May 4, 2015

உத்தம வில்லன்

‘குறியீடு’ எனும் வார்த்தை தமிழ் இணையத்தைப் பாடாய்ப் படுத்தித் தொலைக்கும் வார்த்தைகளுள் முதன்மையான வார்த்தை எனலாம்.
 
குறியீடு’ன்னா என்னய்யா என்பவர்களுக்கு மட்டும்: இத்த வெச்சி அத்த சொல்றது; அத்த வெச்சி இத்த சொல்றது; சொல்லாமலே சொல்றது; சொல்லிட்டு சொல்லாம இருக்கறது என்ற பல ரக சொல்லுதல்/சொல்லாததல்கள் வாயிலாக ரசிகனை படைப்பாளி ரேஞ்சுக்கு பக்கத்தில் கொண்டு சென்று சொல்லாமல் சொன்னதைப் புரிந்துகொள்ள வைப்பது (என்று நினைக்கிறேன்). புரியாதவர்கள் உவி என டைப் செய்து உங்கள் பெயர் வயது ஊர் விபரங்களை எஸ்ஸெம்மெஸ் அனுப்பினால் மேலும் விபரமாக குழப்பப்படும்.
 
உத்தமவில்லன்: ஒட்டுமொத்தப் படமும் குறியிடும் ஒரு மெகா குறியீடு “இது கமல் கதை” என்பதே. இது புரிந்தால் உவி உள் நீங்கள் புகலாம். இல்லாவிட்டால் காதல் படத்தின் க்ளைமாக்ஸில் தலையைப் பிராண்டும் பரத் போல இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் முடிந்ததும் நீங்கள் படம் விட்டு வெளியே வர நேரிடும்.
 
மைமகாரா படத்தின் சுப்ரமணியராஜு அறிமுகக் காட்சியில்...
 
ராஜூ: ஒரு ஆர்ட்டிஸ்டோட கஷ்டம் இன்னொரு ஆர்ட்டிஸ்ட்டுக்குதான் தெரியும். நாங்கூட ஆர்ட்டிஸ்டுதா்ன்
 
குஷ்பு: ஆர்ட்டிஸ்ட்? யூ மீன், ஸ்கல்ப்ச்சர்ஸ், ட்ராயிங்?
 
ராஜூ: ச்சீச்சீ இல்லீங்கோ! ஸ்டேஜ் ட்ராமா ஆர்ட்டிஸ்ட்
 
அந்த ”ச்சீச்சீ” ரொம்பவும் உன்னிப்பாய் கவனிப்பவர்களுக்குத்தான் கேட்கும். அதே ரகம் இங்கேயும் சில வசனங்கள். இருபத்தி ஐந்து வருடமாகியும் கமல் மாறவில்லை.
 
இங்கே உதாரணம்: உத்தமன் கமல் - நாசரிடம்: “உங்களுக்கு இத்தனை அழகான மகளா?” என்று போகிற போக்கில் கேட்பது - how many of you noticed this?
 
By the way, படம் வெளிவந்த இந்த இரண்டு நாட்களுக்குள்ளேயே  தமிழ் இணையத்தில் குறைந்தது இருநூறு பேர் உவி விமர்சனம் எழுதிக் குவித்துவிட்டதால், படத்தைப் பற்றி நான் சொல்லப் புதிதாய் ஏதுமில்லை. விமர்சனங்களில் குறிப்பிடிபட விஷயங்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.
 
அந்த உத்தமன் பார்ட் ரொம்ப நீளம் / boaring: எனக்குச் சத்தியமாய் அப்படித் தெரியவில்லை. படத்தின் most interesting aspect அந்த போர்ஷன் என எனக்குத் தோன்றியது. ரெகுலர் போர்ஷனில் ஒரு நல்ல கமல் ரசிகன் அவதானிக்கத்தக்க க்ளிஷேக்கள் நிறைய; அவற்றை சமன் செய்ய உத்தமன் போர்ஷன் நல்ல ஆசுவாசம் தந்தது.
 
நாசர் / பூஜாகுமார் ஓவர் ஆக்டிங்: I love Nasser more than Kamal. சம காலத்தில் கமலுக்கு நிகராக அல்லது சற்றே மேலாகவேயும் கூட இயங்கத் தெரிந்த தமிழ்க் கலைஞன் எனப் பார்த்தால் நாசர் ஒருவர்தான். பிரகாஷ்ராஜ் சிற்சில மார்க்குகளில் கமலுக்கு மூன்று படி கீழே இருப்பார். நாசருக்கு கதைக்குள் கதையில் மட்டுமே ரோல். அதற்கு வெளியே அவருக்குக் கொஞ்சமும் ரோல் இல்லை. So he does what is required for THAT role. அந்த ரோலுக்கு ஞாயமானதை மட்டுமே அவர் செய்கிறார். Exactly the same with Pooja Kumar. அவருக்கும் கதையினில்  கதையில் மாத்திரமே ரோல். அதன் வெளியே ஒன்றிரண்டு காட்சியில் மட்டுமே அவருக்கு வசனங்கள், அவையும் ஸ்கோப் அல்லாத (which exactly make sense for the movie).
 
ஞானசம்பந்தம் ஐயாவின் ஓவர் ஆக்ட்: Not at all.
 
