Nov 10, 2012

சகலகலா ஆசார்யர் எஸ் ராஜம்


நண்பர்கள் எவரேனும் வரும் நாளை (நவம்பர் 11, 2012 ஞாயிற்றுக்கிழமை)  சென்னையின் சுற்றுவட்டாரங்களில் இருந்தால் தவறாமல் மதியம் இரண்டு மணி அளவில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள தத்வலோகா ஹால் என்ற இடத்தில் ஒன்று கூடவும். அங்கே மறைந்த மாமேதை எஸ் ராஜம் அவர்கள் வாழ்வையும் வாக்கையும் சித்தரிக்கும் ஒரு ஆவணப்படத்தை இலவசமாகத் திரையிடவிருக்கிறார்கள்.

நண்பர் லலிதா ராம் தன் ஆர்வத்தாலும் உழைப்பாலும், “உருப்படியாய் ஏதாவது செய்யணும் பாஸ்!” என்று மலைத்து நிற்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக உயர்ந்து நிற்கிறார் – வீணாய்ப் போனவர்களாலும் ஒன்றுக்கும் உதவாதவர்களாலும் நொந்து நூடுல்ஸ் ஆன தமிழர்களாகிய நாமனைவரும் சமய சாதி சினிமா சீரியல் சாக்காடுகளைத் துறந்து, நாளது தேதியன்று நாளது சமயத்தில் நாளது ஸ்தலத்தில் ஒன்றுகூடி லலிதா ராமின் சிறப்பான முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...