவெனப்” பூஜித்த அந்த வாட்ச்மேன் இருக்கிறானா என்று பார்த்தேன். எல்லோரும் சீருடை அணிந்த லாத்தி, துப்பாக்கிகள் கொண்ட இயந்திரங்களாக இருந்தனர். நமக்கு எங்காவது ஷாஜஹான் - மும்தாஜை நினைத்து உடல், மனம், அல்லது வேறு ஏதாவது ஒன்று உதறவோ பதறவோ செய்கிறதா எனப் பார்த்தால், அப்படி ஒன்றும் செய்யலை. யோவ் கவிஞர்களே! உங்க உட்டாலக்கடி கவிதை எழுத இப்பிடியாய்யா ஒருத்தன் மூணா பொண்டாட்டிக்கு பதினாலா பிரசவத்துக்குப் பின்னே கட்டின கட்டிடத்தை வெச்சு அண்டப்புளுகுவீங்க என்று நினைத்துக் கொண்டேன்.

ஆக, உலகின் ஒப்புமை இல்லாத ஒரு மாபெரும் ஆர்கிடெக்சுரல் எக்ஸலன்ஸ் எனலாமே தவிர தாஜ்மஹாலை காதலின் சின்னம் என்று சொல்வதை சுத்த ஹம்பக்.


வெளியே வந்தால் ஒரு மிகப்பெரிய ஜனசந்தடி முட்டி மோதிக் கொண்டிருந்தது.

“அரே சாப், போகும்போதே அங்கே ஃபோட்டோ புடிச்சிருக்கணும். பரவால்லை வாங்க நாமும் இப்போ அங்கே போய் முட்டி மோதுவோம்”, அழைத்தான் ரவி.

“என்னாது அது?”

“ப்ரின்ஸ் டயானா வந்தப்போ அந்த பெஞ்ச் மேலேதான் உக்காந்து ஃபோட்டோ புடிச்சாங்க. அந்த பெஞ்ச் பேரே டயானா பெஞ்ச் சார்”

”சரியாப் போச்சு! அங்கே எல்லாம் போக வேணாம்”, என்றேன்.

“நோ நோ. வி மஸ்ட் கோ தேர் டு டேக் எ ஸ்னாப்”, என்றார் டயானாவின் நாட்டுக்காரரான துரையம்மா.

“நீங்க க்யூ கட்டுங்க. எனக்குப் பொறுமை இல்லை. அப்படியே ஃபோட்டோ புடிச்சிட்டு இருக்கேன். ஃபோட்டோவுக்கு நிக்கையில நான் வந்து சேர்ந்துக்கறேன்”, என்று நகர்ந்தேன்.

பக்கவாட்டில் இருந்த ஒரு காரிடாரில் மாடங்களின் பின்னணியில் இந்த வ்யூ ரம்யமாகக் கிடைக்க ஒரு ‘க்ளிக்” அடித்தேன்.




டயானா பெஞ்சுக்கு எல்லோரும் முண்டியடித்துப் பரபரப்பாய் இருக்க ஒரேயொரு பெஞ்ச் மாத்திரம் கேட்பாரற்றுக் கிடந்தது. அதன் பின்னணியில் தாஜை வைத்து ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன்.




இன்னமும் ஒன்றிரண்டு க்ளிக்குகள் எடுத்து முடிக்க துரையம்மா தூரத்திலிருந்து ”வா வா” எனக் கையசைத்தார்.

டயனா அமர்ந்த அதே பெஞ்ச்சில் துரையம்மா, என் மேனேஜர் அம்மணி, வேந்தன், நான் நால்வரும் சம்ப்ரதாய நிமித்த ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.

“அது சரி, அதென்ன அந்த பெஞ்ச்சைப் போய் ஃபோட்டோ எடுத்துக்கிட்டு இருந்த?”, என்ற துரையம்மாவிடம்...

“எண்பது வருஷம் முன்ன எங்க தாத்தா தாஜ்மஹால் வந்தப்போ அந்த பெஞ்ச்’லதான் உட்கார்ந்து ஃபோட்டோ புடிச்சிக்கிட்டாராம்”, என்றேன்.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களும் பதிவும் மிகவும் அருமை...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

Unknown said...

finishing touch was too good...
keep it up the good work brother... :)

Anonymous said...

unnala oru ootta azhaga katta mudiumada?yerumaikku poranthavane. avvalavu azhagana thajmagala kattunavara avan ivanu yeluthiyirukka pannada payale.moonavatha irunthalum pathinalu kulandaikku appuramum iruntaa thanda athukku peru love.

Giri Ramasubramanian said...

டேய் அனானிக்குப் பொறந்த அனானி,
நான் எருமைக்குப் பொறந்தேன் சரி. நீ ஒழுங்காப் பொறந்திருந்தா பேரையும் ஊரையும் சொல்லுடா. சூடா ஒரு கூல்ட்ரிங் குடிச்சிட்டே தாஜ்மஹால் காதலின் சின்னமா, கருமாந்தர எளவான்னு பேசலாம்

Giri Ramasubramanian said...

உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்

Giri Ramasubramanian said...

ஊக்கத்திற்கு மிக்க நன்றி சந்தோஷ் குரு :)

Unknown said...

நல்லா இருக்கு ஓட்டம்! தாத்தா யாரு, உங்க டிபில இருக்கிறவரா?

கெக்கெபிக்குணி.

Related Posts Plugin for WordPress, Blogger...