 
And by the (one more) way, நம்ம நண்பர் கோகுல் ஃபேஸ்புக்கில் இந்தப் படத்திற்கு எழுதிய விமர்சனம் (!!!!), என் மனநிலையை ஒட்டியதாகத் தோன்றியதால் அவர் எழுதியதை இங்கே அப்படியே காப்பி பேஸ்ட் அடிக்கிறேன்:
 
 
 
//
 
உத்தம வில்லன்.
அன்பே சிவம் படத்தை Planes, Trains & Automobiles அப்புடீன்னு களுவிக்களுவி ஊத்துன நாம, தேவர் மகனை PC Sreeram/பரதன் இல்லாட்டி வேஸ்டுன்னு சொன்ன நாம, MMKRஐ அவ்ளோ பெரிய ஹிட்டாவெல்லாம் ஆக்காம, யூட்யூப்ல ஹிட்டாக்கி, bot வெச்சு கொண்டாடுற நாமதான் இதையும் விமர்சனம் பண்றோம்.

எனக்கென்னவோ இந்தப்படத்தை இப்போ ரெண்டே வாரத்துல ஊத்தி மூடிட்டு, தீவாளிக்கு டீவியில பாத்துட்டு, ஒரு நாலஞ்சு வருஷங்கழிச்சு மெதுவா warm up ஆகி புரிஞ்சிக்க ஆரம்பிப்போம் அப்புடீன்னு தோணுது. நம்ம டகால்டி எதுன...ா அறுவத்துநாலு பக்கத்துக்கு ஒரு slice/dice பண்ணுவாரு, புதுப்புது குறியீடு கண்டுபுடுச்சு, அதுக்கு ரெண்டு வருஷம் கழிச்சு கொண்டாடுவோமின்னு நெனைக்குறேன்.

நம்ம கார்த்திக் (ஹிந்து பேப்பர்க்காரருங்க) சொன்னா மேரி, சில விஷயங்களைக் கமலாலதான் பண்ண முடியும். தனக்குத்தானே ஓட்டிக்கிறது new wave டைரடக்கருங்களுக்கு வருதுன்னா, அதை செய்ய முடியிற ஒரே பழைய ஆளு நம்மாளுதான். ‘இது-எந்தப்-படத்துக்கு-ரெஃபரென்ஸ்’ game வெளையாடினிருந்தேன் படம் பாக்கறச்சே. ஆளவந்தான், தேவர் மகன், ஹே ராம், சிங்காரவேலன், விருமாண்டி (என்ற சண்டியர்) எல்லாம் நெம்ப obvious. மறைஞ்சு கெடக்குறதை மத்த அண்ணமார்கள் வெளீல கொண்டு வந்து நமக்கே அறிமுகப்படுத்துவாங்க. (ஐயோ… இது குருதிப்புனல்.)

நம்ம முனைவர் அ செ ஞானசம்பந்தம். அவரை சும்மாவே எனக்கு நெம்பப்பிடிக்கும். படத்துல வர்ற Sly remarks எல்லாம் இந்தாளே எழுதிக்கொடுத்த மேரி இருக்கு. சொல்ல மறந்துட்டனே? இந்தப்படத்துக்கு யாரும் வசனம் எழுதலை. அவங்கவங்க அப்பப்போ தோணுனதை பேசியிருக்காங்க. அதை, as usual, live recording பண்ணிருக்காரு கமல், err…., ரமேஷ் அரவிந்த். மறந்துட்டேன் பாருங்க அவரை. ஏங்க, படத்துக்கு இன்னார்தான் வசனம் எழுதுனாருன்னு சொன்னா என்னங்க கொறஞ்சு போகும்? ஒரு கட்டைய எடுத்து வெச்சா கிரேஸி வாசனை, இன்னோரு கட்டைய எடுத்து வெச்சா கமல் வாசனை, இன்னோரு கட்டைய எடுத்து வெச்சா…. you get the drift.

ஜிப்ரான் பின்னிட்டாருங்க. பின்னிட்டாரு. ஒரு ம்யூஸிக்கலா இந்தப்படம் நல்ல்ல்ல்லா தேறும். இப்போவரை Career best இந்தாளுக்கு. கமல் (ஆஹ். ரமேஷ் அரவிந்த்), ஒவ்வொரு பயலையா எடுத்து, சக்கையாப் புழிஞ்சு, நல்லா வேலை வாங்கிட்டு, அப்புறம்… அப்புறம்… சக்கையை தூற எறிஞ்சிருவாரு. பாக்கலாம்.

கூட நடிக்கிறவங்க எல்லாம் மெதுவ்வ்வ்வ்வா, கமலோடயே வயசாகுறவங்க. சிங்காரவேலன்ல அடி வாங்குற அஜய் ஆகட்டும், சித்ரா லட்சுமணன் ஆகட்டும், ஊர்வசி ஆகட்டும், நாசர் ஆகட்டும், நம்ம விருமாண்டி (கெட்ட) இன்ஸ்பெக்டர் ஆகட்டும், பூஜா/ஆண்ட்ரியா (ஹிஹி) ஆகட்டும்… ஏங்க கமல் ஸார் (ஸாரி, ரமேஷ் அரவிந்த் ஸார்), புதுமுகங்களை நம்ப மாட்டீங்களா?
ரமேஷ் அரவிந்த். ரமேஷ் அரவிந்த். ரமேஷ் அரவிந்த். ரமேஷ் அரவிந்த். இருக்காரு. போதுமா?

எப்புடியும் பொறுமையா, கூட்டம் கொறஞ்சோடனே, அடுத்த வாரமே, இன்னோரு தபா பாத்தா….. போறேன்.
//

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...